என் மலர்
உலகம்

நேபாளம் பொதுத்தேர்தல்: பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் முன்னாள் ராப் பாடகர்
- பலேந்திர ஷா, பாராளுமன்றக் கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கான முகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- தேர்தல் ஆணையம் ஒதுக்கிய ‘மணி’ சின்னத்தின் கீழ் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.
நேபாளத்தில், காத்மாண்டு மாநகராட்சி மேயராக இருக்கும் பலேந்திர ஷா, அடுத்த ஆண்டு (2026) மார்ச் 5 நேபாளத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, அவர் மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வதந்திரா கட்சி இணைந்து தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஒரு உடன்படிக்கையை கையெழுத்திட்டனர்.
தீவிர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு உருவான ஏழு அம்ச உடன்படிக்கையின் படி, 35 வயதான பலேந்திர ஷா, பாராளுமன்றக் கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கான முகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த உடன்படிக்கையின்படி, பாலேன் மற்றும் அவரின் குழு, தேர்தல் ஆணையம் ஒதுக்கிய 'மணி' சின்னத்தின் கீழ் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.
பாலேன் என அழைக்கப்படும் பலேந்திர ஷா, அந்த நாட்டின் முன்னாள் ராப் பாடகர் ஆவர்.
Next Story






