search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Telangana CM"

    • மாநிலத்தில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது.
    • சந்திர சேகர் ராவுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 65 தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அந்த மாநிலத்தில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது.

    இதைதொடர்ந்து, தெலுங்கானா மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவி ஏற்றுக் கொண்டார். இதற்கிடையே, தெலுங்கானா மாநிலம் உருவாக காரணமாக இருந்த சந்திரசேகர் ராவ் இரண்டு முறை ஆட்சியில் இருந்த நிலையில் சரிவைக் கண்டார்.

    தொடர்ந்து, சந்திரசேகர ராவ் தனது வீட்டின் குளியலறைக்கு சென்ற போது திடீரென வழுக்கி விழுந்தார். கீழே விழுந்ததில், இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதன் காரணமாக அவருக்கு இடதுபுற இடுப்பு எலும்பு மாற்றப்பட வேண்டும் என்றும், இது முழுமையாக குணமடைய ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, சந்திரசேகர் ராவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    இந்நிலையில், மருத்துவமனைக்கு நேரில் சென்ற தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சந்திரசேகர் ராவை சந்தித்து நலம் விசாரித்தார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.   

    • தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவி ஏற்றுக்கொண்டார்.
    • பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ரேவந்த் ரெட்டி ராஜினாமா செய்துள்ளார்.

    தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள எல்.பி. மைதானத்தில் புதிய மந்திரி சபை பதவி ஏற்பு விழா கடந்த 7ம் தேதி நடைபெற்றது. இதில் ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.

    அவருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து 20 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

    இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ரேவந்த் ரெட்டி ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ரேவந்த் ரெட்டி தாக்கல் செய்துள்ளார்.

    • செயல்முறையை நெறிப்படுத்த மென்பொருள் அடிப்படையிலான லட்சுமி ஸ்மார்ட் கார்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
    • முதல்வர் ரேவந்த் ரெட்டி, இரண்டு வாக்குறுதிகளையும் நாளை நிறைவேற்றுகிறார்.

    தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 65 தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அந்த மாநிலத்தில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது.

    இதை தொடர்ந்து, தெலுங்கானா மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டி நேற்று முன்தினம் பதவி ஏற்றார். இந்நிலையில், தெலுங்கானாவில் பெண்கள், அனைத்து வயது பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு "6 உத்தரவாதங்கள் - மகாலட்சுமி திட்டத்தின்" கீழ் இலவச பேருந்து பயணத்தை தெலுங்கானா அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

    டிசம்பர் 8 தேதியிட்ட அரசு ஆணையின்படி, இத்திட்டம் டிசம்பர் 9ம் தேதி (நாளை) முதல் நடைமுறைக்கு வர உள்ளது மற்றும் தெலுங்கானா மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் கீழ் மாநில எல்லைகளுக்குள் இயக்கப்படும் பல்லே வெலுகு மற்றும் விரைவு பேருந்துகளின் கீழ் பயணிக்க இது பொருந்தும், முற்றிலும் இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பயனர்களுக்கு தடையற்ற பயண அனுபவத்தை உறுதிசெய்யும் வகையில், செயல்முறையை நெறிப்படுத்த மென்பொருள் அடிப்படையிலான லட்சுமி ஸ்மார்ட் கார்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

    இதைதொடர்ந்து, அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, இரண்டு வாக்குறுதிகளையும் நாளை நிறைவேற்றுகிறார். அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளை ஒட்டி, இந்த இரண்டு வாக்குறுதிகளும் டிசம்பர் 9ம் தேதி (நாளை) அமலுக்கு வருகிறது.

    • கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
    • ரேவந்த் ரெட்டியை தொடர்ந்து, 20 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

    தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள எல்.பி. மைதானத்தில் புதிய மந்திரி சபை பதவி ஏற்பு விழா இன்று நடந்தது. இதில் ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.

    அவருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து 20 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

    முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு மல்லிகார்ஜூன கார்கே சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், பிரதமர் மோடி தெலுங்கானாவின் புதிய முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-

    தெலுங்கானா மாநிலத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கும் ரேவந்த் ரெட்டி அவர்களுக்கு வாழ்த்துகள். மாநில வளர்ச்சி மற்றும் குடிமக்களின் நலனுக்காக தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்பதை உறுதி அளிக்கிறேன்.

    • டெல்லியில் உயர் மட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
    • மூத்த எம்.எல்.ஏ.க்கள் மல்லு பாட்டி விக்ரமார்க்கா, ஸ்ரீதர் பாபு ஆகியோர் துணை முதலமைச்சர் பதவி கேட்டு வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 65 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரசின் வெற்றி வேட்பாளர்கள் பட்டியலுடன் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

    நேற்று ஐதராபாத் தனியார் ஓட்டலில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் மாணிக் தாகூர் எம்.பி. தலைமையில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தேர்வு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

    முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தேர்வு செய்யும் அதிகாரம் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முதல் அமைச்சரை அறிவிப்பார்.

