என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாராகிளைடர்"

    • பாமக சார்பில் இன்று சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற்று வருகிறது.
    • மாநாட்டில், 1.80 லட்சம் இருக்கைகளுடன் பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பா.ம.க. சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் இன்று மாலை தொடங்கியுள்ளது. இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் மிக பிரமாண்டமாக தயார் செய்யப்பட்டது.

    தமிழ்நாடு முழுவதும் இருந்து பா.ம.க. தொண்டர்கள் மாநாட்டில் திரளாக பங்கேற்றுள்ளனர். இதற்காக 1 லட்சத்து 80 ஆயிரம் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    தலைவர்கள் அமரும் மேடைக்கு எதிரே அனைத்து பகுதிகளிலும் நிகழ்ச்சியை காண 3 இடங்களில் ராட்சத எல்.இ.டி. திரை வைக்கப்பட்டுள்ளது.

    அதேபோல, 40-க்கு 20 உயரத்தில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

    மாநாட்டு திடலில் வன்னியர் சங்கம் உருவானது முதல் தற்போது வரையிலான வரலாற்று தொகுப்பு புகைப்பட காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.

    இன்று மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கிய நிலையில், புஷ்பவனம் குப்புசாமியின் இசை நிகழ்ச்சி, நாட்டுப்புற கலைநிகழ்ச்சி உள்ளிட்டவைகள் நடைபெற்று வருகிறது.

    அதைத்தொடர்ந்து, வன்னிய வள்ளல்கள் தியாகிகள் என்ற குறும்படமும் ஒளிபரப்பப்பட்டது.

    இதற்கிடையே, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மேடைக்கு வந்த நிலையில், பாராகிளைடரில் வன்னியர் சங்கக் கொடி பறக்கவிடப்பட்டது. கொடி பறந்ததை கண்டு, ஏராளமான தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர். மேலும், மாநாட்டுக் கொடியை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஏற்றி வைத்தார். 

    • கீழே விழுந்த அதிர்ச்சியில் பியோங் மூனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
    • தென் கொரிய நபரின் சடலத்தை அவரது சொந்த நாட்டிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தென் கொரியாவை சேர்ந்த ஷின் பியோங் மூன் (50) என்ற நபர் தனது நண்பருடன் இந்தியாவிற்கு சுற்றுலா வந்திருந்தார். அப்போது குஜராத் சென்ற அவர்களில், மூன் மெஹ்சானா மாவட்டத்தில் பாராகிளைடிங் சாகசம் செய்தார். அப்போது திடீரென 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த மூன் உயிரிழந்தார்.

    மாவட்டத்தின் காடி நகருக்கு அருகில் உள்ள விசாத்புரா கிராமத்தில் உள்ள பள்ளி மைதானத்தில் நேற்று மாலை 5.30 மணியளவில் இந்த விபத்து நடந்தது.

    அப்போது ஷின் பியோங் மூன் தனது பாராகிளைடரின் விதானம் சரியாக திறக்காததால் விபத்து ஏற்பட்டது என்றும், இதன் காரணமாக அவர் சமநிலையை இழந்த ஷின் பியோங் சுமார் 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார்.

    பலத்த காயங்களுடன் மயக்கத்தில் இருந்த அவரை நண்பர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், அங்கு மூன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கீயே விழுந்த அதிர்ச்சியில் பியோங் மூனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    சம்பவம் குறித்து காடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வதோதராவில் உள்ள அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மற்றும் கொரிய தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த நபரின் சடலத்தை அவரது சொந்த நாட்டிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×