

2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்குமான தேர்தல் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மதுரை மண்டேலா நகரில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் வரவேற்புரை அளித்தார்.
அப்போது அவர்,"உலக நாடுகள் நேசிக்கும் தலைவர், வாராது வந்த மாமணி பிரதமர் நரேந்திர மோடியை வர்வேற்பதாக" குறிப்பிட்டார்.
மேலும் அவர் பேசியதாவது:-
புத்தகங்களை தூக்க வேண்டிய மாணவர்கள் கையில் கஞ்சா இருப்பதற்கு திமுகவின் மோசமான ஆட்சி தான் காரணம்.
உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்க வேண்ஐம் என்பதற்காகவே ஆட்சி நடத்துகிறது திமுக.
சிறுமிகள் முதல் வயது முதிர்ந்த பெண்கள் வரை யாருக்கும் தமிழ்நாட்டில் பாதுகாப்பில்லை.
2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்குமான தேர்தல்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.