search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Babul Supriyo"

    மேற்கு வங்காளத்தில் ஓட்டுப்பதிவின்போது ஏற்பட்ட வன்முறையின் போது மத்திய மந்திரி பாபுலால் சுப்ரியோ கார் நொறுக்கப்பட்டது.
    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் கிழக்கு தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக மத்திய மந்திரி பாபுலால் சுப்ரியோ போட்டியிடுகிறார். அவர் அந்த தொகுதிக்கு உட்பட்ட பாரபானி பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு சென்றார். அங்குள்ள ஊழியர்களுடன் அவருக்கு கருத்து மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, வெளியே நின்றிருந்த அவரது காரை திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் அடித்து நொறுக்கினர்.

    இதுபற்றி மத்திய மந்திரி பாபுலால் சுப்ரியோ கூறுகையில், “வாக்காளர்களை ஓட்டுப்போட அனுமதிக்காமல் இருந்தனர். ஓட்டுப்போட அனுமதிக்குமாறு வலியுறுத்தியதற்கு என் கார் தாக்கப்பட்டது” என்றார்.

    பிர்பும் தொகுதியில் துப்ராஜ்புர் பகுதியில், செல்போன்களுடன் வாக்குச்சாவடிக்குள் நுழைய வாக்காளர்களுக்கு மத்திய படையினர் அனுமதி மறுத்தனர். இதனால் அவர்களுடன் வாக்காளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களை கலைக்க பாதுகாப்பு படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதையடுத்து, அந்த வாக்குச்சாவடியில் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
    மேற்கு வங்காளத்தில் இன்று நான்காம்கட்ட பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் மத்திய மந்திரி பாபுல் சுப்ரியோவின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. #BabulSupriyo #Asansolpolls
    கொல்கத்தா:

    பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் 9 மாநிலங்களில் உள்ள 72 மக்களவை தொகுதிகளுக்கு இன்று நான்காம்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள 8 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் உள்ள அசன்சோல் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பாபுல் சுப்ரியோவின் காரை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் தாக்கி சேதப்படுத்தினர்.



    மேலும், பல்வேறு வாக்குச்சாவடிகளில் பாஜக - திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களிடையே வாக்குவாதமும், மோதல்களும் நடந்தன. #BabulSupriyo #Asansolpolls
    மேற்குவங்காளத்தில் பா.ஜ.க.வின் தேர்தல் பிரசார பாடலுக்கு தடைவிதித்து தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. #BJP #ThemeSong #BabulSupriyo #ElectionCommission
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி மேற்கு வங்காள மாநிலத்தில் பா.ஜ.க. தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அம்மாநில ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசை விமர்சிக்கும் வகையில் பாடல் ஒன்றை பயன்படுத்தி பா.ஜ.க.வினர் பிரசாரம் செய்கின்றனர்.

    ‘இனி திரிணாமுல் இருக்காது’ என தொடங்கும் அந்த பாடலை அமீத் சக்ரவர்த்தியை எழுத, பா.ஜ.க. எம்.பி.யும், பாடகருமான பாபுல் சுப்ரியோ இசையமைத்து பாடி உள்ளார்.



    பா.ஜ.க.வினர் தேர்தல் ஆணையத்திடம் முறையாக அனுமதி பெறாமல் இந்த பாடலை பயன்படுத்தி வருவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர்.

    இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து பா.ஜ.க.வினர் இனி அந்த பாடலை பிரசாரத்துக்கு பயன்படுத்த கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

    மேலும் இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் படி பாபுல் சுப்ரியோவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    இதற்கிடையில், பா.ஜ.க.வின் பாடலில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரசை தரக்குறைவாக விமர்சித்ததாக பாபுல் சுப்ரியோ மீது போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. #BJP #ThemeSong #BabulSupriyo #ElectionCommission 
    ×