என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    புத்தாண்டில் மாற்றம் பிறக்கட்டும்!- மருத்துவம் அறிவோம்- 116
    X

    புத்தாண்டில் மாற்றம் பிறக்கட்டும்!- மருத்துவம் அறிவோம்- 116

    • கடன் இல்லாமல் வாழ்வதே மிகப்பெரிய பணக்காரராக இருப்பதாகும்.
    • மது, புகை வேண்டவே வேண்டாம்.

    2026-ம் ஆண்டினை நாம் நெருங்கி வருகின்றோம். ஒரு பேப்பர் எடுத்து 2025-ல் என்ன வெல்லாம் செய்தீர்கள் என 15 நிமிடங்கள் உங்களுக்காக செலவழித்து எழுதிப் பாருங்கள். அநேகருக்கு சில செய்திகளே இருக்கும். இந்த ஊருக்குப் போனேன், கோவிலுக்கு போனேன். டிரஸ் வாங்கினேன் என சிலரும் பல வகையான வேதனைகளை பகிரும் சிலரும் இருப்பர். மற்றும் சிலர் காலை முதல் இரவு வரை வேலை மட்டும் தான் இருந்தது என்பர். இப்படி பல பிரிவுகளில் சொல்லலாம்.

    ஆனால் முன்னேற்றத்தினை அடைந்ததாக சிலரே கூறுவர். அநேகர் செல்போன், சீரியல், யூடியூப் என அன்றாட நேரத்தினை உபயோகமற்று செலவழித்து இருப்பர். பரவாயில்லை. எதுவும் குற்றம் இல்லை. ஆனால் கிடைக்கும் காலத்தினை நமக்காகவும், நம் ஆரோக்கியத்திற்காகவும், நம் குடும்பத்திற்காகவும் செலவழிக்கலாமே என்ற முறையில் எழுத முற்படுவதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.முயன்று பார்ப்போமே.

    * உங்களுடைய உற்ற நண்பர் யாராக இருக்க வேண்டும் தெரியுமா? நீங்கள் தான். நீங்கள் மட்டும்தான். உங்களுக்கு உற்ற நண்பராக நீங்கள் மட்டுமே இருக்க வேண்டும்.

    * உங்கள் வாதங்கள் ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும். மாறாக சண்டை, விரோதம் வளர்ப்பதாக இருக்க வேண்டாம்.

    * கணவன்-மனைவி, பிள்ளைகள், நல்ல உறவுகள் போன்ற உறவுகளை பொது இடத்தில் மட்டம் தட்டி பேசக் கூடாது. ஆறாத காயத்தினை இது ஏற்படுத்தும்.

    * சிலரை பற்றி குறைவான எண்ணங்களில் மட்டுமே மூழ்க வேண்டாம். இது மனதில் ஆழப்பதிந்து அதனை நீக்குவது கடினமாகி விடும்.

    * உங்கள் குழந்தைகளுடன் கட்டாயம் தினமும் பேச வேண்டும். நேரம் செலவழிக்க வேண்டும். சிறு குழந்தைகள் என்றால் விளையாட வேண்டும்.

    * நம் குழந்தைகள் நம் வேலையினை விட முக்கியம்தான்.

    * தினமும் உங்கள் நிதி நிலைமையினை வரவு செலவினை கணக்கு பார்க்க வேண்டும். இது நம்மை அறியாமல் எத்தனை தண்ட செலவினை தினமும் செய்கின்றோம் என்பதனைக் காட்டும்.

    * முடிந்த வரை கடன்களை தீர்த்து விடுங்கள். கடன் இல்லாமல் வாழ்வதே மிகப்பெரிய பணக்காரராக இருப்பதாகும்.

    * ஏதாவது சிறு முயற்சி செய்து சிறு தொழில் செய்து வருமானத்தினை கூட்ட முடியுமா? என்று யோசித்து செயல்படுங்கள்.

    * வயதான காலத்திற்காக இன்றே சேமிக்க ஆரம்பிக்க வேண்டும்.

