என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
- தமிழகத்தில் உள்ள பெரிய பட நிறுவனங்கள் மட்டுமே ரஜினி அருகில் செல்ல முடிந்தது.
- ரஜினியின் இந்த முடிவு தமிழ் திரை உலகையே மிரள வைத்தது.
எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், முடிவு எடுக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு 3 அம்சங்கள் முக்கியமாக இருக்க வேண்டும். ஒன்று தெளிந்த மனம். மற்றொன்று நிதானம். மூன்றாவது ஆழ்ந்த நம்பிக்கை.
இந்த மூன்று குணமும் ஒருமித்த நிலைக்கு வரும்போது அதிரடி முடிவுகளை கூட அனாசயமாக அரை நொடியில் எடுத்து விட முடியும். நமது வேத நூல்களும், புராணங்களும் இதுபற்றி ஏராளம் கூறி உள்ளன.
மகாபாரதத்தை யார் ஒருவர் ஆழ்ந்து படித்து, சிந்தித்துப் பார்த்து இருக்கிறாரோ, அவருக்கு அதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரம் பற்றியும், அந்த கதாபாத்திரங்கள் எடுக்கும் முடிவுகள் பற்றியும் நிச்சயமாக தெரிந்து இருக்கும். ஒரு வரியில் சொல்வது என்றால் பற்றும், பாசமும் முடிவு எடுக்கும் திறனுக்கு எதிரானது என்பது மகாபாரதத்தின் ஒவ்வொரு விஷயத்திலும் காட்டப்பட்டுக் கொண்டே இருக்கும்.
அதோடு எந்த இடத்தில் எப்படி முடிவு எடுக்க வேண்டும்? எந்த இடத்தில் எப்படி முடிவு எடுக்கக் கூடாது என்பதையும் மகா பாரதம் நமக்கு காட்டுகிறது. துரியோதனன் செய்த தவறுகளை தடுக்க அவனது தந்தை திரிதராஷ்டிரன் முடிவு எடுக்காமல் பாசத்தில் கிடந்தான். அதுவே அவனது வம்சம் அழிய அடிப்படையாக இருந்தது.
குந்திக்கு குழந்தை பிறந்ததை கேட்டதும் காந்தாரி ஆத்திரத்தில் முடிவுகள் எடுத்தாள். இதனால் அவளுக்கு பிறந்த கவுரவர்களான 100 குழந்தைகளும் வெறுப்புணர்வு கொண்டவர்களாக வளர்ந்தனர்.
பீஷ்மர் பதட்டத்தில் முடிவுகள் எடுத்து அவஸ்தைப்பட்டார். சகுனி எடுத்த முடிவுகள் துரியோதனனை வீழ்ச்சிக்கு கொண்டு சென்றது.
நல்ல முடிவு என்பது மற்றவர்கள் தலையீடு இல்லாமல், குழப்பமான மனநிலையில் இல்லாமல் இருக்கும் போது தான் கிடைக்கும். எனவே எந்த ஒரு விஷயத்திலும் நாம் உணர்வுப்பூர்வமாக முடிவு எடுக்கறோமா, அறிவுப்பூர்வமாக முடிவு எடுக்கிறோமா என்பதுதான் முக்கியமானது.
சூப்பர் ஸ்டார் ரஜினி இதெல்லாம் தெரியாதவரா? சிறு வயதிலேயே அவர் தாயாரிடம் அதிகம் கேட்டது மகாபாரத கதைகள்தான். ராமகிருஷ்ணா மடம் பள்ளியில் படித்த போதும் அவருக்குள் மகாபாரத நிகழ்வுகள் ஆழமாக பதியவைக்கப்பட்டன.
அதன் பலனாகத்தான் 1979-ம் ஆண்டு கமலுடன் சேர்ந்து நடிக்காமல் இனி தனியாக நடிக்க வேண்டும் என்ற முடிவை அவரால் முழு மனதுடன் எடுக்க முடிந்தது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டு மற்றவர்களை திடீரென தாக்கிய பிறகு அடுத்த சில நிமிடங்களில் அமைதி பெற்று இயல்பு நிலைக்கு திரும்பியதும் சில நல்ல முடிவுகளை அவரால் தன்னிச்சையாக எடுக்க முடிந்தது.
1980-ம் ஆண்டு மனநல பாதிப்பு சுவடே இல்லாமல் புது மனிதனாக அவர் இயங்கத் தொடங்கிய போது அதிரடியாக மற்றொரு முடிவை எடுத்தார். அது.... தன்னை நாடி வந்த நூற்றுக்கணக்கான படத் தயாரிப்பாளர்களை சிறப்பாக கையாண்ட விதம்தான். பெரும்பாலான படத் தயாரிப்பாளர்கள், ரஜினி எவ்வளவு பணம் கேட்டாலும் கொட்டி கொடுக்கத் தயாராக இருந்தனர்.
"நீங்கள் நடிப்பதாக தேதி கொடுத்து ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டால் மட்டும் போதும், மற்ற விஷயங்கள் அனைத்தையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" என்றனர். அத்தகைய படத் தயாரிப்பாளர்களை ரஜினி கண்ணை மூடிக் கொண்டு நிராகரித்தார்.
தன்னையும், தனது பெயரையும் மூலதனமாக வைத்துக் கொண்டு லட்சம், லட்சமாக பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் தன்னைச் சுற்றி வருகிறார்கள் என்பதை ரஜினி புரிந்து கொண்டார். அதோடு புதிய தயாரிப்பாளர்கள் எவ்வளவு வசதியுடையவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு படத்தை குறித்த காலத்தில் வெளியிட செய்யும் திறன் இருக்குமா? என்ற சந்தேகமும் ரஜினிக்குள் எழுந்தது.
இதையடுத்து அவர் புதிய பட அதிபர்களை ஒட்டு மொத்தமாக நிராகரித்து அதிரடி முடிவு எடுத்தார். ரஜினி எடுத்த இந்த முடிவை அறிந்து எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கர், முத்துராமன், நாகேஷ், சிவக்குமார் உள்பட திரையுலக பிரமுகர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டனர். அதோடு தமிழ் திரை உலகிலும் பரபரப்பு ஏற்பட்டது.
அடுத்து ரஜினி இன்னொரு முடிவு எடுத்தார். இனி கைவசம் 10 படங்கள், 12 படங்கள் என்று வைத்திருக்கக் கூடாது. நிம்மதி இல்லாமல் போய் விடும். எனவே மூன்று அல்லது நான்கு படங்களை மட்டுமே கைவசம் வைத்துக் கொண்டு நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
இதைத் தொடர்ந்து ரஜினி எடுத்த அடுத்த முடிவு மிகப்பெரிய ஹைலைட்டாக அமைந்தது. அதாவது தனக்கான சம்பளத்தை தானே நிர்ணயிக்க வேண்டும் என்ற முடிவாகும். படங்களில் நடிக்க தனக்குரிய சம்பளத்தை வேறு ஒருவர் முடிவு செய்யக்கூடாது என்பதில் அவர் உறுதியான மன நிலைக்கு வந்தார்.
ரஜினி எடுத்த இந்த புதிய முடிவுகளால் அவரைத் தேடி வரும் படத் தயாரிப்பாளர்கள் எண்ணிக்கை சல்லடை போட்டு சலித்து எடுத்து விட்டது போல குறைந்தது. தன்னை கதாநாயகனாக முன் நிறுத்தி, படம் எடுத்து, அந்த படத்தை வெற்றி பெற செய்கிற தகுதியும், திறமையும் யாருக்கு உள்ளதோ அவர்களுக்கு மட்டுமே கால்ஷீட் கொடுப்பது என்று முடிவு செய்தார்.
1980-ல் அவரது செயல்பாடுகள் அனைத்தும் அத்தகைய படத் தயாரிப்பாளர்கள் யார்-யார் இருக்கிறார்கள் என்று ஆய்வு செய்வதிலேயே இருந்தது. இதனால் தமிழகத்தில் உள்ள பெரிய பட நிறுவனங்கள் மட்டுமே ரஜினி அருகில் செல்ல முடிந்தது.
ரஜினியும் அதைத்தான் எதிர் பார்த்து காத்திருந்தார். தனக்கு எந்த விதத்திலும் தொந்தரவு கொடுக்காத கோடீஸ்வர முதலாளிகளுக்கே இனி தன் கால்ஷீட் தரப்படும் என்று துணிச்சலாக வெளிப்படையாக அறிவித்தார்.
ரஜினியின் இந்த முடிவு தமிழ் திரை உலகையே மிரள வைத்தது. இந்த முடிவால் ரஜினியிடம் இருந்து வந்த மன அழுத்தம் கணிசமான அளவுக்குக் குறைந்தது. பில்லாவின் இமாலய வெற்றிக்குப் பிறகு வந்த தேவர் பிலிம்சின் அன்புக்கு நான் அடிமை படம் சுமாராக ஓடியது.
அதன் பிறகு மகேந்திரன் இயக்கத்தில் "ஜானி" என்ற படத்தில் ரஜினி நடித்தார். இந்த படத்தில் ரஜினிக்கு இரட்டை வேடம். கதாநாயகியாக ஸ்ரீதேவி நடித்தார். ரஜினியும், ஸ்ரீதேவியும் போட்டி போட்டு நடித்தனர். இந்த படம் தயாரிப்பில் இருந்த போது, ரஜினியும் ஸ்ரீதேவியும் காதலிப்பதாகவும், விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்றெல்லாம் கிசுகிசுக்கள் பரவியது.
இதுகுறித்து டைரக்டர் மகேந்திரன் தினத்தந்திக்கு அளித்த பேட்டியில் அழகாக குறிப்பிட்டிருந்தார். அந்த பேட்டி வருமாறு:-
ரஜினி புகழின் உச்சத்துக்கு வந்து கொண்டிருந்தபோது ஒரு நடிகையை விரும்பினார். அதுபற்றி என்னிடம் கருத்து கேட்டார். நானும் அந்த நடிகை உங்கள் மனைவியாக வந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன். ஆனால் அந்த நடிகை வீட்டின் கிரகபிரவேசத்துக்கு சென்று இருந்த நேரத்தில் திருமண பேச்சை தொடங்கலாம் என்று நினைத்தபோது மின்சாரம் போய் விட்டது. இதனால் அவர் அந்த நடிகையை திருமணம் செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்வுக்கு பிறகு தனது தத்து தாய் ரெஜினாவிடமும் ரஜினி கருத்து கேட்டார். ஆனால் அவரோ "உன் விருப்பப்படி செய்" என்று சொன்னார். இதனால் திரையுலகில் தன்னை விரும்பிய நடிகையை ரஜினி திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருந்து மாறினார். இந்தக்கால கட்டத்தில் அவர் நடித்து வெளியான "எல்லாம் உன் கைராசி" படம் வெற்றி பெறவில்லை.
ஆனால் அதற்கு பிறகு வந்த "பொல்லாதவன்" 100 நாட்கள் ஓடியது. அதன் பிறகு ஏ.வி.எம். தயாரிப்பில் வெளிவந்த "முரட்டுக் காளை" 150 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. அந்த படத்தில் ரஜினி கதாநாயகனாகவும், ஜெய்சங்கர் வில்லனாகவும் நடித்து இருந்தனர். முரட்டுக்காளை படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாள் ஜெய்சங்கர் காலில் விழுந்து ரஜினி ஆசி பெற்றது பரபரப்பாக பேசப்பட்டது.
ரஜினிக்கு ஜோடிக்கு ரதி நடித்தார். இந்த படத்தில்தான் ரஜினியுடன் ஒய்.ஜி.மகேந்திரனும் சேர்ந்து நடித்து இருந்தார். இந்த படத்தின் வெற்றி ஏ.வி.எம். நிறுவனத்துக்கு மிகப்பெரிய பலனை கொடுத்தது. இதனால் பட அதிபர் ஏ.வி.எம். சரவணன் ரஜினியை புகழ்ந்து பேசினார்.
அவர் கூறுகையில், "ரஜினி எதையும் வெளிப்படையாக பேசுபவர். கஷ்டப்பட்ட காலத்தில் சிறு பொய் கூட அவர் சொன்னது கிடையாது. வசதி வந்த பிறகும் அவர் பொய் பேசாமல் வாழ்ந்தார். அடுத்தவர் மனம் நோகும்படி நடக்கக் கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்தார்.
முரட்டுக்காளை படத்தில் ஜெய்சங்கர் வில்லனாக அறிமுகப்படுத்தப்பட்ட போது ரஜினி அவரிடம் மிக மிக பணிவாக நடந்து கொண்டார். 150 படங்களில் கதாநாயனாக நடித்த ஜெய்சங்கருக்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். படத்தின் விளம்பரங்களில் அவருக்குரிய முக்கியத்துவத்தை கொஞ்சமும் குறைத்து விடாதீர்கள் என்று பல தடவை கூறினார். இது ஒன்றே ரஜினியின் சிறந்த குணத்துக்கு உதாரணம்" என்றார்.
முரட்டுகாளை படம் வெற்றி ரஜினிக்கு புதிய அந்தஸ்தை கொடுத்து இருந்தது. அப்போது அவருக்கு வயது 30. அவருக்குள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. கஷ்டப்பட்ட காலத்தில் தன்னை ஒரு பெண், "இவர் கறுப்பாக இருக்கிறார். இந்த மாப்பிள்ளை வேண்டாம்" என்று சொன்னது அவர் மனதுக்குள் மீண்டும் மீண்டும் வந்து போனது.
எனவே நல்ல சிவப்பான பெண்ணைதான் திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார். ரஜினியை நிராகரித்த பெண் பற்றிய ருசிகர தகவல்களை நாளை பார்க்கலாம்.
- பில்லா படத்தில் இடம் பெற்ற மற்றொரு பாடல் அவரது யதார்த்தமான நிலையையும் ரசிகர்களுக்கு காட்டியது.
- சில கன்னட புத்தகங்களை இன்றும் கூட அவர் மனம் திறந்து பேசுவது உண்டு.
சூப்பர் ஸ்டார் ரஜினி மீது கவிஞர் கண்ணதாசனுக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும் இருந்தது. ரஜினியின் வாழ்க்கையையும், குணங்களையும் பிரதிபலிக்கும் வகையில் அவர் பாடல்கள் எழுதினார். இதனால் அவர் மீது ரஜினியும் மிகுந்த பாசம் வைத்து இருந்தார்.
1975-ம் ஆண்டு ரஜினி நடித்த முதல் படமான "அபூர்வ ராகங்கள்" படத்தில் கண்ணதாசன் எழுதிய "ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் இதயச் சுரங்கத்துக்குள் எத்தனை கேள்வி காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்-வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம்" என்ற பாடலில் அந்த படத்தின் மொத்த கதையையும் சொல்லி இருந்தார்.
இந்த பாடலை கேட்டு அர்த்தத்தை தெரிந்துக் கொண்ட ரஜினி பிரமித்துப் போனார். கவிஞர் கண்ணதாசனை பிரமிப்பாக பார்த்தார். அதன் பிறகு கண்ணதாசனின் ஒவ்வொரு வரிகளையும் ரஜினி கூர்மையாக கவனித்து அதை தன் மனதுக்குள் வாங்கிக் கொண்டார். கண்ணதாசனையும் அடிக்கடி சந்தித்து பேச தொடங்கினார்.
அந்தக் காலகட்டத்தில் கண்ணதாசன் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிக் கொண்டே "ராணி" வார இதழ் உள்பட 7 வார இதழ்களுக்கு 7 நாட்களுக்கு 7 விதமான தொடர்கதைகளையும் எழுதி வந்தார். இதை அறிந்த ரஜினி ஆச்சரியத்தின் உச்சத்துக்கே போனார்.
கண்ணதாசனின் எழுத்துக்களை தேடி தேடி படித்தார். அர்த்தமுள்ள இந்து மதம் அவரை மிகவும் உருக வைத்தது. இந்த சமயத்தில் பஞ்சு அருணாசலமும் ரஜினிக்கு நிறைய பாடல்கள் எழுத ஆரம்பித்தார். அவரும் ரஜினிக்கு ஏற்ப வரிகளை தனது பாடல்களில் கொண்டு வந்தார்.
1977-ம் ஆண்டு வெளியான "புவனா ஒரு கேள்விக்குறி" படத்தில் இடம் பெற்ற "ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள ஒரு ராணியும் இல்லை வாழ ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை அந்தரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடுகிறேன் நாளும்" பாடல் ரஜினிக்காகவே பஞ்சு அருணாசலம் எழுதியது போல் இருந்தது.
1978-ம் ஆண்டு வெளியான "முள்ளும் மலரும்" படத்தில் "செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்" பாடல் தேசிய விருது பெற்றது. அந்த படத்தில் கங்கைஅமரன் எழுதிய "ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை" என்ற பாடல் ரஜினியின் குணத்தை நூறு சதவீதம் பிரதிபலித்தது. இந்த பாடல் அந்தக்கால கட்டத்தில் அரசியல் ரீதியாகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
"தப்பு தாளங்கள்" படத்தில் கண்ணதாசன் எழுதிய ஒரு பாடல், "அட என்னடா பொல்லாத வாழ்க்கை இதுக்குப்போய் அலட்டிக்கலாமா" என்று தொடங்கும். இந்த பாடலை ரஜினி வரிக்கு வரி ரசித்தார். அந்த பாடலின் கடைசி சரணத்தில் "நான் செய்தேன் தப்புத்தண்டா வேற வழி ஏதும் உண்டா ஊருக்குள்ளே யோக்கியனை கண்டா ஓடிப் போயி என்னிடம் கொண்டா" என்று எழுதி இருப்பார். இந்த வரிகள் ரஜினியே மனம் திறந்து சொன்னது போல அவரது ரசிகர்கள் ரசித்தனர்.
1979-ம் ஆண்டு வெளியான "நினைத்தாலே இனிக்கும்" படத்தில் கண்ணதாசன் எழுதிய "சம்போ சிவ சம்போ" என்று தொடங்கும் பாடலை இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனே ரஜினிக்காக பாடி இருந்தார். அந்த பாடலில் "அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள். போனார்கள். தப்பென்ன சரியென்ன எப்போதும் விளையாடு. அப்பாவி என்பார்கள் தப்பாக நினைக்காதே எப்பாதை போனாலும் இன்பத்தைத் தள்ளாதே" என்ற வரிகள் வரும்.
இந்த வரிகளை ரஜினி திரும்ப... திரும்ப... பல தடவை சொல்லிக் கொண்டே இருந்தார். கண்ணதாசனிடமே அவர், "இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டுசார். இதுதான் நான். இதுதான் என் வாழ்க்கை என்பது போல இந்த பாட்டு இருக்கிறது" என்று கூறினார். எந்த அளவுக்கு அவர் மனதுக்குள் ஆன்மீகத்தை வைத்து இருந்தாரோ அதே அளவுக்கு மனதை சுதந்திரமாக சமநிலையில் வைத்து இருந்தார். அதனால்தான் அவருக்கு இந்த பாட்டு பிடித்து இருந்ததாக அந்தக் காலகட்டத்தில் பலரும் கூறினார்கள்.
இதற்கு பிறகுதான் ரஜினியின் உடல்நலமும், மனநலமும் பாதிக்கப்பட்டு இருந்தது. அவரை மேம்படுத்தும் வகையில் பில்லா படம் அமைந்தது. அந்த படத்தில் இடம் பெற்ற 2 பாடல்கள் ரஜினியின் வாழ்க்கையை பிரதிபலிப்பது போல கவிஞர் கண்ணதாசன் வரிகளை அமைத்து இருந்தார்.
அதில் ஒரு பாடல் வருமாறு:-
நாட்டுக்குள்ள எனக்கொரு ஊருண்டு
ஊருக்குள்ள எனக்கொரு பேருண்டு
என்னைப் பத்தி ஆயிரம் பேரு
என்னென்ன சொன்னாங்க
இப்பென்ன செய்வாங்க
நாலு படி மேலே போனா
நல்லவனை விடமாட்டாங்க
பாடுபட்டு பேரை சேர்த்தா
பல கதைகள் சொல்லுவாங்க
யாரு சொல்லி என்ன பண்ண
நானும் இப்ப நல்லாயிருக்கேன்
உங்களுக்கும் இப்ப சொன்னேன்
பின்னால பார்க்காத
முன்னேறு முன்னேறு
ஆளுக்கொரு நேரமுண்டு
அவுகவுக காலமுண்டு
ஆயிரம்தான் செஞ்சாக்கூட
ஆகும்போது ஆகுமண்ணே
மூடனுக்கும் யோகம் வந்தா
மூணுலகம் வணக்கம் போடும்
நம்பிக்கையை மனசுல வச்சு
பின்னால பார்க்காத முன்னேறு முன்னேறு
-இந்த பாடல் ரஜினி குணமாகி மீண்டு விட்டதை உறுதிப்படுத்தியது போல் அமைந்தது.
பில்லா படத்தில் இடம் பெற்ற மற்றொரு பாடல் அவரது யதார்த்தமான நிலையையும் ரசிகர்களுக்கு காட்டியது. அந்த பாடல்....
மை நேம் இஸ் பில்லா...
