இந்தா வந்துட்டான்ல.. அறிமுகமாகிறது சாம்சங் கேலக்ஸி S25 சீரிஸ்.. என்னைக்கு தெரியுமா?

செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்களுடன் அறிமுகமாகிறதுஇதற்கான முன்பதிவு இந்தியாவில் தொடங்கியுள்ளது.
இந்தா வந்துட்டான்ல.. அறிமுகமாகிறது சாம்சங் கேலக்ஸி S25 சீரிஸ்.. என்னைக்கு தெரியுமா?
Published on

இந்தியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் Galaxy S25 Series மொபைல் போன்கள் வரும் 22ம் தேதி வெளியாக உள்ளன.

சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்ச்சி ஜனவரி 22 ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 10:30 மணிக்கு தொடங்குகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸில் இந்நிகழ்வானது நடைபெறுகிறது.

இந்நிகழ்வின் முக்கிய அறிமுகமாக கேலக்ஸி எஸ் 25 சீரிஸ் இருக்கும். எஸ்25 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்களுடன் அறிமுகமாகிறது. S25, S25+, S25 Ultra ஆகிய 3 மாடல்கள் வெளியாகும் என எதிர்பார்காப்படுகிறது. இதற்கான முன்பதிவு இந்தியாவில் தொடங்கியுள்ளது.

இந்த நிகழ்வில், Project Moohan என அழைக்கப்படும் எக்ஸ்டென்டட் ரியாலிட்டி (Extended reality - XR) ஹெட்செட்டையும் சாம்சங் அறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்டுகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com