என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சி.பி.ஐ. விசாரணையில் நடந்தது என்ன? - நிர்மல் குமார் விளக்கம்
- பாதிக்கப்பட்டவர்களை காவல்துறையினர் மிரட்டி வருகின்றனர்.
- கூட்டணி விவகாரத்தில் எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு நேற்று த.வெ.க. தலைவர் விஜய் ஆஜரானார். அவரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
டெல்லியில் சி.பி.ஐ. விசாரணை முடித்துவிட்டு விஜய் சென்னை திரும்பினார்.
இந்நிலையில் சி.பி.ஐ. விசாரணையில் நடந்தது என்ன என்பது தொடர்பாக த.வெ.க. பொதுச் செயலாளர் நிர்மல் குமார் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அடுத்த வாரம் மீண்டும் விஜய் ஆஜராக உள்ளார்.
* எந்த தேதியில் விஜய் மீண்டும் ஆஜர் என்பது தொடர்பாக முடிவு செய்யவில்லை.
* விசாரணை குறித்த தகவல்களை வெளியே சொல்வது மாண்பாக இருக்காது.
* சி.பி.ஐ. விசாரணையில் த.வெ.க. தலைவர் விஜய் தேவையான விளக்கத்தை அளித்திருந்தார்.
* பாதிக்கப்பட்டவர்களை காவல்துறையினர் மிரட்டி வருகின்றனர்.
* ஜன நாயகன் விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் தற்போது கருத்து கூற முடியாது.
* கூட்டணி விவகாரத்தில் எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