வாழ்க்கை எல்லாம்...
மை நேம் இஸ் பில்லா
வாழ்க்கை எல்லாம்
நானும் பாக்காத ஆளில்லே
போகாத ஊரில்லே அய்யா
நல்ல நண்பன் இல்லை என்றால்
எங்கு போனாலும் விட மாட்டேன்
நானாகத் தொட மாட்டேன்
அய்யா... ஹா... ஹோ
ஆ... பூப் போன்ற பெண்ணோடு ஆட்டம்
ஆனாலும் சிலர் மீது நோட்டம்
என் வாழ்க்கை அழகான தோட்டம்
இன்பங்கள் என்றாலே நாட்டம்
பொன்னோடும் பொருளோடும்
எப்போதும் நண்பர்கள் கூட்டம்
என் மீது பாய்வோர்கள்
யாராக இருந்தாலும் ஓட்டம்
பொன்னோடும் பொருளோடும்
எப்போதும் நண்பர்கள் கூட்டம்
என் மீது பாய்வோர்கள்
யாராக இருந்தாலும் ஓட்டம்
நீரோட்டம் போல் எந்தன் ஆசை
தேரோட்டம் போல் எந்தன் வாழ்க்கை
ஹா... போராட்டம் இல்லாத பாதை
எல்லாமே சுகமான போதை
நான் கொண்டு வந்தேனா
நீ கொண்டு வந்தாயா செல்வம்
ஹ ஹ ஹ
நாளென்ன பொழுதென்ன
நாள்தோறும் விளையாடி வாழ்வோம்
நான் கொண்டு வந்தேனா
நீ கொண்டு வந்தாயா செல்வம்
நாளென்ன பொழுதென்ன
நாள்தோறும் விளையாடி வாழ்வோம்
மை நேம் இஸ் பில்லா
வாழ்க்கை எல்லாம்
நானும் பாக்காத ஆளில்லே
போகாத ஊரில்லே அய்யா
நல்ல நண்பன் இல்லை என்றால்
எங்கு போனாலும் விட மாட்டேன்
நானாகத் தொட மாட்டேன் அய்யா...
-இந்த பாடல் பட்டித்தொட்டி எங்கும் முழங்கி ரஜினியின் அந்தஸ்தை மேலும் உயர்த்தியது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக "ஆறிலிருந்து அறுபதுவரை" பட வெற்றி விழாவில் கண்ணதாசனின் கால்களில் விழுந்து ரஜினி ஆசி பெற்றுக் கொண்டார்.
1981-ம் ஆண்டு கண்ணதாசன் மறையும் வரை ரஜினிக்காக அவர் மேலும் சில பாடல்கள் தனித்துவமாக எழுதியது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் சினிமா வாழ்க்கை முடிந்துப் போனது என்று கூறப்பட்ட சூழலில் அவர் மீண்டும் விஸ்வரூபம் எடுத்ததற்கு கண்ணதாசனின் பாடல்கள்தான் அடித்தளம் அமைத்துக் கொடுத்தன.
கண்ணதாசனின் எழுத்துக்களை வரிக்குவரி ரசித்த ரஜினி அவர் கொடுத்த உற்சாகம் காரணமாக தமிழில் வெளியாகி உள்ள பல புத்தகங்களை தேடிப்பிடித்து படிக்க ஆரம்பித்தார். ரஜினிக்கு ஏற்கனவே புத்தகங்கள் படிப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. அதற்கு காரணம் சிறு வயதில் பெங்களூர் ராமகிருஷ்ணா மடம் பள்ளியில் அவருக்குள் விதைக்கப்பட்ட விதை என்றே சொல்லலாம்.
அவர் இளைஞராகி கண்டக்டராக பணிக்கு சேர்ந்த பிறகும் சினிமாவுக்கு வந்த பிறகும் அவரது படிக்கும் ஆர்வம் கொஞ்சமும் குறையவில்லை. பெங்களூரில் இருந்தவரை அவர் கன்னடத்தில் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களை வாங்கி படிக்க தவறியது இல்லை. சில கன்னட புத்தகங்களை இன்றும் கூட அவர் மனம் திறந்து பேசுவது உண்டு.
சென்னைக்கு வந்து தமிழில் பேசவும், படிக்கவும் கற்றுக்கொண்ட பிறகு ரஜினி நிறைய தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்களை வாசிக்க தொடங்கினார். ஜெயகாந்தன், ரா.கி. ரங்கராஜன், கண்ணதாசன், அகிலன் எழுதிய கதைகளை விரும்பி படித்தார். கல்கியை தனது குரு என்றே அவர் சொல்வார். அந்த அளவுக்கு தமிழ் நாவல்களை விரும்பி படித்துள்ளார்.
ஒரு எழுத்தாளன் ஒரு புத்தகம் எழுதினால் அது தெளிந்த நீரோடையாக வாசகர்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் வகையில் சிறப்பாக அமைய வேண்டும் என்று ரஜினி பல மேடைகளில் பேசியது உண்டு. அவரது அந்த எதிர்பார்ப்பு தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்கள் மூலம் அவருக்கு நிறையவே கிடைத்தது.
இதன் காரணமாக ரஜினிக்குள் முடிவு எடுக்கும் திறமை உருவானது. அந்த திறமை ரஜினியின் வாழ்க்கையை உச்சத்துக்கு கொண்டு போகும் வகையில் அதிரடியாக மாற்றியது. அதுபற்றி நாளை பார்க்கலாம்.
- டெல்லியில் நடந்த ஒரு சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை உருவாக்கி இருந்தது.
- எல்லா தியேட்டர்களிலும் நல்ல லாபம் கிடைத்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கையில் 1979-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரையிலான 5 மாதம் அவருக்கு மறக்க முடியாத ஒன்றாக மாறியது. டைரக்டர் பாலச்சந்தர் குறிப்பிட்டது போல அதை ரஜினியின் இருண்ட காலம் என்றே இப்போதும் சொல்கிறார்கள். ஆனால் அந்த இருண்ட நாட்களில் வாழ்க்கையின் யதார்த்தங்கள் அனைத்தையும் ரஜினி முழுமையாக உணர்ந்தார்.
அதனால்தான் ஜூன் மாதம் அவர் முழுமையாக குணம் அடைந்ததும் ஜூலையில் இருந்து அவரது செயல்பாடுகள் ஒவ்வொன்றிலும் சிறப்பான மாற்றங்கள் ஏற்பட தொடங்கின. இதன் காரணமாக 1980-ம் ஆண்டு ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்பட்டது.
அந்த ஆண்டு அவர் பில்லா (26.1.1980), ராம் ராபர்ட் ரகீம் (தெலுங்கு 31.5.1980), அன்புக்கு நான் அடிமை (4.6.1980), காளி (3.7.1980), மாயதாரி கிருஷ்ணடு (தெலுங்கு 19.7.1980), நான் போட்ட சவால் (7.8.1980), ஜானி (15.8.1980), காளி (தெலுங்கு 19.9.1980), எல்லாம் உன் கைராசி (9.10.1980), பொல்லாதவன் (6.11.1980), முரட்டுக்காளை (20.12.1980) ஆகிய 11 படங்களில் நடித்தார். 1979-ல் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ரஜினி தனக்கு ஏற்பட்ட பக்குவம் காரணமாக படங்களை தேர்வு செய்து நடிக்க தொடங்கி இருந்தார்.
இதனால் 1980-ல் அவர் நடித்த படங்கள் எல்லாம் அனைத்து தியேட்டர்களிலும் ஓகோ... ஓகோ என்று ஓடியது. அந்த ஆண்டின் தொடக்கமே ரஜினிக்கு பூத்து குலுங்குவதாக அமைந்தது.
அதற்கு காரணம் நடிகரும், தயாரிப்பாளருமான பாலாஜி. அவருக்கு ரஜினியை வைத்து ஒரு உண்மை கதையை படமாக்க வேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. அந்தக் கால கட்டத்தில் டெல்லியில் நடந்த ஒரு சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை உருவாக்கி இருந்தது.
டெல்லியில் 1978-ம் ஆண்டு பில்லா-ரங்கா என்ற 2 ரவுடிகள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆள் கடத்தல் போன்ற அட்டகாசங்களில் ஈடுபட்டு வந்தனர். அந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி சனிக்கிழமை அவர்கள் இருவரும் இந்திய கடற்படை கேப்டன் சோப்ராவின் மகள் 17 வயது கீதா, மகன் 15 வயது சஞ்சய் ஆகிய இருவரையும் காரில் கடத்தி சென்றனர்.
கீதாவும், சஞ்சய்யும் நன்றாக பாடக்கூடியவர்கள். அவர்கள் இருவரும் டெல்லி வானொலி நிலையத்தில் அடிக்கடி பாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது உண்டு. அப்படி அவர்கள் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தபோதுதான் பில்லா- ரங்காவால் கடத்தப்பட்டனர்.
சிறுமி கீதாவை பாலியல் பலாத்காரம் செய்த இருவரும் மிக கொடூரமாக கொலையும் செய்தனர். அதுபோல அவளது தம்பி சஞ்சய்யையும் துடிக்க துடிக்க கொலை செய்தனர். ஓடும் காரில் இந்த கொடூரக் கொலைகள் நடந்தன. இந்த கொலை இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி பில்லா-ரங்கா இருவரையும் கைது செய்தனர்.
விசாரணைக்கு பிறகு அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 1982-ம் ஆண்டு அவர்கள் இருவரும் டெல்லி திகார் ஜெயிலில் தூக்கில் போடப்பட்டனர். அவர்கள் செய்த இரட்டை கொலை 1979-ல் தினமும் அனல் பறக்க பரபரப்பான தகவல்க ளுடன் பேசப்பட்டது.
இதனால் இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஆனால் நிறைய மாற்றங்கள் செய்து ேதவைக்கும் அதிகமாக மசாலாக்கள் சேர்த்து "பில்லா" என்ற பெயரிலேயே படத்தை தயாரிக்க நடிகர் பாலாஜி முடிவு செய்தார். இதற்காக அவர் ரஜினியை சந்தித்து பேசினார். அப்போது அவர் பில்லா வேடத்தில் நடித்தால் உங்களது முழுமையான ஆக்ஷன் திறமையை வெளியில் காட்ட முடியும் என்றார்.
இதைக் கேட்டதும் ரஜினிக்கு ஆர்வம் வந்தது. எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை என்று கூறி உடனடியாக அவர் பில்லா படத்தில் நடிக்க சம்மதித்தார். மிகப்பெரிய கொலைக்காரரான பில்லா பெயரில் நடிப்பதற்கு ரஜினி கொஞ்சமும் தயக்கம் காட்டவில்லை.
ஆனால் பாலாஜியை பலரும் பயம் காட்டினார்கள். உண்மை கதையை மாற்றி படம் எடுக்கிறாய். கவனமாக இரு என்றனர். சிலர் அவரிடம், "ரஜினியை வைத்து படம் தயாரிக்கிறாய். அவர் கடைசி வரை நடித்து தருவாரா? அவருக்கு மனநலம் பாதிப்பு மீண்டும் வந்து விட்டால் உன்னால் படத்தை முடிக்க முடியுமா? அந்த இழப்பில் இருந்து உன்னால் மீண்டு வரமுடியுமா? என்றெல்லாம் கேட்டனர்.
இதை கேட்ட பாலாஜிக்கு உண்மையிலேயே பயம் வந்து விட்டது. ரஜினியை வைத்து படம் தயாரிக்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பம் ஏற்பட்டது. அந்த குழப்பத்தை தீர்த்துக் கொள்ள கவிஞர் கண்ணதாசன் வீட்டுக்கு சென்றார். கண்ணதாசனிடம் தனது மனதில் உள்ளதை எல்லாம் நடிகர் பாலாஜி கொட்டினார். இதைக் கேட்டதும் கண்ணதாசன் அனைத்தையும் புரிந்து கொண்டார். அவர் பாலாஜியிடம், "நீ எதற்கும் கவலைப்படாதே? ரஜினியை வைத்து படம் தயாரிப்பதில் பின் வாங்க வேண்டாம். நான் இந்த படத்துக்காக வித்தியாசமான முறையில் பாடல் எழுதி தருகிறேன். கவலை வேண்டாம்" என்றார்.
கண்ணதாசன் உற்சாகம் கொடுத்ததும் பாலாஜியிடம் இருந்த குழப்பமும், தவிப்பும் நீங்கியது. தைரியமாக அவர் பில்லா படத்தை தயாரிக்க தொடங்கினார்.
பில்லா படத்தின் கதைப்படி ரஜினி (வில்லன்) சர்வதேச கடத்தல்காரனாக இருக்கிறார். அவரை எப்படியும் கைது செய்தே தீர வேண்டும் என்று சென்னை போலீஸ் அதிகாரி பாலாஜி (அலெக்சாண்டர்)சபதம் எடுக்கிறார். ஒருநாள் சர்வதேச போலீஸ் அதிகாரி மேஜர் சுந்தரராஜன் சென்னை வருகிறார்.
சென்னையில் உலகம் முழுக்க உள்ள பிரபலமான கடத்தல்காரர்கள் ஒன்று கூடி பேசுகிறார்கள். அவர்களை சுற்றி வளைத்து கைது செய்யலாம் என்று அவர் அங்கு செல்கிறார். இந்த நிலையில் பில்லாவின் கூட்டாளியாக இருந்த ஜானி என்பவன் தனது காதலி பிரவீனாவுடன் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயற்சி செய்கிறான்.
அவனை பில்லா சுட்டுக் கொல்கிறான். இதனால் பில்லாவை பழிவாங்க பிரவீனா கொள்ளைக்காரியாக மாறி பில்லாவின் கூட்டத்துக்குள் நுழைகிறாள். பில்லாவை சிக்க வைக்க அவள் செய்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. அவளையும் பில்லா கொல்கிறான். இதற்கிடையே பில்லாவால் கொல்லப்பட்ட ஜானியின் தங்கையும் (ஸ்ரீபிரியா) பில்லாவை பழிவாங்க அந்த கூட்டத்துக்குள் வருகிறாள்.
அவளிடம் பில்லா மனதை பறிகொடுக்கிறார். அதை பயன்படுத்தி அவள் பில்லாவை போலீசில் சிக்க வைக்கிறாள். போலீஸ் துப்பாக்கியால் சுட்டதில் பில்லா செத்துப் ேபாகிறான். இதைப் பார்த்த போலீஸ் அதிகாரி பாலாஜி புதிய திட்டம் போடுகிறார். சர்வதேச கும்பலை பிடிப்பதற்காக பில்லா கொலையை மறைக்கிறார்.
பில்லா போன்றே இருக்கும் கழைக்கூத்தாடி ராஜப்பாவை உருவ மாற்றம் செய்து பில்லாவாக நடிக்க வைக்கிறார். அப்போதுதான் சர்வதேச கடத்தல் கும்பலுக்கு போலீஸ் அதிகாரி ஒருவர் தலைவராக இருப்பது தெரிகிறது. அந்த அதிகாரியை ராஜப்பா பிடித்து கொடுத்து விட்டு ஸ்ரீபிரியாவை திருமணம் செய்து கொள்வதுடன் படம் முடிகிறது. பில்லா படம் தமிழகத்தில் திரையிட்ட தியேட்டர்களில் எல்லாம் சக்கைப்போடு போட்டு வசூலை வாரிக் குவித்தது. எல்லா தியேட்டர்களிலும் நல்ல லாபம் கிடைத்தது. அது மட்டுமின்றி சில தியேட்டர்களில் 260 நாட்களுக்கு மேல் ஓடி புதிய சாதனைையயும் படைத்தது.
ரஜினி நடிக்க வந்த 5 ஆண்டுகளில் பில்லா படம் போல எந்த படமும் ஓடியது இல்லை. இது ரஜினியின் வாழ்க்கையிலும் ஒருபுதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. ரஜினியை மிகப்பெரிய ஆக்ஷன் ஹீரோ அந்தஸ்துக்கு இந்த படம் கொண்டு சென்றது. அது மட்டுமின்றி ரஜினி நடித்தால் நிச்சயம் அதிக லாபம் கிடைக்கும் என்ற புதிய பாதையையும் இந்த படம் உருவாக்கியது.
ரஜினிக்கே இது ஆச்சரியமாக இருந்தது. இதுபற்றி அவர் அளித்த ஒரு பேட்டியில், "ரஜினி அவ்வளவுதான் என்று எல்லோரும் சொன்னார்கள். ரஜினியின் இமேஜ் போய் விட்டது என்றெல்லாம் வதந்தி பரப்பினார்கள். ஆனால் அதையே நான் எனது பலமாக மாற்ற முடிவு செய்தேன். என்னைப் பற்றி என்னென்ன குறைகள் சொன்னார்களோ அந்த மாதிரி வேடங்களாக பார்த்து நடிக்க வேண்டும் என்று நினைத்தேன்.
குடிகாரனாக.... ரவுடியாக.... கொலைகாரனாக... பைத்தியக்காரனாக.... நடித்தேன். கதாநாயகன் வேடம் கிடைக்காவிட்டாலும் மாற்று வேடங்களில் நடிக்க நினைத்தேன். ஆனால் பில்லா படத்தில் எனது நடிப்பை மக்கள் ஒத்துக் கொண்டார்கள். பில்லா நல்லா ஓடுகிறது என்றதும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அந்த படம் எதனால் ஓடுகிறது என்பதை தெரிந்துக் கொள்ள தியேட்டருக்கு சென்றேன்.
ஆனால் எனக்கு எதுவுமே கண்டுபிடிக்க முடியவில்லை. மக்களை புரிந்துக் கொள்ள முடியவில்லை. என் மீது அவர்கள் காட்டும் பாசம் பிரமிக்க வைத்தது" என்றார்.
ஆனால் பில்லா படத்தில் ரஜினிக்காக கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுத்தது என்பதே உண்மை. அது மட்டுமல்ல ரஜினியின் சிறப்பையும், அந்தஸ்தையும் கண்ணதாசன் பாடல்கள் மேம்படுத்தியது. அதற்கு காரணம் ரஜினி மீது கவிஞர் கண்ணதாசன் வைத்திருந்த தனி அன்புதான். கண்ணதாசனுக்கும், ரஜினிக்கும் இருந்த அந்த நட்பு பற்றி நாளை பார்க்கலாம்.
- ‘அவர்கள்’ படத்தில் ரஜினியின் நெகடிவ் நடிப்பு மிக வித்தியாசமாக அமைந்திருந்தது.
- ரஜினி தயாரிக்கும் படத்தில் நானும், நான் தயாரிக்கும் படத்தில் ரஜினியும் நடிப்போம்.
ரஜினியை பல தடவை கமல் பாராட்டி பேசி உள்ளார். அவர் அளித்த ஒரு பேட்டி.....
'கமலுக்கும் ரஜினிக்கும் ஆகாது. ஒருவரை ஒருவர் விழுங்கப் பார்க்கிறார்கள் என்று எங்களது எதிரிகள் சிலர், எங்களுக்குள் கோள் மூட்டி விடப்பார்த்தனர். ஆனால் எங்களது நட்பு சினிமா அந்தஸ்தை மீறி நிற்பதாகும். அந்த உயரத்திற்கு வந்து எங்களை, எங்கள் நட்பை யாரும் எதுவும் செய்துவிட முடியாது.
'அபூர்வ ராகங்கள்' தொடங்கி எங்கள் நட்பு வளர்ந்தது. 'அவர்கள்' படப்பிடிப்பு முடிந்த நேரத்தில் ரஜினியிடம், "தொடர்ந்து ஸ்டைல் நடிப்பையே தந்து கொண்டிருக்கிறீர்களே, கொஞ்சம் கேரக்டர் நடிப்பிலும் கவனம் செலுத்தினால் என்ன?" என்று கேட்டேன்.
ரஜினி அமைதியாக என்னிடம், "கமல், நீங்கள் உங்கள் வழியில் செல்லுங்கள். எனக்கு 'ஸ்டைல்' நடிப்புத்தான் சரி" என்றார். இப்படி அவரது பதில் எதுவும் நேரிடையாகத்தான் வரும். 'சுற்றி வளைத்து' பேசுவது என்பதே அவரிடம் கிடையாது.
'அவர்கள்' படத்தில் ரஜினியின் நெகடிவ் நடிப்பு மிக வித்தியாசமாக அமைந்திருந்தது. அவரும் அதைச் சிறப்பாகச் செய்திருந்தார். அப்போதுதான் அவரிடம் 'அவர்கள்' நடிப்பைச் சுட்டிக் காட்டி மேற்கண்ட கேள்வியைக் கேட்டேன்.
'நினைத்தாலே இனிக்கும்' படப்பிடிப்பு சிங்கப்பூரில் நடந்தது. தினமும் படப்பிடிப்பு முடிந்தபின் ரஜினி ஊர் சுற்றக் கிளம்பி விடுவார். தான் சுற்றுவது போதாதென்று என்னையும் துணைக்கு அழைப்பார். எனக்கு மறுநாள் படப்பிடிப்புக்காக காலையிலேயே எழுந்தாக வேண்டும் என்பதற்காக தயங்கு வேன். 'அட, சும்மா வாங்க, சிங்கப்பூருக்கு எதுக்கு வந்திருக்கோம்' என்று அழைத்து செல்வார்.
