என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "patients"
- மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகள் நிறைந்து வளாகம் காணப்படுகின்றன.
- இதனால் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் உள்ளார்கள். நாளொன்றுக்கு 1000க்கும் மேற்பட்ட பொதுமக்களும் நோயாளிகளும் வந்து செல்கிறார்கள்.
திருத்துறைப்பூண்டி சுற்றியுள்ள ஏழை கிராம மக்கள் இந்த மருத்துவமனையை நம்பி தான் உள்ளார்கள்.
திருத்துறைப்பூண்டி சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இந்த மருத்துவமனையை பிரதான மருத்துவமனையாக உள்ளது.
இந்த மருத்துவமனையில் தற்போதைய இந்த நிலையால் நோயாளிகள் நோயாளிகளை பார்க்க செல்பவர்கள் அனைவரும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.
நாள்தோறும் மழை நீர் சேற்றில் சிக்கி பலர் மற்றும் நோயாளிகள் வழுக்கி விழுவதாக அங்கு இருப்பவர்கள் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள்.
மருத்துவமனை பிரதான கட்டிடம் பின்புறம் உள்நோயாளிகள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் சிகிச்சை பெறும் கட்டிடம் அருகிலேயே உபயோகிப்பட்ட மருத்துவ கழிவுகள் உட்பட குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன.
அவை முறையாக அகற்றப்படுவதில்லை என பொது மக்கள் புகார் கூறுகின்றனர்.
பிரதான கட்டிடத்தில் இருந்து உள்நோயாளிகள் பிரிவிற்கும் உள்நோயாளிகள் கூட வரும் நபர்கள் தங்கும் கட்டத்திற்கு செல்லும் பாதையும் சேறும் சகதியுமாக நடக்கக்கூட முடியாத அளவிற்கு உள்ளது.
எனவே அரசு மருத்துவமனை அருகில் உள்ள சேற்றையும், அங்குள்ள குப்பைகளையும் அகற்ற வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- போடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.
- போடி அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் தினமும் ஆயிரக்கணக்கான காய்ச்சல் நோயாளிகள் சிகிச்சைக்காக குவிந்து வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ளது அரசு மருத்துவமனை. சுமார் 80 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது.
போடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப் பகுதிகள் மட்டுமின்றி கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழக எல்லை பகுதிகளான பூப்பாறை, ராஜாக்காடு, நெடுங் கண்டம், கட்ட ப்பனை போன்ற பகுதிகளிலி ருந்தும் ஏராளமான நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று வருகின்ற னர்.
தற்போது போடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தினமும் ஆயிரக்கணக்கானோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
போடி அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் தினமும் ஆயிரக்கணக்கான காய்ச்சல் நோயாளிகள் சிகிச்சைக்காக குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் போடி அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் முதியவர்கள் சிகிச்சைக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பணி யாளர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் பதிவு சீட்டு வாங்கும் இடத்திலும் சிகிச்சை பெறுவதிலும் ஊசி போடும் இடத்திலும் மாத்திரை பெறும் இடத்திலும் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.
இதனால் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் மற்றும் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர்.
மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சிகிச்சைக்கு வருவோர் வராண்டா மற்றும் நடை பாதையில் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
- நோயாளிகள் நடைபாதையில் படுக்க வைத்திருக்கும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி:
வார விடுமுறை நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.
அதிலும் தொடர் விடுமுறை நாட்களில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வருகின்றனர்.
அதிலும் மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு விட அரசு அனுமதி அளித்துள்ளதால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வாடகை மோட்டார் சைக்கிளில் வலம் வருகின்றனர். இதனால் புதுவை நகர பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
நெரிசலில் சிக்கும் வாகனங்களால் வார விடுமுறை நாட்களில் அதிக விபத்து ஏற்படுகிறது. இதனால் விடுமுறை நாட்களில் அரசு ஆஸ்பத்திரிக்கு விபத்தில் சிக்கி சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.
கடந்த 2 நாட்களாக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் விபத்து சிகிச்சை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. அவசர சிகிக்சை பிரிவில் 25 படுக்கைகள் மட்டுமே உள்ளதால் கூடுதலாக சிகிச்சைக்கு வருவோர் வராண்டா மற்றும் நடை பாதையில் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது பற்றி சுகாதாரதுறை அதிகாரிகளிடம் கேட்ட போது, விடுமுறை நாட்களில் புதுவைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகளும் மற்றும் உள்ளூர் மக்களும் அதிக அளவு கொண்டாட்டத்தில் போதையுடன் வாகனங்கள் ஓட்டி விபத்து ஏற்படுகிறது.
