search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sitaram yechury"

    • தாய்மார்கள், சகோதரிகள்... அவர்கள் உங்களுடைய மங்களசூத்ராவை (தாலி) கூட விட்டு வைக்கமாட்டார்கள் - மோடி
    • அவர்களுடைய (காங்கிரஸ்) அரசு ஆட்சியில் இருந்தபோது, நாட்டிகள் சொத்துகளில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை எனக் கூறியது - மோடி

    ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி பேசியது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    அவர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள ஒரு கருத்தை குறிப்பிட்டு பேசும்போது கூறியதாவது:-

    இது நகர்ப்புற நக்சல் மனநிலை. தாய்மார்கள், சகோதரிகள்... அவர்கள் உங்களுடைய மங்களசூத்ராவை (தாலி) கூட விட்டு வைக்கமாட்டார்கள். அவர்கள் அந்த நிலைக்கு கூட போவார்கள்...

    தாய்மார்கள், சகோதரிகள் வைத்துள்ள தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு, தகவல்கள் பெறப்பட்டு, பகிர்ந்து கொடுப்போம் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சொல்கிறது.

    அவர்கள் யாருக்கு பகிர்ந்து அளிப்பார்கள். முந்தைய மன்மோகன் சிங் அரசு, நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை எனத் தெரிவித்திருந்தது.

    முன்னதாக, அவர்களுடைய (காங்கிரஸ்) அரசு ஆட்சியில் இருந்தபோது, நாட்டிகள் சொத்துகளில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை எனக் கூறியது. இதன் அர்த்தம் யாருக்கு சொத்து பகிர்ந்தளிக்கப்படும்?. அதிக குழந்தைகளை வைத்திருப்பர்களுக்கிடையே பகிர்ந்து அளிக்கப்படும். இந்திய நாட்டுக்குள் ஊடுருவியர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். உங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்த பணம் ஊடுருவியவர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?

    இது உங்களுக்கு ஏற்கத்தக்கதா?. நீங்கள் கடுமையாக உழைத்து சம்பாதித்த உங்கள் சொத்தை பறிமுதல் செய்ய அரசுகளுக்கு உரிமை உள்ளதா? நம் தாய், சகோதரிகளுடன் இருக்கும் தங்கம் வெளியில் காட்டிக் கொள்வதற்காக அல்ல, அது அவர்களின் சுயமரியாதை சம்பந்தப்பட்டது.

    அவர்களின் மங்களசூத்திரத்தின் (தாலி) மதிப்பு தங்கத்திலோ அல்லது அதன் விலையிலோ இல்லை, வாழ்க்கையில் அவரின் கனவுகளுடன் தொடர்புடையது. அதையும் பறிப்பது பற்றி நீங்கள் பேசுகிறீர்களா?

    இவ்வாறு பிரதமர் மோடி பேசியிருந்தார்.

    இந்நிலையில் இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    மோடியின் பேச்சு தேர்தல் ஆணையத்துக்கு கேட்காதா? வெறுப்புணர்வை தூண்டும் மோடியின் பேச்சு தேர்தல் நடத்தை விதியை மீறும் செயல். வெறுப்புணர்வுக்கு எதிரான உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கும் எதிரானது. கடும் நடவடிக்கையும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடுக்கப்பட வேண்டும். இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பி கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று நான் நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார். 

    • இந்திய தேர்தல் ஆணையத்தில் இரண்டு தேர்தல் ஆணையர்களுக்கு பதவி காலியாக இருந்தது.
    • பஞ்சாப் மாநிலத்தின் சுக்பிர் சந்து, கேரள மாநிலத்தின் ஞானேஷ் குமார் ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக ராஜீவ் குமார் உள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக அருண் கோயல் மற்றும் சந்திரா பாண்டே ஆகியோர் இருந்தனர்.

