search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூர்யா உருவ பொம்மையை எரிக்க முயன்ற போது போலீசார் தடுத்து உருவ பொம்மையை எடுத்து சென்ற போது எடுத்த படம்.
    X
    சூர்யா உருவ பொம்மையை எரிக்க முயன்ற போது போலீசார் தடுத்து உருவ பொம்மையை எடுத்து சென்ற போது எடுத்த படம்.

    ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சூர்யா, ஜோதிகாவை கைது செய்யக்கோரி பா.ம.க.வினர் மனு

    நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று பா.ம.க.வினர் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தனர்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் எம்.கே.முரளி தலைமையில் இதுகுறித்து மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    சமீபத்தில் நடிகர் சூர்யா தயாரித்து நடித்த அமேசான் வெளியிட்ட திரைப்படம் ஜெய்பீம். இந்த திரைப்படம் 1995 ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    சாதிப் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் படமெடுத்த நடிகர் சூர்யா மற்றும் அவருடைய மனைவி ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் ஆகியோரை கைதுசெய்து படத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் அவர்கள் கூறியிருந்தனர்.

    அப்போது பா.ம.க. முன்னாள் மாவட்ட செயலாளர் நல்லூர் சண்முகம், சமூக நீதிப்பேரவை மாநில துணை செயலாளர் வக்கீல் ஜானகிராமன், வாலாஜா மத்திய ஒன்றிய செயலாளர் சபரி கிரீசன் உள்பட பா.ம.க.வினர் மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    இதேபோல் ஜெய்பீம் படத்தை கண்டித்து ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் சோளிங்கர் தாலுகா அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பா.ம.க.முன்னாள் மாவட்ட செயலாளர் அ.ம.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சரவணன், சமூக சமூக நீதிப் பேரவை துணைச் செயலாளர் சக்கரவர்த்தி முன்னிலை வகித்தனர். இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் கலந்து கொண்டு கோஷமிட்டனர். தொடர்ந்து போலீஸ் நிலையம் சென்று சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீசாரிடம் புகார் மனு அளித்தனர்.

    பாணாவரம் போலீஸ் நிலையத்திலும் நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ம.க.வினர் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் மனு அளித்தனர். அப்போது போலீஸ் நிலையம் எதிரில் நடிகர் சூர்யா உருவ பொம்மையை அவர்கள் எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ேபாலீசார் அதனை தடுத்து பா.ம.க.வினரிடமிருந்து உருவபொம்மையை பிடுங்கிச்சென்றனர்.

    இதே பிரச்சினையை கண்டித்து அரக்கோணம் தாலுகா அலுவலகம் முன்பு ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பா.ம.க.வினர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர், அவர்கள் அரக்கோணம் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று திரைப்படத்தில் நடித்த சூர்யா தயாரிப்பாளர் ஜோதிகா இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கு கூறி மனு அளித்தனர்.

    ஆற்காடு நகர பா.ம.க. சார்பில் நகர செயலாளர் அறிவுச்சுடர் தலைமையில் மாநில பசுமை தாயகம் பொறுப்பாளர் டி.டி.மகேந்திரன், நகர தலைவர் சஞ்சீவிராயன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ஏ.வி.டி.பாலா நகர துணை செயலாளர் ராமன் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆற்காடு டவுன் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார்.

    அதில் நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தனர்.

    வாலாஜா போலீஸ் நிலையத்தில் பா.ம.க. நகர செயலாளர் ஞானசேகர் தலைமையில் நடிகர் சூர்யா, ஜோதிகா, இயக்குனர்் ஞானவேல் ஆகியோரை கைது செய்ய கோரி புகார் மனு அளித்தனர்.

    அப்போது நகர தலைவர் சுரேந்தர், ஒன்றிய செயலாளர்கள் ரவி, ரஜினிசக்ரவர்த்தி, முன்னாள் ஒன்றிய செயலாளர் பூண்டி மோகன், மாநில நிர்வாகி ஞானசவுந்தரி உள்பட பலர் உடனிருந்தனர்.
    Next Story
    ×