சுற்றிவிட்டு எங்கள் இருப்பிடம் திரும்ப நள்ளிரவு 2 மணிக்கு மேல் ஆகிவிடும். ரஜினியுடன் நீண்ட நேரம் இரவில் சுற்றுவது எனக்கு சரிப்பட்டு வரவில்லை.
அதனால் ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்து விடுவேன். அவர் நள்ளிரவு தாண்டி அதிகாலை 3 மணிக்கும், 4 மணிக்கும் வருவார். மறுநாள் காலை 7 மணிக்கெல்லாம் படப் பிடிப்புக்குத் தயாராக வேண்டும் என்ற கவலையே இருக்காது.
மறுநாள் காலையில் முந்தய இரவு விழித்திருந்த அசதியும் ரஜினியிடம் தெரியாது. பாலச்சந்தர் சார் இரவு 9 மணிக்கு தூங்கி, காலை 5 மணிக்கே தயாராகி விடுவார். படப்பிடிப்பு தளத்திற்கு வந்தாரென்றால் காட்சியைத் தயார் செய்ய அரை மணி நேரமாகும். இந்த இடைவெளியை நானும், ரஜினியும் வீணாக்குவதில்லை.
சிங்கப்பூரிலுள்ள பூங்கா, சாலைப் பகுதிகளில் சிமெண்ட் சாய்மானங்கள் இருக்கும். நான் ஒரு பக்கம் ரஜினி வேறொரு பக்கம் இருக்க சாத்தியப்படாது. டைரக்டர் அழைக்கும்போது எழுந்து ஓட வேண்டுமே.
அதற்காக ஓரே இடத்தில் இருவரும் ஒருவரது தோள்மீது ஒருவர் தலை சாய்த்தபடி தூங்குவோம். ஓரே காரில் பயணம் செய்யும்போதும் விமான நிலையத்திலும்.... என்று கிடைத்த இடங்களில் இப்படித் தூங்கித்தான் ஓய்வெடுப்போம். இதை எத்தனை பேர் நம்புவீர்களோ எனக்குத் தெரியாது. ஆனால் உண்மை.
நாங்கள் இருவரும் இணைந்து நடிக்கும்போது தயாரிப்பாளர்கள் எங்கள் இருவருக்குமே ஒரு குறிப்பிட்ட சம்பளத்தைக் கொடுத்து விடுவதை எண்ணிப் பார்த்தோம்.
தனித்தனியாக படம் செய்தால் அதைவிட அதிகமாகவே சம்பளம் பெற முடியும் என்று உணர்ந்தோம். அதனால் சேர்ந்து நடிப்பதற்கு தற்காலிகமாக முடிவு கட்டுவது என்று சோபா ஒன்றில் அமர்ந்து பேசி தீர்மானித்தோம். எங்கள் தீர்மானம் சரியாகவே இருந்தது.
இருவரும் மீண்டும் சேர்ந்து நடிப்பது எப்போது என்ற கேள்விகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ரஜினி தயாரிக்கும் படத்தில் நானும், நான் தயாரிக்கும் படத்தில் ரஜினியும் நடிப்போம்.
எங்களுக்கு இன்னும் வயது இருக்கிறது. வலிமை இருக்கிறது. எங்கள் சினிமா அந்தஸ்து உச்சத்தில் இருக்கும்போது இருவரும் நிச்சயம் இணைந்து நடிப்போம்.
ஒரு விருந்தில் நானும் ரஜினியும் கலந்து கொண்டோம். அதில் எங்களுக்குள் கைகலப்பு வருமளவில் சிறு மோதல் ஏற்பட்டது. ஜெய்சங்கர் குறுக்கே புகுந்து விலக்கி இருவரையும் சமாதானம் செய்தார். அதனாலேயே ஜெய் சாரை எங்கள் இருவருக்கும் பிடிக்கும்.
இந்த சம்பவம் நடந்த மறுநாள் நான் வாகினி ஸ்டூடியோவில் இருந்தேன். என்னைப் பார்க்க ரஜினி வந்தார். என் கையை அழுத்தமாகப் பிடித்தார். சாரி.... நேத்து நடந்ததை மறந்துடுங்க..." என்றார். எனக்கு வெட்கமாகிவிட்டது. அவரது பெருந்தன்மை என்னைச் சுட்டது.
சினிமாவைப் பொறுத்தவரை நாங்கள் கடுமையாகப் போட்டி போட்டு மோதுவோம். ஒரு சமயம் நான் பெரிய வெற்றியாக வெடித்தால், அவர் அடுத்து அதைவிடப் பெரிய வெற்றியாக வெடித்து சிதறுவார். அதைப் பார்த்து அதைவிட வெற்றி பெற வேண்டும் என்று நான் முயலுவேன். எங்கள் போட்டி எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும், நட்பில் எங்களுக்குள் எந்த மாற்றமும் இல்லை.
ஒருவரை ஒருவர் விமர்சிப்பதிலும் நாங்கள் பின் வாங்கியதில்லை. அது மட்டுமின்றி எங்கள் தவறுகளையும் நாங்கள் விமர்சிக்க பயந்ததில்லை. அந்த தைரியம் எங்களுக்கு மட்டுமே உண்டு. இந்த மனப்பாங்கு வேறு எந்த இந்திய நடிகர்களிடமும் காண முடியாதது என்பதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்வேன்.
ஒரு சமயம் ரஜினியிடம் உள்ள பழக்கம் ஒன்றைச் சுட்டிக் காட்டி திருத்திக் கொள்ளும்படி சொன்னேன். அதை மறுக்காமல் ஏற்றுக் கொண்டு "பொறுத்துப் பாருங்கள்" என்றவர் சில நாட்களிலேயே அந்தப் பழக்கத்தை நிறுத்திக் கொண்டார். அதுதான் ரஜினி.
இவ்வாறு கமல் கூறினார்.
ரஜினிகாந்த் உடல் நலமும், மன நலமும் பாதிக்கப்பட்டிருந்த காலக் கட்டத்தை 'இருண்ட காலம்' என்று டைரக்டர் கே.பாலச்சந்தர் குறிப்பிட்டார்.
ரஜினிகாந்தின் திரை உலகப் பிரம்மாவான டைரக்டர் பாலச்சந்தர், ரஜினிக்கு அந்த கறுப்பு நாட்களில் ஏற்பட்ட குழப்பத்தைப் பற்றியும், நரம்புத் தளர்ச்சி பற்றியும் அப்போது கூறியவை வருமாறு:-
நினைத்தாலே இனிக்கும் படத்தின் டப்பிங் ஏ.பி.என் தியேட்டரில் நடந்து கொண்டிருந்தது. ரஜினிகாந்த் டப்பிங் பேச மறுப்பதாக என் உதவி டைரக்டர் கண்மணிசுப்பு, எனக்கு போன் செய்தார். நான் உடனே அங்கு சென்று ரஜினியை தனியே அழைத்து, "ஏன் டப்பிங் பேச மறுக்கிறீர்கள்?" என்று கேட்டேன்.
'கால் முடமானவனை ஓடச்சொல்லி வேடிக்கை பார்ப்பது ஆறறிவு படைத்த மனிதன் செய்கிற வேலையா? உடல் நலம் குன்றி இருக்கும் ஒரு மனிதனிடம் வேலை வாங்குவது நியாயமா?' என்று சொன்னார்.
இப்படியெல்லாம் ரஜினி என்னிடம் பேச மாட்டார். மனநிலை சரியில்லாமல்தான், இப்படியெல்லாம் பேசுகிறார் என்று புரிந்து கொண்டேன். உடனே டப்பிங்கை கேன்சல் செய்துவிட்டு, டாக்டர் ஆர்.எஸ். ராஜகோபால் அவர்களிடம் ரஜினியை அழைத்துச் சென்றேன்.
இடைவிடாத உழைப்பால் ரஜினிக்கு அதிக அளவில் ரத்த அழுத்தம் இருப்பதாக டாக்டர் கூறினார். ஓய்வெடுத்துக் கொள்ளும்படி டாக்டர் அறிவுறுத்தினார். வெலிங்டன் மருத்துவமனையில் சேர்த்து கண்டிப்பாக ஒரு வாரம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று சொன்னதால், ரஜினியை அங்கு உடனே அட்மிட் செய்தேன். தினம் காலையிலும் மாலையிலும் சென்று அவரைப் பார்த்துவிட்டு வந்தேன். அவர் அங்கே இருப்பது யாருக்கும் தெரியாமல் வைக்கப்பட்டது.
ஐ.வி.சசி அவர்கள் கமல்ஹாசனையும், ரஜினியையும் வைத்து 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' என்ற திரைப்படத்தை எடுத்துக் கொண்டிருந்தார். ஷாட் ரெடியானதும் ரஜினியை உடை மாற்றிக்கொள்ளச் சொல்லி இருக்கிறார்கள். ரஜினி மறுத்துவிட்டார். எல்லோரும் போய் கேட்டிருக்கிறார்கள். யார் சொல்லியும் அவர் கேட்கவில்லை. கமல்ஹாசனும், நூற்றுக்கணக்கான ஜூனியர் ஆர்டிஸ்ட்களும் காத்திருக்கிறார்கள்.
டைரக்டர் ஐ.வி. சசிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. எனக்கு போன் செய்தார். நானும் உடனே போனேன். ரஜினியை மேக்கப் அறையில் சந்தித்தேன். 'ஏன் ரஜினி. டிரஸ் போட்டுக்க வேண்டாமா? ஷாட் ரெடியா இருக்குல்ல' என்று நான் சற்று அதட்டிச் சொல்வது போல் சொன்னதும், டிரஸ் போட ஆரம்பித்தார்.
இந்தக் காலகட்டத்தில்தான் நடிகை ஸ்ரீபிரியா என் வீட்டிற்கு வந்தார். 'சார், உங்கள் ஒருவரால்தான் ரஜினிகாந்தைச் சரியான பாதைக்குத் திருப்ப முடியும். ஒரு நல்ல நடிகரை தமிழ்த் திரைக்கு அளித்தீர்கள். ரஜினி காந்தின் இழப்பைத் தடுக்க நீங்கள்தான் முயற்சி எடுக்கவேண்டும்" என்று மனம் விட்டுப் பேசினார்.
'கதை முடிந்தது' என்று பலர் முடிவுரை எழுதிக்கொண்டிருந்த போது, அது தொடர் கதை ஆகவேண்டும் என்று விரும்பும் ஒரு நல்ல உள்ளமும் இருக்கிறதே என்று அறிந்ததும் என் கண்களில் நீர் திரையிட்டது.
மேஜர் சுந்தரராஜன், பாலாஜி, நாகேஷ் ஆகியோரோடு கலந்தாலோசித்து, விஜயா நர்சிங் ஹோமில் ரஜினியை சேர்த்தோம். டாக்டர் செரியனின் கண்காணிப்பில் 15 நாள் பரிபூரணமாக ஓய்வெடுத்துக் கொண்டதால் நலம் பெற்றார், ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் போன்ற கலைஞர்களை 20, 25 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் காண முடியும். கைநழுவ இருந்த ஒரு கலைஞனை, திரைப்பட உலகம் திரும்பப் பெற்றதில் நான் பூரிப்பும், மகிழ்ச்சியும் அடைகிறேன்.'
இவ்வாறு பாலச்சந்தர் கூறினார்.
இதைப் பார்த்த படத் தயாரிப்பாளரும், நடிகருமான பாலாஜிக்கு ரஜினியை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அவர் ரஜினியை சந்தித்துப் பேசினார். நாட்டையே உலுக்கிய ஒரு உண்மை சம்பவத்தின் பெயரில் படமாக்கப் போவதாக கூறினார். அதைக் கேட்டதும் ரஜினி கடும் அதிர்ச்சி அடைந்தார். அவர் பாலாஜி சொன்ன படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாரா என்பதை நாளைப் பார்க்கலாம்.
- எல்லா கர்ப்பிணி பெண்களுக்குமே 4-வது மாதத்தில் சிறுநீர் தொற்றுக்கான பரிசோதனை செய்ய வேண்டும்.
- சிறுநீர் பரிசோதனை நெகட்டிவ் ஆக வந்தால் ஒரு வாரம் காத்திருக்க வேண்டும்.
பெண்களை பொருத்தவரை கர்ப்ப காலங்களில் அவர்களுக்கு நிறைய சந்தேகங்கள் ஏற்படும். அவர்களில் பலரும் தங்களின் சந்தேகங்களை அவர்களது மருத்துவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வார்கள். அதேபோல் பெண்கள் பலருக்கும் கர்ப்பகாலத்தில் ஏற்படும் சிறுநீர்க்குழாய் தொற்று தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. என்னிடம் சிகிச்சை பெற வரும் கர்ப்பிணி பெண்கள் பலரும் சிறுநீர்க்குழாய் தொற்று பிரச்சனை தொடர்பான பலவித சந்தேகங்களை கேட்டுள்ளனர்.
கர்ப்பிணி பெண்களுக்கு சிறுநீர்க்குழாய் தொற்று எப்படி ஏற்படுகிறது?
அந்த வகையில் சிறுநீர்க்குழாய் தொற்று என்பது கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாகும். இதை பல பெண்களும் எதிர்கொள்கிறார்கள். சிறுநீர்க்குழாய் தொற்று பாதிப்புகள் எப்படி ஏற்படுகிறது? அதற்கான தீர்வுகள் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.
பெண்களின் கர்ப்பகாலத்தில் முதல் 3 மாதங்கள், நடுவில் உள்ள 3 மாதங்கள் மற்றும் கடைசியில் உள்ள 3 மாதங்கள் ஆகிய காலகட்டங்களை எடுத்துக் கொண்டால், கர்ப்ப காலத்தின் முதல் 3 மாதங்களில் சிறுநீர்க்குழாய் தொற்று என்பது மிகவும் பொதுவாக ஏற்படக்கூடிய ஒன்றாகும்.
ஏனென்றால் ஒரு பெண் கர்ப்பிணியாக இருக்கும் காலகட்டத்தில் கரு உருவான பிறகு அது வளரத் தொடங்கும். அந்த கருவானது பெரிதாக வளர வளர கர்ப்பப்பையும் பெரிதாகி விரிவடையும். சிறுநீர்க்குழாயும், கர்ப்பப்பையும் ஒன்றுக்கொன்று மிகவும் பக்கத்தில் இருக்கும். கர்ப்பப்பை விரிவடையும்போது சிறுநீர்க்குழாயும், கர்ப்பப்பையும் ஒன்றுக்கொன்று மிகவும் நெருக்கமாக காணப்படும்.
எனவே அதுபோன்ற கால கட்டத்தில் சிறுநீர்க்குழாய் தொற்றானது, கர்ப்பப்பையில் மிகவும் எளிதாக பரவுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதோடு அந்த கர்ப்பப்பை வளர்ந்து பெரிதாகும்போது, சிறுநீர்க்குழாயில் ஏற்படும் அழுத்தம் காரணமாக கர்ப்பிணிகளுக்கு சிறுநீர்த்தேக்கம் என்பது அதிகம் இருக்கும்.
இந்த காலகட்டத்தில் பல பெண்களுக்கு கர்ப்பப்பை பின்னோக்கி சாய்ந்த நிலையில் காணப்படும். அப்படி சாய்ந்த நிலையில் கர்ப்பப்பை இருக்கும்போது, அது சிறுநீர்க்குழாய்க்கு அழுத்தத்தை கொடுக்கும். இதன் காரணமாக சிறுநீரானது திரும்பி செல்லும் நிலை ஏற்படும். இதனால் சிறுநீர்க்குழாயில் தொற்று உருவாகும்.
சிறுநீர்க்குழாய் தொற்று உருவாவதற்கான முக்கிய காரணங்கள்:
மேலும் இதற்கு முக்கிய காரணமே சிறுநீர்க்குழாய் மற்றும் யோனிப்பகுதி ஆகியவை கர்ப்பப்பையின் பக்கத்தில் இருப்பதுதான். அதனால் தான் கர்ப்பிணிகளுக்கு பல நேரங்களில் அறிகுறி எதுவுமே இல்லாமல் சிறுநீர்க்குழாய் தொற்று ஏற்படும். அறிகுறி இல்லாமல் சிறுநீர்க்குழாய் தொற்று எப்படி வரும் என்றால், பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு காய்ச்சல் வரும், குளிர் ஜுரம் வரும், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்பது போல் தோன்றும். மேலும் அவர்கள் சிறுநீரை அடக்கமுடியாமல் சிரமப்படுவார்கள்.
இந்த அறிகுறிகளானது கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பொதுவான அறிகுறிகள் என்பதால் கர்ப்பிணிகள் பலரும் இதை பெரிதாக கண்டு கொள்வதில்லை. ஆனால் சிறுநீர்க்குழாய் தொற்றுக்கும் இதே அறிகுறிகள் தான் என்பதை பெண்கள் கவனிக்க தவறி, தவறு செய்து விடுவார்கள். அதனால் தான் அவர்கள் சிறுநீர்க்குழாய் தொற்று பற்றி கவலைப்பட மாட்டார்கள்.
ஆனால் கர்ப்பிணி பெண்களுக்கு முதல் 3 மாதங்களில் சிறுநீர்க்குழாய் தொற்று அதிகரித்து காணப்படுவது மிகவும் பொதுவான விஷயம். ஆனால் சிலருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் கர்ப்பகாலத்தில் சிறுநீர்க்குழாய் தொற்று ஏற்படும். பொதுவாகவே சிறுநீர்க்குழாயும், கர்ப்பப்பையும் மிகவும் பக்கத்தில் இருப்பதால், கர்ப்பப்பை வளரும்போது ஏற்படும் அழுத்தம் காரணமாக சிறுநீர் தேங்குவது என்பது அதிகம் இருக்கும். பல நேரங்களில் அதனால் சிறுநீர்க்குழாய் தொற்றானது அறிகுறி இல்லாமல் இருக்கும்.
எனவே தான் கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற சிறுநீர்க்குழாய் தொற்று பாதிப்பை அறிகுறியற்ற பாக்டீரியூரியா (ஏசிம்டமேட்டிக் பாக்டீரியூரியா) என்று சொல்கிறோம். அறிகுறியற்ற பாக்டீரியூரியா என்றால் இந்த காலகட்டத்தில் அறிகுறியே இல்லாமல் சிறுநீரில் தொற்றுக்கள் இருக்கும்.

டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701
சிறுநீர்க்குழாய் தொற்றுக்களை கண்டறிவதற்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை:
அதனால் தான் எல்லா கர்ப்பிணி பெண்களுக்குமே 4-வது மாதத்தில் சிறுநீர் தொற்றுக்கான பரிசோதனை செய்ய வேண்டும். மேலும் கூடவே ஒரு யோனி ஸ்வாப் பரிசோதனையும் செய்ய வேண்டும். இது பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றுக்களை கண்டறியும் பரிசோதனை ஆகும். ஏனென்றால் அறிகுறியே இல்லாமல் தொற்றுக்கள் பரவும் நிலையில், இந்த தொற்றுக்களானது கர்ப்பப்பையில் இருக்கும் கருவையும் பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
அதனால்தான் அறிகுறியற்ற பாக்டீரியூரியாவினால் நிறைய பெண்களுக்கு குறை மாதத்தில் குழந்தை பிறப்பது, குறை மாதத்தில் பனிக்குட நீர் உடைவது, குழந்தையின் எடை குறைவாக இருப்பது போன்ற பல்வேறு வகை பாதிப்புகள் அதிகமாக ஏற்படுகிறது என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்ட ஒரு விஷயம் ஆகும்.
அதற்காகத்தான் எல்லா கர்ப்பிணிகளுக்கும் 4-வது மாதத்தில் ஒரு சிறுநீர் பரிசோதனை செய்வது அவசியமானதாகும். இந்த பரிசோதனையின்போது தொற்றுக்கள் இருப்பது கண்டறியப்பட்டால், அதற்கு குறிப்பிட்ட ஆன்டிபயாடிக் மருந்து கொடுத்து முழுமையாக சரிசெய்து விடுவோம். இதில் ஒரு லட்சம் தொற்றுக்கள் இருந்து, ஆனால் அதற்குரிய அறிகுறி இல்லாவிட்டால் கூட கண்டிப்பாக இவர்களுக்கு சிகிச்சை முறைகள் தேவைப்படும்.
கர்ப்பகாலத்தில் இந்த சிறுநீர்க்குழாய் தொற்றுக்கள் என்பது மிகவும் பொதுவானது. இதற்கு குறிப்பிட்ட மற்றும் பாதுகாப்பான ஆன்டிபயாடிக் எடுத்துக்கொள்வது நல்லது. இந்த காலகட்டத்தில் கர்ப்பிணிகள் பொதுவாக சிறுநீரை கட்டுப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதிகமாக நீர்ச்சத்து உள்ள நீராகாரங்களை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். சிறுநீரை எளிதாக கழிப்பது போன்ற சூழல்களை உருவாக்கி்க கொள்ள வேண்டும். இதெல்லாம் ரொம்பவும் முக்கியமான விஷயம். இவை அனைத்தும் ஒவ்வொரு பெண்ணும் கர்ப்ப காலத்தில் கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும்.
