என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலி தீவு"

    • விபத்து நடந்தபோது கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது.
    • குழுவினர் சுமார் 6.5 அடி உயர அலைகளுடன் கடினமான சூழ்நிலைகளில் பணியாற்றி வருகின்றனர்.

    இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவின் கெட்டபாங் துறைமுகத்தில் இருந்து நேற்று இரவு 65 பேருடன் படகு ஒன்று பாலி தீவில் உள்ள கிலிமானுக் துறைமுகத்திற்கு புறப்பட்டு சென்றது. மேலும் அந்த படகில் 14 லாரிகள் உள்பட 22 வாகனங்கள் இருந்தன.

    கே.எம்.பி. துனு பிரதாமா ஜெயா என்று பெயரிடப்பட்ட அந்த படகு புறப்பட்ட 30 நிமிடங்களுக்குப் பிறகு விபத்துக்குள்ளானது. இதில் படகு கடலில் ஒருபக்கம் சாய்ந்து மூழ்கியது.

    இதனால் படகில் இருந்தவர்கள் கடலில் விழுந்து தத்தளித்தனர். உடனே மீட்புப்படையினர் அங்கு விரைந்து சென்றனர். விபத்து நடந்தபோது கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. இதனால் மீட்புப் பணி சவாலாக இருந்தது.

    இந்த விபத்தில் 4 பேர் பலியானார்கள். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 38 பேர் மாயமாகி இருந்தனர். அவர்களை மீட்க இரவு முழுவதும் கொந்தளிப்பான கடலில் தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். இன்றும் தேடுதல் வேட்டை தொடர்ந்து வருகிறது.

    மீட்புப் பணியில் 2 இழுவைப் படகுகள், 2 சிறிய அளவிலான கப்பல்கள் உள்பட 9 படகுகள் ஈடுபட்டுள்ளன. இந்த குழுவினர் சுமார் 6.5 அடி உயர அலைகளுடன் கடினமான சூழ்நிலைகளில் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மீட்கப்பட்டவர்களில் பலர் மணிக்கணக்கில் கொந்தளிப்பான கடலில் மிதந்ததால் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. படகு விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    • விபத்துக்குள்ளான படகில் 14 லாரிகள் உட்பட 22 வாகனங்கள் இருந்தன.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் 20க்கும் மேற்பட்டோரை மீட்டனர்.

    இந்தோனேசியாவில் உள்ள பிரபல சுற்றுலா தலமான பாலி தீவு அருகே 65 பேருடன் சென்ற படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.

    விபத்துக்குள்ளான படகில் 53 பயணிகள், 12 பணியாளர்கள் மற்றும் 14 லாரிகள் உட்பட 22 வாகனங்கள் இருந்தன.

    விபத்து நடந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் 20க்கும் மேற்பட்டோரை மீட்டனர்.

    இந்த விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 38 பேர் மாயமானதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மாயமானவர்களை தீவிரமாக தேடி வருவதாக அதிகாரிகள் கூறினர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. 

    • பியர் க்ரில்ஸ் நிகழ்ச்சியில் பார்த்ததுபோல் மழை நீரை சேகரித்தும், கூடாரம் அமைத்தும் 30 மணி நேரமாக உயிர் வாழ்ந்துள்ளனர்.
    • மீட்பு குழுவினரின் உதவியுடன் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

    இங்கிலாந்தின் தொலைக்காட்சி தொகுப்பாளராக கேத்தரின் ஃபார்ஸ்டர் தனது மகன்களுடன் இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு மேத்யூ (22), ஆண்ட்ரூ (18) என்ற அவரின் 2 மகன்களும் வழிதவறி பாலியில் உள்ள எரிமலையின் மீது எறியுள்ளனர். அங்கிருந்து எப்படி இறங்குவது என தெரியாமல் எரிமலையில் அவர்கள் மாட்டிக் கொண்டனர்.

