என் மலர்
நீங்கள் தேடியது "கே. டி. ராமராவ்"
- சந்திரசேகர ராவ் குடும்பத்தை ஆட்சிக்கு வர விடமாட்டேன் என ரேவந்த் ரெட்டி சபதம்.
- கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற சபதம் எடுங்கள் எடுங்கள் என கே.டி. ராம ராவ் பதில் கொடுத்துள்ளார்.
தெலுங்கானா முதல்வராக இருக்கும் ரேவந்த் ரெட்டி, தான் அரசியலில் இருக்கும் வரை கே. சந்திரசேகர ராவ் குடும்பத்தை மீண்டும் ஆட்சிக்கு வர விடமாட்டேன் என சபதம் செய்தார்.
இதற்கு சந்திரசேகர ராவ் மகன் கே.டி. ராம ராவ் பதில் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பதிலில் கூறியதாவது:-
நீங்கள் (ரேவந்த் ரெட்டி) கே. சந்திரசேகர ராவ் குடும்பத்தை ஆட்சிக்கு வர விடமாட்டேன் என சபதம் எடுத்தீர்கள். உங்களுக்கு அதிகமான திறமை இருந்தால், ஏழை பெண்களுக்கு ஜனவரி 1-ந்தேதி முதல் ஒரு டோலா தங்க திட்டம் அமல்படுத்தப்படும் என சபதம் எடுங்கள். தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக அவதூறாக பேசுவது முதல்வருக்கு பொருத்தமற்றது.
இவ்வாறு கே.டி. ராம ராவ் தெரிவித்தார்.
2023 சட்டசபை தேர்தலின்போது, ஏழை பெண்களுக்கு ஒரு டோலா தங்கம் வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது.
தற்போதை காங்கிரஸ் கட்சி ஆட்சியின் தோலை உரித்துவிடுவதாக சந்திரசேகர ராவ் மிட்டும் வகையில் பேசியிருந்தார். அதற்கு ரேவந்த் ரெட்டி கடுமையாக வகையில் பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில்தான் கே.டி. ராம ராவ் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
- பாராளுமன்ற தேர்தலில் நடிகை கங்கனா ரனாவத் பா.ஜ.க சார்பில் இமாச்சல பிரதேசம் மாண்டி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்
- தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கங்கனா ரனாவத், அதில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ் என கூறினார்
பாராளுமன்ற தேர்தலில் நடிகை கங்கனா ரனாவத் பா.ஜ.க சார்பில் இமாச்சல பிரதேசம் மாண்டி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் அவரது தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கங்கனா ரனாவத், அதில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ் என பேசி அதிர வைத்துள்ளார்.
சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய தலைவர்களில் ஒருவர் சுபாஷ் சந்திரபோஸ். அவர் பிரதமராக பதவி வகித்ததில்லை. இந்திய தேசிய காங்கிரசில் பணியாற்றியபின் 1939 -ம் ஆண்டு அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியை தொடங்கினார்.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு. பள்ளிக் குழந்தைகளுக்குத் தெரிந்த இந்த விஷயம் கூட கங்கனாவுக்குத் தெரியவில்லையே என இணையத்தில் பலரும் இந்த காணொலியைப் பகிர்ந்து கேலி செய்கின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக தெலங்கானா முன்னாள் அமைச்சர் கே. டி. ராமாராவ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
"வடக்கில் ஒரு பா.ஜ.க வேட்பாளர் சுபாஷ் சந்திர போஸ் தான், இந்தியாவின் முதல் பிரதமர் என்கிறார். தெற்கில் ஒரு பா.ஜ.க தலைவர், மகாத்மா காந்தி தான் முதல் பிரதமர் என்கிறார். இவர்கள் எல்லாம் எங்கு கல்வி கற்றார்கள்?" என்று பதிவிட்டுள்ளார்.






