search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gadget"

    • பத்து மணி நேரம் வரை பயன்படுத்த முடியும்.
    • IP67 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது.

    சியோமி நிறுவனம் இரண்டு புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர் மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. சியோமி சவுண்ட் பாக்கெட் மற்றும் சியோமி சவுண்ட் அவுட்-டோர் என இவை அழைக்கப்படுகின்றன.

    இரு மாடல்களில் சியோமி சவுண்ட் அவுட்டோர் மாடல் பிளாக், புளூ மற்றும் ரெட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. பெரும்பாலான பைகளில் எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய வகையில் இந்த ஸ்பீக்கர் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள ரப்பர் மற்றும் ஸ்டிராப் இதை கைகளிலேயே சுலபமாக எடுத்து செல்ல வைக்கிறது.

     


    அளவில் சிறியதாக இருந்தாலும், இந்த ஸ்பீக்கர் அதிகபட்சம் 30 வாட் திறனில் ஆடியோவை வெளிப்படுத்துகிறது. இதற்காக இந்த மாடலில் பில்ட்-இன் சப்-வூஃபர், இரண்டு பேசிவ் ரேடியேட்டர்கள் மற்றும் டுவீட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் IP67 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது.

    ப்ளூடூத் 5.4 தொழில்நுட்பம் கொண்டிருக்கும் இந்த ஸ்பீக்கர் 2600 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்து 50 சதவீத சத்தம் வைத்து கேட்கும் படச்சத்தில் இது 12 மணி நேர பிளேபேக் வழங்குகிறது.

     


    சியோமி சவுண்ட் பாக்கெட் மாடல் அளவில் மிகச் சிறியதாகவும், பிளாக் நிறத்திலும் கிடைக்கிறது. 5 வாட் திறனில் ஆடியோவை வெளிப்படுத்தும் இந்த ஸ்பீக்கரிலும் IP67 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் வசதி வழங்கப்படுகிறது. இதை 40 சதவீத சத்தத்தில் கேட்கும் போது பத்து மணி நேரம் வரை பயன்படுத்த முடியும்.

    • தண்ணீர் சுத்திகரிப்பு கருவி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
    • பழங்குடியினர் வீடுகளில் பொருத்தப்பட்ட தண்ணீர் சுத்திகரிப்பு கருவியை கலெக்டர் பார்வையிட்டார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை கிராமத்தில் நீலகிரி ஆதிவாசி நல சங்கம் சார்பில் பாபா அணு ஆராய்ச்சி நிலைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மின்சாரம் இல்லாமல் குறைந்த விலையில் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    இதனை பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி தெப்பக்காடு யானைகள் முகாம் கூட்டரங்கில் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் அம்ரித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பாபா அணு ஆராய்ச்சி நிலைய தொழில் நுட்பத்தில் தயாரான நீர் சுத்திகரிப்பு கருவிக்கான நண்ணீர் கிராம திட்டம்-2.0 வை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அம்ரித் பேசும்போது கூறியதாவது:-

    தெப்பக்காடு பகுதியில் உள்ள யானைப்பாடி, தேக்குபாடி, கார்குடி, லைட்பாடி ஆகிய 4 கிராமங்களில் 350 வீடுகள் உள்ளன. அங்கு இதுவரை 200 வீடுகளுக்கு தண்ணீர் சுத்திகரிப்பு கருவி இலவசமாக வழங்கப்பட்டு உள்ளது.

    இங்கு வசிக்கும் குழந்தைகளை பெற்றோர் அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அங்கு இவர்களின் உயரம், எடை ஆகியை கணக்கெடுக்கப்பட்டு, அதற்கு தேவையான சத்துணவுகள் வழங்கப்படுகின்றன. இதுதவிர தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இதனை பழங்குடி மகக்கள் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக மசினக்குடி பழங்குடியினர் கிராமத்தில் உள்ள பழங்குடியினர் வீடுகளில் பொருத்தப்பட்டு உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு கருவியை கலெக்டர் பார்வையிட்டார்.