    அவர்களை மீட்க மீட்புக்குழுவினர் அந்த எரிமலைக்கு புறப்பட்டனர். எரிமலையில் 30 மணிநேரத்திற்கு மேலாக சிக்கி கொண்டதால், அவர்கள் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் க்ரில்ஸ் வீடியோவில் கூறிய அறிவுரைகளை வைத்து உயிர்பிழைத்துள்ளனர்.

    பியர் க்ரில்ஸ் நிகழ்ச்சியில் பார்த்ததுபோல் மழை நீரை சேகரித்தும், கூடாரம் அமைத்தும் 30 மணி நேரமாக உயிர் வாழ்ந்துள்ளனர்.

    கிட்டத்தட்ட 40 மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்பு குழுவினரின் உதவியுடன் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

    • அஜித்குமார் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்றது.
    • இந்தியர்கள் தேனிலவுக்கு செல்லும் முக்கிய சுற்றுலாத் தலமாக 'பாலி' உள்ளது.

    ஒவ்வொரு ஆண்டில் முடிவிலும் அந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 விஷயங்களை அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் 2024ம் ஆண்டு கூகுளில் இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட சுற்றுலாத்தலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

     அதன்படி 2024ம் ஆண்டு கூகுளில் இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட சுற்றுலாத்தலங்களில் அஜர்பைஜான் முதலிடத்தில் உள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்றது. இதனையடுத்து அஜித் ரசிகர்கள் அஜர்பைஜான் நாட்டை பற்றி அதிக அளவில் கூகுளில் தேடியுள்ளனர். அதன் விளைவாக அஜர்பைஜான் இப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

    பாலி தீவு

    பாலி தீவு 

     இப்பட்டியலில் இரண்டாம் இடத்தை பிரபல சுற்றுலாத் தலமான 'பாலி' பிடித்துள்ளது. இந்தியர்கள் பலரும் தேனிலவுக்கு செல்லும் முக்கிய சுற்றுலாத் தலமாக 'பாலி' உள்ளது குறிப்பிடத்தக்கது.

    மணாலி

    மணாலி

     இந்த டாப் 10 பட்டியலில் மணாலி, ஜெய்ப்பூர், அயோத்தி, காஷ்மீர், தெற்கு கோவா உள்ளிட்ட 5 இந்திய சுற்றுலா தளங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தியர்கள் அதிக அளவில் சுற்றுலா செல்லும் 'மணாலி' இப்பட்டியலில் 3-ம் இடம் பிடித்துள்ளது. ஜெய்ப்பூர் 5-ம் இடமும், அயோத்தி 8-ம் இடமும் காஷ்மீர் 9-ம் இடமும் தெற்கு கோவா 10-ம் இடமும் பிடித்துள்ளது.

    ஜெய்ப்பூர்

    ஜெய்ப்பூர்

     ராமர் கோவில் கட்டப்பட்ட பிறகு அக்கோவிலை பார்க்க லட்சக்கணக்கான மக்கள் அயோத்திக்கு சென்று வருகின்றனர். அதன் விளைவாக இப்பட்டியலில் அயோத்தி இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ராமர் கோவில்

    ராமர் கோவில் 

     அஜர்பைஜான், பாலிக்கு அடுத்தபடியாக இப்பட்டியலில் கஜகஸ்தான், ஜார்ஜியா, மலேசியா உள்ளிட்ட 3 வெளிநாட்டு சுற்றுலா தளங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த டாப் 10 பட்டியலில் கஜகஸ்தான் 4-ம் இடமும் ஜார்ஜியா 6-ம் இடமும் மலேசியா 7-ம் இடமும் பிடித்துள்ளது.

    மலேசியா

    மலேசியா 

     2024ம் ஆண்டு கூகுளில் இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட சுற்றுலாத்தலங்கள்:

    1. அஜர்பைஜான்

    2. பாலி

    3. மணாலி

    4. கஜகஸ்தான்

    5. ஜெய்ப்பூர்

    6. ஜார்ஜியா

    7. மலேசியா

    8. அயோத்தி

    9. காஷ்மீர்

    10. தெற்கு கோவா

    ×