    * வீட்டில் இருந்தே வேலை செய்ய முடிந்தால் நேரமும், பணமும் மிச்சமாகும்.

    * எந்த ஒரு வேலையிலும் திறமையை கூட்டிக் கொள்ளுங்கள்.

    * விழிப்புணர்வு ஒவ்வொரு நொடியும் இருக்க வேண்டும்.

    * இந்த வாழ்வில் நாம் என்ன பெற வேண்டும் என்பதில் தெளிவு தேவை.

    * 3 முதல் 6 வரை மாத வருமானம் இல்லாவிடினும் வீட்டை நடத்தும் அளவு தனி சேமிப்பு இருக்க வேண்டும்.

    * அன்றாடம் 10 நிமிடங்களாவது தியானம் செய்வது அவசியம்.

    * வாய் விட்டு சிரியுங்கள்.

    * எந்த செயலிலும் முறையாகவும், ஒழுக்கமாகவும் இருங்கள்.

    * அன்றைய நாளில் எது முக்கியமோ அதனை முதலில் செய்யுங்கள்.

    உடல் நலம்- சாப்பிடுவதற்கு 10 நிமிடம் முன்பு உணவைப் பற்றி யோசித்தால் சத்தான உணவு கிடைக்காது. கிடைக்கும் எதனையோ கொண்டு வயிறு நிரப்பினால் ஆரோக்கியம் கெடும். முதல் நாளே மறுநாளைக்கான உணவு பட்டியலை தயார் செய்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். உடல் நலம் இதிலேயே 50 சதவீதம் முன்னேற்றம் பெறும்.

    * ஒருமுறை வறுத்த, பொரித்த உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது 24 மணி நேரத்திற்கு வயிறு சங்கடமாகவே உணர்வீர்கள். 24 மணி நேரம் வறுத்த, பொரித்த, மசாலா பொருட்களை தவிருங்கள். நீங்கள் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கின்றீர்கள் என்று உணர்வீர்கள்.

    * உடற்பயிற்சி என்பதற்கு மனம் போனபடி லீவு கொடுக்க வேண்டாமே. பால், பால் சார்ந்த உணவுகள் அளவோடு இருந்தால் ஜீரணம் சீராக இருக்கும்.

    * ஏதாவது ஒன்றினை விட்டு விடலாமே- அதிக காபி, டீ, மது போன்றவற்றை விட்டு விடலாமே.

    * உடற்பயிற்சி செய்யுங்கள். எளிதாக ஒரு மாதத்தில் உங்கள் உடல் ஆரோக்கியத்தினை மேம்படச் செய்யலாம்.

    * தினமும் சற்று வியர்க்கும் அளவு உடற்பயிற்சி செய்யுங்கள்.

    * மது, புகை வேண்டவே வேண்டாம்.

    * செல்போன் சார்ஜ் ஆவது உங்கள் படுக்கையில் இருந்து தள்ளி இருக்கட்டும்.

    * ஒரு ரூமிலேயே அடைந்து கிடக்க வேண்டாம்.

    * ஒவ்வொரு உணவிலும் நார்சத்து, புரதம் இல்லாமல் உண்ணாதீர்கள்.

    * அன்றாடம் இறைவனுக்கு, பெற்றோர்களுக்கு நன்றி சொல்லுங்கள்.

    * உங்கள் நாளை தினமும் காலையில் வரையறுத்து செயல்படுங்கள்.

    கமலி ஸ்ரீபால்

    * சுத்தமாக, நேர்த்தியாக உடை அணிபவர் மதிக்கப் படுகின்றார்.

    * எனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று இல்லாமல் எளிமையாய் இருந்தால் அவர் மதிக்கப்படுவார்.

    * வெற்றி இருக்கும் இடத்திலேயே கூட்டம் கூடும்.

    * எதிலும் அதிக ஆசை வைக்காது இருப்பது ஒருவரின் மரியாதையினை உயர்த்தும்.