    சந்திரா பாண்டே கடந்த வருடம் ஓய்வு பெற்றார். இதனால் இரண்டு ஆணையர்களுடன் இயங்கி வந்தது. இரண்டு ஆணையர்களும் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கான பணிகளை துரிதமாக செய்து கொண்டிருந்தனர். இன்னும் ஓரிரு நாட்களுக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் அருண் கோயல் கடந்த 9-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்திய தேர்தல் ஆணையத்தில் இரண்டு தேர்தல் ஆணையர்களுக்கு பதவி காலியாக இருந்தது. இரண்டு ஆணையர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.

    அதில், பஞ்சாப் மாநிலத்தின் சுக்பிர் சந்து, கேரள மாநிலத்தின் ஞானேஷ் குமார் ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதற்கான கூட்டத்தில் பிரதமர் மோடி, அமித் ஷா, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் இடம் பிடித்திருந்தனர்.

    இந்நிலையில் புதிய தேர்தல் ஆணைய நியமனம் தொடர்பாக சிபிஎம் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில், பதிவொன்றை அவர் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "சுக்பீர் சந்துவையும் ஞானேஷ் குமாரையும் அவசர அவசரமாக தேர்தல் ஆணையர்களாக நியமித்திருக்கிறார் மோடி. ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளையை உருவாக்க முக்கியப் பங்காற்றியவர் ஞானேஷ் குமார். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட போது உள்துறை அமைச்சகத்தின் ஜம்மு காஷ்மீர் பிரிவுக்காக அமித் ஷாவுக்குக் கீழ் பணியாற்றியவர் என்று தெரிவித்துள்ளார்.

    மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அவர்களும் இதை விமர்சித்துள்ளார். அதில்,

    பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகியோர் அடங்கிய தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்வதற்கான குழுவில் இருந்து, தலைமை நீதிபதியை நீக்கி விட்டு அவருக்கு பதிலாக மத்திய அமைச்சர் ஒருவர் இடம் பெறுவார் என்று மோடி அரசு சட்டம் கொண்டு வந்தது. அந்த சட்டம் அரசியலமைப்புக்கு முரணாக உள்ளது எனக்கூறி, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே புதிய தேர்தல் ஆணையர்களை மோடி நியமித்துள்ளார். புதிய தேர்தல் ஆணையர் பதவிகளில் பட்டியலிடப்பட்ட 6 பெயர்களில் 2 பேர் பத்தே நிமிடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்" என்று பதிவிட்டுள்ளார்.

    • எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • சீதாராம் யெச்சூரி 22-ந்தேதி கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் என அறிவிப்பு.

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகத்திற்கு தயாராகியுள்ளது. வருகிற 22-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது.

    அரசியல் கட்சி தலைவர்கள் முதல் சாதனைப் படைத்தவர்கள், விருது பெற்றவர்கள் என ஆயிரக்கணக்கானோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த பலர் தங்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

    சில தலைவர்கள் தங்களுக்கு அழைப்பிதழ் வந்ததாகவும், தாங்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்த கொள்ளமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர். அதற்கு காரணம் ராமர் கோவிலை வைத்து பா.ஜனதா ஆதாயம் பார்க்க நினைக்கிறது என விமர்சனம் செய்வதுதான்.

    இந்த நிலையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில் "பல வருட போராட்டங்களுக்குப் பிறகு ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடைபெற இருக்கிறது. ராமர் பக்தர்கள் வீடு வீடாக சென்று அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்கள்.

    எல்லோரும் 22-ந்தேதி அயோத்தி சென்று கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள முடியாது. கும்பாபிஷேகம் முடிந்த பிறகு உத்தர பிரதேச மாநிலம் அரசு மற்றும் கோவில் கமிட்டி ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி மக்கள் செல்ல முடியும். சிலர் கலந்து கொள்ளமாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர். அவர்களை அனுமன் அழைத்து வருவார்.

