என் மலர்
நீங்கள் தேடியது "sitaram yechury"
- நாட்டின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
- இந்த விவகாரத்தில், மத்திய நிதி மற்றும் வெளியுறவு அமைச்சகங்களும் சம்பந்தப்பட்டுள்ளன.
கொல்கத்தா :
அதானி குழுமம் பங்குச்சந்தைகளில் மோசடி செய்ததாகவும், கணக்கில் முறைகேடு செய்ததாகவும் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற முதலீ்ட்டு ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. இதைத்தொடர்ந்து, அதானி குழுமத்தின் பங்குகள் கடுமையான சரிவை சந்தித்தன. குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்துள்ளது.
இந்தநிலையில், இதுபற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கொல்கத்தாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மத்திய அரசு உயர்மட்ட விசாரணை குழுவை அமைக்க வேண்டும். அதில், சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சகங்களின் பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டும்.
அந்த விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு கண்காணிக்க வேண்டும். விசாரணை முடிவடையும்வரை, அன்றாட அடிப்படையில் கண்காணிக்க வேண்டும். நாட்டின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
இந்த விவகாரத்தில், மத்திய நிதி மற்றும் வெளியுறவு அமைச்சகங்களும் சம்பந்தப்பட்டுள்ளன. அனைத்து குற்றச்சாட்டுகளும் முறையாக விசாரிக்கப்படுவதை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஐதராபாத் சமஸ்தான விடுதலைக்கும், பா.ஜனதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
- தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்க வகுப்புவாதத்தை ஊக்குவிக்கிறார்கள்.
ஐதராபாத் :
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
ஐதராபாத் சமஸ்தான விடுதலைக்கும், பா.ஜனதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்கள் வரலாற்றை திரிக்க பார்க்கிறார்கள். தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்க வகுப்புவாதத்தை ஊக்குவிக்கிறார்கள்.
அரசியல் சட்டத்தை பாதுகாக்க வேண்டுமானால், உரிமைகள் மக்களுக்கு அளிக்கப்பட வேண்டுமானால், விசாரணை அமைப்புகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுக்க வேண்டுமானால், பா.ஜனதாவை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இதில் கோபப்படுவதற்கும் மகிழ்ச்சியடைவதற்கும் எதுவும் இல்லை.
- யார் பிரதமர் வேட்பாளர் என்ற கேள்வி இப்போது பயனற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் மேற்கொள்ளும் இந்திய ஒற்றுமை பயணம், கேரளாவில் 18 நாட்கள் நடைபெறுகிறது, உத்தரப் பிரதேசத்தில் 2 நாட்கள் மட்டுமே நடைபெறுகிறது. கர்நாடகாவில் 19 நாட்கள் நடைபெறுகிறது என்றால், அது குறித்து ராகுல் காந்தியிடம் கேளுங்கள், அவர் பதில் அளிப்பார்.
நாங்கள் ஏன் காங்கிரஸ் கட்சி மீது கோபப்பட வேண்டும்? ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தனது திட்டங்களை நிறைவேற்ற ஜனநாயக உரிமை உள்ளது. இதில் கோபப்படுவதற்கும் மகிழ்ச்சியடைவதற்கும் எதுவும் இல்லை. தற்போது எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி பயனற்றது.
இது மக்களவைத் தேர்தல், குடியரசுத் தலைவர் தேர்தல் அல்ல. பொதுத் தேர்தலுக்கு முதலில் மாநில அளவில் ஒன்றுமை உருவாக்கப்படும். அதிகபட்சமாக மதச்சார்பற்ற ஒற்றுமை இருக்க வேண்டும் என்ற சிபிஎம் முயற்சி செய்து வருகிறது.