    இது தொடர்பாக டெல்லியில் உயர் மட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக தேர்வு செய்யப்படுகிறார். தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி வரும் 7ம் தேதி பதவி ஏற்பார் என கூறப்படுகிறது. மேலும், மூத்த எம்.எல்.ஏ.க்கள் மல்லு பாட்டி விக்ரமார்க்கா, ஸ்ரீதர் பாபு ஆகியோர் துணை முதலமைச்சர் பதவி கேட்டு வருகின்றனர்.

    அவர்களுக்கு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவும் உள்ளது. இதனால் ஒரு முதல் முதலமைச்சர், 2 துணை முதலமைச்சர்கள் நியமிக்க காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து வருகிறது.

    • சந்திரசேகர் ராவின் பண்ணை வீட்டில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
    • ஹெலிகாப்டர் புறப்பட்ட 20 நிமிடங்களில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு.

    தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சென்ற ஹெலிகாப்டரில் திடீரென கோளாறு ஏற்பட்டது.

    இதையடுத்து சந்திரசேகர் ராவின் பண்ணை வீட்டில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    ஹெலிகாப்டர் புறப்பட்ட 20 நிமிடங்களில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    • தனியார் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
    • சந்திரசேகர் ராவுக்கு அல்சருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவுக்கு திடீரென வயிற்று உபாதை ஏற்பட்டதை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    சந்திரசேகர் ராவுக்கு இன்று காலையில் திடீரென வயிற்று உபாதை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தனியார் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

    வயிற்றில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக சந்திரசேகர் ராவுக்கு மருத்துவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்தனர். அப்போது, வயிற்றில் சிறிய புண் (அல்சர்) இருப்பது கண்டறியப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதையடுத்து, சந்திரசேகர் ராவுக்கு அல்சருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுடன், திருமாவளவன் சந்திப்பு.
    • புதிய கட்சி தொடக்க விழாவில் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி பங்கேற்பு.

    ஐதராபாத்:

    தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவரும் தெலுங்கானா முதலமைச்சருமான சந்திரசேகர ராவ் தேசிய அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். 2024 ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளை தமது தலைமையின் கீழ் ஒருகிணைக்கும் நடவடிக்கையில் அவர் தீவிரம் காட்டி வருகிறார்.

    இதற்காக இன்று பாரத ராஷ்டிரிய சமிதி என்ற புதிய தேசிய கட்சியை அவர் தொடங்கி உள்ளார். ஐதராபாத்தில் உள்ள தெலுங்கானா பவனில் நடைபெற்ற விழாவில் கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர். 


    மாநில கட்சியாக இருந்த தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, தேசிய கட்சியாக பாரத ராஷ்டிர சமிதி என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து தேர்தல் ஆணையத்திற்கும் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. புதிய கட்சி தொடக்கத்தையொட்டி தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தொண்டர்கள் ஐதராபாத்தில் பட்டாசுகளை வெடித்தும், இளஞ் சிவப்பு நிறத்தை தூவியும் கொண்டாடினர்.


    முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சந்திரசேகர ராவ், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில் அந்தந்த மாநில அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்து தமது கட்சி போட்டியிடும் என்று அவர் தெரிவித்திருந்தார்.இதற்காக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதனிடையே நாட்டில் பா.ஜ.க.வை வளர்த்து விடுவதற்காகவே சந்திரசேகரராவ் புதிய கட்சியை தொடங்கியுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியை அழிக்க வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடியின் கட்டளைப்படி சந்திரசேகர ராவ் செயல்படுவதாகவும், தெலுங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டி உள்ளார்.

    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். #ChandrasekarRao
    ராமேசுவரம்:

    தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று மாலை ராமேசுவரம் வந்தார். பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் மணிமண்டபத்துக்கு சென்ற அவர், அப்துல்கலாம் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் மணி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு புகைப்படம், அரிய ஓவியங்களை பார்வையிட்டார்.

    அதன் பின்னர் சந்திர சேகரராவ் ராமேசுவரம் பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று இரவு தங்கினார். இதையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இன்று காலை சந்திர சேகரராவ் ராமநாத சாமி கோவிலுக்கு வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ராமநாதசாமி - பர்வதவர்த்தினி அம்மனை தரிசனம் செய்தார்.

    ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கோவிலில் இருந்து அவர் பிரகார மண்டபத்தை சுற்றிப் பார்த்தார். சந்திர சேகரராவுடன் அவரது குடும்பத்தினரும் வந்திருந்தனர்.

    தெலுங்கானா முதல்வர் வருகையையொட்டி கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. #ChandrasekarRao
    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க.வுக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைத்து போட்டியிட முயற்சித்துவரும் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் பிரதமர் மோடியை சந்தித்தார். #ChandrasekharRao #thirdfront #parliamentpolls #ChandrashekarRaomeetsModi
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அரசியல் கட்சிகள் முன்னேற்பாடு பணிகளில் இறங்கி உள்ளன. சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றிமுகம் காட்டிய காங்கிரஸ், அதே வேகத்தோடு பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகிறது. 5 மாநில தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் மீதும், ராகுல்காந்தி மீதும் எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது.
     