    இவ்வாறு மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி கும்பாபிஷேக விழாவில் கலந்த கொள்ளமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும், பா.ஜனதா ராமர் கோவிலை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துகிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

    உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சியின் தலைவரான சஞ்சய் ராவத், அவரது கட்சி தொண்டர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்த கொள்ளமாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், இதெல்லாம் அரசியல். பா.ஜனதா நடத்தில் நிகழ்ச்சியில் யார் கலந்த கொள்வார்கள்? இது தேசிய நிகழ்ச்சி இல்லை. இது பா.ஜனதாவின் நிகழ்ச்சி. பா.ஜனதாவின் பேரணி. பா.ஜனதா நிகழ்ச்சி முடிந்த பின்னர் நாங்கள் அயோத்தி செல்வோம் என்றார்.

    இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, அழைப்பிதழ் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் அயோத்தி செல்வேன். கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதைவிட, யோசிக்க ஒன்றுமில்லை என்றார்.

    • மெகபூபா முப்தி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
    • தேர்தல் வியூகம் மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேசி முடிவு செய்யப்படும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து 'இந்தியா' என்ற பெயரில் கூட்டணி அமைத்து உள்ளன.

    இந்த கூட்டணி தலைவர்கள் ஏற்கனவே 3 முறை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளனர்.

    இந்த கூட்டணியின் 4-வது கூட்டம் டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இன்று தொடங்கியது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக கூட்டணி தலைவர்கள் வந்துள்ளனர்.

    கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் சோனியா காந்தி, மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி, டி.ஆர்.பாலு, சீத்தாராம் யெச்சூரி, சரத்பவார், லாலு பிரசாத், நிதிஷ்குமார், மெகபூபா முப்தி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இந்தியா கூட்டணி தலைவர்களின் கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் வியூகம் மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேசி முடிவு செய்யப்படும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.







    • நாட்டில் வேலையிழப்பு அதிகளவில் உள்ளது.
    • எல்லா கருத்து கணிப்பு முடிவுகளும் பா.ஜ.கவிற்கு சாதகமாக இல்லை.

    கோவை:

    கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    5 மாநில தேர்தல் கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளது. இதில் காங்கிரஸ் தெலுங்கானாவிலும், சத்தீஸ்கரிலும் வெற்றி பெறும் என்றும், ராஜஸ்தானில் பா.ஜ.க வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது வெளி வந்துள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் பகிர்ந்து இருக்கும் படியாக இருக்கின்றது.

    கடந்தாண்டு 40,000 கார்பரேட்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் வேலையிழப்பு அதிகளவில் உள்ளது.

    வேலை வாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. பணவீக்கம் அதிகமாக உள்ளது. 58 சதவீத இந்தியர்கள் சொந்தமாக பணி செய்பவர்களாக உள்ளனர்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் இந்த பிரச்சினை பிரதிபலிக்கும். பெண்கள், சிறுபான்மையினர், பழங்குடியினர் தாக்கப்படுகின்றனர். வெறுப்பு பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

    மாநில அதிகாரத்தை பறிக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுகிறது.


    ஜி 20 மாநாடு இந்தியா தலைமை வகிப்பதாகவும், முன்னிலை வகிப்பதாகவும் பிம்பம் உருவாக்கப்பட்டது. ஆனால் ஜி 20 யில் உள்ள நாடுகளில் கடைசி இடத்தில் தான் இந்தியா உள்ளது.

    யுனஸ்கோவில் அமெரிக்காவின் குற்றச்சாட்டு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும். மிகவும் தீவிரமான பிரச்சனை இந்தியாவில் நிலவி வருகிறது. இந்திய மக்களுக்காக, இந்தியாவிற்காக பா.ஜ.க வீழ்த்தப்பட வேண்டும்.

    5 மாநில தேர்தல் முடிந்தவுடன், தமிழகத்தில் கூட்டணி பணிகள், பாராளுமன்ற தேர்தல் பணிகள் தொடங்கப்படும். எல்லா கருத்து கணிப்பு முடிவுகளும் பா.ஜ.கவிற்கு சாதகமாக இல்லை.

