search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவில் என்ற பெயரில் வனத்தை குப்பை காடாக மாற்றுகிறார்கள்- மதுரை ஐகோர்ட் நீதிபதி வேதனை
    X

    கோவில் என்ற பெயரில் வனத்தை குப்பை காடாக மாற்றுகிறார்கள்- மதுரை ஐகோர்ட் நீதிபதி வேதனை

    • வனப்பகுதிக்குள் 100-க்கும் மேற்பட்ட சட்ட விரோத கோவில்கள் உள்ளன.
    • ஒரு 6 மணி நேரமாவது குறிப்பிட்ட அளவில் பக்தர்களை அனுமதிக்கலாமே? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    மதுரை:

    விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சடையாண்டி, மதுரை ஐகோர்ட்டில் தாக் கல் செய்த மனுவில் கூறியி ருந்ததாவது:-

    சதுரகிரி சுந்தர மகாலிங் கம் சுவாமி மலையில் மேல் உள்ள ஆனந்த வள்ளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா நடை பெறும். நவராத்திரி திரு விழாவில் பக்தர்கள் பங்கேற்க மூன்று நாட்கள் அனுமதி வழங்க விருதுநகர் கலெக்டர், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் காவல்துறையிடம் அனுமதி கோரி மனு கொடுக்கபட்டது. ஆனால் அனுமதி மறுத்துவிட்டனர். எனவே மூன்று நாள் இரவு தங்கி நவராத்திரி விழா கொண்டாட அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

    இந்த மனுவை நீதிபதி புகழேந்தி நேற்று விசாரித்து, அங்கு ஒருநாள் மட்டும் பக்தர்கள் தங்க அனுமதிக்கலாமா? என்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வனத்துறை சார்பாக பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தார்.

    இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலர் திலிப்குமார் ஆஜரானார்.

    வனத்துறை சார்பில் ஆஜ ரான வக்கீல், சாத்தூர் மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளது. புலிகள் சரணாலய பகுதியாகவும் உள்ளதால் பக்தர்களை அனுமதிக்க முடியாது. கடந்த காலங்களில் திருவிழா நேரத்தில் பக்தர்களை அனுமதித்த போது பக்தர்கள் மாற்றுவழியில் வனத்திற்குள் நுழைந்து உணவு சமைத்ததால் வனத்தில் தீ பற்றிய சம்பவம் ஏற்பட்டு வன விலங்குகளுக்கும், மரங்களுக்கும் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டது.

    குறைந்த அளவில் குறிப்பிட்ட நேரத்தில் பக்தர்களை அனுமதிப்பது என்பது இயலாதது. வனப்பகுதிக்குள் 100-க்கும் மேற்பட்ட சட்ட விரோத கோவில்கள் உள் ளன. சதுரகிரி மலைப்பகுதியில் மட்டும் 18 மடங்கள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு உள்ளன. போதிய காவல்துறை பாதுகாப்பு வழங்குவது இல்லை என்று தெரிவித்தார்.

    இதனை பதிவு செய்த நீதிபதி, பக்தர்கள் மற்றும் சாதுக்களின் உணவுர்களை புரிந்து கொண்டு ஒரு நாள் மட்டும் கோவிலுக்கு அனுமதி வழங்க முடியாதா? பக்தர்களை கோவிலில் தங்க அனுமதிக்க வேண்டாம், குறிப்பிட்ட நேரமாவது தரிசனத்திற்கு அனுமதிக்கலாமே? அத்துமீறி செல்பவர்களுக்கு அபராதமும் தண்டனையும் விதிக்கலாமே.

    வனத்துறைக்கு நிறைய பணிகள் இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்கிறேன். இருப்பினும் ஒரு 6 மணி நேரமாவது குறிப்பிட்ட அளவில் பக்தர்களை அனுமதிக்கலாமே? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    பின்னர், கோவிலுக்கு செல்ல அனுமதி வேண்டும் என கேட்பார்கள். அனுமதி கொடுத்தால் வனத்தில் பிளாஸ்டிக் குப்பைகளை மலை போல போட்டுவிட்டு செல்வார்கள். இது தான் வாடிக்கையாக நடக்கிறது.

    அன்னதானம் போடுகிறோம், திருவிழா நடத்துகிறோம் என கூறி பணத்தை வசூல் செய்து கோவில் பெயரை சொல்லி வனத்தை மொத்தமாக குப்பைக்காடாக மாற்றுகிறீர்கள் என்று நீதிபதி வேதனை தெரிவித்தார்.

    மேலும் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை வனப்பகுதியில் அனுமதித்தது எப்படி? என கேள்வி எழுப்பியதுடன், இந்த வழக்கில் மதுரை விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை விசாரணையை நாளை ஒத்திவைத்தார்.

    Next Story
    ×