என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    த.வெ.க. விருப்ப மனு வினியோகம் தொடங்கியது
    X

    த.வெ.க. விருப்ப மனு வினியோகம் தொடங்கியது

    • த.வெ.க. சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் ரூ.100 மட்டும் செலுத்தி விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம்.
    • பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    சட்டசபை தேர்தலை சந்திக்க த.வெ.க. தீவிரமாகி உள்ளது. தற்போது தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் த.வெ.க. ஈடுபட்டு வருகிறது. அதே நேரத்தில், தேர்தலை தனித்து சந்திப்பதா? கூட்டணி அமைத்து போட்டியிடுவதா? என்று த.வெ.க. முடிவு செய்யாத நிலையில் இருந்து வருகிறது.

    இந்தநிலையில் த.வெ.க. விருப்ப மனு வினியோகம் இன்று தொடங்கியது. த.வெ.க. சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் ரூ.100 மட்டும் செலுத்தி விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம்.

    விருப்ப மனு திருப்பி அளிக்கும்போது பொதுத்தொகுதிக்கு ரூ.10,000 செலுத்த வேண்டும். 14-ந்தேதி வரை விருப்ப மனுக்களை பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம்.

    இதற்கான பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் வாங்கப்பட உள்ளது.

    மனுக்களை பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை வாங்குவதற்காக மாநில நிர்வாகிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×