2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது வாஜ்பாய்க்கு எதிராக யார் என்ற கேள்வி எழுந்தது.கடைசியில் அவருக்கு எதிராக, பாஜக அல்லாத ஆட்சி அமைந்தது, அது 10 ஆண்டு நீடித்தது. பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவது அவசியம், அதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி.யை ஆதரித்து கோவில்பட்டி மெயின் ரோடு காமராஜர் சிலை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதராம் யெச்சூரி கலந்து கொண்டு பேசியதாவது:-
பா.ஜனதா அரசின் உயர் பணமதிப்பு இழப்பு, சரக்கு சேவை வரி விதிப்பு போன்ற தவறான பொருளாதார கொள்கைகளால், இதுவரையிலும் இல்லாத அளவுக்கு தொழில்கள் பாதிக்கப்பட்டு, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ளது. பெரு வணிக நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கடன்களை மத்திய பா.ஜனதா அரசு வழங்கி விட்டு, பின்னர் அதனை வாராக்கடனாக தள்ளுபடி செய்கிறது. இதேபோன்று அந்த நிறுவனங்களுக்கு சாதகமாகவே ரபேல் உள்பட அனைத்து ஒப்பந்தங்களையும் பல ஆயிரம் கோடி மதிப்பில் வழங்குகிறது. மாறாக விவசாயிகள், தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். எனவே பா.ஜனதா அரசு தோற்கடிக்கப்பட வேண்டும், மாற்று அரசு உருவாக வேண்டும்.
மக்களிடம் பணத்தை கொள்ளையடித்த பா.ஜனதா அரசு தற்போது அதன் தேர்தல் அறிக்கையில் பல பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறது. அதேபோன்று பா.ஜனதாவுடன் இணைந்து தமிழகத்தில் அ.தி.மு.க. அரசும் பல ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டது. இந்த 2 அரசுகளும் அகற்றப்பட வேண்டும்.
பா.ஜனதா அரசில் பசுகாவலர்கள், கலாசார காவலர்கள் என்ற பெயரில் சிறுபான்மை மக்கள், இஸ்லாமியர்கள், தலித் மக்கள் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். மத வெறியை தூண்டி விட்டு, நாட்டின் ஒற்றுமையை சிதைக்க பார்க்கின்றனர். மதசார்பற்ற ஜனநாயகத்தை காக்க, மதவெறி, வகுப்புவாதம் பிடித்த பா.ஜனதா அரசை தூக்கி எறிய வேண்டும்.
மத்திய அரசின் அனைத்து துறைகளும், அமைப்புகளும் சீரழிக்கப்பட்டு உள்ளன. எனவே பா.ஜனதாவின் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்பக்கூடிய பிரச்சினைகளை பா.ஜனதா அரசு எழுப்பி வருகிறது. நமது நாட்டில் யாரும் பயங்கரவாதத்தையும், தீவிரவாதத்தையும் ஆதரிக்க வில்லை.
ஆனால் பா.ஜனதாவின் ஆட்சியில் 200 சதவீதம் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து உள்ளன. இதனால் ஏராளமான படைவீரர்கள், பொதுமக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை தடுத்து நிறுத்தாமல், மக்களின் உணர்வுகளை தூண்டக்கூடிய வகையில் பா.ஜனதா அரசு செயல்படுகிறது. எனவே புதிய மதசார்பற்ற அரசு அமைய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
சாரதா நிதி நிறுவன மோசடி குறித்து சி.பி.ஐ. விசாரணை தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நிருபர்களிடம் கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் தான் சி.பி.ஐ. விசாரணை நடக்கிறது. எந்த மாநிலத்திலும் சி.பி.ஐ. விசாரணை நடத்துவதை நிர்வாகத்துக்கு எதிரானதாகவோ, மாநில ஆட்சி அதிகாரத்துக்கு எதிரானதாகவோ கருதமுடியாது. மாநில அரசின் அனுமதி இல்லாமல் சி.பி.ஐ. தாமாகவே விசாரணை நடவடிக்கையை தொடங்கினால் தான் ஆட்சேபனைக்குரியது.
பா.ஜனதா, திரிணாமுல் காங்கிரஸ் இரண்டுமே ஊழல் கட்சிகள் தான். இரு கட்சிகளையும் சுப்ரீம் கோர்ட்டு அவர்கள் இடத்தில் நிறுத்தியுள்ளது. இந்த முறைகேட்டில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமைக்கு உள்ள தொடர்பு குறித்தும் விசாரிக்க வேண்டும். பா.ஜனதா ஏன் விசாரணைக்காக 5 வருடங்கள் காத்திருந்தது?
