என் மலர்
நீங்கள் தேடியது "backward classes"
- பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42% இடஒதுக்கீடு கொடுப்பதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது.
- காங்கிரஸ் அரசு கடந்த செப்டம்பர் 26ம் தேதி அரசாணை வெளியிட்டது.
தெலங்கானாவில் உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42% இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி மாநிலம் முழுவதும் இன்று பந்த் தொடங்கியது. இந்த பந்த் நடவடிக்கைக்கு ஆளும் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. பந்த் நடவடிக்கையால் தெலுங்கானாவின் பல மாவட்டங்களில் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டன.
உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42% இடஒதுக்கீடு கொடுப்பதாக அறிவித்த தேர்தல் வாக்குறுதியாக நிறைவேற்றுவதாக ஆளும் காங்கிரஸ் அரசு கடந்த செப்டம்பர் 26ம் தேதி அரசாணை வெளியிட்டது.
தெலுங்கானா அரசின் அரசாணைக்கு அக்டோபர் 9ம் தேதி தெலங்கானா உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால் அந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
- மார்ச் மாதம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றம்.
- மசோதாவை தெலுங்கானா கவர்னர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய மாநிலங்களில் ஒன்று தெலுங்கானா. தெலுங்கானா மாநில சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (BCs) 42 சதவீதம் இடஒதுக்கீடு கல்வி அமைப்புகள், வேலைவாய்ப்பு மற்றும் உள்ளாட்சி பதவிகளில் வழங்கும் வகையில் சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கவர்னர் மசோதாவை ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளார். ஜனாதிபதி ஒப்புதல் அளித்தால் மசோதா சட்டமாகும்.
இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி ஒப்புதலுக்கான மசோதாவை அனுப்பி வைத்ததற்காக தெலுங்கானா மாநில ஆளுநர் ஜிஷ்னு தேவ் வர்மாவுக்கு அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள நன்றி தெரிவித்துள்ளனர்.
கவர்னரை சந்தித்த பின், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பூனம் பிரபாகர் கூறுகையில் "சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் 42 சதவீதம் இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கும் சட்டம் இந்தியாவுக்கு முன்மாதிரியானது" என்றார்.
மாநில காங்கிரஸ் தலைவர் பி. மகேஷ் குமார் கவுட் "பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் முடிவு வரலாற்று முக்கியத்துவமானது" எனத் தெரிவித்துள்ளார்.
- டாடியா மாநில உள்துறை அமைச்சரின் தொகுதிக்கு உட்பட்டது
- பலியானவர்களில் 4 பேர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள்
மத்திய பிரதேசத்தின் வட மத்திய பகுதியில் உள்ளது டாடியா மாவட்டம். இது அம்மாநில உள்துறை அமைச்சர் டாக்டர். நரோத்தம் மிஷ்ராவின் தொகுதிக்கு உட்பட்ட மாவட்டமாகும். இங்கு டாங்கி மற்றும் பால் எனப்படும் இரு பிரிவினர் வசிக்கின்றனர். இந்த இரு பிரிவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் அடங்கும்.
அங்குள்ள நிலங்களில் ஆடுகள் புல் மேய்வது தொடர்பான விஷயங்களில் இந்த இரு பிரிவினருக்குமிடையே அவ்வப்போது வாக்குவாதம் நடப்பதுண்டு.
நேற்று இரு பிரிவை சேர்ந்தவர்களும் இது சம்பந்தமான ஒரு பிரச்சனையை தீர்த்து வைக்க ஒன்று கூடி பேசி வந்தனர். அப்போது அவர்களின் வாக்குவாதம் சண்டையாக மாறியது.
இதனையடுத்து ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். அது வன்முறையாக மாறியதில் அவர்கள் இரு பிரிவினரிடையே துப்பாக்கிகளை மறைத்து வைத்திருந்தவர்கள், அதனை வெளியில் எடுத்து சுட்டனர்.
இதில் 30 வயதுகளில் உள்ள 4 பேர்களும், 70 வயதுக்கு மேற்பட்ட ஒருவரும் கொல்லப்பட்டனர். மேலும் 2 பேர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலியான 5 பேரில், 3 பேர் (பிரகாஷ், ராம்நரேஷ், சுரேந்திரா) டாங்கி வகுப்பையும், 2 பேர் (ராஜேந்திரா, ராகவேந்திரா) பால் வகுப்பையும் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் துப்பாக்கி குண்டுக்கு பலியானவர்கள்.
