என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Basant Panchami"

    • தொழுகைக்காக வரும் முஸ்லிம் நபர்களின் பட்டியலை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்க வேண்டும்
    • போஜ்சாலா வளாகத்தில் செவ்வாய்க்கிழமைகளில் இந்துக்கள் பூஜையும், வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம்கள் தொழுகையும் நடத்தி வருகின்றனர்

    மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள சர்ச்சைக்குரிய போஜ்சாலா-கமல் மௌலா மசூதியில் நாளை, வசந்த பஞ்சமியை முன்னிட்டு சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை இந்துக்கள் பிரார்த்தனை செய்ய இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதே நேரத்தில் முஸ்லிம்கள் அன்று மதியம் 1 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தொழுகை நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் தொழுகைக்காக வரும் முஸ்லிம் நபர்களின் பட்டியலை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. நாளை போஜ்சாலா வளாகத்தில் தொழுகை மற்றும் பூஜைகள் நடத்த இரு சமூகத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து இந்திய தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜாய்மல்யா பாக்சி மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை அளித்துள்ளது.

    இரு தரப்பினரும் பரஸ்பர மரியாதையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்காக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2003, ஏப்ரல் 7-ம் தேதி இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை செய்த ஏற்பாட்டின்படி, போஜ்சாலா வளாகத்தில் செவ்வாய்க்கிழமைகளில் இந்துக்கள் பூஜையும், வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம்கள் தொழுகையும் நடத்தி வருகின்றனர்.

    இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையின் பாதுகாப்பில் உள்ள 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போஜ்சாலா நினைவிடத்தை, இந்துக்கள் 'வாக்தேவி' (சரஸ்வதி தேவி) கோயில் என்று கருதுகின்றனர். அதேவேளையில், முஸ்லிம் சமூகத்தினர் இதனை 'கமல் மௌலா மசூதி' என்று அழைக்கின்றனர். 

    வசந்த பஞ்சமியை கொண்டாடும் மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். #BasantPanchami #RamNathKovind #PMModi
    புதுடெல்லி:

    தமிழகத்தைப் பொறுத்தவரையில் சரத் நவராத்திரி எனப்படும் புரட்டாசி மாத நவராத்திரியின் ஒன்பதாவது நாளான நவமியன்று சரஸ்வதி பூஜை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    வடமாநிலங்களில் மாகமாதத்தில் (ஜனவரி- பிப்ரவரி) வருகின்ற சுக்ல பட்ச (வளர்பிறை) பஞ்சமி திதி பசந்த் (வசந்த) பஞ்சமி என்ற பெயரில் சரஸ்வதி தேவிக்குரிய நாளாகக் கொண்டாடப்படுகிறது.

    இந்த வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி வழிபாடு நடைபெற்றதாக வேதங்களிலும் புராணங்களிலும் குறிப்புகள் காணப்படுகின்றன. இந்த நாளில்தான் வட மாநிலத்தவர் சரஸ்வதி தேவியை வழிபடுகின்றனர்.



    இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வசந்த பஞ்சமிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி டுவிட்டரில் கூறுகையில், இந்த நன்னாளில் கல்வி கடவுளான சரஸ்வதி தேவியின் அருள் நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். 

    இதேபோல், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துக்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
    #BasantPanchami #RamNathKovind #PMModi
    ×