    சில மாநிலங்கள் சாதகமாக இருக்கின்றது. சில மாநிலங்களில் சாதகமற்ற நிலை இருக்கின்றது. இந்தியா கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும்.

    தமிழகத்தில் தி.மு.க கூட்டணியில் சி.பி.எம் இருக்கிறது. அ.தி.மு.க கூட்டணிக்கு செல்ல வாய்ப்பில்லை. இந்தியா கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்ற பின், பிரதமர் யார் என்பதை முடிவு செய்வோம்.

    ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்ப சி.பி.எம் கூட்டணிகளை முடிவு செய்துள்ளது. அது இந்தியா கூட்டணியின் வெற்றியை பாதிக்காது.

    அமலாக்கத்துறை, சி.பி.ஐ போன்றவற்றை வைத்து மத்திய அரசு மிரட்டுகிறது. அமலாக்கத்துறை பதிவு செய்யும் வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதில்லை.

    அவ்வழக்குகளில் வெறும் ஒரு சதவீத வழக்குகளில் தான் தீர்ப்பு வந்துள்ளது. 8 மசோதக்களை 3 ஆண்டுகளாக கேரளா கவர்னர் நிறுத்தி வைத்திருகின்றார். கவர்னர்களை வைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பை இந்திய அரசு நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாட்டின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
    • இந்த விவகாரத்தில், மத்திய நிதி மற்றும் வெளியுறவு அமைச்சகங்களும் சம்பந்தப்பட்டுள்ளன.

    கொல்கத்தா :

    அதானி குழுமம் பங்குச்சந்தைகளில் மோசடி செய்ததாகவும், கணக்கில் முறைகேடு செய்ததாகவும் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற முதலீ்ட்டு ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. இதைத்தொடர்ந்து, அதானி குழுமத்தின் பங்குகள் கடுமையான சரிவை சந்தித்தன. குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்துள்ளது.

    இந்தநிலையில், இதுபற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கொல்கத்தாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மத்திய அரசு உயர்மட்ட விசாரணை குழுவை அமைக்க வேண்டும். அதில், சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சகங்களின் பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டும்.

    அந்த விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு கண்காணிக்க வேண்டும். விசாரணை முடிவடையும்வரை, அன்றாட அடிப்படையில் கண்காணிக்க வேண்டும். நாட்டின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

    இந்த விவகாரத்தில், மத்திய நிதி மற்றும் வெளியுறவு அமைச்சகங்களும் சம்பந்தப்பட்டுள்ளன. அனைத்து குற்றச்சாட்டுகளும் முறையாக விசாரிக்கப்படுவதை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஐதராபாத் சமஸ்தான விடுதலைக்கும், பா.ஜனதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
    • தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்க வகுப்புவாதத்தை ஊக்குவிக்கிறார்கள்.

    ஐதராபாத் :

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ஐதராபாத் சமஸ்தான விடுதலைக்கும், பா.ஜனதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்கள் வரலாற்றை திரிக்க பார்க்கிறார்கள். தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்க வகுப்புவாதத்தை ஊக்குவிக்கிறார்கள்.

    அரசியல் சட்டத்தை பாதுகாக்க வேண்டுமானால், உரிமைகள் மக்களுக்கு அளிக்கப்பட வேண்டுமானால், விசாரணை அமைப்புகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுக்க வேண்டுமானால், பா.ஜனதாவை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இதில் கோபப்படுவதற்கும் மகிழ்ச்சியடைவதற்கும் எதுவும் இல்லை.
    • யார் பிரதமர் வேட்பாளர் என்ற கேள்வி இப்போது பயனற்றது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் மேற்கொள்ளும் இந்திய ஒற்றுமை பயணம், கேரளாவில் 18 நாட்கள் நடைபெறுகிறது, உத்தரப் பிரதேசத்தில் 2 நாட்கள் மட்டுமே நடைபெறுகிறது. கர்நாடகாவில் 19 நாட்கள் நடைபெறுகிறது என்றால், அது குறித்து ராகுல் காந்தியிடம் கேளுங்கள், அவர் பதில் அளிப்பார்.