மேலும் வன்முறை வெடிக்காமல் இருக்க ஏராளமான காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, இதுவரை 6 பேரை காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒரு கூடையில் "முட்டை" போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது இட ஒதுக்கீட்டைக் குறிக்கிறது
- இந்த இட ஒதுக்கீட்டுக் கூடையில் முஸ்லிம் சமூகத்தின் மற்றொரு "முட்டையை" ராகுல் காந்தி போடுகிறார்
கர்நாடகா பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பகை, வெறுப்பு மற்றும் மத மோதல்களை உருவாக்கும் நோக்கில் அனிமேஷன் வீடியோ வெளியிட்டதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா, பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோருக்கு எதிராக, தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
அந்த அனிமேஷன் வீடியோவில், எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒரு கூடையில் "முட்டை" போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது இட ஒதுக்கீட்டைக் குறிக்கிறது. இந்த இட ஒதுக்கீட்டுக் கூடையில் முஸ்லிம் சமூகத்தின் மற்றொரு "முட்டையை" ராகுல் காந்தி போடுகிறார். காங்கிரஸ் தலைவர்கள் எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசிக்களை விட முஸ்லிம் சமூகத்திற்கு ஆதரவாக அதிக நிதியை கொடுத்து, அவர்களின் இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு கொடுத்து விடுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ தேர்தல் நடத்தை விதிகளை மீறுவது மட்டுமின்றி, 1989 ஆம் ஆண்டின் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
குறிப்பாக கர்நாடகாவின் மீதமுள்ள 14 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இதுபோன்ற செயல்கள் சமூகங்களிடையே வெறுப்பை தூண்டும் என்று காங்கிரஸ் கவலை தெரிவித்துள்ளது.
- எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒரு கூடையில் "முட்டை" போல் சித்தரிக்கப்பட்டுள்ளது
- இந்த இட ஒதுக்கீட்டுக் கூடையில் முஸ்லிம் சமூகத்தின் மற்றொரு "முட்டையை" ராகுல் காந்தி போடுகிறார்
கர்நாடகா பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பகை, வெறுப்பு மற்றும் மத மோதல்களை உருவாக்கும் நோக்கில் அனிமேஷன் வீடியோ வெளியிட்டதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா, பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோருக்கு எதிராக, தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
அந்த அனிமேஷன் வீடியோவில், எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒரு கூடையில் "முட்டை" போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது இட ஒதுக்கீட்டைக் குறிக்கிறது. இந்த இட ஒதுக்கீட்டுக் கூடையில் முஸ்லிம் சமூகத்தின் மற்றொரு "முட்டையை" ராகுல் காந்தி போடுகிறார். காங்கிரஸ் தலைவர்கள் எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசிக்களை விட முஸ்லிம் சமூகத்திற்கு ஆதரவாக அதிக நிதியை கொடுத்து, அவர்களின் இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு கொடுத்து விடுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ தேர்தல் நடத்தை விதிகளை மீறுவது மட்டுமின்றி, 1989 ஆம் ஆண்டின் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
குறிப்பாக கர்நாடகாவின் மீதமுள்ள 14 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இதுபோன்ற செயல்கள் சமூகங்களிடையே வெறுப்பை தூண்டும் என்று காங்கிரஸ் கவலை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா, பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோர் மீது இரு பிரிவினர் இடையே மோதல், வெறுப்பை தூண்டுதல் போன்ற பிரிவுகளில் பெங்களூரு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
- எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒரு கூடையில் "முட்டை" போல் சித்தரிக்கப்பட்டுள்ளது
- இந்த இட ஒதுக்கீட்டுக் கூடையில் முஸ்லிம் சமூகத்தின் மற்றொரு "முட்டையை" ராகுல் காந்தி போடுகிறார்
கர்நாடகா பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் ஒரு அனிமேஷன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த அனிமேஷன் வீடியோவில், எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒரு கூடையில் "முட்டை" போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது இட ஒதுக்கீட்டைக் குறிக்கிறது. இந்த இட ஒதுக்கீட்டுக் கூடையில் முஸ்லிம் சமூகத்தின் மற்றொரு "முட்டையை" ராகுல் காந்தி போடுகிறார். காங்கிரஸ் தலைவர்கள் எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசிக்களை விட முஸ்லிம் சமூகத்திற்கு ஆதரவாக அதிக நிதியை கொடுத்து, அவர்களின் இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு கொடுத்து விடுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பகை, வெறுப்பு மற்றும் மத மோதல்களை உருவாக்கும் நோக்கில் அனிமேஷன் வீடியோ வெளியிட்டதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா, பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோருக்கு எதிராக, தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்தது.
இந்த வீடியோ தேர்தல் நடத்தை விதிகளை மீறுவது மட்டுமின்றி, 1989 ஆம் ஆண்டின் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்தது.
இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா, பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோர் மீது இரு பிரிவினர் இடையே மோதல், வெறுப்பை தூண்டுதல் போன்ற பிரிவுகளில் பெங்களூரு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், கர்நாடக பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் முஸ்லிம்கள் குறித்து வெளியான அனிமேஷன் வீடியோவை உடனடியாக நீக்குமாறு எக்ஸ் நிறுவனத்திடம் தேர்தல் ஆணையம் கேட்டு கொண்டுள்ளது.
- எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒரு கூடையில் "முட்டை" போல் சித்தரிக்கப்பட்டுள்ளது
- இந்த இட ஒதுக்கீட்டுக் கூடையில் முஸ்லிம் சமூகத்தின் மற்றொரு "முட்டையை" ராகுல் காந்தி போடுகிறார்.