இவ்வாறு அவர் கூறினார். #SitaramYechury #TMC #BJP
நெல்லை:
பாளை ரெட்டியார்பட்டி ரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலக வளாகத்தில் லெனின் முழு உருவ சிலை நிறுவப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, லெனின் சிலையை திறந்து வைத்து பேசினார்.
விடுதலை போராட்ட வீரரும், ரஷ்ய புரட்சியை புகழ்ந்து பாடியவருமான மகாகவி பாரதியார் வாழ்ந்த இந்த மண்ணில் புரட்சியாளர் லெனின் சிலை திறக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் திரிபுரா மாநிலத்தில் தேர்தல் முடிவு வெளியான உடன், ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜனதா கட்சியினர் சேர்ந்து அங்கிருந்த லெனின் சிலையை சாய்த்தனர். அப்போது நாங்கள், லெனின் சிலையை தகர்க்கலாம், அவரது சித்தாந்தத்தையும், புரட்சியையும் மக்களிடம் இருந்து அழிக்க முடியாது என்று கூறினோம்.
100 ஆண்டுகள் பழமையான புரட்சியையும், புரட்சியாளரையும் ஏன் தாங்கி பிடிக்கிறீர்கள் என்று சிலர் கேட்டனர். இன்றைய சூழலிலும் சமூகத்தில் சுரண்டல் இல்லாத நிலையை உருவாக்க முடியும் என்பதற்கு லெனின் கொள்கைகள் உதவும். மோடி தலைமையிலான மத்திய அரசால் இந்திய மக்களின் நிலைமை மோசமாகி வருகிறது. வளமிக்க நாட்டில் மக்களின் வாழ்வாதாரம் சிதையும் நிலையை ஏற்படுத்தி உள்ளனர்.
இந்தியாவில் உள்ள 19 பெரிய செல்வந்தர்களின் சொத்துகள், நாட்டில் உள்ள 50 சதவீத மக்களின் செல்வத்துக்கு இணையாக உள்ளது. முதலாளிகள் கொள்ளை லாபம் அடையவும், பெரும் பணம் திரட்டவும் மத்திய அரசு உதவி செய்து வருகிறது.
இதை தடுக்க தொழிலாளிகள், விவசாயிகள் ஒன்று சேர வேண்டும். ஏற்கனவே டெல்லி, மும்பையில் நடத்திய பேரணிகளில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். தனிமனிதரான, தனக்கு எதிராக எதிர்கட்சிகள் அணி திரண்டு இருப்பதாக பிரதமர் மோடி கூறிஉள்ளார். அது தவறானது ஆகும். ஏனென்றால் மத்திய அரசை ஆட்சி கட்டிலில் இருந்து அகற்ற எதிர்கட்சி தலைவர்களை, மக்களே ஒன்றிணைய வைத்துள்ளனர்.
நாட்டு மக்களின் வாழ்வு மேம்பட ஆட்சி மாற்றம் அவசியம் ஆகும். மக்கள் நலன் சார்ந்த மாற்று கொள்கைகள் உருவாக வேண்டும். மக்களுக்கு சாதகமான புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். மதசார்பற்ற, ஜனநாயக அமைப்பை உடைக்க பாரதிய ஜனதா உள்ளிட்ட சில சக்திகள் முயற்சி செய்கின்றன.
தமிழகத்தில் தனது கூட்டாளிகளை உருவாக்கி, அவர்கள் மூலம் பாரதிய ஜனதா காலூன்ற முயற்சி செய்கிறது. அதற்கு இடம் கொடுக்க கூடாது. தமிழகத்தில் வேற்றுமையில் ஒற்றுமையையும், சமூக நீதியையும் உருவாக்கியதில் திராவிடத்தின் பங்கு மிகப்பெரியது. அத்தகைய பாரம்பரியத்தை பாதுகாக்க மதசார்பற்ற சக்திகள் ஒன்று சேர வேண்டும். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்.
இந்தியாவில் இருந்து மோடி அரசையும், தமிழகத்தில் இருந்து அ.தி.மு.க. அரசையும் அப்புறப்படுத்த வேண்டும். அதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #SitaramYechury
கொல்கத்தா:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கொல்கத்தாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக தேசிய அளவில் ஒரு அணியை உருவாக்குவதற்காக காங்கிரஸ் கட்சியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஏன் பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதில் அளித்து சீதாராம் யெச்சூரி கூறுகையில், “அரசியல் சூழ்நிலை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. எனவே காங்கிரஸ் கட்சியுடனான பேச்சுவார்த்தை முதலில் மாநில அளவில் தொடங்கப்பட வேண்டும்” என்றார்.