    நாங்கள் ஏன் காங்கிரஸ் கட்சி மீது கோபப்பட வேண்டும்? ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தனது திட்டங்களை நிறைவேற்ற ஜனநாயக உரிமை உள்ளது. இதில் கோபப்படுவதற்கும் மகிழ்ச்சியடைவதற்கும் எதுவும் இல்லை. தற்போது எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி பயனற்றது.

    இது மக்களவைத் தேர்தல், குடியரசுத் தலைவர் தேர்தல் அல்ல. பொதுத் தேர்தலுக்கு முதலில் மாநில அளவில் ஒன்றுமை உருவாக்கப்படும். அதிகபட்சமாக மதச்சார்பற்ற ஒற்றுமை இருக்க வேண்டும் என்ற சிபிஎம் முயற்சி செய்து வருகிறது.

    2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது வாஜ்பாய்க்கு எதிராக யார் என்ற கேள்வி எழுந்தது.கடைசியில் அவருக்கு எதிராக, பாஜக அல்லாத ஆட்சி அமைந்தது, அது 10 ஆண்டு நீடித்தது. பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவது அவசியம், அதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    மத வெறியை தூண்டி விட்டு, நாட்டின் ஒற்றுமையை பா.ஜனதா சிதைக்க பார்க்கின்றது என்று சீதராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார். #sitaramyechury #bjp

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி.யை ஆதரித்து கோவில்பட்டி மெயின் ரோடு காமராஜர் சிலை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதராம் யெச்சூரி கலந்து கொண்டு பேசியதாவது:-

    பா.ஜனதா அரசின் உயர் பணமதிப்பு இழப்பு, சரக்கு சேவை வரி விதிப்பு போன்ற தவறான பொருளாதார கொள்கைகளால், இதுவரையிலும் இல்லாத அளவுக்கு தொழில்கள் பாதிக்கப்பட்டு, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ளது. பெரு வணிக நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கடன்களை மத்திய பா.ஜனதா அரசு வழங்கி விட்டு, பின்னர் அதனை வாராக்கடனாக தள்ளுபடி செய்கிறது. இதேபோன்று அந்த நிறுவனங்களுக்கு சாதகமாகவே ரபேல் உள்பட அனைத்து ஒப்பந்தங்களையும் பல ஆயிரம் கோடி மதிப்பில் வழங்குகிறது. மாறாக விவசாயிகள், தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். எனவே பா.ஜனதா அரசு தோற்கடிக்கப்பட வேண்டும், மாற்று அரசு உருவாக வேண்டும்.

    மக்களிடம் பணத்தை கொள்ளையடித்த பா.ஜனதா அரசு தற்போது அதன் தேர்தல் அறிக்கையில் பல பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறது. அதேபோன்று பா.ஜனதாவுடன் இணைந்து தமிழகத்தில் அ.தி.மு.க. அரசும் பல ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டது. இந்த 2 அரசுகளும் அகற்றப்பட வேண்டும்.

    பா.ஜனதா அரசில் பசுகாவலர்கள், கலாசார காவலர்கள் என்ற பெயரில் சிறுபான்மை மக்கள், இஸ்லாமியர்கள், தலித் மக்கள் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். மத வெறியை தூண்டி விட்டு, நாட்டின் ஒற்றுமையை சிதைக்க பார்க்கின்றனர். மதசார்பற்ற ஜனநாயகத்தை காக்க, மதவெறி, வகுப்புவாதம் பிடித்த பா.ஜனதா அரசை தூக்கி எறிய வேண்டும்.

