என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை நீதிமன்றம்"

    • நிகிதா அளித்த நகை திருட்டுப் புகார் முற்றிலும் பொயானது என்பது உறுதி செய்யப்பட்டது.
    • இதுவரை 10-க்கும் மேற்பட்ட காவலர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    திருப்புவனம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில், பொய்ப் புகார் அளித்ததாகக் கூறப்படும் பேராசிரியை நிகிதா வரும் மார்ச் 4-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிகிதாவை நேரில் விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது 9.5 சவரன் நகை காணாமல் போனதாக அஜித்குமார் மீது நிகிதா அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் போலீசாரால் அடித்தே கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்த இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

    இது குறித்து சிபிஐ நடத்திய விசாரணையில், நிகிதா அளித்த நகை திருட்டுப் புகார் முற்றிலும் பொயானது என்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும்நிலையில் இதுவரை 10-க்கும் மேற்பட்ட காவலர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே நிகிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் அஜித்குமாரின் குடும்பத்தினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் நீதிமன்றம் நிகிதாவை ஆஜராக உத்தரவிட்டுள்ளது.  

    • வேறு முறையில் பணியிட மாறுதல் செய்திருந்தால் அதற்கு தடை விதித்தும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    • வேறு வகை பணியிட மாறுதல் செய்யப்பட்டிருந்தால் அதற்கு தடை விதிக்கப்படுகிறது.

    மருத்துவத் துறையில் பணியாற்றும் இளநிலை நிர்வாக அலுவலர்கள் கவுன்சிலிங்கில் மட்டுமே மாறுதல் வழங்க உத்தரவிடகோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

    மருத்துவ அலுவலர்களுக்கான பொது கலந்தாய்வை முறையாக நடத்தாமல் விதி மீறல் நடத்தப்பட்டுள்ளதாகவும், சட்ட விதிகளுக்கு முரணாக பணியிட மாறுதல் செய்யப்பட்டதற்கு தடை கோரி மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை வந்தது.

    விசாரணையின்போது, மருத்துவத்துறையில் இளநிலை நிர்வாக அலுவலர்கள் பணியிட மாறுதல் அனைத்தும் கவுன்சிலிங்கில் மட்டுமே வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    மேலும், பொது கலந்தாய்வில் மாறுதல் வழங்காது வேறு முறையில் பணியிட மாறுதல் செய்திருந்தால் அதற்கு தடை விதித்தும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    வேறு வகை பணியிட மாறுதல் செய்யப்பட்டிருந்தால் அதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    • சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சுந்தரேஸ், ராம சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
    • முடிவில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன் நன்றி கூறினார்.

    மதுரை:

    மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு ரூ.166 கோடியில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்டு-செசன்சு கோர்ட்டு தொடக்க விழா மதுரை மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் இன்று நடந்தது.

    இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி விமானத்தில் சென்னையில் இருந்து மதுரைக்கு இன்று காலை வந்தார். அவரை விமான நிலையத்தில் அமைச்சர்கள், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.

    இதனை தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் இருந்து விழா நடக்கும் மாவட்ட கோர்ட்டு வளாகத்திற்கு காரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார்.

    மேலும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூ, அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், சென்னை மற்றும் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உள்ளிட்டோரும் விழா நடக்கும் இடத்திற்கு வந்தனர்.

    இதையடுத்து விழா தொடங்கியது. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட், மதுரை மாவட்ட கோர்ட்டு கூடுதல் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். விழாவிற்கு தலைமை தாங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்டு மற்றும் செசன்சு கோர்ட்டுகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.

    மயிலாடுதுறை தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டை மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூ தொடங்கி வைத்தார். விழாவில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜா வரவேற்று பேசினார். அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், தலைமை செயலர் இறையன்பு ஆகியோர் பாராட்டி பேசினர்.

    மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூ, அமைச்சர்கள் ரகுபதி, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சுந்தரேஸ், ராம சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன் நன்றி கூறினார்.

    • இருவரும் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
    • இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வந்த நிலையில் சரண்

    மோடி வழக்கில் தேடப்பட்டு வந்த பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதன் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

    பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா ஆகியோர் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

    இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வந்த நிலையில் சரணடைந்தனர்.

    • ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
    • 16 பேரை கொண்ட அவனியாபுரம் ஆலோசனை குழுவில் மனுதாரரும் இணைக்கப்பட்டுள்ளார்.

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் அவனியாபுரத்தில் வருகிற 14-ந்தேதியும், பாலமேட்டில் 15-ந்தேதியும், அலங்காநல்லூரில் 16-ந் தேதியும் நடக்கிறது.

    இதனால், ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

    இந்நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்து குழு அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தமிழ்நாடு அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு போலவே மாவட்ட ஆட்சியர் தலைமையில் தான் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்தது.

    மேலும், 16 பேரை கொண்ட அவனியாபுரம் ஆலோசனை குழுவில் மனுதாரரும் இணைக்கப்பட்டுள்ளார் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    இறுதியில், அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்து குழு அமைத்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

    ×