    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையில் ஓர் அணியும், காங்கிரஸ் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடும் நிலை உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான அணியை பலப்படுத்தும் முயற்சிகளில் ஆந்திரா முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தீவிரம் காட்டி வருகிறார்.

    இதற்கிடையே, பா.ஜ.க அணியிலும், காங்கிரஸ் அணியிலும் சேராமல், மாநில கட்சிகள் ஒருங்கிணைந்து 3-வது அணி ஒன்றை அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவரும், தெலுங்கானா மாநில முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவ் களமிறங்கி உள்ளார்.
     
    இது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். 

    இந்நிலையில், நேற்று ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை சந்தித்து மூன்றாவது அணி தொடர்பாக ஆலோசனை நடத்திய சந்திரசேகர ராவ், மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜியையும் சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

    விரைவில் உத்தரப்பிரதேசம் மாநிலத்துக்கு செல்லும் அவர் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். மாநில கட்சிகளை ஒருங்கிணைப்பதில் அக்கறை காட்டிவரும் சந்திரசேகர ராவை சந்திப்பதற்காக ஐதராபாத் செல்வேன் என்று உ.பி.முன்னாள் முதல் மந்தியும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில், டெல்லியில் இன்று பிற்பகல் பிரதமர் மோடியை சந்திரசேர ராவ் திடீரென சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது, தெலுங்கானா மாநிலம் தொடர்பான விவகாரங்கள் தொடர்பாக அவர் ஆலோசித்திருப்பார் என தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர்கள் குறிப்பிட்டனர். #ChandrasekharRao #thirdfront #parliamentpolls #ChandrashekarRaomeetsModi
    பாராளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணி அமைவதற்கு ஆதரவு திரட்டிவரும் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் இன்று மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜியை சந்தித்தார். #ChandrasekharRao #Mamata #thirdfront #parliamentpolls
    கொல்கத்தா:
     
    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அரசியல் கட்சிகள் முன்னேற்பாடு பணிகளில் இறங்கி உள்ளன. சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றிமுகம் காட்டிய காங்கிரஸ், அதே வேகத்தோடு பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகிறது. 5 மாநில தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் மீதும், ராகுல்காந்தி மீதும் எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது.
     
    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையில் ஓர் அணியும், காங்கிரஸ் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடும் நிலை உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான அணியை பலப்படுத்தும் முயற்சிகளில் ஆந்திரா முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தீவிரம் காட்டி வருகிறார்.

    இதற்கிடையே, பா.ஜ.க அணியிலும், காங்கிரஸ் அணியிலும் சேராமல், மாநில கட்சிகள் ஒருங்கிணைந்து 3-வது அணி ஒன்றை அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவரும், தெலுங்கானா மாநில முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவ் களமிறங்கி உள்ளார்.
     
    இது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். 

    இந்நிலையில், நேற்று ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை சந்தித்து மூன்றாவது அணி தொடர்பாக ஆலோசனை நடத்திய சந்திரசேகர ராவ் இன்று மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜியை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

    விரைவில் உத்தரப்பிரதேசம் மாநிலத்துக்கு செல்லும் அவர் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். #ChandrasekharRao #Mamata #thirdfront #parliamentpolls
    தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துள்ள சந்திரசேகர ராவ், நாளை முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #TelanganaElections #ChandrashekharRao
    ஐதராபாத்:

    ஆந்திராவை இரண்டாக பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் முதன் முதலாக முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி அமைந்தது. அவர் தனது அரசின் பதவிக்காலம் முடிய 9 மாதங்கள் இருந்த நிலையில், சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க தயார் ஆனார்.

    இந்நிலையில், தெலுங்கானாவில் கடந்த 7-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டு உள்ளது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் தெலுங்கானா ஜன சமிதியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது.



    இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி 88 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் 21 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். பா.ஜனதாவுக்கு ஒரு இடம் கிடைத்தது. பிற கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.

    இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தின் இரண்டாவது முதல்வராக சந்திரசேகர ராவ் நாளை பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தெலுங்கானா  ராஷ்டிர சமிதி கட்சி எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 11.30 மணியளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவராக  சந்திரசேகர ராவ் தேர்வு செய்யப்பட உள்ளார். இந்த கூட்டத்தின்போது, பதவியேற்பு விழா தேதியும் இறுதி செய்யப்பட உள்ளது.

    காஜ்வெல் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் காங்கிரஸ் வேட்பாளர் பிரதாப் ரெட்டியை 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். சந்திரசேகர  ராவின் மகன் கே.டி.ராமா ராவ், மருமகன் ஹரிஷ் ராவ் ஆகியோரும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். #TelanganaElections #ChandrashekharRao

    ×