இதில் பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரிக்கு வருபவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்படுவார்கள். இரவு மட்டுமே தங்க வேண்டிய சூழ்நிலை உள்ளவர்கள் அவசர சிகிச்சை பிரிவு வராண்டாவில் தான் தங்க வைக்கப்படுகிறார்கள்.
இதில் பெரும்பாலானோர் மறுநாள் காலையில் சென்று விடுவார்கள். இது ஒவ்வொரு வாரமும் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் அரசு ஆஸ்பத்திரியில் நடைபெறுகிறது
ஆனாலும் விடுமுறை நாட்களில் டாக்டர்கள் சிகிச்சை அளிக்க தயாராக இருப்பார்கள் என தெரிவித்தனர். இருப்பினும் நோயாளிகள் நடைபாதையில் படுக்க வைத்திருக்கும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
- குறிப்பாக குழந்தைகள் இந்த சுவாச பிரச்சினையால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.
- சிக்குன் குனியாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு 2 நாட்கள் காய்ச்சல் இருக்கும்.
சென்னை:
சென்னையில் தற்போது வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏற்படும் காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் சிறிய அளவிலான கிளீனிக்குகளிலும் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வருகிறது.
வைரஸ் தொற்று காரணமாக சுவாச பிரச்சினை ஏற்படுகிறது. குறிப்பாக குழந்தைகள் இந்த சுவாச பிரச்சினையால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். மேலும் டெங்கு காய்ச்சல் காரணமாகவும் பலர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிப்பட்டு வருகிறார்கள். டெங்கு காய்ச்சலுக்கும் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் சிக்குன் குனியா காய்ச்சலும் பரவி வருகிறது. கடந்த 20 நாட்களாகவே சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறார்கள். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிசோதனையில் டெங்கு இல்லை என்பது உறுதியானால் அது சிக்குன் குனியாவாகவும் இருக்கக்கூடும் என்று டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள்.
சிக்குன் குனியாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு 2 நாட்கள் காய்ச்சல் இருக்கும். ஆனால் கடந்த 2007-ம் ஆண்டு சிக்குன் குனியா பரவியபோது ஏற்பட்டது போன்ற கடுமையான மூட்டுவலி தற்போது ஏற்படவில்லை. ஆனாலும் மூட்டுவலி 10 முதல் 14 நாட்கள் வரை நீடிக்கும்.
இந்த பருவ காலத்தில் இதுபோன்று காய்ச்சல் பரவுவது வழக்கமானது தான். இந்த பருவத்தில் சுவாச பாதிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக சுவாச பிரச்சினையால் பாதிக்கப்பட்டு ஏராளமான குழந்தைகள் சிகிச்ச்சைக்கு வருகிறார்கள். இதில் பெரும்பாலான குழந்தைகள் ஒரு வயதுக்கு குறைவானவர்கள். அவர்களுக்கு மூச்சுக்குழாய் அழற்சியும் உள்ளது.
செப்டம்பர் 2-வது வாரத்தில் இருந்து டெங்குவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களில் சிலர் உள் நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெறுகிறார்கள். சிலர் வெளிநோயாளிகளாக வந்து சிகிச்சை பெறுகிறார்கள். அவர்களை கவனிப்பது தொடர்பாக பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது.
மேலும் தற்போது வைரஸ் காய்ச்சல் பாதிப்புகளே அதிகமாக உள்ளன. குழந்தைகளுக்கு காய்ச்சலுடன், சுவாச பாதிப்பு, உணவு சாப்பிடுவதில் சிரமம் ஆகியவையும் உள்ளன. மேலும் சிலருக்கு டைபாய்டு காய்ச்சல் பாதிப்பும் உள்ளது. இது போன்ற பருவகால காய்ச்சல் பாதிப்புகள் அக்டோபர், நவம்பர் மாதங்களில் உச்சத்தை அடைகின்றன.
ஆனாலும் 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- பல்வேறு அரசியல் அமைப்பினர், பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்
- சாதாரணமாக நடமாடும் நாய், பூனை, எலிகளை ஆஸ்பத்திரி நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும்
புதுச்சேரி:
காரைக்கால் நகரின் மையப் பகுதியில் அரசு ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இந்த ஆஸ்பத்திரி கடந்த பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்கி வருவதாக பல்வேறு அரசியல் அமைப்பினர், பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். சாதாரண ஜுரம், விபத்து என சென்றால்கூட, அண்டை மாநிலங்களுக்கு டாக்டர்கள் பரிந்துரை செய்யும் அவல நிலை உள்ளது. இந்நிலையில், அண்மையில் அரசு ஆஸ்பத்திரியின் உள்ள லிப்ட் உடைந்த நிலையில் உள்ளது.