எனவே கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக சிறுநீர்க்குழாய் தொற்று இருந்தால் மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும். சிறுநீர்க்குழாய் தொற்றுக்கான மருந்துகள் மாத்திரைகள் எடுத்து முடித்த பிறகு, மீண்டும் ஒருமுறை சிறுநீர் தொற்று பரிசோதனை செய்ய வேண்டும். இதன் மூலம் அவர்களின் சிறு நீர்க்குழாய் தொற்று பிரச்சனை முழுமையாக சரியாவதை உறுதி செய்ய முடியும். அதன்பிறகு பின்நாட்களில் குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் வராமல் தடுக்க முடியும்.
பெண்கள் கர்ப்பத்தை உறுதி செய்ய சிறுநீர் பரிசோதனை எப்போது செய்ய வேண்டும்?
பெண்கள் பலரும் தாங்கள் கர்ப்பமாக இருக்கிறோமா என்பதை அறிந்து கொள்ள சிறுநீர் பரிசோதனை எப்போது செய்ய வேண்டும் என்பதில் அவர்களுக்கு சந்தேகம் இருக்கும். ஒரு பெண்ணுக்கு மாதவிலக்கு மாதாமாதம் சரியான நேரத்தில் வந்தால், மாதவிலக்கு தள்ளிப்போன ஒரே நாளில், அதாவது 31-வது நாளில் சிறுநீர் பரிசோதனை செய்யலாம்.
ஆனால் சில பெண்களுக்கு மாதவிலக்கு வருவது 35 நாட்கள் அல்லது 45 நாட்கள் என தள்ளித் தள்ளிப்போகும். ஆனால் எதுவாக இருந்தாலும் முதலில் அவர்கள் ஒரு சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சிறுநீர் பரிசோதனை நெகட்டிவ் ஆக வந்தால் ஒரு வாரம் காத்திருக்க வேண்டும்.
ஒரு வாரம் கழித்தும் மாதவிலக்கு வரவில்லை, ஆனால் நீங்கள் கருத்தரிப்பதற்கு முயற்சி செய்து இருக்கிறீர்கள் என்றால், கண்டிப்பாக மீண்டும் ஒரு வாரம் கழித்து சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ளலாம்.
தேவைப்பட்டால் சில நேரங்களில் ரத்த பரிசோதனையில், பீட்டா எச்.சி.ஜி. என்ற ரத்த பரிசோதனை செய்வது மிகவும் முக்கியமான ஒன்று. இந்த பீட்டா எச்.சி.ஜி. பரிசோதனை மூலமாக, கருவின் ஆரம்ப நிலையிலேயே அதனுடைய வளர்ச்சியை தெரிந்து கொள்ள முடியும். இது ஒரு முக்கியமான பரிசோதனை ஆகும்.
மாதவிலக்கு குறிப்பிட்ட காலத்தில் வராத பெண்கள் எப்போது கருமுட்டைகள் வெளியானதோ, அதில் இருந்து 17-வது நாள் சிறுநீர் பரிசோதனை செய்தால் பாசிட்டிவ் ஆக வர வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான் நாங்கள் எங்களிடம் வரும் பெண்களுக்கு, எந்த நாளில் முட்டை வெளியானதோ, அந்த நாளில் இருந்து 17-வது நாளில் சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொல்கிறோம்.
பொதுவாக ஐ.வி.எப். முறையில் செயற்கை கருத்தரிப்பு செய்கிற பெண்களுக்கு, கருவை கர்ப்பப்பையில் எடுத்து வைத்த பிறகு 15-வது நாள் பரிசோதனை செய்து பார்க்க சொல்கிறோம். இந்த காலகட்டத்தில் அந்த கருவின் டிரோபோபிளாஸ்ட் பார்மேஷன் (கருவை சுற்றியுள்ள வெளிப்புற அடுக்கு) சரியாக இருக்கும். அதுதான் பீட்டா எச்.சி.ஜி. வருவதற்கான அடிப்படையான செல்களாக அமையும். இந்த செல்களில் இருந்து வெளியேறும் ஹார்மோன்களை வைத்து தான் கர்ப்பம் உறுதியாக இருக்கிறதா என்பதை பரிசோதித்து தெரிந்து கொள்ள முடியும்.
- அனைத்தும் தமிழக ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக மாறியது.
- பாரதிராஜாவும், ரஜினியும் அந்த உரையாடலில் பல தகவல்களை வெளியிட்டனர்.
1979-ம் ஆண்டு ஜூன் மாதம் ரஜினி நன்கு குணமாகி இயல்பு நிலைக்கு திரும்பியதும் அவரை மையப்படுத்தி அனைத்துப் பத்திரிகைகளும் போட்டி போட்டு செய்திகள் வெளியிட்டன. சினிமா இதழ்களில் ரஜினிக்கு முக்கியத்துவம் கொடுத்து பரபரப்பு தகவல்கள் வெளியானது.
அவை அனைத்தும் தமிழக ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக மாறியது. குறிப்பாக ரஜினி ஒவ்வொரு பேட்டியிலும் தன்னைப் பற்றி யதார்த்தமாக பேசியதை தமிழக ரசிகர்கள் மிகவும் ரசித்தார்கள். போலியாக நடிக்காமல் உள்ளதை உள்ளபடி சொல்கிறார் என்று புகழ்ந்தனர்.
நாளடைவில் இதுவே ரஜினிக்கு தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியது. இதனால் சினிமா இதழ்களில் ரஜினி பற்றிய தகவல்கள் தவறாமல் இடம் பிடித்தன. ஒரு பிரபல சினிமா இதழ் டைரக்டர் பாரதிராஜாவையும், ரஜினியையும் சந்தித்து உரையாட வைத்து சிறப்பு இதழே வெளியிட்டது.
பாரதிராஜாவும், ரஜினியும் அந்த உரையாடலில் பல தகவல்களை வெளியிட்டனர். அவர்களது உரையாடல் வருமாறு:-
பாரதிராஜா: வில்லனை மக்கள் ரசித்தது உங்களை பார்த்துதான். ஆனால் கடந்த சில மாதங்களாக உங்களது செயல்பாடுகளால் பலவிதமாக பேசப்பட்டது. என்றாலும் மக்கள் மத்தியில் அது சின்ன சலனத்தைக் கூட ஏற்படுத்த–வில்லை. அதற்கு முக்கிய காரணம் உங்களிடம் அது மாதிரியான தவறான போக்கு இல்லை என்பதை தமிழக மக்கள் முழுவதுமாக உணர்ந்திருந்ததுதான்.
இன்னும் சொல்வதென்றால் உங்களுடைய புகழ் இப்போது மேலும் அதிகமாகி விட்டது. அது தவிர பட உலகில் இருக்கிறவர்களுக்கும் உங்களிடம் ஒரு மென்மையான போக்கு இருந்தது. அதுதான் உங்களை காப்பாற்றியது என்று நினைக்கிறேன்? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ரஜினி: ஆமாம். உண்மைதான். அந்த சமயத்தில் என்கூட நடிச்சவங்க மிகவும் ஒத்துழைப்பு கொடுத்தார்கள். என் சூழ்நிலை தெரியாமல் நான் என்னையும் அறியாமல் என்னென்னவோ செய்து இருக்கிறேன். சில பேர் முகத்தில் துப்பி இருக்கிறேன். அதையெல்லாம் அவர்கள் பொறுத்துக் கொண்டது நான் வணங்கிய தெய்வங்களின் அனுக்கிரகம் என்றுதான் சொல்வேன். நான் செய்த தவறுகளை நினைத்துப் பார்த்தால் எனக்கு என்னவோ போல் இருக்கிறது.
எனக்கு என்னையும் மீறி என்னவோ நடந்து விட்டது. எனக்கு சில பேர் சூனியம் வைத்து விட்டார்கள் என்று சொன்னார்கள். எப்படியோ மீண்டு விட்டேன்.
பாரதிராஜா: நீங்கள் ஒரு தடவை ஜப்பானோ, சிங்கப்பூரோ போய் விட்டு வந்தீங்களாமே... அதற்குப்பிறகுதான்....
ரஜினி: ஜப்பான் இல்லை. அய்யப்ப சாமிக்கு மாலை போட்டு சபரிமலைக்கு போய் விட்டு வந்த பிறகு பாம்பே போனேன். அங்கேயே என்னிடம் சில மாறுதல்கள் இருந்தன. அதை நான் அப்போதே உணர ஆரம்பித்தேன். சென்னைக்கு திரும்பியதும் அந்த பாதிப்பு அதிகமானது.
அப்போதெல்லாம் ஒரு மணி வரைக்கும் குடிப்பேன். அப்புறம் தூக்கம் வராது. ஸ்கூட்டரில் மெரினா கடற்கரை... அங்க இங்கன்னு சுத்துவேன். அதன் பிறகு அதிகாலை 3 மணி, 4 மணிக்கு வீட்டுக்கு வருவேன். மீண்டும் மது குடிப்பேன். 5 மணிக்கு ஒரு மாதிரி இருக்கும். தூங்கப் போவேன்.
காலை 6 மணிக்கு ஷூட்டிங்கிற்கு கார் வந்து விடும். உடனே குளிச்சிட்டு புறப்பட்டு விடுவேன். தூக்கமே கிடையாது. அதுக்கு மேல ஜரிதா பீடா வேற போடுவேன். இந்த நிலையில் சிங்கப்பூருக்கு நினைத்தாலே இனிக்கும் படப்பிடிப்புக்கு சென்றேன். அங்கே 6 மாசம் இருந்ததில் எல்லாம் ஓவரா போய் விட்டது.
அதன் பிறகு 40 நாள் விரதம். அது முடிந்ததும் திரும்பியும் வெறி வந்த மாதிரி சாப்பிட ஆரம்பித்தேன். அது மட்டுமில்லே... இரவு பகலாக சினிமாவில் நடிக்க ஆரம்பித்தேன். பிப்ரவரியில் என் உடல்நிலை கெட ஆரம்பித்தது. மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலையில் ரொம்ப மோசமாகி விட்டது.
நான் மதுரையில் ஐதராபாத்தில் எல்லாம் என்ன செய்தேன் என்று எனக்குத் தெரியாது. மதுரையில் சிவாஜி சாருக்கு நடந்த பாராட்டு விழாவுக்கு மேடைக்கு எப்படி போனேன் ... என்ன பேசினேன்... ஒன்றும் ஞாபகம் இல்லை.
நான் பெல்ட்டால் எல்லாம் அடித்தேன் என்று சொன்னார்கள். அதுமாதிரி சோழா ஓட்டலில் கலாட்டா, சபையர் தியேட்டர்லே கலாட்டா செய்ததாக சொன்னார்கள். அப்போதெல்லாம் யாரையாவது அடித்து விட்டால் அதுக்காக வருத்தப்பட மாட்டேன். 'அடிச்சிட்டேன்'னு பெருமைபட்டுக் கொள்வேன்.
பாரதிராஜா: உங்க இடத்தில் வேறு ஒரு நடிகர் இருந்து இருந்தால் காணாமல் போய் இருப்பார். அவர்களுடைய மார்க்கெட் சிதறி போய் இருக்கும். பொதுவாக தமிழக ரசிகர்கள் நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும் நன்கு உற்றுப்பார்ப்பார்கள். இந்த விஷயத்தில் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்.
ரஜினி: ஆமாம் சார்... இதை நான் அப்போதே நினைத்து பார்ப்பது உண்டு. எனது செயல்பாடுகளால் என்னுடைய சினிமா வாய்ப்புகள் பாதிக்கும் என்றே நினைத்தேன். ஆனால் தமிழக மக்கள் என்னை புரிந்துக் கொண்டார்கள். என்னை அவர்கள் நம்பினார்கள்.
என்றாலும் கதாநாயகனாக நடிப்பதை விட்டு விட்டு முழுக்க முழுக்க வில்லன் மாதிரி இருக்கிற படங்களில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து இருந்தேன். ராமரை விட்டு விட்டு ராவணன் கதையை ஆரம்பிக்க வேண்டியதுதானே!
பாரதிராஜா: ஆனால் எப்போதும் பஞ்சு அருணாசலம் உங்களுக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டே இருக்கிறார். பலர் உங்களைப் பற்றி தப்பாக பேசிக்கிட்டு இருந்த சமயங்களில் நான் பஞ்சுவை சந்தித்துப் பேசி இருக்கிறேன். அவர் உங்கள் பக்கம்தான் பேசுவார்.
ஒரு தடவை அவர் என்னிடம் 'நான் ரஜினியோட ரொம்ப பழகி இருக்கிறேன். அவரது குணம் இது அல்ல' என்றார். உங்களுக்கும் பஞ்சுவுக்கும் ஒரு நல்ல நட்புணர்வு இருக்கிறது.
பஞ்சுவினுடைய புவனா ஒரு கேள்விக்குறி-யில் உங்களை திரையுலகில் புதிய பாதையில் அவர் மாற்றி விட்டு விட்டார். அதன் பிறகு காயத்ரி, பிரியா, ஆறிலிருந்து அறுபது வரை எல்லாமே பெரிய சக்சஸ் என்பது மட்டுமில்லை. உங்களுக்கும் பெரிய பெயரும் வாங்கிக் கொடுத்து இருக்கிறது.
எம்.ஆர்.ராதாவுக்கு பிறகு வில்லனை மக்கள் ரசித்தது உங்கள் ரூபத்தில்தான். 16 வயதினிலே படத்துக்காக நாம் சேர்ந்து இருந்த போது எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும். உங்க வேலையைத் தவிர வேறு எதிலும் நீங்கள் தலையிட்டது இல்லை. அதன் பிறகு நாம் அடிக்கடி சந்தித்துக் கொள்ள வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது.
ஒரு தடவை ஒரு விருந்தில் நமக்குள் லேசான உரசல் ஏற்பட்டது. அது ஏன் என்று தெரியவில்லை. நீங்கள் அதிக மது குடித்து இருந்ததால் அப்படி ஆகி இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
ரஜினி: அன்று விருந்தில் நான் இருந்த சூழ்நிலை அப்படி. அன்று சிலரால் நான் ஏதேதோ பேசி விட்டேன். எனக்கு நன்றாகத் தெரியும். தப்பு என் மேல்தான். இதுபற்றி பேச உங்களுக்கு நான் 3, 4 தடவை போனில் தொடர்பு கொண்டேன். நீங்கள் கிடைக்கவில்லை.
பாரதிராஜா: அந்த விஷயத்தை அன்றே நான் மறந்து விட்டேன். அதான் என் குணம். நான் முதல் முறையாக எங்கே உங்களை சந்தித்தேன் என்று தெரியுமா?
ரஜினி: 'அவர்கள்' பட ஷூட்டிங்கின்போது ஒரு மாடியில் தானே...
பாரதிராஜா: இல்லை. அதுக்கு முன்னாடி சிவசுப்ரமணியம் பூஜையில் உங்களைப் பார்த்தேன். பூஜை நடந்துகிட்டிருக்கு. ஓரத்தில் அமைதியாக உட்கார்ந்து இருந்தீங்க. படத்தில் பார்ப்பதற்கும், நேரில் பார்ப்பதற்கும் கொஞ்சம் வித்தியாசம் இருந்தது.
ரஜினி: ஆமாம். அப்போது நான் மிகவும் ஒல்லியாக இருந்தேன். இப்போது கொஞ்சம் மாறி இருக்கிறேன்.
பாரதிராஜா: '16 வயதினிலே' படம் முடிந்து ஒரு நாள் நாம் பேசிக்கொண்டிருந்த போது உங்க திறமையை நீங்க காட்டணும்னு நீங்களே சொல்லி இருக்கீங்க. நடிகர்கள் நடிச்சி 5 படங்கள் வந்து 3 படம் ஓடினால் கூடப் போதும். ஆனால் எங்க நிலை அப்படி இல்லை. படம் ஓடாவிட்டால் விமர்சிக்க ஆரம்பித்து விடுவார்கள். அதனால் ஒரே நேரத்துல 4, 5 படம் பண்ண முடியவில்லை.
ரஜினி: 'இமேஜ்' வந்தாலே பிரச்சினைதான். இமேஜ் வரவேண்டும் என்று கஷ்டப்படுகிறோம். வந்த பிறகு அதைக் காப்பாற்றி கொள்ள போராடுகிறோம். சினிமாவை நாம் தொழிலாக நினைத்தால் ரொம்ப சிரமப்படுவோம். சினிமாவை அனுப வித்து வாழ்க்கையை கொண்டு போனால் போதும். அதற்கு பிறகு நாம் சாதித்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் உரையாடல் நடந்தது.
டைரக்டர் பாலச்சந்தர், கமல் இருவரும் ரஜினி முழுமையாக குணம் அடைந்து மீண்டதை வரவேற்று பேட்டியளித்தனர். அவர்கள் இருவரும் என்ன சொன்னார்கள் என்பதை நாளைக் காணலாம்.
- பணத்தால் சாதிக்க முடியாத செயலே கிடையாது என்பது அனைவரும் அறிந்ததே.
- வாழ்ந்த நிலைக்கு அப்பாற்பட்ட வாழ்க்கை கிடைத்து யோகத்தை அனுபவிப்பார்கள்.
ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பது பழமொழியாக இருந்தால் கூட யோகமாக வாழ வேண்டும் என்பது அனைவரின் விருப்பம் ஆகும்.
அதிர்ஷ்டமான வாழ்க்கை என்பது ஆயிரத்தில் சிலருக்கு மட்டுமே உண்டாகும். ஜோதிடத்தை பொருத்தவரை காலபகவான் நினைத்தால் யாருடைய வாழ்க்கையையும் மாற்றுவார். ஜோதிடத்தில் பல்வேறு யோகங்கள் இருந்தால் கூட விபரீத ராஜயோகம் என்பது சிறப்பான யோகமாக கூறப்படுகிறது. பலர் விபரீத ராஜயோகம் என்பதை பெரும் அதிர்ஷ்டம் என்று நினைத்துக் கொண்டுள்ளார்கள்.
ஒரு விபரீதம் நடந்து ஒரு மீள முடியாத இழப்பு நடந்து அதன் பிறகு அதை ஈடு செய்யக் கூடிய வகையில் ஏதாவது பணம் பொருள் கிடைப்பதே விபரீத ராஜயோகம் ஆகும். தற்போது சமீப காலத்தில் கரூரில் நடந்த அசம்பாவிதத்தில் 41 பேரின் குடும்பத்திற்கு ஏற்பட்ட உயிர் இழப்பை அரசியல் பிரமுகர்கள் அரசாங்கம் ஈடு செய்ததை விபரீத ராஜயோகம் என்று கூறலாம். ஒருவர் சிறுக சிறுக சேர்த்த காப்பீட்டு பணம் அவரின் காலத்திற்கு பிறகு அவரின் வாரிசுகளுக்கு கிடைப்பது விபரீத ராஜயோகமாகும்.
பெற்றோர்கள், பெரியோர்கள், முன்னோர்கள், நெருங்கிய ரத்த பந்தம் போன்ற உறவுகளின் காலத்திற்குப் பிறகு அவர்களின் உயில் சொத்து, பணம், நகைகளை அனுபவிப்பது விபரீத ராஜயோகம் ஆகும். பினாமி மூலம் கிடைக்கும் சொத்துக்களும் இதில் அடங்கும். புதையல், கண்டெடுத்த பொருள், ரேஸ், பங்குச் சந்தை, சூதாட்டத்தில் கிடைக்கும் பணங்களும் விபரீத ராஜயோகமாகும். பங்குச்சந்தை, ரேஸ், லாட்டரி இதன் மூலமாக கிடைக்கும் பணம் என்றுமே மதில் மேல் பூனை தான். அதிர்ஷ்டம் எல்லா நேரத்திலும் அரவணைக்காது. மேலே கூறிய அதிர்ஷ்டம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பல முறை இழந்த பணம் ஏதாவது ஒரு முறை அதிர்ஷ்ட லட்சுமியை கண்களில் காட்டும்.
சிலருக்கு அதிர்ஷ்ட பணம் பொருள் கிடைத்த பிறகு அதை அனுபவிக்க முடியாத வகையில் ஏதேனும் நடைமுறை சிக்கல்கள் இருக்கும்.
உடல் ரீதியான பாதிப்பு, மன ரீதியான பாதிப்பு சட்ட ரீதியான சிக்கல்கள் இருக்கும். சுருக்கமாக இதற்கு ஒரே வரியில் பலன் சொல்ல வேண்டும் என்றால் இருக்கும் ஆனால் இருக்காது அல்லது இருப்பதை அனுபவிக்க முடியாது.