கர்நாடகா பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் ஒரு அனிமேஷன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அனிமேஷன் வீடியோவில், எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒரு கூடையில் "முட்டை" போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது இட ஒதுக்கீட்டைக் குறிக்கிறது. இந்த இட ஒதுக்கீட்டுக் கூடையில் முஸ்லிம் சமூகத்தின் மற்றொரு "முட்டையை" ராகுல் காந்தி போடுகிறார். காங்கிரஸ் தலைவர்கள் எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசிக்களை விட முஸ்லிம் சமூகத்திற்கு ஆதரவாக அதிக நிதியை கொடுத்து, அவர்களின் இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு கொடுத்து விடுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் எஸ்சி/எஸ்டி மக்களுக்கு எதிராக பகை, வெறுப்பு மற்றும் மத மோதல்களை உருவாக்கும் நோக்கில் அனிமேஷன் வீடியோ வெளியிட்டதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா, பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோருக்கு எதிராக, தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்தது.
இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா, பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோர் மீது இரு பிரிவினர் இடையே மோதல், வெறுப்பை தூண்டுதல் போன்ற பிரிவுகளில் பெங்களூரு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், எஸ்சி/எஸ்டி சமூகத்திற்கு எதிராக கர்நாடக பாஜக வெளியிட்ட வீடியோ தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா மற்றும் பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா ஆகியோரை 7 நாட்களுக்குள் பெங்களூரு ஹைகிரவுண்ட்ஸ் காவல்நிலையத்தில் ஆஜராகுமாறு கர்நாடக காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
கர்நாடக பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் முஸ்லிம்கள் குறித்து வெளியான அனிமேஷன் வீடியோவை உடனடியாக நீக்குமாறு எக்ஸ் நிறுவனத்திடம் தேர்தல் ஆணையம் கேட்டு கொண்டது. இதனையடுத்து எக்ஸ் நிறுவனம் அந்த வீடியோவை நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாக மத்திய அரசு இட ஒதுக்கீட்டில் முக்கிய திருத்தத்தைக் கொண்டுவந்தது.
- இட ஒதுக்கீடு என்பது வரலாற்று ரீதியாக சமூக ஒடுக்குமுறைகளுக்கு உள்ளானவர்களுக்காக கொண்டுவரப்பட்டது.
2019ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாக மத்திய அரசு இட ஒதுக்கீட்டில் முக்கிய திருத்தத்தைக் கொண்டுவந்தது. சமூகத்தால் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதைப் போல் பொருளாதாரத்தால் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு சட்டத்தைத் திருத்தம் செய்தது.
இதன் மூலம், பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை அப்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா திரிவேதி, பி.பர்திவாலா, ரவீந்திர பட் ஆகிய 5 பேர் கொண்ட அமர்வு விசாரித்தது.
இந்த வழக்கில் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் வழங்கப்பட்ட தீர்ப்பில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா திரிவேதி, பி.பர்திவாலா ஆகியோர் மத்திய அரசின் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்றும் தலைமை நீதிபதி யு.யு. லலித் மற்றும் நீதிபதி ரவீந்திர பட் ஆகிய 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என்றும் தீர்ப்பளித்தனர்.
5 இல் 3 நீதிபதிகள் ஆதரித்து தீர்ப்பளித்ததால் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லுபடியாகும் என்று முடிவில் தீர்ப்பானது. தற்போதுவரை இந்த இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. இந்த இடஒதுக்கீட்டை ஏற்கமாட்டோம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று கேரள உயர்நீதிமன்றத்தில் நடந்த மறைந்த நீதிபதி வி.ஆர். கிருஷ்ண ஐயரின் 10ம் ஆண்டு நினைவு கூட்டத்தில் பங்கேற்று பேசிய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரோகிண்டன் நாரிமன் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், இட ஒதுக்கீடு என்பது வரலாற்று ரீதியாக சமூக ஒடுக்குமுறைகளுக்கு உள்ளானவர்களுக்காக கொண்டுவரப்பட்டது.
உயர்வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அரசியல் சாசனத்திற்கு எதிரானது, தார்மீக ரீதியாகவும் தவறானது. இந்த இட ஒதுக்கீட்டை பெறுவோர் வரலாற்று ரீதியாக எந்த ஒடுக்குமுறைக்கும் ஆளானது கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பை சேர்ந்த மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நடைமுறையில் உள்ளது.
இதேபோல், முற்பட்ட வகுப்பினர்களிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வாழும் மக்களுக்கு உயர்கல்வி, அரசு வேலைவாய்ப்பு ஆகியவற்றில் கூடுதலாக 10 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய மத்திய மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடர்பாக, நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் மசோதா ஒன்றை தாக்கல் செய்யவும் மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதற்காக, அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதால் அரசியலமைப்பு சாசன திருத்த மசோதாவாக இது தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளையுடன் முடிவடையவுள்ள பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை இதற்காக மேலும் இரண்டு நாட்கள் நீட்டிக்கவும் மத்திய அரசு முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Cabinetapproves #10pcreservation #economicallybackward #generalcategory