கடந்த சில நாட்களாக நகரின் பல இடங்களில் சுற்றித்திரிந்த நாய்களின் கூட்டம், ஆஸ்பத்திரியில் உள்ளே குறிப்பாக பிரசவ பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் பிரிவு உள்ளிட்ட பல இடங்களில் சர்வ சாதாரணமாக சுற்றித் திரிவதால், நோயாளிகள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் பெருச்சாளி மற்றும் பூனைகள் பாதுகாக்கப்பட்ட அறுவை சிகிச்சை கூடம், மருந்தகம், கேண்டின் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பகலில் கூட நடமாடுவதால் நோயாளிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர். எனவே ஆஸ்பத்திரியில் சர்வ சாதாரணமாக நடமாடும் நாய், பூனை, எலிகளை ஆஸ்பத்திரி நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும் என நோயாளிகள் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- மின் இணைப்பு இல்லாததால் எக்ஸ்ரே எடுக்க நோயாளிகள் காத்திருந்தனர்.
- உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீழக்கரை
கீழக்கரை அரசு மருத்துவ மனையில் புதிய எக்ஸ்ரே மிஷின் வைக்கப்பட்டும் எக்ஸ்ரே எடுப்பதற்கு நோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.
கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனைக்கு தினமும் 600க்கும் மேற்பட்ட உள், வெளி நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்ற னர். இவர்களில் தினமும் சுமார் 25 பேர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு வரு கிறது. இந்நிலையில் புதிய எக்ஸ்ரே மிஷினுக்கு மின் இணைப்பு இல்லாததால் தினமும் ஒரு மணி நேரம் மட்டும் ஜெனரேட்டர் போட்டு எக்ஸ்ரே எடுக்கப் பட்டு வருகிறது.
இதனால் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது. கீழக்கரை நுகர்வோர் நலச் சங்கம் செயலாளர் செய்யது இப்ராஹிம் கூறுகையில், ஏற்கனவே இருந்த எக்ஸ்ரே மிஷினுக்காக கடந்த 40 வருடங்களுக்கு முன் போடப்பட்ட மின் வயர்கள் புதிய மெஷினில் இணைக் கப்பட்ட போது மின் கசிவு ஏற்பட்டு அனைத்து வயர் களும் எரிந்து விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பொதுப் பணித் துறை அதி காரியிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கை யும் எடுக்காததால் தற்போது காலை 8 மணிக்கு வரும் நோயாளிகள் எக்ஸ்ரே எடுப்பதற்கு மதியம் 12 மணி வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. காரணம் 11 மணிக்கு தான் ஜென ரேட்டர் போடப்பட்டு 12 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு மட்டும் எக்ஸ்ரே எடுக்கப்படுகிறது.
இதனால் நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகின் றனர். ஆகவே மாவட்ட கலெக்டர் இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு இது குறித்து உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- தள கற்கள் அனைத்தும் பெயர்ந்தும், மேடு-பள்ளமாகவும் காணப்படுகின்றன.
- சுவற்றில் இருந்த துவாரத்தில் பாம்பு ஒன்று இருந்துள்ளது.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள மாடியனூரில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆவுடையானூர் பொடியனூர் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் சிகிச்சைக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
ஜன்னல் கண்ணாடி
இந்நிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தும், போதிய கதவுகள் இன்றியும் காணப்படுகின்றன. மேலும் நடைபாதையில் போடப்பட்டிருந்த தல கற்கள் அனைத்தும் பெயர்ந்தும், மேடு-பள்ளமாகவும் காணப்படுகின்றன. இதனால் அங்கு வரும் முதியவர்கள் கால் இடறி கீழே விழும் சம்பவங்களும் அவ்வபோது நடைபெறுகிறது.
மேலும் சுவர்களில் வெடிப்புகள் ஏற்பட்டு விஷ பூச்சிகள், பாம்புகள் நுழைந்து இருப்பிடத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. கடந்த வாரத்தில் கூட பொதுமக்கள் மருந்துகள் வாங்கும் பகுதியில் சுவற்றில் இருந்த துவாரத்தில் பாம்பு ஒன்று இருந்ததை அங்கு இருந்த நோயாளிகளும், பொதுமக்கள் கண்டு அலறி அடித்து ஓடிய சம்பவம் நடந்துள்ளது.