    அடுத்தபடியாக அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து நன்னீர் 1.0 திட்டத்தின் கீழ் செயல்படுத்திய பணிகள் குறித்த புகைப்படத்தை பார்வையிட்ட கலெக்டர் நன்னீர் கிராம திட்ட அறிக்கையை வெளியிட்டார்.

    நிகழ்ச்சியில் கள இயக்குநர் (முதுமலை புலிகள் காப்பகம்) வெங்கடேஷ், கூடலூர் வனஅதிகாரி கொம்மு ஒம்காரம், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் அண்ணாதுரை, குமார், நாவா தலைவர் சண்முகம், செயலாளர் ஆல்வாஷ், திட்ட அதிகாரி பூவிழி (நன்னீர் கிராமம்) நாவா பொருளாளர் சுப்பிரமணி மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆடியோ சாதனங்களை உற்பத்தி செய்யும் பிரபல நிறுவனமான போல்ட் இந்தியாவில் புதிய இயர்போனினை அறிமுகம் செய்துள்ளது. #Earphone



    ஆடியோ சாதனங்களை சுவாரஸ்ய அம்சங்களுடன் வழங்குவதில் பிரபல நிறுவனமாக அறியப்படும் போல்ட் ஆடியோ இந்தியாவில் புதிய வயர்டு இயர்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.

    லூப் என அழைக்கப்படும் புதிய போல்ட் இயர்போன்களில் ஆங்கில்டு இயர் டிப்கள் மற்றும் பிரத்யேக இயர் லூப் ஃபாஸ்ட்னர் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது. கெவ்லரின் கேபிள்களை கொண்டிருக்கும் இந்த இயர்போனின் ஸ்டேபிலைசர் சீரான ஆடியோ தரத்தை வழங்கும்.

    மேலும் இதில் உள்ள ஹை-ரிகிடிட்டி ஏ.எல். (High-rigidity AL) அலாய் ஹவுசிங்கள் தொடர் பயன்பாடுகளிலும் சிறப்பான அனுபவத்தை வழங்கும். இதன் சிலிகான் டிரான்ஸ்லூசென்ட் இயர் ஃபாஸ்ட்னர் காதுகளில் கச்சிதமாக பொருந்திக் கொண்டு அடிக்கடி கீழே விழாதபடி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் உடற்பயிற்சி செய்யும் போது சிறப்பான ஆடியோ உத்வேகத்துடன் பயிற்சியில் மட்டும் கவனம் செலுத்த முடியும்.

    கூடுதலாக இதில் 3.5 எம்.எம். கனெக்டர் வழங்கப்பட்டு இருப்பதோடு உயர் ரக அழைப்புகள் மற்றும் வாய்ஸ் கமான்ட் செய்ய ஏதுவாக இயர்போனில் பில்ட்-இன் கன்டெசர் மைக்ரோபோன் பொருத்தப்பட்டுள்ளது.



    போல்ட் ஆடியோ லூப் முக்கிய அம்சங்கள்:

    – உயர் ரக கேபிள் – ஆடியோ தரத்தை குறையாமல் பார்த்துக் கொள்கிறது
    – 3D சவுன்ட்- சின்க்ரோனைஸ் செய்யப்பட்டு மேம்பட்ட ஆடிட்டரி அனுபவம் வழங்க 3D அகௌஸ்டிக்ஸ்
    – 3.5 எம்.எம். கனெக்டர் – தங்க முலாம் பூசப்பட்ட சர்வதேச 3.5 எம்.எம். கனெக்டர்
    – பில்ட்-இன் மைக் – கன்டென்சர் மைக்ரோபோன் உயர் ரக அழைப்புகளுக்கு ஏதுவாக இருக்கும்
    – பில்ட்-இன் மைக்ரோ ஊஃபர்கள் – இயர்போனின் ஆடியோ தரம் மற்றும் ஒலியை சிறப்பாக வழங்குகிறது

    இந்தியாவில் புதிய போல்ட் ஆடியோ லூப் விலை ரூ.672 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, எனினும் மிந்த்ரா தளத்தில் ரூ.530 எனும் சிறப்பு விலையில் வாங்கிட முடியும்.
    ×