    மத்திய அரசின் அனைத்து துறைகளும், அமைப்புகளும் சீரழிக்கப்பட்டு உள்ளன. எனவே பா.ஜனதாவின் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்பக்கூடிய பிரச்சினைகளை பா.ஜனதா அரசு எழுப்பி வருகிறது. நமது நாட்டில் யாரும் பயங்கரவாதத்தையும், தீவிரவாதத்தையும் ஆதரிக்க வில்லை.

    ஆனால் பா.ஜனதாவின் ஆட்சியில் 200 சதவீதம் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து உள்ளன. இதனால் ஏராளமான படைவீரர்கள், பொதுமக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை தடுத்து நிறுத்தாமல், மக்களின் உணர்வுகளை தூண்டக்கூடிய வகையில் பா.ஜனதா அரசு செயல்படுகிறது. எனவே புதிய மதசார்பற்ற அரசு அமைய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பா.ஜனதா, திரிணாமுல் காங்கிரஸ் இரண்டுமே ஊழல் கட்சிகள் தான் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். #SitaramYechury #TMC #BJP
    புதுடெல்லி:

    சாரதா நிதி நிறுவன மோசடி குறித்து சி.பி.ஐ. விசாரணை தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் தான் சி.பி.ஐ. விசாரணை நடக்கிறது. எந்த மாநிலத்திலும் சி.பி.ஐ. விசாரணை நடத்துவதை நிர்வாகத்துக்கு எதிரானதாகவோ, மாநில ஆட்சி அதிகாரத்துக்கு எதிரானதாகவோ கருதமுடியாது. மாநில அரசின் அனுமதி இல்லாமல் சி.பி.ஐ. தாமாகவே விசாரணை நடவடிக்கையை தொடங்கினால் தான் ஆட்சேபனைக்குரியது.

    பா.ஜனதா, திரிணாமுல் காங்கிரஸ் இரண்டுமே ஊழல் கட்சிகள் தான். இரு கட்சிகளையும் சுப்ரீம் கோர்ட்டு அவர்கள் இடத்தில் நிறுத்தியுள்ளது. இந்த முறைகேட்டில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமைக்கு உள்ள தொடர்பு குறித்தும் விசாரிக்க வேண்டும். பா.ஜனதா ஏன் விசாரணைக்காக 5 வருடங்கள் காத்திருந்தது?

    இவ்வாறு அவர் கூறினார். #SitaramYechury #TMC #BJP 
    மோடி அரசையும், அதிமுக அரசையும் அப்புறப்படுத்த ஆதரவு தரவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார். #SitaramYechury

    நெல்லை:

    பாளை ரெட்டியார்பட்டி ரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலக வளாகத்தில் லெனின் முழு உருவ சிலை நிறுவப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, லெனின் சிலையை திறந்து வைத்து பேசினார்.

    விடுதலை போராட்ட வீரரும், ரஷ்ய புரட்சியை புகழ்ந்து பாடியவருமான மகாகவி பாரதியார் வாழ்ந்த இந்த மண்ணில் புரட்சியாளர் லெனின் சிலை திறக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் திரிபுரா மாநிலத்தில் தேர்தல் முடிவு வெளியான உடன், ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜனதா கட்சியினர் சேர்ந்து அங்கிருந்த லெனின் சிலையை சாய்த்தனர். அப்போது நாங்கள், லெனின் சிலையை தகர்க்கலாம், அவரது சித்தாந்தத்தையும், புரட்சியையும் மக்களிடம் இருந்து அழிக்க முடியாது என்று கூறினோம்.