மேற்கு வங்காளத்தில் பாராளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரசையும், பா.ஜனதாவையும் வீழ்த்துவதற்காக காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில்தான் காங்கிரஸ்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு இடையே தேசிய அளவிலான கூட்டணி அமைய வாய்ப்பு இல்லை என்று சீதாராம் யெச்சூரி மறைமுகமாக கூறியுள்ளார். #SitaramYechury

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார்.
ஏற்கனவே அவர் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் ஆகியோரை சந்தித்து பேசினார்.
கடந்த 9-ந்தேதி தி.மு.க. தலைவர் ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் ஒரு பகுதியாக அவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
இந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நாளை சந்தித்து பேசுகிறார். அண்ணா அறிவாலயத்தில் நாளை மாலை இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
இந்த சந்திப்பின்போது 20 தொகுதி இடைத்தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜனதாவுக்கு எதிராக இணைந்து பணியாற்றுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படலாம் என்று தெரிகிறது.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் 2 நாள் மாநிலக்குழு கூட்டம் சென்னையில் நாளை தொடங்குகிறது. இந்த கூட்டத்திலும் சீதாராம் யெச்சூரி பங்கேற்கிறார். #DMK #MKStalin #SitaramYechury
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பாரதிய ஜனதா அல்லாத எதிர்க்கட்சி தலைவர்களை ஒருங்கிணைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
இதற்காக ஒவ்வொரு மாநிலமாக சென்று கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
அந்த வகையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க சீத்தாராம் யெச்சூரி வருகிற 13-ந்தேதி சென்னை வருகிறார்.

ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நாளை சென்னை வந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளார். பிரதமர் மோடிக்கு எதிராக பாராளுமன்ற தேர்தலில் ஒருங்கிணைந்து பாடுபட மு.க.ஸ்டாலினுக்கு அவர் அழைப்பு விடுக்க உள்ளார். #DMK #MKStalin #SitaramYechury
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற உள்ள தேர்தல்கள் குறித்து ஆலோசனை நடத்தினேன். தமிழக அரசியல் சூழ்நிலை, கூட்டணி தொடர்பாக பேசினோம். இந்திய அளவில், அந்தந்த மாநிலங்களில் மாநில கட்சிகள் இது போன்ற ஆலோசனைகளை நடத்தி வருகின்றன. தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது, எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை தேர்தல் நெருங்கும் போது தெரிவிப்போம்.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புபடி கேரள அரசு சபரிமலை அய்யப்பன் கோவிலை திறந்து வைத்து உள்ளது. மத்திய அரசு தமிழகம், கேரளா, கர்நாடக டி.ஜி.பி.களை அழைத்து, இது போன்ற போராட்டங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நிறைவேற்றும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்று உள்ளார். ஆனால், கேரளாவில் உள்ள காங்கிரசார் பா.ஜனதாவினருடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ஜனதாவினரோ சபரிமலையின் புனித தன்மை, மரபுகளை காக்க போராடவில்லை. அரசியலுக்காகவே போராட்டம் நடத்துகின்றனர்.

பெண்கள் முன்னுரிமைக்காக முத்தலாக் பிரச்சினையை வரவேற்ற பா.ஜனதாவினர் சபரிமலை விஷயத்தில் எதிர்ப்பு தெரிவிப்பது முரண்பாடாக உள்ளது. பா.ஜனதாவினர், காங்கிரசார், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் சபரிமலை விஷயத்தில் இரட்டை வேடம் போடுகின்றனர். சபரி மலையில் சில சமூக விரோதிகள் புகுந்துள்ளனர். அவர்களை கட்டுப்படுத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகி றது. இந்த விஷயத்தில் ஆர்.எஸ்.எஸ். தோல்வியைத் தான் தழுவி உள்ளது.
மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடிக்கு எதிரான பேரணிக்கு மம்தா பானர்ஜி எங்களுக்கு அழைப்பு தரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #BJP #Congress #SitaramYechury #Sabarimala