என் மலர்
நீங்கள் தேடியது "new jersy"
- அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
- ஐதராபாத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை கால்பந்து வீரர் மெஸ்ஸி நேரில் சந்தித்தார்
ஐதராபாத்:
அர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக, இன்றிரவு உப்பல் மைதானத்தில் தெலங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி அணியுடன், மெஸ்ஸியின் அணி நட்பு போட்டியில் விளையாடியது.
இந்தப் போட்டியை பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டு களித்தார். இதற்காக ராகுல் காந்தி இன்று மாலை சிறப்பு விமானம் மூலம் ஐதராபாத் வந்தடைந்தார்.
இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியை கால்பந்து வீரர் மெஸ்ஸி நேரில் சந்தித்தார். அப்போது மெஸ்ஸி தனது கையெழுத்திட்ட ஜெர்சியை ராகுல் காந்திக்கு பரிசாக அளித்தார்.
அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சியில் குஜராத்தியர்கள் ஆடிய நவராத்திரி நடனத்தை கவனித்த அமெரிக்க போலீஸ்காரர் ஒருவர் அவர்களுடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது. #NewJersy #Garba
வாஷிங்டன்:
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி பண்டிகை. இந்தியா மட்டுமின்றி, உலகெங்கும் வாழும் இந்தியர்கள் இந்த பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்வார்கள்.
அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி மாநிலத்தில் நவராத்திரி பண்டிகை மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரியை முன்னிட்டு, அங்கு வசிக்கும் குஜராத்தியர்கள் ஒரு இடத்தில் ஒன்று கூடி நடனமாடி மகிழ்வார்கள்.
இந்நிலையில், நேற்றும் அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் குஜராத்தியர்கள் ஒன்றுசேர்ந்து நடனமாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து பணிக்கு வந்த அமெரிக்க போலீஸ்காரர் குஜராத்தியர்கள் நடனமாடுவதை கண்டார். உடனே அவருக்கும் ஆர்வம் வந்துவிட்டது.
பணியை மறந்து, அவர்கள் ஆடும் அழகை ரசித்தார். அவர்களது ஆட்டத்தை கூர்ந்து கவனித்தபடி உற்சாகமாக ஆடி மகிழ்ந்தார் அந்த போலீஸ்காரர்.
குஜராத்தி இளைஞர் பட்டாளத்துடன் அமெரிக்கா போலீஸ்காரர் உற்சாகமாக ஆடும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #NewJersy #Garba
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி பண்டிகை. இந்தியா மட்டுமின்றி, உலகெங்கும் வாழும் இந்தியர்கள் இந்த பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்வார்கள்.
அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி மாநிலத்தில் நவராத்திரி பண்டிகை மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரியை முன்னிட்டு, அங்கு வசிக்கும் குஜராத்தியர்கள் ஒரு இடத்தில் ஒன்று கூடி நடனமாடி மகிழ்வார்கள்.
இந்நிலையில், நேற்றும் அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் குஜராத்தியர்கள் ஒன்றுசேர்ந்து நடனமாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து பணிக்கு வந்த அமெரிக்க போலீஸ்காரர் குஜராத்தியர்கள் நடனமாடுவதை கண்டார். உடனே அவருக்கும் ஆர்வம் வந்துவிட்டது.
பணியை மறந்து, அவர்கள் ஆடும் அழகை ரசித்தார். அவர்களது ஆட்டத்தை கூர்ந்து கவனித்தபடி உற்சாகமாக ஆடி மகிழ்ந்தார் அந்த போலீஸ்காரர்.
குஜராத்தி இளைஞர் பட்டாளத்துடன் அமெரிக்கா போலீஸ்காரர் உற்சாகமாக ஆடும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #NewJersy #Garba
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் மீண்டும் ஒரு சீக்கியர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அங்கு சீக்கியர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடப்பது கவலையளிக்கிறது. #USSikhStabbed
வாஷிங்டன்:
அமெரிகாவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் வசித்து வந்தவர் டெரியோக் சிங். இவர் அப்பகுதியில் சொந்தமாக கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று டெரியோக் சிங் தனது கடையில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாகக் கிடந்தார்.
தகவலறிந்த எசக்ஸ் கவுண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான காரணம் தெரிய வரவில்லை.
கடந்த மூன்று வாரங்களில் அமெரிக்காவில் சிறுபான்மை இனத்தவரான சீக்கியர்களை குறிவைத்து தாக்கப்படும் மூன்றாவது சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சீக்கியர்கள் மீதான தாக்குதலுக்கு அங்குள்ள பல்வேறு இந்திய அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. #USSikhStabbed