    * எங்கோ, யாரோ- மருத்துவ மனையில் இருக்கும் தன் உறவின் உயிருக்காக கடும் பிரார்த்தனை செய்கின்றனர். அப்படியென்றால் அந்த உயிரில் இருக்கும். அதன் அருமையினை நாம் உணர்ந்து வாழ வேண்டும்.

    * சொன்ன சொல்லை, கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும்.

    * படிப்பை விட முக்கியமானது பண்பு.

    * யாரை பற்றியும் குறை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டாம்.

    * வெதுவெதுப்பான நீரில் ஒரு முறை நாள் ஒன்றுக்கு குளிக்கலாம்.

    * 2 லிட்டர் நீர் அருந்த வேண்டும் என்பது நமக்குத் தெரிந்தது தானே.

    * 7000 முதல் 10000 அடிகள் அன்றாடம் உங்கள் நடையில் இருக்க வேண்டும்.

    * 10 நிமிடமாவது சூரிய ஒளி உடலில் பட வேண்டும். இரவு 9 மணிக்கு தூங்கச் செல்கின்றீர்களா? நீங்கள் இளமையாய் இருப்பீர்கள்.

    * 10 மணிக்கு தூங்கச் சென்றால் மூளை செயல்பாடு பாதிக்காது. சீராக இருக்கும்.

    * 11 மணிக்கு தூங்கச் செல்பவர்களுக்கு முடி கொத்து கொத்தாய் கொட்டும்.

    * 12 மணிக்கு தூங்கச் செல்பவர்களுக்கு எடை கூடுகின்றது.

    * 1 மணிக்கு தூங்கச் செல்பவர்கள் அன்றாடம் சிறிது சிறிதாக நஞ்சு அருந்துவதற்கு சமம்.

    நாம் எப்படி இருக்கின்றோம் என்பதனை நாமே அறிந்து கொள்ளலாம்.

    * மிக அதிக நேரம் தூங்குபவர்களுக்கு மனதினுள் ஏதோ துக்கம், கவலை இருக்கும்.

    * சின்ன ஜோக்குக்காக விழுந்து விழுந்து அதிகம் சிரிப்பவர்கள் மனதினுள் தனித்து இருக்கின்றார்கள்.

    * டி.வி., சினிமா பார்த்து மற்றும் நிகழும் சிறு செயல்களுக்காக அழுது விடுபவர்கள் உள்ளத்தில் மிகவும் தூய்மையானவராக இருப்பர்.

    * முறையற்று மிக அதிகமாகவோ, மிகக் குறைவாகவோ சாப்பிடுபவர்கள் ஏதோ மன அழுத்தத்தில் இருக்கின்றார்கள்.

    * சிறு நிகழ்வுகளில் சுணங்கி விடுபவர்கள் மனதில் அன்புக்காக ஏங்குகின்றனர்.

    * ஒருவரது துன்ப காலத்தில் உடன் நிற்பவர் எப்போதும் அவருக்கு உண்மையாக இருப்பவர் ஆவார்.

    இதனை அறிந்தால் நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ளலாமே.

    சிலவற்றினை நாம் கண்டிப்பாய் தவிர்க்க வேண்டும்.

    * உடல் அளவில், மனதளவில், பண அளவில் நீங்கள் பலவீனமாக இருக்கும்போது யாரையும் எதிர்க்கக் கூடாது. நமது பலம் கூடட்டும்.

    * நம்மை நாமே காயப்படுத்திக் கொள்ளக் கூடாது. திட்டிக் கொள்ளக் கூடாது.

    * கண் மூடித்தனமாக யாரையும் முழுமையாய் நம்பக் கூடாது.

    * தவறானவர்களுடன் நட்பினை தொடரவே கூடாது.

    * யாராவது அழுகின்றார்கள் அல்லது சிரிக்க சிரிக்க பேசுகின்றார்கள் என்பதால் எல்லை மீறிய கருணை, எல்லை மீறிய நட்பு வேண்டாம்.

    * யாரிடமும் இரண்டாம் முறையாக கெஞ்சி உதவி கேட்கக் கூடாது. உங்கள் சுய மரியாதை காக்கப்பட வேண்டும்.

