search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூர்யா"

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள 'விக்ரம்' படத்தில் சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
    மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வெளியாக இருக்கும் திரைப்படம் 'விக்ரம்'. கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் இப்படம் மீது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 'விக்ரம்' படத்தின் டிரைலரை உலகின் உயரமான கட்டிடமான, துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் உள்ள மிகப்பெரிய திரையில் இன்று இரவு 8.10 மணிக்கு திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. 

    விக்ரம்
    விக்ரம்

    இந்நிலையில் 'விக்ரம்' படத்தில் சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர்களை குறிப்பிட்டு போஸ்டர்களை படக்குழு வெளியிட்டிருந்தது. தற்போது சூர்யா நடித்துள்ள கதாப்பாத்திரத்தின் பெயர் என்ன என்று ரசிகர்களை கேள்வி கேட்கும் வகையில் இந்த போஸ்டர் இடம்பெற்றிருக்கிறது. இதனுடன் சூர்யாவிற்கு நன்றி தெரிவித்து லோகேஷ் கனகராஜ் இந்த போஸ்டரை வெளியிட்டிருக்கிறார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


    இயக்குனர் பாலா-சூர்யா இடையில் ஏற்பட்ட மோதலால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது என்று எழுந்த வதந்திகளுக்கு சூர்யா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
    எதற்கும் துணிந்தவன் படத்தின் வெற்றிக்கு பிறகு பாலா இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதற்குமுன் இந்த கூட்டணியில் பிதாமகன், நந்தா படங்கள் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். தற்போது இவர்கள் மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இப்படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 41' என பெயரிடப்பட்டுள்ளது. இதில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை '2டி என்டர்டைன்மெண்ட்' நிறுவனம் தயாரிக்கிறது. 

    சமீபத்தில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இதனிடையே சூர்யாவிற்கும் பாலாவிற்கும் இடையே மோதல், இதனால் படப்பிடிப்பு தளத்திலிருந்து சூர்யா விலகியதால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது போன்ற தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது. 

    பாலா - சூர்யா
    பாலா - சூர்யா

    இந்நிலையில் நடிகர் சூர்யா இப்படம் குறித்து பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், மீண்டும் சூர்யா 41 படப்பிடிப்புக்கு வர காத்திருக்கிறேன் எனக் குறிப்பிட்டு, படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். தொடர் வதந்திகளுக்கு மத்தியில் ஒரு பதிவின் மூலம் சூர்யா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இவரின் இந்த பதிவு சூர்யா ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.


    ×