பழுதுகளை சரிசெய்ய வேண்டும்
எனவே ஆரம்ப சுகாதார நிலையம் வரும் நோயாளிகளின் நலன் கருதி மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள பழுதுகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும், மாடியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் சுற்றித் திரியும் பாம்புகளை வனத்துறை, தீயணைப்புதுறை அலுவலர்கள் மூலம் பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வீதியில் மனநலம் பாதித்த நோயாளிகள் சுற்றித்திரிகின்றனர்.
- காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி தர்காவிற்கு தமிழ் நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங் களில் இருந்து ஏராள மானோர் வந்து செல்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத் தில் அரசு மன நலகாப்பகம் குறைந்தபட்சமே உள்ளது.
ஏர்வாடி தர்காவில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் தனியார் அறக்கட்டளை மூலம் குறிப்பிட்ட நபர் களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ஏழை, எளிய மக்கள் அழைத்து வரும் மனநலம் பாதிக்கப் பட்ட வர்களை கவனிக்க வழியின்றி ராமநாத புரம், ஏர்வாடி, கீழக்கரை ஆகிய பகுதிகளில் இறக்கி விட்டுச்செல்லும் நிலை இருந்து வருகிறது.
இப்படி ஆதரவின்றி விடப்படுபவர்கள் வாகனங்கள் செல்லும் வழியில் உள்ள தடுப்புசுவர்களின் மீது ஏறி ஆபத்தான முறை யில் அமர்வதும் அதில் உறங்குவதுமாக உள்ளனர். சிலர் வீதிகளில் கிடைக்கும் உணவுகளை உண்டு சுற்றி திரியும் நிலை உள்ளது. சிலர் உடல் நிலைபாதிக்கப் பட்டு சாலையோரம் விழுந்து கிடக்கின்றனர்.
மேலும் சிலர் வாகனங்களில் சிக்கி விபத்து ஏற்பட்டு உயிரிழக்கும் சூழ்நிலை உள்ளது. ராமநாதபுரம், கீழக்கரை, ஏர்வாடி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் இது போன்ற மனநிலை பாதிக்கப்பட்ட வர்கள் அதிகம் பேர் நடமாடுகின்றனர்.
இப்படி சாலையில் சுற்றி திரியும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து ஏர்வாடி தர்கா வில் உள்ள மனநல காப்பகத்தை விரிவுபடுத்தி வீதி களில் சுற்றித்திரியும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களை காப்பகத்தில் ஒப்படைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
- மாற்றுவழியில் உடுமலை மருத்துவமனைக்கு வர 110 கிலோ மீட்டர் சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது.
- குருமலை மலைவாழ்கிராமத்தில் வசித்துவந்த முருகன் என்பவ ருக்கு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சுமார் 18க்கும் மேற்பட்ட மலைகிராமங்கள் அமைந்து ள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை உதவிகளை பெற உடுமலை நகர் பகுதிக்குத்தான் வர வேண்டும்.
தொட்டிலில் தூக்கி செல்லும் அவலம்
இந்தநிலையில் சரியான சாலை வசதி இல்லாததால் இந்த மலைகிராமங்களில் வசிக்கும் மலைவாழ்மக்கள் கர்ப்பிணிப்பெண்கள், பாம்பு கடித்தவர்கள், உடல்நிலை சரியில்லாத வர்களை மருத்துவமனைக்கு தொட்டில் கட்டி அழைத்து செல்லும் அவல நிலை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் குருமலை மலைவாழ்கிராமத்தில் வசித்துவந்த முருகன் என்பவ ருக்கு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை தொட்டில் கட்டி தூக்கி கொண்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சாலை அமைக்க கோரிக்கை
மாற்றுவழியில் உடுமலை மருத்துவமனைக்கு வர 110 கிலோ மீட்டர் சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் மலைவாழ் மக்கள் தொட்டில் கட்டியே நோயாளிகளை தூக்கி செல்கின்றனர். திருமூர்த்திமலை முதல் குருமலை வரை 6 கிலோ மீட்டருக்கு சாலை அமைத்தால் 110 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டியது இல்லை. அரை மணி நேரம் முதல் 1மணி நேரத்தில் உடுமலை அரசு மருத்துவமனைக்கு சென்று விடலாம். எனவே மலைவாழ் மக்கள் நலன் கருதி உடனடியாக சாலை அமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.