ஐ.ஆனந்தி
ஒரு ஜாதகத்தில் லக்னத்திற்கு 8-ம் மிடத்திற்கான அதிபதியே அஷ்டமாதிபதியாகும். அந்த அஷ்டமாதிபதியும் அஷ்டமத்தில் நின்ற கிரகங்களும், அஷ்டமாதிபதியின் நட்சத்திரத்தில் நின்ற கிரகங்களும் ஒருவருக்கு யோகத்தையோ அவ யோகத்தை தருகிறது. எட்டாம் பாவகம் என்பது பணபர ஸ்தானமாகும். பணம் பொருளால் ஏற்படும் சுப அசுப பலனைப் பற்றிக் கூறுவது எட்டாம் பாவமாகும். ஒருவர் ஜாதகத்தில் பூர்வ ஜென்மத்தில் செய்த பாவகாரியத்தை குறிப்பது 8ம் பாவகமாகும். ஒருவருடைய ஜாதகத்தில் 8ம் பாவக அதிபதி, 8-ல் நின்ற கிரகங்கள், எட்டாம் அதிபதியின் நட்சத்திரத்தில் நின்ற கிரகங்கள் ஒருவருக்கு எதிர்பாராத துன்பம், அவதூறுகளை தருபவர்கள்.
ஒரு சிலர் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்தாலும் பிரச்சினை தேடி வரும். வம்பு பொய்வழக்கு, அவமானம், கண்டம், விபத்து, ஜாமீன் பிரச்சினை, தீராத நோய், தீர்க்க முடியாத கடன் வரும். ஒரு சிலருக்கு பரிதாபப்பட்டு கொடுத்த பணம் கூட அலைக்கழிக்கும். எட்டாமிடம் வேலை செய்யும் போது தொழில் உத்தியோகரீதியான யோகமோ, அவயோகமோ நடக்கும். ஒரு சிலர் எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்தாலும் உழைத்த கூலிக்கு பலமுறை அலைய வேண்டிய சூழ்நிலை இருக்கும்.
எட்டாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களின் காரகத்துவம் சார்ந்த பயம் ஜாதகருக்கு இருந்து கொண்டே இருக்கும். ஒருவருக்கு பிறரின் கோபத்தால் ஏற்படும் சாபத்தை குறிப்பது 8ம் பாவகமாகும். ஒரு ஜாதகத்தில் எட்டாமிடத்தின் மூலம் ஆயுள் மட்டுமல்ல தீராத நோய் விபத்து, கண்டம், அவமானம், வறுமை, மன நிம்மதியின்மை, தற்கொலை எண்ணம், கோர்ட், கேஸ் பிரச்சினை போன்றவற்றை அறிய முடியும்.
ஒரு சிலர் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்தாலும் வம்பு, பொய்வழக்கு, அவமானம், கண்டம், விபத்து போன்றவை தேடி வருவதற்கு அஷ்டமா திபதியே காரணமாகும்.
பணத்தால் சாதிக்க முடியாத செயலே கிடையாது என்பது அனைவரும் அறிந்ததே. அந்த பணம் சம்பாதிப்பது எளிதான செயல் அல்ல என்ற நிலை இருக்கும் போது எதிர்பாராத பண இழப்பு சிலருக்கு வாழ்க்கை பாதையை தடம் புரட்டி விடுகிறது. 8-ம்மிடம் அசுப வலுப்பெற்றால் போலீஸ், கோர்ட், கேஸ் , கட்டப்பஞ்சாயத்து நஷ்டம் அவமானம், தற்கொலை எண்ணம், சிறை தண்டனை உண்டாகும். இவர்களில் பெரும்பான்மையோர், ஷேர், சீட்டு, ரேஸ், தவறான நடவடிக்கைகள் மூலம் பணத்தை தொலைத்து கடனாளியானவர்கள். 8-ம்மடத்தில் நின்ற கிரகம் தனது சமசப்தம பார்வையால் தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் 8ம் இடம் மிகவும் வலுப்பெற்ற ஜாதகர்கள் முரட்டுப் பிடிவாதம், முன்கோபம், கடுமையான வார்த்தைகளால் பிறரை நோகச் செய்யும் இயல்பு உடையவர்கள்.
பெண்கள் ஜாதகத்தில் அஷ்டமாதிபதியே. மாங்கல்ய பலம் பற்றியும் தெரிவிப்பவர். 8-ம் இடத்தில் நிற்கும் பாவ கிரகங்கள் மட்டுமல்ல சுப கிரங்களும் ஜாதகரை நிலை குலைய வைக்கும். எட்டாம் பாவகம் என்பது முதலீடு. தனது பிற்கால வாழ்விற்காகவும் தனது சந்ததியினருக்காகவும் சேர்த்தும் வைக்கும் அனைத்தும் முதலீடு. இதிலும் ஒரு சூட்சம ரகசியம் உள்ளது. ஒருவர் அதிக முதலீட்டில் தொழில் நடத்த எட்டாம் பாவக வலிமை வேண்டும். தொழிலுக்காக போட்ட முதலீடு பத்திரமாக வீடு வந்து சேர்ந்தால் எட்டாம் பாவகம் வலிமை. தொழில் முதலீட்டை ஒருவர் இழந்தால் எட்டாம் பாவகம் பலவீனம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
ஜோதிடத்தில் பல்வேறு சூட்சமங்கள் உள்ளது. பத்தாமிடம் என்பது தொழில் ஸ்தானம். பத்தாமிடத்திற்கு லாப ஸ்தானம் எட்டாமிடம். ஒரு ஜாதகத்திற்கு பலன் சொல்ல பராம்பரிய முறைப்படி பல்வேறு முறைகள் உள்ளது. மல்டி மில்லியனர்கள் ஜாதகத்தில் எட்டாமிடம் வலுவாக இருக்கும்.
அவர்களின் முதலீடுகள் பலமடங்காக பெருகும். அவர்களின் வாழ்க்கையும், முதலீடும் யாரும் புரிய முடியாத வண்ணம் மறைபொருளாக இருக்கும். எட்டாம் பாவகத்தின் பாவத் பாவம் பத்தாம் பாவமாகும். எட்டாம் பாவகம் எனும் பணபர ஸ்தானம் மூலமாக வளர்க்கப்படும் பாவகம் பத்தாம் பாவகம் எனும் தொழில் ஸ்தானமாகும்.
ஏழுக்குடையவன் எட்டில் இருக்கும்போது வாழ்க்கைத் துணையால் திருமணத்துக்குப் பின் பொருளாதார நிலை உயரும். 7-க்கு 2 என்பதால் மனைவியால் விபரீத ராஜயோகம் ஏற்படும். அடிப்படை வசதி இல்லாதவர்களுக்கு வீடு, கார், பங்களா, நகை, நட்டு, தங்கம், வெள்ளி, பணம், சீர் வரிசை என பெரும் பொருளுடன் மனைவி அமையும். 8-ல் நிற்கும் கிரகம் 2ம்மிடத்தை பார்ப்பதால் தனது வாய்ஜாலத்தால் மனைவியை மகிழ்வித்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் யோகம் தொடரும்.
அதாவது மனைவிக்கு கூஜா தூக்க வேண்டும். மனைவி சொல்லே மந்திரம் மீதி எல்லாம் தந்திரம் என்று குதிரைக்கு கடிவாளம் போட்டது போல் மனைவியின் பின் செல்லும் போது வாழ்க்கை வசந்தமாகும். மனைவியை தவறான வார்த்தைகளால் வசை பாடினால் முதல் திருமண பந்தத்தில் விவாகரத்து கோர்ட், கேஸ் என அழைந்து மன வியாதி வந்து விடும். இது வலுவான இரண்டு தார யோக அமைப்பாகும். நிலையான நண்பர்கள் அமைய மாட்டார்கள். இவர்கள் கூட்டுத் தொழிலை தவிர்ப்பது நல்லது. தம்பதிகள் சண்டை நீதிமன்றம் வரை சென்று அவமானத்தை அதிகபடுத்தும்.
அன்றாட தேவைக்கு கஷ்டப்படும் ஒருவர் திடீர் தனவானாக மாறி அனைத்து இன்பங்களையும் அனுபவிப்பது விபரீத ராஜயோகமாகும். வாழ்ந்த நிலைக்கு அப்பாற்பட்ட வாழ்க்கை கிடைத்து யோகத்தை அனுபவிப்பார்கள். ஜோதிட சாஸ்திரத்தில் ஆயிரக்கணக்கான யோகங்கள் இருந்தாலும் நடைமுறைக்கு ஒத்து வரக்கூடிய யோகங்களில் ஒன்றுதான் விபரீத ராஜ யோகமாகும்.
ஒரு ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திலிருந்து 3, 6, 8, 12-ம் மிடங்கள் மறைவு ஸ்தானங்களாகும். கடந்து வந்த பிறவிகளின் கர்மாவிற்கு ஏற்ப சுக, துக்கங்களை வழங்குபவர்கள் இந்த மறைவு ஸ்தான அதிபதிகள். 3, 6, 8.12-ம் அதிபதிகள் ஒரு ராசியில் நின்றாலோ, ஒருவரையொருவர் நேரடியாக பார்த்தாலோ, ஒரு மறைவு ஸ்தான அதிபதியின் நட்சத்திரத்தில் மற்றொரு மறைவு ஸ்தான அதிபதி நின்றாலோ 3, 6, 8, 12-ம் அதிபதிகள் தங்களுக்குள் பரிவர்த்தனை அடைந்தாலும் விபரீத ராஜயோகம் உண்டாகும்.
அதாவது கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம். ஒரு ஜாதகத்தில் 5,9-ம் மிடங்கள் ஒருவர் செய்த புண்ணியத்தைக் கூறுமிடங்களாகும். 6,8, 12-ம்மிடங்கள் ஒருவர் செய்த பாவத்தை தெரிவிக்கும் இடங்களாகும். பூர்வ புண்ணிய ஸ்தானா திபதி எனும் 5ம் அதிபதியும் பாக்கியாதிபதி எனும் 9ம் அதிபதியும் எந்த பாவகத்தில் அமர்கிறார்களோ அந்த பாவகத்தில் உள்ள குறைகளை நீக்கிவிடுவார்கள்.
உதாரணமாக ஒன்பதாம் அதிபதி அதாவது பாக்யாதிபதி அஷ்டமஸ்தானத்தில் அமர்ந்தால் எட்டாம் பாவகக் குறைகளை நீக்கிவிடுவார். இந்த 5,9-ம் அதிபதிகள் வீட்டில் 6,8,12-ம் அதிபதிகள் அமர்ந்தால் இந்த ஜென்மத்தில் ஜாதகர் அனுபவிக்க வேண்டிய அனைத்து நல்ல பலன்களும் தடைபடும். 6, 8, 12-ம் அதிபதிகள் தங்களின் வீடுகளை மாற்றிக் கொண்டவர்கள் வெளியூர் வெளிநாடு சென்று புகழ் அடைகிறார்கள். 6,8,12-ம் அதிபதிகள் 1, 5, 9-ம் இடத்தில் அமர்ந்தால் முன்னேற்றக் குறைவு பூர்வீகத்தில் பிழைக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
அஷ்டமாதிபதி சுப வலுப் பெற்றால் லாட்டரி, ரேஸ், வாரிசு இல்லாத சொத்து, அதிர்ஷ்ட சொத்து, பங்குச்சந்தை ஆதாயம்.. போன்ற விபரீத ராஜ யோகமும் உண்டாகும். அஷ்டமாதிபதி அசுப வலுப் பெற்றால் விரும்பத்தகாத விளைவுகள் நடக்கும்.
அஷ்டமாதிபதிக்கு பாதகாதி சம்பந்தம் இருந்தால் உச்ச கட்ட பாதிப்ப ஏற்படும். லக்ன ரீதியான சுப கிரகத்தின் சம்பந்தம் குரு பார்வை இருக்கும் போதும் சிறு சிறு பாதிப்பு ஏற்படும். ஜாதகத்தில் அஷ்டமாதிபதி சுப பலன் வழங்குவாரா அல்லது அசுபத்தை ஏற்படுத்துவார என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுவது இயல்பு. இதை எளிமையாக உணர ஒரு வழி உள்ளது. திருமணத்திற்கு பிறகு ஒருவரின் வாழ்வாதாரம் உயர்ந்தால் அஷ்டமாதிபதி வரமாக உள்ளார் என்று பொருள். திருமணத்திற்கு பிறகு பொருளாதார இன்னல் மிகுதியாக இருந்தால் அஷ்டமாதிபதி அசுபமாக உள்ளார் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் கடவுளுக்கு அடுத்தபடியாக பலர் ஜோதிடத்தை நம்புகிறார்கள். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? கடைசி வரைக்கும் இதே கஷ்டம்தானா? எனக்கு கோடீஸ்வர யோகம் உள்ளதா நான் பணக்காரன் ஆவேனா? என்பது தான் பலரது கேள்வியாக இருக்கிறது.
தேவைக்கு பணம் கிடைக்காமல் போவதற்கு முதலாவது காரணம் சராசரி வாழ்க்கைக்கே போராடும் நிலையில், நாம் எங்கே கோடீஸ்வரராவது என்று நம்பிக்கை இழந்து வாழ்வதே இதற்கு முதல் காரணமாகும். அதிர்ஷ்டத்துக்காகக் காத்திருப்பதை விட அவரவர் ஜாதகத்தில் எந்த நேரத்தில், எந்தத் துறையில் ஈடுபட்டால் கோடீஸ்வரராக முடியும் என்பதைக் கண்டறிந்து அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.
பரிகாரம்
செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ நாட்களில் பால் தயிர், நெய், கோமியம், பசுஞ்சாணம் ஆகியவற்றை கலந்து பஞ்சகவ்யம் தயாரித்து சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட நன்மைகள் கூடி வரும்.
வேயுறு தோளிபங்கன் எனத் துவங்கும் கோளறு பதிகம் தினமும் படித்து வர நவக்கிரகங்களால் நன்மைகள் உண்டாகும்.
செல்: 98652 20406
- தம்பிகள், தங்கை அனைவரும் தன்னை மதிக்காத நிலையில் அவர் ஒரு அச்சகத்தில் பிழை திருத்தும் பணிக்கு சேருகிறார்.
- படப்பிடிப்புக்கு வரும் ஒவ்வொரு நாளும் அவர் தனது சந்தேகத்தை பஞ்சு அருணாசலத்திடமும், டைரக்டர் முத்துராமனிடமும் கேட்பது உண்டு.
அன்னை ஓர் ஆலயம் படத்தில் நடித்து முடித்ததும் ரஜினிக்கு மற்றொரு சவால் காத்து இருந்தது. அவரை தனது புதிய படத்தில் நடிக்க வைக்க பஞ்சு அருணாசலம் ஒப்பந்தம் செய்து இருந்தார்.
அந்த சமயத்தில்தான் கமல்ஹாசனும், ரஜினியும் இனி சேர்ந்து நடிப்பது இல்லை என்ற முடிவு எடுத்து இருந்தனர். இதனால் அவர்கள் இருவரையும் தனித்தனியாக நடிக்க வைத்து பஞ்சு அருணாசலம் 2 படங்களை தயாரித்தார். கமல்ஹாசன் படத்துக்கு "கல்யாண ராமன்" என்றும் ரஜினி படத்துக்கு "ஆறிலிருந்து அறுபது வரை" என்றும் பெயர் சூட்டி இருந்தார்.
கல்யாண ராமன் படம் அறிவிக்கப்பட்ட நாள் முதலே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று திரை உலகில் பேச்சு எழுந்தது. அதே சமயத்தில் ரஜினியின் ஆறிலிருந்து அறுபது வரை படம் வெற்றி பெறுமா? என்ற சந்தேகம்தான் அனைவரிடமும் இருந்தது.
ரஜினிக்கும் அந்த சந்தேகம் மனதுக்குள் இருந்து கொண்டே இருந்தது. ரஜினி நன்றாக குணம் அடைந்து இருந்தாலும் அந்த படத்தில் அவரால் முழுமையான ஈடுபாட்டை வெளிப்படுத்த இயலவில்லை. அதற்கு காரணம் அந்த படத்தின் கதையும் அவருக்கு அமைந்திருந்த வேடமும் ஆகும்.
கதைப்படி தந்தையை இழந்த ரஜினி சிறு வயதிலேயே குடும்ப பாரத்தை சுமக்கிறார். அவருக்கு 2 தம்பிகள், ஒரு தங்கை. தந்தை பணிபுரிந்த நிறுவனத்தில் ரஜினிக்கு வேலை கிடைக்கிறது. அங்கு வேலை பார்த்துக் கொண்டே 2 தம்பிகளையும், தங்கையையும் படிக்க வைக்கிறார்.
அவருக்கு நிதி நெருக்கடி ஏற்படும்போது நண்பர்கள் உதவுகிறார்கள். இதற்கிடையே அந்த நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணுடன் (சங்கீதா) ரஜினிக்கு காதல் ஏற்படுகிறது. ஆனால் ரஜினி தம்பிகள், தங்கைக்காக அதிக பணம் செலவிடுவதை பார்த்து அந்த பெண் ரஜினியுடனான காதலை முறித்துக்கொண்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார்.
அப்போது சுருளிராஜன் ரஜினியிடம் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டால் ரூ.5 ஆயிரம் கிடைக்கும் என்கிறார். அதற்கு ஆசைப்பட்டு ரஜினி திருமணத்துக்கு சம்மதிக்கிறார். ஆனால் அவர் ஏமாற்றப்பட்டது பிறகு தெரிய வருகிறது.
இந்த நிலையில் அவரது தம்பி படித்து பெரிய ஆளாகிறார். நல்ல சம்பளத்தில் வேலைக்கு சேருகிறார். ஆனால் குடும்பத்தை நடத்த அண்ணனுக்கு (ரஜினிக்கு) எந்த உதவியும் செய்யவில்லை. அவர் அண்ணனிடம் சண்டை போட்டு விட்டு வெளியேறுகிறார். சிறிது நாளில் அடுத்த தம்பியும் ரஜினியை விட்டுப் பிரிந்து வெளியேறுகிறார்.
தம்பிகள், தங்கை அனைவரும் தன்னை மதிக்காத நிலையில் அவர் ஒரு அச்சகத்தில் பிழை திருத்தும் பணிக்கு சேருகிறார். அங்கு கதைகள் எழுதி வெளியிட்டு புகழ் பெறுகிறார். அதன் பிறகு அவரை தம்பிகளும், தங்கையும் தேடி வருகிறார்கள்.
இந்த கதையில் சந்தானம் என்ற கேரக்டரில் ரஜினி அண்ணனாக நடித்து இருந்தார். ஆனால் படப்பிடிப்பு நாட்களில் ரஜினிக்கு அந்த வேடத்தில் நடிக்க கொஞ்சமும் பிடிக்கவில்லை. வழக்கமான ஸ்டைல்கள் இல்லை. சண்டைகள் உள்ளிட்ட அதிரடி எதுவும் இல்லாததால் இந்த கதை தனக்கு சரியாக பொருந்தாது என்று சொல்லிக்கொண்டே இருந்தார். சிவாஜி சாருக்கு சரியாக இருக்கும் என்று தினமும் புலம்பி வந்தார்.
படப்பிடிப்புக்கு வரும் ஒவ்வொரு நாளும் அவர் தனது சந்தேகத்தை பஞ்சு அருணாசலத்திடமும், டைரக்டர் முத்துராமனிடமும் கேட்பது உண்டு. இதனால் அவர்கள் இருவரும் பொறுமை இழந்து போனார்கள். ஒருநாள் அந்த படத்துக்காக எடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்தையும் அவர்கள் ரஜினிக்கு போட்டு காட்டினார்கள்.
அதை பார்த்த பிறகுதான் ரஜினிக்கு நம்பிக்கை வந்தது. அவர் முழு மனதுடன் நடித்து கொடுத்தார். இந்த அனுபவத்தை டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.......
ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் ரஜினி தொடர்பான ஒவ்வொரு காட்சி படமாக்கப்படும் போதும், அது பற்றிய முழு விவரத்தையும் அவர் கேட்டு அறிந்து, கதையை உள்வாங்கிக் கொள்வார். பிறகு நடிக்க வேண்டிய காட்சியை நன்கு சிந்தித்து புரிந்துக் கொண்டு நடிப்பார்.
என்றாலும் அடிக்கடி அவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. "குடும்பத்துக்கே தன்னை தியாகம் செய்யும் அண்ணனிடம், உடன் பிறந்தவர்கள் நன்றி கெட்டவர்களாக நடந்து கொள்வார்களா? அது எப்படி சார்" என்று அப்பாவியாக கேட்டார். "பெரும்பாலான குடும்பங்களில் இப்படித்தான் நடக்கிறது. இதுதான் யதார்த்தம்" என்று கதாசிரியர் பஞ்சு அருணாசலமும், நானும் விளக்கினோம். இருப்பினும் ரஜினி முழுவதுமாக திருப்தி அடையவில்லை.
இதன் காரணமாக பஞ்சு அருணாசலம் ஒரு முடிவுக்கு வந்தார். 5 ஆயிரம் அடி வரை படத்தை எடுத்து ரஜினிக்கு போட்டுக் காட்டினார். அது ரஜினிக்குப் பிடித்து இருந்தது. அவர் சம்மதம் தெரிவித்ததும் தற்போதுள்ள கதையை தொடர்ந்து படமாக்க முடிவு செய்யப்பட்டது.