    * சோக பாட்டுகளை கேட்பதினை, ரசிப்பதனை தவிருங்கள்.

    சில பழக்கங்கள் ஒருவரை அமைதியாய் கொல்கின்றன.

    * போதுமான தூக்கமின்மை என்பது தொடர்ந்து தேவையான அளவு தூக்கம் இல்லாதது.

    * அளவுக்கு அதிகமாக தொடர்ந்து தூங்கும் பொழுது உடலில் அதிக தாக்குதல்கள் நிகழும்.

    * தொடர்ந்து காலை உணவினை தவிர்க்கும் பொழுது,

    * தொடர்ந்து இரவில் மிக காலம் தாழ்த்தி உண்ணும் பொழுது.

    *அதிகம் பதப்படுத்திய உணவுகள், துரித உணவுகள், நொறுக்கு தீனிகள் என ஓயாது உட்கொள்ளும் பொழுது.

    * அதிகம் சர்க்கரை சேர்த்த பானங்களை அருந்தும் பொழுது.

    * அதிக காபி, டீ, மது எடுத்துக் கொள்ளும் பொழுது.

    * தேவையான அளவு அன்றாடம் நீர் எடுத்துக் கொள்ளாத பொழுது.

    * அசையாது 'இடித்த புளி' போல் ஒரே இடத்தில் வெகுநேரம் அமரும் பொழுது.

    * முறையற்று கோணல், மாணலாக அமரும் பழக்கம் கொண்டவராக இருக்கும் பொழுது.

    * ஓய்வில்லாது வேலை செய்யும் பொழுது.

    * உடற்பயிற்சி இல்லாத பொழுது, யோகா பயிற்சி இல்லாத பொழுது.

    * 'ஸ்ட்ரெஸ்' அதிகம் உள்ளவர்களுக்கு

    * விஷ உறவுகள், எதனையும் வெளியில் சொல்லாமல் மனதினுள் புழுங்குபவர்கள்.

    * அஷ்டாவதானி போல் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்பவர்கள்.

    * தனக்கு தானே அழிவுப்பூர்வமாக பேசிக் கொள்பவர்கள்.

    * எதனையும் மிக மிக அதிகமாக யோசிப்பவர்கள்.

    * தனக்கென நேரம் ஒதுக்காத–வர்கள்.

    * எல்லாவற்றிற்கும் 'சரி, சரி' என தலையாட்டி வேலை செய்பவர்கள்.

    * பழைய சோகங்களில் மூழ்கி கிடப்பவர்கள்.

    * பணத்தினை முறையாக கையாளாதவர்கள்.

    * 'பரபர'வென வேகமாக சாப்பிடுபவர்கள்.

    * டாக்டர் பரிசோதனையினை தவிர்ப்பவர்கள்.

    * எரிமலை போல் எப்பொழுதும் கோபமாக இருப்பவர்கள்.

    * ஊர் வம்பு மட்டுமே பேசுபவர்கள்.

    * உணவினை நன்குமென்று விழுங்காதவர்கள்.

    * பிடிக்காத வேலையில் தொடர்ந்து இருப்பவர்கள்.

    * எப்பொழுதும் பயத்தோடு வாழ்வது.

    * சதா ஏதாவது சாப்பிடுவது.

    * முறைப்படி அன்றாட வேலைகளை செய்யாது இருப்பது.

    * நன்றி உணர்வு இல்லாது இருப்பது.

    * ஏதோ வாழ்க்கை என வாழ்வது.

    * மனநலம் இல்லாமல் இருப்பது.

    இவை அனைத்துமே மெதுவாய் ஒருவரை கொல்லும் விஷங்கள். ஆக எத்தனையோ விஷயங்களை நம் வாழ்வில் நாம் மாற்ற வேண்டி உள்ளது. சில நீக்கப்பட வேண்டும். சில உருவாக்கப்பட வேண்டும். இந்த புது வருடத்தில் இவைகளை செயல்படுத்த ஆரம்பிக்கலாமா.

    Next Story
    ×