    100 ஆண்டுகள் பழமையான புரட்சியையும், புரட்சியாளரையும் ஏன் தாங்கி பிடிக்கிறீர்கள் என்று சிலர் கேட்டனர். இன்றைய சூழலிலும் சமூகத்தில் சுரண்டல் இல்லாத நிலையை உருவாக்க முடியும் என்பதற்கு லெனின் கொள்கைகள் உதவும். மோடி தலைமையிலான மத்திய அரசால் இந்திய மக்களின் நிலைமை மோசமாகி வருகிறது. வளமிக்க நாட்டில் மக்களின் வாழ்வாதாரம் சிதையும் நிலையை ஏற்படுத்தி உள்ளனர்.

    இந்தியாவில் உள்ள 19 பெரிய செல்வந்தர்களின் சொத்துகள், நாட்டில் உள்ள 50 சதவீத மக்களின் செல்வத்துக்கு இணையாக உள்ளது. முதலாளிகள் கொள்ளை லாபம் அடையவும், பெரும் பணம் திரட்டவும் மத்திய அரசு உதவி செய்து வருகிறது.

    இதை தடுக்க தொழிலாளிகள், விவசாயிகள் ஒன்று சேர வேண்டும். ஏற்கனவே டெல்லி, மும்பையில் நடத்திய பேரணிகளில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். தனிமனிதரான, தனக்கு எதிராக எதிர்கட்சிகள் அணி திரண்டு இருப்பதாக பிரதமர் மோடி கூறிஉள்ளார். அது தவறானது ஆகும். ஏனென்றால் மத்திய அரசை ஆட்சி கட்டிலில் இருந்து அகற்ற எதிர்கட்சி தலைவர்களை, மக்களே ஒன்றிணைய வைத்துள்ளனர்.

    நாட்டு மக்களின் வாழ்வு மேம்பட ஆட்சி மாற்றம் அவசியம் ஆகும். மக்கள் நலன் சார்ந்த மாற்று கொள்கைகள் உருவாக வேண்டும். மக்களுக்கு சாதகமான புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். மதசார்பற்ற, ஜனநாயக அமைப்பை உடைக்க பாரதிய ஜனதா உள்ளிட்ட சில சக்திகள் முயற்சி செய்கின்றன.

    தமிழகத்தில் தனது கூட்டாளிகளை உருவாக்கி, அவர்கள் மூலம் பாரதிய ஜனதா காலூன்ற முயற்சி செய்கிறது. அதற்கு இடம் கொடுக்க கூடாது. தமிழகத்தில் வேற்றுமையில் ஒற்றுமையையும், சமூக நீதியையும் உருவாக்கியதில் திராவிடத்தின் பங்கு மிகப்பெரியது. அத்தகைய பாரம்பரியத்தை பாதுகாக்க மதசார்பற்ற சக்திகள் ஒன்று சேர வேண்டும். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்.

    இந்தியாவில் இருந்து மோடி அரசையும், தமிழகத்தில் இருந்து அ.தி.மு.க. அரசையும் அப்புறப்படுத்த வேண்டும். அதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #SitaramYechury

    தேசிய அளவில் காங்கிரசுடன் கம்யூனிஸ்டு கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்று சீதாராம் யெச்சூரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #SitaramYechury

    கொல்கத்தா:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கொல்கத்தாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவரிடம் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக தேசிய அளவில் ஒரு அணியை உருவாக்குவதற்காக காங்கிரஸ் கட்சியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஏன் பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

    அதற்கு பதில் அளித்து சீதாராம் யெச்சூரி கூறுகையில், “அரசியல் சூழ்நிலை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. எனவே காங்கிரஸ் கட்சியுடனான பேச்சுவார்த்தை முதலில் மாநில அளவில் தொடங்கப்பட வேண்டும்” என்றார்.

    மேற்கு வங்காளத்தில் பாராளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரசையும், பா.ஜனதாவையும் வீழ்த்துவதற்காக காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில்தான் காங்கிரஸ்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு இடையே தேசிய அளவிலான கூட்டணி அமைய வாய்ப்பு இல்லை என்று சீதாராம் யெச்சூரி மறைமுகமாக கூறியுள்ளார். #SitaramYechury

    ×