search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vanniyar sangam"

    • உத்தரவை எதிர்த்து வன்னியர் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
    • வழக்கு நீதுபதி பி.எஸ் நரசிம்மா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

    சென்னை:

    சென்னை அருகே பரங்கி மலையில் உள்ள 41,952 சதுர அடி நிலத்தை தற்காலிகமாக பயன்படுத்திக் கொள்ள காசி விஸ்வநாதர் தேவஸ்தானத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.

    இந்த இடத்தில் வன்னியர் சங்கக் கட்டிடம் கட்டப்பட்டு அலுவலகமாக செயல்பட்டு வந்த, நிலையில் இந்த நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறி பல்லாவரம் தாசில்தார், அந்த நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

    இதையடுத்து, வன்னியர் சங்க கட்டிடத்துக்கு அரசு 'சீல்' வைத்தது. அந்த உத்தரவை எதிர்த்து வன்னியர் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, வன்னியர் சங்க கட்டடத்துக்கு 'சீல்' வைத்த அரசின் உத்தரவை ரத்து செய்தது. அதனை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கு நீதுபதி பி.எஸ் நரசிம்மா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், இந்த நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளதாக அரசு கூறியுள்ளது. யாருடைய இடம் என்பதை கண்டறிய வேண்டி உள்ளது. எனவே இந்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக வன்னியர் சங்கம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் பிறப்பித்தனர்.

    இந்த வழக்கில் புற எதிர் மனுதாரர்களான காசி விஸ்வநாதர் கோவில் நிர்வாகம், கன்டோன்மென்ட் அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.

    • முந்தைய அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு 10.50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் நிறை வேற்றப்பட்டது.
    • நாம் ஏன் பலரிடமும் சமூகநீதிக்காக கையேந்திக் கொண்டிருக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வன்னியர்களுக்கு மட்டும் வழங்கப்பட வேண்டிய 20 சதவீதம் இட ஒதுக்கீடு 108 சாதிகளுக்கு இணைத்து வழங்கப்பட்டதால் நமக்கு கிடைக்க வேண்டிய உரிமை கள் கிடைக்கவில்லை. அதை சுட்டிக்காட்டியதன் பயனாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான முந்தைய அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு 10.50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் நிறை வேற்றப்பட்டது. சமூகநீதிக்கு எதிரான சக்திகள் தொடர்ந்த வழக்குகளால் அந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யபட்டாலும், தரவு களைத் திரட்டி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று 31.03.2022-ஆம் நாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பு வெளியாகி ஓராண்டும், 108 நாட்களாகியும் கூட இன்னும் புதிய இட ஒதுக்கீட்டு சட்டம் நிறை வேற்றப்படவில்லை.

    தமிழக அரசுக்கு இதுதொடர்பாக பலமுறை அழுத்தம் கொடுத்தோம். அதன்பயனாக கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களின் நிலை குறித்த புள்ளி விவரங்களை மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு வாங்கி பகுப்பாய்வு செய்து வருகிறது. இந்தப் பணிகள் இன்னும் சில வாரங்களில் நிறைவடைந்தால், அடுத்த சில வாரங்களில் வன்னியர்கள் இட ஒதுக்கீட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டு விடும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

    வன்னியர்களின் இட ஒதுக்கீட்டிற்காக ஆட்சியாளர்களிடம் கோரிக்கை வைக்கும் போதெல்லாம் எனது மனதில் எழும் கேள்வி ஒன்று தான்.

    தமிழ்நாட்டில் எல்லா சாதிகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அதிகாரத்தை நம்மால் வென்றெடுக்க முடியும் எனும் போது, நாம் ஏன் பலரிடமும் சமூகநீதிக்காக கையேந்திக் கொண்டிருக்க வேண்டும் என்பதே அந்த வினா.

    உண்மை தான்... வன்னியர்களும் சமூகநீதி தேவைப்படும் பிற சமுதாயங்களும் இணைந்து நின்று தேர்தலை சந்தித்தால் மிகவும் எளிதாக அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க முடியும். இந்த உண்மையை நாம் உணரும் போது தான் நமக்கு உண்மையான விடுதலை கிடைக்கும். அந்த வகையில், அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் முயற்சிக்கு நாம் அனைவரும் படிக்கட்டுகளாக இருந்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, வன்னியர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் 44-ம் ஆண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொள்கிறேன்.

    வன்னியர் சங்கத்தின் 44-ஆம் ஆண்டு விழாவையொட்டி ஒவ்வொரு குடியிருப்பு பகுதிகளிலும் வன்னியர் சங்கக் கொடியேற்ற வேண்டும்; போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டின் சிறப்புகள், அதற்காக நாம் செய்த தியாகங்கள் பற்றி இளைஞர்களி டம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதற்காக இந்த மடலை துண்டறிக்கை யாக தயாரித்து வீடு வீடாகச் சென்று வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    'ஜெய் பீம்' பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா உள்பட மூவருக்கு வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
    ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘ஜெய் பீம்’. பழங்குடியின மக்களின் வாழ்வியலை மையமாக எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. பிரபலங்கள் பலரும் இப்படத்தை பார்த்து வெகுவாக பாராட்டினர்.

    இதனிடையே, ஜெய் பீம் படத்தில் பழங்குடியினர்களை சித்திரவதை செய்யும் குருமூர்த்தி என்கிற போலீஸ் கதாபாத்திரம் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் போல் காட்டப்பட்டு இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது. படத்தில் ஒரு காட்சியில் அவர் தொலைபேசியில் பேசும்போது பின்னணியில் வன்னியர் சங்க காலண்டர் இடம்பெற்றிருக்கும், இதுவே எதிர்ப்புக்கும் காரணமானது.

    இதற்கு பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்ததோடு, நடிகர் சூர்யாவுக்கு அடுக்கடுக்கான கேள்விகளையும் எழுப்பி இருந்தார். இதற்கு சூர்யாவும் அறிக்கை வாயிலாக பதிலளித்தார்.

    சூர்யா

    இந்நிலையில், 'ஜெய் பீம்' பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா மற்றும் இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. 

    அந்த நோட்டீஸில், ரூ.5 கோடி இழப்பீடு தர வேண்டும் என்றும், வன்னியர் சமூகத்தினரை தவறாக சித்தரித்ததற்காக நாளிதழ் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கோர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கோராவிட்டால் அனைவர் மீதும் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    ×