அதே போல் படத்தை எடுத்து முடித்தோம். விநியோஸ்தர்களிடம் "படத்தின் முதல் 3 நாள் வசூல் பற்றி கவலைப்படாதீர்கள். அதுபற்றி எங்களுக்குத் தகவலும் தெரிவிக்காதீர்கள். 4-வது நாள் முதல் வசூலைப் பாருங்கள். பெண்கள் கூட்டம் அதிகமாக வருகிறதா என்று கவனியுங்கள். அதை எங்களுக்கு தெரிவியுங்கள்" என்றோம்.
நாங்கள் எண்ணியபடி நான்காவது நாள் முதல் பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து படத்தைப் பார்த்தார்கள். வசூல் நாளுக்கு நாள் அதிகரித்தது. படம் பெரிய வெற்றி பெற்றது. அது மட்டுமல்ல ரஜினியின் திரை உலக வாழ்க்கையில் அந்த படம் ஒரு மைல் கல்லாகவும் அமைந்தது.
இவ்வாறு டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் கூறினார்.
1979-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ந்தேதி வெளியான ஆறிலிருந்து அறுபது வரை படம் தமிழ்நாடு முழுவதும் திரையிடப்பட்டு அனைத்து தியேட்டர்களிலும் வசூலை வாரிக் குவித்தது. 100 நாட்கள் ஓடி வெற்றி படமாக மாறியது. இதன் மூலம் தர்மயுத்தம், நான் வாழ வைப்பேன், ஆறிலிருந்து அறுபது வரை என்று தொடர்ச்சியாக 3 படங்களை 100 நாட்கள் வெற்றி படங்களாக நடித்து கொடுத்த ஹாட்ரிக் சாதனையை ரஜினி செய்து இருந்தார்.
குமுதம் பத்திரிகை தனது விமர்சனத்தில் ரஜினியின் நடிப்பு பழைய சிவாஜியை பார்ப்பது போல இருப்பதாக பாராட்டி இருந்தது. இதே மனநிலைதான், தமிழ்நாடு முழுவதும் ரசிகர்கள் மத்தியிலும் எழுந்தது. இதனால் திரையுலகில் ரஜினி புதிய அவதாரத்துடன் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்து இருந்தார்.
நடிக்க வந்த முதல் 5 ஆண்டுகளில் வில்லனாகவும், ஆன்டி ஹீரோவாகவும், ஸ்டைல் மன்னனாகவும், அதிரடி கதாநாயகனாகவும் மட்டுமே நடித்து வந்த ரஜினியை ஆறிலிருந்து அறுபது வரை படம் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர் என்ற அந்தஸ்துக்கு மாற்றி இருந்தது.
ஆனால் ரஜினியிடம் ஏற்பட்டு இருந்த உடல்நல, மனநல பாதிப்பு ஜூன் மாதம் வரை நீடித்தது. ஏப்ரல், மே மாதங்களில் ரஜினி அடுத்தடுத்து சில தவறுகளை செய்து கொண்டே இருந்தார். மே மாதம் 23-ந்தேதி சென்னையில் ஒரு தியேட்டருக்கு சென்று ரஜினி செய்த கலாட்டா மறுநாள் பத்திரிகைகளில் பெரிய செய்தியாக வெளியாகி இருந்தது.
ஜூன் மாதம் 2-ந்தேதி ஒரு நட்சத்திர ஓட்டலில் ரஜினி தன்நிலை மறந்து அடிதடியில் இறங்கி விட்டார். அந்த ரகளைக்காக அவருக்கு 50 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதுவும் அவரை பற்றி பரபரப்பாக பேச வைத்தது. ஜூன் மாதம் 22-ந்தேதி ஐதராபாத் விமான நிலையத்தில் ரஜினி மது போதையில் செய்த கலாட்டா ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
விமான நிலையத்துக்குள் அமைதியை சீர் குலைத்ததாக ரஜினியை போலீசார் கைது செய்தனர். பிறகு அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவர் விமானத்துக்கு வருகிறார் என்றாலே விமான நிறுவனங்கள் அலர்ஜியாக பார்க்கும் நிலைகூட ஏற்பட்டது.
ஜூலை 1-ந்தேதி ரஜினியின் வழக்கு ஒன்று சென்னை எழும்பூர் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தியேட்டரில் டிக்கெட் கேட்டு ரகளை செய்ததற்காக தொடுக்கப்பட்ட வழக்கு ஆகும். இந்த வழக்கில் ரஜினிக்கு கோர்ட்டு 200 ரூபாய் அபராதம் விதித்தது.
இந்த சம்பவங்களால் ரஜினி சரியில்லை என்ற எண்ணம் பலரது மனதில் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது. பத்திரிகைகளுக்கு அவரது பேட்டிகளும் பரபரப்பாக மாறியது. சிறு வயதில் பெண்களிடம் செய்த தவறுகளை கூட அவர் ஒளிவு மறைவு இல்லாமல் சொன்னதை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டார்கள்.
எழுத்தாளர் பாலகுமாரனுக்கு அவர் அளித்த பேட்டியில், "நான் 7 வயதிலேயே கெட்டு போய் விட்டேன். அப்போதே என்னை விட வயதில் பெரியவர்களுக்கு சவால் விட்டு தப்பு செய்தேன். என்ன தப்பு செய்கிறேன் என்பது கூட தெரியாது. என்றாலும் சவால் விட்டவர்களை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் சென்றேன். இளைஞர்கள் பெண்களிடம் தொடர்பு வைத்துக் கொண்ட நானும் சவால் விட்டு பெண்கள் மீது படுத்து, உருண்டு, எழுந்து ஓடி வந்து விடுவேன்...." என்ற ரீதியில் ரஜினி அளித்த பேட்டி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
டைரக்டர் பாலச்சந்தர், ரெஜினா வின்சென்ட் உள்பட பலரும் ரஜினிக்கு அறிவுரை கூறினார்கள். இப்படியெல்லாம் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்காதே, உன் மீது தமிழ்நாட்டு மக்கள் வைத்திருக்கும் இமேஜ் போய் விடும் என்றனர்.
ஆனால் ரஜினி எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. 1979-ம் ஆண்டு மே மாதம் ரெஜினா வின்சென்ட் 1 மாதம் வெளிநாடு பயணம் சென்றார். சென்னையில் இருந்து புறப்படும் முன்பு அவர் ரஜினியிடம் நீண்ட நேரம் அறிவுரை கூறினார்.
"மது குடிக்காதே... யாரையும் அடிக்காதே.... நேரத்துக்கு சாப்பிட வேண்டும்" அம்மா சீக்கீரமாக திரும்பி வந்து விடுவேன் என்றார். தொடர்ச்சியாக வந்த இத்தகைய அறிவுரைகளும், உரிய சிகிச்சை களும் ரஜினிகாந்தை திருந்த வைத்தன. கொஞ்சம், கொஞ்சமாக அவர் இயல்பு நிலைக்கு வர ஆரம்பித்தார்.
1979-ம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் ரெஜினா வின்சென்ட் வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பினார். ரஜினி முழுமையாக குணம் அடைந்து இருக்கிறார் என்பதை நேரில் பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
1979-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ஜூன் வரை அதாவது அந்த 5 மாதங்கள் ரஜினி வாழ்வில் மிகப்பெரிய கரும்புள்ளியாக மாறி விட்டன. ஆனால் அதற்காக தமிழக ரசிகர்கள் ஒரு போதும் ரஜினியை வெறுத்து ஒதுக்கவில்லை. மாறாக மேலும் மேலும் ரஜினியை ஆதரித்துக் கொண்டாடினார்கள். இது தமிழ்த் திரை உலகில் எந்த ஒரு கதாநாயகனுக்கும் கிடைக்காத ஒரு சிறப்பாகும். ரஜினிக்கு மட்டுமே அந்த சிறப்பான இடம் கிடைத்தது. இதன் பின்னணியில் இறைஅருள் இருப்பதாக பலரும் சொன்னார்கள்.
இதை பிரதிபலிக்கும் வகையில் பாரதிராஜா கொடுத்த பேட்டி அமைந்தது. அது பற்றி நாளை காணலாம்.
- அவரவர் பணிகளில் சுதந்திரமாகவும், சுய விருப்பத்துடனும் ஈடுபடுவதற்கு முழு உரிமை வழங்கப்பட வேண்டும்.
- யானைகள் இல்லாத காட்டில் ஏன் யானை பிடிக்கக் குழி வெட்டப்பட்டது? என்பது தனிவழக்கு!.
நமக்குத் தொடர்பில்லாத செயல்களிலிருந்து விலகியே இருப்போம்!; அது நமக்கும் நல்லது! அடுத்தவர்களுக்கும் நல்லது! என்பதில் அக்கறையாய் இருக்கும் வாசகர்களே! வணக்கம்.
இந்த உலகம் பயன்கருதுகிற உலகம். எந்தச் செயலை யார் செய்வார்? என்பது இல்லாமல், எந்தச் செயலை யார் அகப்படுகிறார்களோ அவர்கள் தலையில் கட்டிவிடுவது! என்பதில் ஆர்வமாய் இருக்கும் உலகம். அதனால், கணக்கெடுத்துப் பார்த்தால் தமக்குத் தொடர்புடைய வேலைகளைப் பார்க்காமல், தமக்குச் சம்பந்தமில்லாத காரியங்களில் அகப்பட்டுக்கொண்டு விழித்துக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது. இப்படி வேண்டாத வேலைகளில் அகப்பட்டுக் கொள்வது என்பது பலருக்கு அவர்களின் விருப்பத்தின் காரணமாகவே அமைந்து விடுகிறது; சிலர் விரும்பாமலேயே பல காரியங்கள் அவர்கள்மீது திணிக்கப்படுகின்றன. அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ இன்னும் சில காரியங்கள் அவர்கள் மீது அவர்கள் அறியாமலேயே சுமத்தப்படவும் செய்கின்றன.
மனித வாழ்தலின் போக்கில், அலுவல் ரீதியாகவோ, அல்லது குடும்ப ரீதியாகவோ, அல்லது சமூக ரீதியாகவோ சில பணிகளை, சில கடமைகளை, சில பொதுக் காரியங்களை மனிதர்கள் செய்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். நாம் செய்வது அலுவல் சம்பந்தமானதோ, அல்லது குடும்பக் கடமைகளோ, அல்லது சமுதாயப் பொதுக் காரியங்களோ இவை எதுவாயினும் விருப்பத்துடனும் ஆர்வத்துடனும் செய்தால் அவை இன்பமானவையாகவே அமையும். ஆனால் அவற்றையெல்லாம் வெறும் கடமைக்காகவும், ஊதியத்திற்காகவும், வெற்றுப் பகட்டிற்காகவும் செய்யும் மனநிலை வாய்த்தால், செயல்கள் கவலைகளின் குவியல்களாய்ப் பெருகிப் போகும்.
அந்த நிலையில் பார்த்தால் மனிதர்கள், தமக்கான வேலைகளைத் தமக்கான கவலைகள் ஆகவும், தமக்குத் தொடர்பற்ற வேலைகளை, அவையும் தம்மை மேலும் கவலைப்படுத்த வந்த பெருங்கவலைகளாகவுமே பார்க்கத் தொடங்கி விட்டனர். இன்றுள்ள நிலைமையில் மனிதர்கள் அவரவர் வேலைகளில் மட்டுமே அக்கறை காட்டிச் செய்து வந்தாலே போதும்; அடுத்தவர் வேலைகளில் மூக்கை நுழைத்துக் குழப்புவது; அந்த வேலைகளை அவர்கள் செய்ய விடாமல் தடுப்பது; கொஞ்சம் அசந்தால் தமது வேலைகளையும் அவர்கள் தலையில் கட்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது போன்ற வேடிக்கை நிகழ்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடும்பமாயினும் பணிபுரியும் அலுவல் இடமாயினும் பணிப் பகிர்மானம் என்பது அவசியமானது ஆகும். வீடு என்று எடுத்துக்கொண்டால், வீட்டுப் பராமரிப்பு, குழந்தைகள் பராமரிப்பு, கல்வி, சமையல், நிதி நிருவாகம், குடும்பச் சுகாதாரம் போன்ற பல்வேறு பிரிவுகளில் கணவன் மனைவிக்கு இடையே பணிப் பகிர்மானம் தெளிவானதாக இருக்க வேண்டும். ஒருவர் பணி எல்லைக்குள் மற்றவர் தலையீடும், பணிச் சுமத்தலும் திணித்தலும் அறவே கூடாது. அவரவர் பணிகளில் சுதந்திரமாகவும், சுய விருப்பத்துடனும் ஈடுபடுவதற்கு முழு உரிமை வழங்கப்பட வேண்டும். இந்த உரிமை அடுத்தவர் கொடுப்பதாக அல்லாமல் அவரவர் எடுத்துக் கொள்வதாக இருக்க வேண்டும்.
சமையலறையில் சமைத்துக்கொண்டிருந்த மனைவியிடம் ஆசையாக வந்து, 'என்ன சமைத்துக் கொண்டிருக்கிறாய்? ரவா கேசரியா?" என்று ஆர்வத்தோடு கேட்டார் கணவர். "ஆமாம்!" என்றார் மனைவி. அதோடு 'சரி' என்று, 'மனைவி சமையல்கட்டில் அவர் வேலையைப் பார்க்கட்டும்! நாம் நமது வேலையில் கவனம் செலுத்துவோம்!' என்று கணவர் சென்றிருக்க வேண்டும். ஆனால் கணவர் சமையல்கட்டை விட்டுச் செல்லவில்லை; மாறாக, "ரவையைப் பொன்னிறமாக வறு!", "நெய்யில் பொரி", "தண்ணீரை ஊற்று", "சீனியைப் போட்டுக் கிண்டு", "வலது புறமாகக் கிண்டு", இடதுபுறமாகக் கிண்டு!" என்றெல்லாம் மாறிமாறிச் சொல்லிக் கொண்டிருந்தார்.
போதாக்குறைக்குக் கரண்டியைக் கையில் வாங்கி அவரே கிண்டவும் செய்தார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மனைவி, " இங்கே சமையல் நான் செய்யட்டுமா? இல்லை நீங்கள் செய்கிறீர்களா?. என்வேலையை என்னைப் பார்க்க விடுங்கள்!" என்று பொரிந்து தள்ளி விட்டார். இப்போது கணவர் பேசினார், "சமையல் வேலைபார்ப்பது எப்படி உன்னுடைய வேலையோ? அதில் தலையிட்டால் எப்படி உனக்குக் கோபம் வருகிறதோ? அதேபோலக் கார் ஓட்டுவது என்னுடைய வேலை; அதில், அருகில் அமர்ந்து கொண்டு, வலது திருப்பு, இடது திருப்பு, பிரேக் போடு, லைட் டிம் பண்ணு, பிரைட் பண்ணு, ஆரன் அடி! என்று என்னுடைய வேலைக்குள் தேவையில்லாமல் நீ தலையிட்டாலும் எனக்குக் கோபம் வரும்!" என்றார். அவரவர் வேலைகளை அவரவர் செய்துவிடுவர் என்று நம்பிக்கை வைத்துவிட்டால், தேவையற்ற தலையீடுகள் இல்லாமல் போகும்.
அதேபோலப் பணிபுரியும் இடங்களிலும் அவரவர் பணிப்பண்பாடு அவரவர்களால் பேணப்பட வேண்டும். அடுத்தவர் வேலைகளில் தேவையற்று நுழைந்து குற்றம் கண்டுபிடிப்பது; கோள் மூட்டுவது, தான் செய்யாமலிருப்பது மட்டுமல்லாமல் அடுத்தவர்களையும் பணியில் ஈடுபடாமல் தடுப்பது போன்ற செயல்களினால் பணிகள் விருப்பங்களாக அல்லாமல் கவலைகளாக மாறிவிடுகின்றன. தனது வேலைகளில் துளியும் அக்கறை செலுத்தாமல், அடுத்தவர் மீது குற்றம் கண்டுபிடித்து இரண்டுபக்க வேலைகளிலும் தோல்வி ஏற்படும்படி சிலர் நடந்து கொள்வர். இவ்வாறு தாம் செய்யும் பணிகளை எல்லாம் துன்பங்களாக எண்ணத் தொடங்கினால் அவை முடிவில் கவலைகளாகவே உருமாறிப்போகும். கவலைகள் எப்போதும் நல்ல பலன்களை விளைவிப்பதில்லை.' கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு! காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு! 'என்கிற திரைக்கவி வார்த்தைகள், ஆற்ற வேண்டிய காரியங்களின் கவலைகளை நீக்கி விட்டுத் துணிந்து செயலாற்றச் சொல்கின்றன.

சுந்தர ஆவுடையப்பன்
"யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்"
என்கிற வள்ளுவ வாசகம், எல்லாப் பொருள்களின் மீதும் பற்றறுக்கும் அவசியத்தைத் துறவிகளுக்கு வலியுறுத்திக் கூறுவது ஆகும். ஆயினும் இந்தக் குறளின் வாயிலாக மற்ற ஆசாமிகளும் பெற்றுக்கொள்ள வேறொரு நற்செய்தியும் உண்டு. தமக்குச் சொந்தமான பொருள்களின் மீதும் செயல்களின்மீதும் அக்கறை காட்டுவதும் ஆசையோடு செயல்படுவதும் உலகியல் கண்ணோட்டத்தில் சரியானதுதான் என்றாலும், தமக்குச் சொந்தமில்லாத, தமக்குச் சம்பந்தமில்லாத வேலைகளில் தலையிடுவது தேவையற்ற துன்பங்களைக் கொண்டுவந்து சேர்க்கும் என்று எச்சரிக்கவும் செய்கிறது இந்தத் திருக்குறள்.
உலகின் ஒவ்வொருவரும் அவரவர்க்கு விதிக்கப்பட்டுள்ள பணிகளில் மட்டுமே அக்கறை செலுத்துவது போதுமானது. ஒரு நகரப்பேருந்து போய்க்கொண்டிருக்கிறது என்றால், அதில் ஓட்டுநரின் பணி, போக்குவரத்து விதிகளின்படி வண்டியை ஓட்டுவது, நிறுத்தங்களில் நிறுத்திப், பயணிகள் பாதுகாப்பாக ஏற இறங்க உதவுவது, நேர மேலாண்மையில் அக்கறை காட்டுவது ஆகியவை மட்டுமே!; மாறாக ஏறிய பயணிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு நான் தான் பயணச் சீட்டு தருவேன்! என்று அடம்பிடிக்கக் கூடாது: அது நடத்துநரின் வேலை.
பேருந்தில் ஏறுகிற பயணிகளில் ஒருவர், " இந்த ஓட்டுநர் வண்டியோட்டும் வாகு எனக்குப் பிடிக்கவில்லை!; எனக்கும் வண்டியோட்டத் தெரியும் ஆகையால் நான் தான் வண்டியோட்டுவேன்! என்று ஸ்டீயரிங் பக்கம் போய்விடக்கூடாது. பேருந்துப் பயணத்திலேயே இவ்வளவு பொறுப்புகளும் பணிகளும் அவரவர்க்கென்று இருக்கும்போது அடுத்தவர் பணிகளில் எதற்காக கவனம் செலுத்திக், கவலைகளை விலையின்றிப் பெற்றுக் கொள்ளவேண்டும்?.
ஒரு சந்தையில் ஒரு குதிரை வியாபாரி, மூன்று குதிரைகளை விலைக்கு வாங்கித், தனது ஊரை நோக்கி அவற்றை ஓட்டிக்கொண்டு வந்தான். ஒருகாட்டு வழியே விரைவாக மூன்று குதிரைகளும் ஓடி வரும்போது, சருகுகளால் மூடிக்கிடந்த ஒருபள்ளத்திற்குள் விழுந்து காலொடிந்து இறந்து விட்டன. பள்ளத்தை ஆராய்ந்து பார்த்த குதிரை வியாபாரி அப்பள்ளம் யானைகளை உயிரோடு பிடிப்பதற்காக வெட்டப்பட்ட பள்ளம் என்பதும், பள்ளம் இருப்பதை யானைகள் அறியாமலிருப்பதற்காகச் சருகுகள்போட்டு மூடப்பட்டுள்ளதையும் தெரிந்து கொண்டான்.
அந்த நாட்டை ஆளும் அரசனின் நெருங்கிய உறவினன் ஒருவனே அப்பள்ளத்தை வெட்டியவன் என்பதையும் கூடுதல் தகவலாக அறிந்துகொண்டான். அந்த வனத்தில் வாழ்ந்துகொண்டிருந்த சாது ஒருவர் அப்போது அப்பக்கம் வந்தார்; அவரிடம் எல்லா விஷயங்களையும் கூறித், தன்னுடன் வந்து அரசனிடம் நியாயம் கேட்க உதவுமாறும் வேண்டிக் கொண்டான். சாதுவும் குதிரை வியாபாரியும் அரசனிடம் நீதி கேட்க அரண்மனைக்குச் சென்றார்கள்.
அரசனிடம் எல்ல விவரங்களையும் கூறிய சாது, " அரசே! யானைக்குக் குழி வெட்டி, இந்தக் குதிரைகள் அதில் விழுந்து சாவதற்கு முழுமுதற் காரணமாக இருக்கும் தங்கள் உறவினனை, பாரபட்சம் பாராமல் தண்டித்து, உரிய நஷ்ட ஈட்டைக் குதிரை வியாபரிக்கு வழங்கிடுமாறு உத்தரவிடுங்கள்!" என்றார். நீள யோசித்த அரசன் இவ்வாறு தீர்ப்புக் கூறினான், "யானைக்கு வெட்டிய குழியில் யானைகள் விழுந்து இறந்திருந்தால் அதற்கு, உரியவனிடம் நஷ்ட ஈடு பெற்றுத் தரலாம்; ஏனென்றால் அந்தக் குழி யானைகளை உயிரோடு பிடிப்பதற்காக மட்டுமே வெட்டப்பட்ட குழி ஆகும்.
மற்றொன்று, யானைகளுக்காக வெட்டப்பட்ட குழியில் குதிரைகள் விழுந்தாலும் விழுந்து இறந்தாலும் அது நோக்கத்திற்குப் பொருந்தாத செயலாகவே கருதப்படுகிறது. மொத்தத்தில் வழக்கைத் தள்ளுபடி செய்கிறேன்!" என்றார். சாது மேலும் பேசினார், "அரசே! இந்த வழக்குத் தொடர்பான கூடுதலான ஒரு செய்தி, அந்தக் காட்டில் யானைகளே கிடையாது! என்பதாகும்". " யானைகள் இல்லாத காட்டில் ஏன் யானை பிடிக்கக் குழி வெட்டப்பட்டது? என்பது தனிவழக்கு!. அதைத் தனியாகத்தான் விசாரிக்க வேண்டும். அதில் குதிரைகள் விழுந்து இறந்ததுதான் சம்பந்தமில்லதது என்று இந்த வழக்கைத் தள்ளுபடி செய்கிறேன். மேலும் நீர் காட்டில் தவம் செய்யும் துறவி; உமக்குச் சம்பந்தமில்லாத விஷயத்தில் நீர் சம்பந்தப்படுவது எதற்காக? என்று எச்சரிக்கும் தொனியில் அரசன் சாதுவைப் பார்த்து எதிர்க்கேள்வி கேட்டார். தொடர்பில்லாத விஷயங்களின் தொடர் சங்கிலியாய் வழக்கு நீண்டுகொண்டே போனது.
யானைகளே இல்லாத காட்டில் யானையைப் பிடிப்பதற்காக ஏன் குழி வெட்டப்பட்டது? யானைகள் விழும் பள்ளத்தில் ஏன் குதிரைகள் விழுந்தன? விழுந்த குதிரைகள் பிழைக்காமல் ஏன் இறந்து போயின? அரசன் குழிவெட்டிய உறவினனுக்காக வழக்கைத் திசை திருப்புகிறானா? எந்தப்பற்றும் இல்லாத துறவி எதற்காகக் குதிரை வியாபாரிக்காகப் பரிந்து பேச வேண்டும்?.
நமக்கு வேண்டாத வேலைகளிலிருந்து சற்றே அல்ல முழுமையும் விலகி இருப்பது இருநூறு சதவீதம் பாதுகாப்பானது.
தொடர்புக்கு - 9443190098
- படப்பிடிப்பு நடந்த இடம் போர்க்களம் போல மாறி விட்டது.
- ரஜினிக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
ரஜினிக்கு இன்று வரை ஒரு ஏக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. அது தன் சிறு வயதில் தனக்குக் கிடைக்காமல் போன தாய்ப் பாசம் பற்றியதாகும். அதனால்தான் அவர் தன் அண்ணியை தாயாகப் போற்றி வணங்கினார்.
தமிழ் சினிமாவில் நடித்து புகழ் பெற்ற காலத்திலும் கூட அவர் தாய்ப் பாசத்துக்கு ஏங்கியது உண்டு. அந்த ஏக்கத்தை நிவர்த்தி செய்யும் வகையில் ரெஜினா வின்சென்ட் அவர்களின் நட்பு ரஜினிக்கு அமைந்திருந்தது.
ரெஜினாவை அவர் எப்போதும் வாய் நிறைய "அம்மா.... அம்மா...." என்று அழைத்து தாய்ப்பாச ஏக்கத்தை தீர்த்தார். இந்த சூழலில்தான் ரஜினிக்கு, "அன்னை ஓர் ஆலயம்" பட வாய்ப்பு வந்தது. 1978-ல் ரஜினிக்கு சினிமாவில் நடிக்க அட்வான்ஸ் கொடுத்த ஏ.வி.எம். செட்டியாரும், சாண்டோ சின்னப்பா தேவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர்.
அவர்கள் மரணத்துக்கு ரஜினியின் ராசியே காரணம் என்று சில கயவர்கள் மனசாட்சி இல்லாமல் திரை உலகில் அவதூறு பரப்பி இருந்தனர். இது ரஜினி மனதை மிகவும் வேதனைப்படுத்தியது. அதிலும் சாண்டோ சின்னப்பா தேவர் மிகவும் ஆர்வத்துடன் ரஜினியை வைத்து தயாரித்த 'தாய் மீது சத்தியம்' படம் திரைக்கு வரும் முன்பே அவர் மரணம் அடைந்தது, ரஜினியை மேலும் கவலைக்கு உள்ளாக்கி இருந்தது.
எனவே ரஜினி தாமாக முன் வந்து தேவர் பிலிம்சைத் தொடர்பு கொண்டு, "தேவருக்கு நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். எனவே எப்போது நீங்கள் அழைத்தாலும் படத்தில் நடிக்க தயார்" என்று உறுதி அளித்தார். அந்த சமயத்தில் அரசியலில் தீவிரமாக இருந்த எம்.ஜி.ஆரும், சாண்டோ சின்னப்பா தேவர் பெயரை நிலை நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், இந்தியில் வெற்றிகரமாக ஓடிய "மா" படத்தை "அன்னை ஓர் ஆலயம்" என்ற பெயரில் தயாரிக்க உதவினார்.
இந்த படத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட போது ரஜினி நல்ல நிலையில்தான் இருந்தார். ஆனால் படப்பிடிப்பு தொடங்கிய போது ரஜினி உடல் நலமும், மன நலமும் அதிகம் பாதிக்கப்பட்டு விட்டார். அதற்காக படப்பிடிப்பை நீண்ட நாட்களுக்கு நிறுத்தி வைக்க முடியாத நிலையில் தேவர் பிலிம்ஸ் இருந்தது.
எனவே டாக்டர் செரியனிடம் படக்குழுவினர் பேசினார்கள். ரஜினியை படப்பிடிப்புக்கு அனுப்புங்கள் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு டாக்டர் செரியன், "ரஜினி பூரண குணம் அடையவில்லை. அவரை நடிக்க அனுமதிக்க முடியாது" என்றார்.
படக்குழுவினர் அவரிடம் கெஞ்சினார்கள். "ரஜினியை நாங்கள் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறோம். முதுமலை காட்டுப் பகுதியில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் நாங்கள் சென்னைக்கு அழைத்து வந்து விடுகிறோம்" என்றனர். உடனே டாக்டர் செரியன் போனில் ரெஜினாவை தொடர்பு கொண்டு பேசினார்.
ரஜினியை, "அன்னை ஓர் ஆலயம்" படப் பிடிப்புக்காக முதுமலை காட்டுக்கு அனுப்பலாமா? என்று அவர்கள் இருவரும் விவாதித்தனர். அப்போது ரஜினி "எனக்கு பயமாக இருக்கிறது. நான் அங்கெல்லாம் போக மாட்டேன்" என்றார். அவரை ரெஜினா சமரசம் செய்தார்.
"இதோ பார்...நான் அம்மா இல்லையா... அம்மான்னா கடவுள் மாதிரினு நீ சொல்லுவியே... நான் சொல்கிறேன். தைரியமாகப் போ... நல்லதே நடக்கும்" என்று ரெஜினா உற்சாகம் கொடுத்தார். அதைக் கேட்டு சமரசம் ஆன ரஜினி முதுமலையில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சம்மதித்தார்.
முதுமலை காட்டுக்குள் யானைகள் வசிப்பிடம் பகுதியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. முதலில் ரஜினி நன்கு ஒத்துழைத்தார். ஆனால் தாய்ப் பாசத்துடன் தொடர்புடைய காட்சிகள் படமாக்கப்பட்ட போது ரஜினியின் மன நலத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன.
தாய் யானையிடம் இருந்து குட்டி யானையைப் பிரிக்கும் காட்சிகளில் நடித்தப் போது ரஜினி தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதார். அது போல, "அம்மா நீ சுமந்த பிள்ளை..." என்ற பாடல் காட்சிகளைப் பட மாக்கிய போதும் ரஜினி கதறி, கதறி அழுதார். தாய்ப்பாசம் நினைவுக்கு வந்து அவர் படப்பிடிப்பு என்பதையும் மறந்து கண்ணீர் விட்டார். படப்பிடிப்பு குழுவினர் அதைக் கண்டு நெகிழ்ச்சியில் உறைந்து போய் விட்டனர்.
அந்த காட்சிகளில் நடித்தப் போது ரஜினி மது அருந்தி இருக்கவில்லை. அந்த பாடல் காட்சிகள் முடிந்து, மற்ற காட்சிகள் பட மாக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, உடன் நடித்த ஒரு மூத்த நடிகர் ஏதோ சொல்லி இருக்கிறார். அது ரஜினிக்கு பிடிக்கவில்லை. கோபத்தில் அவர் கண்கள் சிவந்தது.
அடுத்த வினாடி அவர் சித்தம் கலங்கியது. அந்த நடிகரையும், படப்பிடிப்புக் குழுவினரையும் ரஜினி விரட்டி, விரட்டி அடித்தார். அவரை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. படப்பிடிப்பு நடந்த இடம் போர்க்களம் போல மாறி விட்டது.
கதாநாயகி ஸ்ரீபிரியாவும் மற்றவர்களும் ரஜினியை சமரசம் செய்து ஆசுவாசப்படுத்தி தூங்க வைத்தனர். மறுநாள் ரஜினி ஒரு சிறுத்தையுடன் சண்டை போடுவது போன்ற காட்சியை படமாக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்காக வாய் தைக்கப்பட்ட, கால் நகங்கள் அகற்றப்பட்ட ஒரு பெரிய சிறுத்தை கொண்டு வரப்பட்டது. இரண்டு பேர் சேர்ந்துதான் அந்த சிறுத்தையை தூக்க முடியும். அவ்வளவு எடை கொண்டதாக அந்த சிறுத்தை இருந்தது. ஆனால் ரஜினி அந்த சிறுத்தையை தனி நபராக அலாக்காக தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்து விட்டார்.
பயந்து போன படக்குழுவினர் அவரிடம் "டூப்" போட்டு அந்த சண்டை காட்சியை எடுத்து விடலாம் என்றனர். ஆனால் தொழிலில் மிகுந்த பக்தி கொண்ட ரஜினி அதை ஏற்கவில்லை. நானே நடிக்கிறேன் என்று நடித்தார்.
சிறுத்தையுடன் சண்டை போடும் போது அவருக்கு திடீரென கோபம் வந்து விட்டது. அவ்வளவுதான் அந்த சிறுத்தை வாலைப் பிடித்து கட....கட....வென சுற்றி அதை அப்படியே தூக்கி வீசினார். ரஜினி சாதாரணமாக வீசுவது போல இருந்தது. ஆனால் அந்த சிறுத்தை வெகு தூரத்தில் போய் விழுந்து அலறியது. இதைக் கண்டு ஒட்டு மொத்த படக்குழுவும் அதிர்ச்சி அடைந்தது.
அந்த படத்தின் எடிட்டராக இருந்த பாலுராவ் தொடக்க காலத்தில் இருந்தே ரஜினியிடம் பழகி வருபவர். அவர்,ரஜினியிடம் "என்னப்பா... இது" என்றார். அதற்கு ரஜினி.... "என்ன... என்ன..... நான் எதுவும் செய்யவில்லையே..." என்று அப்பாவியாக கேட்டார்.
அப்போது ரஜினியைப் பார்த்து அனைவருக்கும் கண்ணீரும், இரக்கமும் வந்தது. எவ்வளவு பெரிய நடிகர் இப்படி ஆகி விட்டாரே என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர். இதையெல்லாம் கேட்டு நடிகை ஸ்ரீபிரியா மிகவும் வருத்தப்பட்டார்.
ரஜினியை இப்படியே விட்டால், அவரை குணப்படுத்தி மீட்பது கஷ்டம் என்பது ஸ்ரீ பிரியாவுக்கு மட்டுமே முதல் முதலில் தெள்ளத் தெளிவாகப் புரிந்தது. சென்னை திரும்பியதும் அவர் டைரக்டர் பாலச்சந்தரை சந்தித்துப் பேசினார். ரஜினி முழுமையாக குணமாகவில்லை. அவரை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று கண்ணீர் விட்டார்.
ஸ்ரீபிரியா சொன்ன தகவல்களைக் கேட்ட டைரக்டர் பாலச்சந்தருக்கு ரஜினியின் அபாய நிலை புரிந்தது. உடனே அவர் இதுபற்றி நடிகர்கள் நம்பியார், மேஜர் சுந்தரராஜன், நாகேஷ், சிவக்குமார், ஜெய்சங்கர் ஆகியோரிடம் கலந்து பேசி ஆலோசனை நடத்தினார். ரஜினிக்கு உடனடியாக சிகிச்சை அளித்தால் தான் அவரை பழைய நிலைக்கு கொண்டுவர முடியும் என்று அனைவரும் முடிவு செய்தனர்.
இதையடுத்து ரஜினியை வலுக்கட்டாயமாக அழைத்து சென்று டைரக்டர் பாலச்சந்தர் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். ரஜினி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தகவலை வெளியில் யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டனர். டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் ரஜினி 15 நாட்கள் இருந்தார்.
டாக்டர் செரியனின் கண்காணிப்பில் ரஜினி 15 நாட்களும் எந்தவித சிந்தனையும் இல்லாமல் நன்றாக தூங்கி ஓய்வு எடுத்தார். அதன் பலனாக ரஜினி குணம் அடைந்தார்.
80 சதவீதம் அளவுக்கு அவர் தன் இயல்பு நிலைக்கு திரும்பி இருந்தார். இது டைரக்டர் பாலச்சந்தர் மற்றும் தமிழ்த் திரை உலக மூத்த நடிகர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. ரஜினியை தக்க சமயத்தில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்க வைத்து, அவரை குணப்படுத்த காரணமாக, அடித்தளமாக இருந்தது நடிகை ஸ்ரீபிரியா என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் தொடர்ச்சியாக "அன்னை ஓர் ஆலயம்" படப்பிடிப்புகள் முடிந்து 19.10.1979 அன்று படம் வெளியானது. படம் வெற்றிகரமாக ஓடியது. அந்த படத்தில் இளையராஜா இசையில் இடம் பெற்ற "அப்பனே... அப்பனே... பிள்ளையாரப்பனே..." பாடல் சூப்பர் ஹிட் பாடலாக மாறியது. ரஜினிக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
அவர் உடல் நலமும், மன நலமும் பாதிக்கப்பட்ட காலக்கட்டத்தில் எடுக்கப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றதால் ரஜினி இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தார். இந்த படம் தமிழ்நாடு முழுவதும் சிறுவர், சிறுமிகளின் பார்வையை ரஜினி பக்கம் திரும்பச் செய்திருந்தது.
அதாவது ரஜினிக்கு இளம் ரசிகர்களிடம் மட்டுமின்றி சிறுவர்களிடமும் ஏகோபித்த ஆதரவை "அன்னை ஓர் ஆலயம்" படம் உருவாக்கியது. ரஜினியின் கலைப் பயணத்தில் இது மிக முக்கியமான மாற்றமாகும்.
ஆனால் இந்த படத்தில் ரஜினி நடித்து கொண்டிருந்தபோது, "ஆறில் இருந்து அறுபது வரை" படத்திலும் ரஜினி நடித்துக் கொண்டிருந்தார். அந்த படத்தை இயக்கிய எஸ்.பி.முத்துராமனை ரஜினி ஒரு வழி செய்து விட்டார். ரஜினியிடம் சிக்கி எஸ்.பி.முத்துராமன் பட்ட கஷ்டங்களை இனி வரும் நாட்களில் பார்க்கலாம்.
- தைராய்டு மாத்திரை மற்றும் அயோடின் எடுத்தாலே முன்கழுத்துகழலை நோய் வராமல் தடுக்கலாம்.
- பிறந்த குழந்தையின் வளர்ச்சிக்கு பெரும் துணையாக இருப்பது தைராய்டு ஹார்மோன்.
கர்ப்ப காலத்தில் கருக் குழந்தை வளர்ச்சிக்கு தைராய்டு ஹார்மோன் மிக மிக இன்றியமையாதது. முதல் மூன்று மாதங்கள் தாயின் தைராய்டு சுரப்பையே குழந்தை நம்பியுள்ளது. பிறகு சிறிது சிறிதாக கரு குழந்தையின் தைராய்டு சுரப்பி வேலை செய்யத்தொடங்கும்.
கர்ப்பம் உறுதியான உடனேயே தைராய்டு பரிசோதனை செய்ய வேண்டும்.
ராதா தன்னுடைய முதல் கர்ப்பத்தில் இருக்கிறார். மிகவும் சந்தோஷம் திருமணம் ஆகி முதல் வருடத்திலேயே குழந்தை உண்டானது. மருத்துவரிடம் சென்றதும் கர்ப்பத்தை ஸ்கேனில் உறுதி செய்த பின் ரத்த பரிசோதனை செய்தனர்.
ரிப்போர்ட்ஸ் வந்த பிறகு டாக்டர் அவர்களை வரச் சொல்லி இருந்தார்.
அடுத்த நாள் பரிசோதனை முடிவுகள் வாட்ஸ் அப்பில் வந்துவிட்டன. ராதாவும் அவர் கணவரும் பரிசோதனை முடிவுகளை அவர்களே ஒப்பிட்டு பார்த்து எல்லாமே சரியாக இருக்கிறது என்ற முடிவுக்கு வருகிறார்கள்.
ராதாவும் கணவரும் அவர்களே பரிசோதனை முடிவுகளை பார்த்து விட்டதால், அடுத்த ஸ்கேன் இரண்டு வாரம் கழித்து தானே! அப்போது சென்று டாக்டரை பார்க்கலாம் என்று ஒத்திப்போட்டனர். இரண்டு வாரம் கழித்து மருத்துவரிடம் சென்றனர். ராதாவின் கணவர் " டாக்டர்! ரிசல்ட் எல்லாவற்றையும் நானே பார்த்து விட்டேன். எல்லாமே சரியாகத்தான் இருக்கிறது. நீங்களும் அதை ஒப்புக்கொள்வீர்கள் "என்று நம்புகிறேன்" என்று கூறினார்.
டாக்டர் "மிகவும் வருத்தமாக இருக்கிறது படித்தவர்களே இவ்வாறு செய்கிறீர்கள்! கர்ப்ப காலத்தில் எடுக்கப்படும் ரத்த அளவுகள் முற்றிலும் மாறுபட்டிருக்கும். நீங்கள் பார்க்கும் போது எல்லாம் நார்மல் போல தெரிந்தாலும் இவருக்கு தைராய்டு குறைபாடு உள்ளது. கட்டாயம் தைராய்டு மாத்திரை எடுக்க வேண்டும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை கட்டாயம் தைராய்டு பரிசோதனை செய்ய வேண்டும். பிரசவமான பிறகு மீண்டும் தைராய்டு டெஸ்ட் செய்துவிட்டு தேவைப்பட்டால் தொடரலாம். இல்லை என்றால் நிறுத்திக் கொள்ளலாம் என்று கூறினார்.

ஜெயஸ்ரீ சர்மா
டி.எஸ்.ஹெச் சாதாரண ஒருவருக்கு இருப்பதை விட பாதி அளவு தான் கர்ப்பிணிகளுக்கு இருக்க வேண்டும். அந்த அளவுக்கு கர்ப்ப காலத்தில் பரிசோதனை முடிவுகள் மாறுபடும்.
எனவே கர்ப்பகாலத்தில் லேபில் கொடுக்கப்படும் ரிசல்டுகளை பார்த்துவிட்டு நீங்களாகவே முடிவு செய்ய வேண்டாம்.
பிறந்த குழந்தைகளுக்கு வரும் தைராய்டு குறைபாடு
பிறந்த குழந்தையின் வளர்ச்சிக்கு பெரும் துணையாக இருப்பது தைராய்டு ஹார்மோன். அதனால் தான் பிறந்த குழந்தைகளுக்கு தைராய்டு பரிசோதனை செய்யப்படுகிறது. பரம்பரை நோயாக ஒரு சில குழந்தைகளுக்கு பிறந்த உடனேயே தைராய்டு குறைபாடு ஏற்படலாம். இதனால் குழந்தையின் அடுத்தடுத்த வளர்ச்சி படிகளான, 'முகம் பார்த்து சிரிப்பது, குப்புற விழுவது, தவழுவது, உட்காருவது, நிற்பது, நடப்பது, வார்த்தைகளை பேசுவது, என்று எல்லாவற்றிலும் தாமதமாகலாம். எனவே பிறந்த குழந்தைகளுக்கு செய்யப்படக்கூடிய முக்கியமான பரிசோதனைகளில் தைராய்டும் ஒன்று.
மெனோபாஸில் வரும் தைராய்டு நோய்
மெனோபாஸ் (மாதவிலக்கு நின்று போகுதல்).அந்த நேரத்திலும் தைராய்டு சுரப்பில் மாற்றம் ஏற்படும். தைராய்டு குறைபாடு ஏற்படும். அதனால் மாதவிலக்கு நின்றவர்கள் ஒருமுறை மருத்துவரிடம் சென்று உடலை முழுமையாக பரிசோதித்து கொள்வது நல்லது. குறைவான சுரப்பு உள்ளவர்கள் தைராய்டு மாத்திரை எடுத்துக் கொண்டால் மனோபாஸ் காலத்தில் வரும் பல பிரச்சனைகளுக்கு அது தீர்வாக இருக்கலாம்.
முன் கழுத்து கழலை கட்டி (காய்ட்டர்) எப்படி வருகிறது?
அயோடின் சத்து குறைபாடு அல்லது தைராய்டு ஹார்மோன் குறைபாட்டால், தைராய்டு சுரப்பி அதிகமாக சுரக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகிறது. தொடர்ந்து தலைமை சுரப்பியிலிருந்து வரும் "தைராய்டு தூண்டி ஹார்மோன்" தைராய்டு சுரப்பியை மேலும் மேலும் வளரச் செய்து தேவையான அளவு தைராய்டு சுரக்கும்படி கட்டளை இடுகிறது. அதனால் கழுத்தில் தைராய்டு கட்டி காயிட்டர் உருவாகிறது. தைராய்டு மாத்திரை மற்றும் அயோடின் எடுத்தாலே முன்கழுத்துகழலை நோய் வராமல் தடுக்கலாம்.
தைராய்டு இருப்பவர்கள்என்னென்ன உணவுகளை சாப்பிடக்கூடாது? எது சாப்பிடலாம்?
பொதுவாக எல்லோரும் நினைப்பது தைராய்டு வந்து விட்டாலே பெரிய பட்டியலிட்டு இந்த காயெல்லாம் சாப்பிடக்கூடாது என்று.ஆனால் உண்மையில் அப்படி அந்த பட்டியலில் எந்த காயும் இல்லை. ஒரு சில க்ரூஸிபிரஸ் என்று சொல்லக்கூடிய காய் வகைகளை பச்சையாக உண்ணுவது தைராய்டுக்கு ஏற்றதல்ல. எடுத்துக்காட்டாக காலிபிளவர் முட்டைக்கோஸ், புரோக்கலி மற்றும் சோயா உணவுகள். இவற்றை சமைத்து சாப்பிடலாம். இது தவிர எந்த விதமான கடினமான உணவு பத்தியமும் தைராய்டுக்கு தேவை இல்லை.
கடல் சார்ந்த உணவுகளில் அயோடின் இருப்பதால் கடற்கரை பகுதிகளில் இருப்பவர்களுக்கு தைராய்டு நோய் வெகு அரிதாகவே வருகிறது. கடற்கரையை விட்டு விலகி இருப்பவர்களுக்கு முக்கியமாக பாலைவனப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தைராய்டு நோய் அதிகம் வரும். ஒரு சில பாறை உப்புகளில் அயோடின் சத்து இருந்தாலும் மலைப்பகுதியில் வசிப்பவர்களுக்கும் தைராய்டு நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
அதனால்தான் அரசு தைராய்டு சத்தை உப்பில் ஏற்றி உண்ண வேண்டும் என்பதை கட்டாயப்படுத்தி உள்ளது. மேலும் மகாராஷ்டிரா, ராஜஸ்தான் பகுதிகளில் நெற்றியில் வைக்க அயோடின் சத்து கலந்த பொட்டுகள் அரசால் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன. அது நெடு நேரம் நெற்றியில் ஒட்டியிருக்கும்போது பெண்களுக்கு தைராய்டு நோய் வருவது தவிர்க்கப்படுகிறது.
பெரும்பாலும் வெகு அரிதாகவே ஏற்படும். மீன் மற்றும் கடல்பாசிகளில் அயோடின் சத்து நிறைந்திருப்பதால் கடல் சார்ந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அயோடின் குறைபாட்டால் வரும் தைராய்டு வருவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு மற்றும் பால் பொருட்களிலும் அயோடின் சத்து நிறைந்துள்ளது.
தைராய்டு மாத்திரையின் பக்க விளைவுகள் என்ன?
தைராய்டு மாத்திரைக்கு பெரியதாக ஒன்றும் பக்கவிளைவுகள் இல்லை. ஆனால் 6 மாதங்களுக்கு ஒரு முறையாவது தைராய்டு ரத்த பரிசோதனை செய்து மருத்துவரிடம் காண்பித்து மாத்திரையின் அளவு சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
வாட்ஸ்அப்: 8925764148
- உலகம் முழுவதும் செல்லுபடியாகும் பணமாக கிரிப்டோகரன்ஸிகள் உள்ளன.
- வெளிநாடுகளில் இதற்காக ஏடிஎம் இயந்திரங்கள் இருக்கின்றன.
மாலைமலர் வாசகர்களுக்கு அன்பார்ந்த வணக்கங்கள். செல்வம் என்னும் சிம்மாசனத்துக்கு ஆண், பெண், கறுப்பு, சிவப்பு போன்ற எந்தப் பாகுபாடும் இல்லை. ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி தன்னைத் தேடி வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு இடம் கொடுக்க அது தயாராகவே இருக்கிறது. அந்தக் கடல்களையும், மலைகளையும் ஒவ்வொன்றாகத் தாண்டி வருகிறோம். நமக்காகத் திறந்திருக்கும் பலவிதமான முதலீட்டுக் கதவுகளைக் காணும் பாதையின் முடிவில் இருக்கிறோம். இந்த வாரம் வங்கிகள் சென்றடையாத சிறு ஊர்களில் வசிக்கும் மக்களுக்குக் கூட சேமிப்பு மற்றும் கடன் வசதிகளை ஒன்றாகத் தரும் சிட்பண்டுகள் பற்றியும், உலகில் புதிதாக முளைத்து அனைத்து இளைஞர்களின் மனதிலும் குடியிருக்கும் கிரிப்டோ கரன்ஸி பற்றியும் பார்க்கலாம்.
சிட்பண்டுகள் சாதாரணக் குடும்பஸ்தர் முதல் பெரும் வியாபாரிகள் வரை அனைவருக்கும் பேருதவியாக உள்ளது. பதிவு செய்யப்பட்ட சிட்பண்டுகள், பதிவு செய்யாமல் நடத்தப்படும் சிட்பண்டுகள் தவிர உறவினர்/ நண்பர்கள் என பத்து பேர் சேர்ந்தால் உடனே ஒரு சீட்டுக் குழு ஆரம்பிப்பதும் நடக்கிறது. நகைச் சீட்டு, தீபாவளிச் சீட்டு என்று பல வடிவங்களில் இது வலம் வருகிறது. மாதம் ஒரு முறை மதிய நேரங்களில் சந்தித்து விளையாட்டுக்கள், உரையாடல்களுடன் பார்ட்டிகள் நடத்தும் சில பெண்கள் சீட்டுக் குழுவையும் நடத்துகின்றனர். டிஜிடலைசேஷனின் வருகைக்குப் பின் ஆன்லைனிலும் சீட்டுக் குழு நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு சீட்டுக் குழுவுக்கும் ஒரு நடத்துனர் இருப்பார். 50 உறுப்பினர்கள், 50 மாதங்கள் வரை ஒவ்வொரு மாதமும் ரூ.1000/ கட்டிவருவதை ரூ.50000/ சீட்டு என்பார்கள். முதல் மாதம் ஒருவர் சீட்டை ரூ. 45000/க்கு ஏலம் எடுத்தால், மீதி இருக்கும் ரூ.5000/ குழு உறுப்பினர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும். 5% அளவு கமிஷனை சீட்டு எடுத்தவர், நடத்துனருக்குத் தரவேண்டும். இது ஏலச்சீட்டு எனப்படும். குலுக்கல் முறையிலும் இது நடத்தப்படுகிறது.
இவை சிட்பண்ட்ஸ் ஆக்ட் 1982வின் கீழ் முறைப்படுத்தப்படுகின்றன. கேரளாவிலும், கர்நாடகாவிலும் மாநில அரசே சிட்பண்ட் நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி வருகின்றது. மார்கதரிசி, ஸ்ரிராம் க்ரூப், முத்தூட், பாலுசேரி போன்ற தனியார் நிறுவனங்களும் இதில் பெயர் பெற்றுள்ளன. அதிக மதிப்புள்ள சீட்டுக்களில் பணம் எடுக்கும்போது, தங்கம், நிலம் என்று எதையாவது அடமானமாக வைக்கவேண்டி இருக்கும். ஹைதராபாதில் உள்ள மாடல் சிட் கார்பரேஷன் நடத்தும் ரூ. ஒரு கோடி வரை உள்ள சீட்டுக்களில் நிறுவனங்கள் மட்டுமே பங்குபெறுகின்றன.
தனியார் சேர்ந்து நடத்தும் சீட்டுக் குழுக்களில் ரிஸ்க் அதிகம். சீட்டு நடத்தும் நபர், வீடு, வாசல் என்று வசதியாகவே இருந்தாலும், பணம் இல்லை என்று கைவிரித்தால் நம்மால் என்ன செய்ய முடியும்? சிலர் சீட்டு நடத்துபவருக்கு உதவியாக அக்கம்பக்கத்தில் தவணைப் பணம் வசூல் செய்து கொடுக்கிறார்கள். சரோஜா என்ற ஒரு பெண் தீபாவளிச் சீட்டு நடத்துபவருக்கு உதவி வந்தாள். மொத்தமாக 50 குடும்பங்களில் இருந்து மாதாமாதம் தலா ரூ.1000/ வசூல் செய்து, அவரிடம் கொண்டு தருவாள். தீபாவளியின் போது, பலசரக்கு, பட்டாசு, எவர்ஸில்வர் பாத்திரங்கள், துணிமணி என்று ஒவ்வொருவருக்கும் 15000/ பெறக்கூடிய பொருட்கள் தருவதாகப் பேச்சு.
தீபாவளி வந்தது. சீட்டு நடத்தியவர் சரோஜாவிடம் ஏழரை லட்சத்திற்கு பதில் நான்கு லட்ச ரூபாய் மட்டும் கொடுத்து, "எனக்குப் பெரிய நஷ்டம் வந்துவிட்டது. போலீஸில் வேறு என்னைத் தேடுகிறார்கள். இதை வைத்து சமாளி. நான் பிறகு வந்து மீதியைத் தருகிறேன்" என்று கூறிவிட்டுத் தலைமறைவாகிவிட்டார். திடீரென சீட்டு நடத்துபவர் தலைமறைவாகி விட்டால், ஏமாந்தவர்களின் கோபம் அவருக்கு உதவியாக வசூல் செய்து தந்தவர்கள் மீதுதானே பாயும்? அந்த 50 குடும்பங்களின் கோபத்தை சமாளிப்பதற்குள் சரோஜா பட்ட பாடு! தலையை அடகு வைப்பது ஒன்றுதான் பாக்கி! இப்படி சில மக்கள் பாதிக்கப்படுவதும் உண்டு.

சுந்தரி ஜகதீசன்
நகைச் சீட்டும் ஏமாற்றம் தரக்கூடியதுதான் என்று சமீப காலத்தில் சில நம்பகமான நகைக் கடைகளே காட்டி விட்டன. வட இந்தியாவில் நடைபெற்ற சாரதா ஊழல், ரோஸ்வேலி ஊழல் போன்ற பிரமாண்டமான ஏமாற்றுத் திட்டங்களால், பதிவு செய்யப்பட்ட சிட்பண்டுகள் மீது கூட சந்தேக நிழல் விழுகிறது.
மக்கள் உணராத ஒரு விஷயம் என்னவென்றால் சிட்பண்ட்கள் தரும் வட்டி வருமானம் 6.30% மாத்திரமே. ஏனெனில் நடத்துனருக்குத் தரவேண்டிய கமிஷன் ஒரு 5 சதவிகிதத்தை விழுங்கிவிடுகிறது. சிட்பண்ட், கடன் பெறுவதற்கு நல்ல வழி என்று சிலர் எண்ணுகிறார்கள். ஆனால் இங்கு கடனுக்கான வட்டியைக் கணக்கிட்டால் சுமார் 22 சதவிகிதமாக இருக்கிறது.
அப்படியானால் சீட்டுக் குழுக்களால் என்னதான் நன்மை? அவசரத்துக்கு பணம் தேவைப்படுபவர்களுக்கும், வங்கியை விட சிறிது அதிக வட்டி எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கும் சிட்பண்ட் உகந்ததாக உள்ளது. மாதாமாதம் ஒரு தொகையைச் சேமிக்கும் ஒழுக்கத்தை இது கற்றுத் தருகிறது. சிறு கடைக்காரர்கள், வியாபாரிகள் போன்றவர்களிடம் தினம் ரூ. ஐம்பது, நூறு என்று வசூலித்து, அவர்கள் மொத்தமாக சேமிக்க உதவும் சீட்டுக் குழுக்களும் உள்ளன. இதனால் அந்த வியாபாரிகள் தினந்தோறும் வங்கிகளுக்குச் சென்று பணம் கட்டுவதற்கான சிரமம் குறைகிறது.
சீட்டை நடத்துபவர் நேர்மையானவராக இருந்தால் மட்டும் போதாது; சீட்டுக் கட்டுபவர்களும் கட்டுப்பாட்டுடன் ஒழுங்காகத் திருப்பிக் கட்டுபவர்களாக இருக்க வேண்டும். அதனால் இதில் ரிஸ்க் அதிகம். ஆகவே பாலுசேரி, ஸ்ரீராம் சிட்பண்ட் போன்று பல வருடங்களாக வெற்றிகரமாக சீட்டுத் தொழில் நடத்திவரும் கம்பெனிகளில் சீட்டு சேர்வது உத்தமம்.
கிரிப்டோ கரன்சி
நண்பர் ஒருவரின் 24 வயது மகன் "புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கிறேன். கிரிப்டோ அக்கவுன்ட் ஒன்று ஆரம்பித்து விட்டேன். வேறெங்கு முதலீடு செய்யலாம்?" என்று கேட்டபோதுதான் கிரிப்டோ கரன்சி எவ்வளவு தூரம் இளைஞர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறது என்று தெரியவந்தது. உலக அளவில் அதிகக் கிரிப்டோ கரன்ஸி வாங்குவதில் வியட்நாமுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது.
ஆனால் ரிசர்வ் வங்கியும், நிதி அமைச்சரகமும் ஒரு விஷயத்தில் உறுதியாக இருக்கின்றன – "இந்தியாவில் அரசு அல்லாத தனி நபர் கிரிப்டோ கரன்ஸி செல்லாது" என்பதே அது. இதைக் கேட்ட பல இளம் முதலீட்டாளர்கள் "நாங்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டியதுதான்" என்று கொதிக்கிறார்கள். நாட்டை விட்டுக் கூட வெளியேறும் அளவுக்கு அந்த கிரிப்டோ கரன்ஸியில் என்னதான் இருக்கிறது?
அரசாங்கத்தால் தயாரிக்கப்படும் பணம், வங்கிக் கணக்குகள் மூலமும், க்ரெடிட் கார்ட்/டெபிட் கார்ட்/யுபிஐ மூலமும் பரிமாறிக் கொள்ளப்படுகின்றது. அரசாங்கங்களின் தலையீடு பிடிக்காத சுதந்திர மனிதர்கள் கண்டு பிடித்ததே கிரிப்டோகரன்ஸி. டாலர், பவுண்ட், ரூபாய் போன்றவை அந்தந்த நாடுகளில் மட்டுமே செல்லுபடியாகும். ஆனால் உலகம் முழுவதும் செல்லுபடியாகும் பணமாக கிரிப்டோகரன்ஸிகள் உள்ளன.
2009இல் சடோஷி நகமோடோ என்ற முகம் தெரியாத மனிதரால் பிட்காயின் என்னும் கரன்ஸி முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. கிரிப்டோ ஒரு டிஜிட்டல் கரன்ஸி; அதாவது அதை நாம் தொட்டுப்பார்க்க இயலாது. இவை ப்ளாக்செயின் என்ற டெக்னாலஜி மூலம் இணையதள பரிவர்த்தனைக்காக தயாரிக்கப்படுபவை. கிரிப்டோ கரன்ஸியில் டெதர், போல்காடாட், லைட் காயின், எதீரியம் என்று சுமார் 6700 வகை உண்டு.
கிரிப்டோகாயினை வாங்க வேண்டும், விற்க வேண்டும் என்றால் கிரிப்டோகாயின் இணையதளத்தில் கணக்கு இருக்க வேண்டும். இந்த இணையதளங்களில் மட்டுமே கிரிப்டோகாயினை வாங்கவும், விற்கவும் முடியும். இந்த இணையதளங்களில் கணக்கு வைத்துக் கொள்ள எந்தக் கட்டணமும் இல்லை. வெளிநாடுகளில் இதற்காக ஏடிஎம் இயந்திரங்கள் இருக்கின்றன. டெபிட் கார்டு வசதி கூட உண்டு. ஆதலால் ஆன்லைன் ஷாப்பிங் செய்ய பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
முதலீட்டு வகைகளில் ஒன்றாக மாறி வரும் இவற்றை வாங்குவதில் பலரும் ஆர்வம் காட்டுவதற்குக் காரணங்கள் உண்டு. இன்று பணவீக்கத்தில் இருந்து காக்கும் கருவியாக இருப்பவை தங்கமும், கிரிப்டோகரன்ஸியுமே. கள்ள நோட்டு அடிப்பது போல கள்ள கிரிப்டோகரன்ஸிகளை தயாரிக்க முடியாது. ஆனால் கிரிப்டோகரன்ஸியின் கோடிங் முறை தெரிந்தவர்கள் இவற்றைத் தயாரிக்க முடியும். எத்தனை கிரிப்டோகாயின்கள் தயாரிக்கலாம் என்பதற்கு வரம்பு இருப்பதால் இவை எதிர்காலத்தில் அதிக விலையேற்றம் காணும்.
ஆனால் எந்த அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழும் இந்த கிரிப்டோ கரன்ஸிகள் வருவதில்லை என்பதால் மாபியாக்கள், போதை மருந்து வியாபாரிகள், ஆள் கடத்தல் அடியாட்கள் போன்றவர்களின் அண்டர்கிரௌண்ட் ஆட்டங்களுக்கு உதவுவதாக சந்தேகிக்கப்படுகிறது. பரிவர்த்தனைகள் முகமற்றவை என்பதால் இதனை யார் வாங்குகிறார்கள், தனியாரா, நிறுவனங்களா போன்ற எதுவும் யாருக்கும் தெரியாது.
கிரிப்டோவின் மதிப்பு ஏன் ஏறுகிறது; ஏன் இறங்குகிறது என்பது யாருக்குமே புரியாத மர்மம். 2011இல் ஒரு டாலராக இருந்த பிட்காயினின் விலை பல ஏற்ற இறக்கங்களுக்குப் பின் 2025இல் 112000 டாலரைத் தொட்டு இறங்கியது. இதன் மதிப்பு தாறுமாறாக ஏறி இறங்குவதால் இதை கரன்ஸியாக பயன்படுத்தாமல் பதுக்குவதையே பலரும் விரும்புகின்றனர். இதனை வைத்திருக்கும் நிறுவனங்களும், விற்பனை செய்யும் தளங்களும் அடிக்கடி சைபர் தாக்குதல்களுக்கு உள்ளாவதால், முதலீட்டாளர்கள் போட்ட முதலை வெளியே எடுப்பதில் சிரமம் உள்ளது. உதாரணமாக வாசிர் எக்ஸ் தளத்தில் முதலீடு செய்தவர்கள் இன்றுவரை பணத்தை வெளியே எடுக்கமுடியாமல் தவித்துவருகிறார்கள். இந்தியாவில் சிறு ஊர்களில் பொதுமக்களின் அறியாமையைப் பயன்படுத்தி, கிரிப்டோ வியாபாரம், கிரிப்டோ சிட்பண்ட் என்று பலவழிகளில் ஏமாற்று நடக்கிறது.
கிரிப்டோ எதிர்காலத்திற்கான கரன்ஸி. பின்னொரு காலத்தில் இது பங்குச் சந்தை போன்று பலராலும் விரும்பப்படும் முதலீட்டு வழியாக உருவாகலாம். ஆனால் இன்றையத் தேதியில் இது ஒரு நிலையற்ற முதலீடாக விளங்குவதால் சிறு முதலீட்டாளர்கள் அவசரமாக இதில் இறங்காமல் பொறுமை காப்பது நல்லது. நீங்கள் சீட்டு கட்டியதுண்டா? கிரிப்டோகரன்சி வாங்கியதுண்டா? உங்கள் அனுபவம் என்ன?






