search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "generation"

    • அவினாசி திருப்புக்கொளியூர் வாக்சர் மடாலய ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ காமாட்சி தாச சுவாமிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • கார்மேகம் மற்றும் ஆர்.எஸ்.எஸ். கோட்ட தலைவர் ஆம்ஸ்ட்ராங் பழனிச்சாமி முன்னிலை வகித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூரில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் விஜயதசமி அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் ஜில்லா ஆர்.எஸ்.எஸ். (ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம்) சார்பில் நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்ச்சி திருப்பூர் நடராஜன் தியேட்டர் அருகே ஆலங்காடு பகுதியில் தொடங்கியது. அணிவகுப்பை அவினாசி திருப்புக்கொளியூர் வாக்சர் மடாலய ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ காமாட்சி தாச சுவாமிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    அதைத்தொடர்ந்து அணிவகுப்பு ஊர்வலம் கருவம்பாளையம் மேற்கு பிள்ளையார் கோவில், மருக்காடு வீதி, கே.வி.ஆர். நகர் நால்ரோடு வழியாக சென்று செல்லம் நகர் பிரிவில் முடிவடைந்தது. பின்னர் அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்துக்கு திருப்பூர் சிவில் என்ஜினீயர் அசோசியேசன் மற்றும் திருப்பூர் பில்டர்ஸ் அசோசியேசன் சங்க முன்னாள் தலைவர் சண்முகராஜ் தலைமை தாங்கினார். ஆர்.எஸ்.எஸ். மாவட்ட தலைவர் கார்மேகம் மற்றும் ஆர்.எஸ்.எஸ். கோட்ட தலைவர் ஆம்ஸ்ட்ராங் பழனிச்சாமி முன்னிலை வகித்தனர்.

    பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தென்தமிழகம் மாநில அமைப்பாளர் சண்முகம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில் ,விஜயதசமி நாளன்று தொடங்கப்பட்ட இயக்கம் தான் இந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கம். சனாதன தர்மம் பற்றி சிலர் தவறான கருத்துக்களை கூறி வருகின்றனர். ஆனால் அவ்வாறு இல்லை. யார் என்ன செய்தாலும் சனாதன தர்மம் தலைமுறை தலைமுறையாக தொடரும்.

    ஆர்.எஸ்.எஸ். இயக்கம் என்பது யாரையோ எதிர்ப்பதற்காகவோ, வெறுப்பதற்காகவோ, நாட்டை விட்டு விரட்டுவதற்காகவோ தொடங்கப்பட்ட இயக்கம் அல்ல. அது சாதி, மத, மொழி வேறுபாட்டால் பிரிந்து கிடக்கும் இந்து சமுதாய மக்களை ஒன்றிணைக்க தொடங்கப்பட்ட சங்கம் என்றார். இதில் ஏராளமான ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    தேர்தலை கருத்தில் கொள்ளாமல் அடுத்த தலைமுறையை கருத்தில் கொண்டு மோடி ஆட்சி நடத்துகிறார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று இல.கணேசன் கூறினார். #pmmodi #ilaganesan

    மதுரை:

    பாரதீய ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் எம்.பி. மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஒருவர் தமிழ் பற்றாளராக இருந்தால் அவர் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றும் தேசிய இயக்கங்களை சேர்ந்தவர்கள், தமிழ் பற்றாளர்கள் அல்ல என்றும் தவறான கருத்து நிலவி வந்தது.

    அதனை மாற்றத்தக்க வகையில் செயல்பட்டவர் வ.உ.சி. அவரது நினைவு நாளை அனுசரிப்பதன் வாயிலாக தேச நலனுக்காக பாடுபடும் இளைய தலை முறையினரிடம் ஊக்கம், உற்சாகத்தை ஏற்படுத்த முடியும்.

    தமிழக அரசு கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்ட விதம் பாராட்டுக்குரியது. அதுபோல் எதிர்க்கட்சிகள், கட்சி பேதங்களை மறந்து முதல் முறையாக தமிழக அரசுக்கு பாராட்டுகள் தெரிவித்துள்ளன. அவர்களுக்கும் என் பாராட்டு தல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழக அரசு கஜா புயல் விவகாரத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எத்தகைய வேகத்துடன் மேற்கொண்டதோ, அதேபோல் நிவாரண உதவி வழங்குவதிலும் வேகமாக செயல்பட வேண்டும்.


    நரேந்திர மோடி பிரதமராக உள்ளார் என்பதையும் மறந்து ராகுல் காந்தி தரக்குறைவாக விமர்சனம் செய்து வருகிறார். காந்தி, காமராஜர் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சி இன்றைக்கு இல்லை. நெருக்கடி நிலையின்போது அது கலைக்கப்பட்டு விட்டது.

    தற்போதுள்ளது இந்திரா காங்கிரஸ் கட்சி. அதில் இருக்கும் ‘ஐ’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அகங்காரம் என்று பொருள்.

    கேரள முதல்வர் பினராயி விஜயன், கம்யூனிஸ்டு கட்சியின் பிரதிநிதியாக செயல்படக்கூடாது. சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்தியே தீருவேன் என்ற பிடிவாதத்துடன் செயல்பட்டு வருகிறார். இதனால் மக்கள் கொதித்துப் போய் உள்ளனர்.

    சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் வி‌ஷயத்தில் தேவசம் போர்டு, சுப்ரீம் கோர்ட்டில் காலஅவகாசம் கோரியிருப்பது ஆறுதல் தருகிறது. சுப்ரீம் கோர்ட்டு இனிமேலாவது இந்து மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும். இதற்கு அய்யப்பன் அவர்களுக்கு நல்ல புத்திய தர வேண்டும்.

    தமிழகத்தில் 20 தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட பா.ஜனதா தயாராக உள்ளது. இதற்காக ஆங்காங்கே பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எங்களைப் பொறுத்தவரை யார் வேட்பாளர், எந்த கூட்டணி என்பது முக்கியமல்ல.

    பிரதமர் மோடி 4½ ஆண்டு காலம் ஊழலற்ற ஆட்சி தந்துள்ளார். அடுத்த தேர்தலை கருத்தில் கொள்ளாமல் அடுத்த தலைமுறையை கருத்தில் கொண்டு ஆட்சி நடத்தி வருகிறார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை மோடி நிறைவேற்றி விட்டார். இன்னும் ஒரு சில நிலுவையில் உள்ளன. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதனை நிறைவேற்றுவோம். 2019 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் பா.ஜனதா ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #pmmodi #ilaganesan

    ஆண்டிப்பட்டி பகுதியில் காற்றாலை மூலம் மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது.
    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி, ஜி.உசிலம்பட்டி, கண்டமனூர், ஆத்தங்கரைப்பட்டி, கோவிந்தநகரம், சீப்பாலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட காற்றாலைகள் செயல்பட்டு வருகின்றன. பொதுவாக, கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள காற்றாலைகளில் மின்சார உற்பத்தி உச்சக்கட்டத்தில் இருக்கும்.

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் மே மாத இறுதியில் தென்மேற்கு திசையில் இருந்து காற்று வீசத்தொடங்கி விடும். அந்த நேரத்தில் தேனி மாவட்டத்தில் செயல்படும் காற்றாலைகளில் மின்சார உற்பத்தி அதிகரிக்கும்.

    இந்தநிலையில் தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் தென்மேற்கு திசையில் இருந்து காற்று வீசத்தொடங்கி உள்ளது. இதனையடுத்து காற்றாலைகளில் மின்சார உற்பத்தியும் தொடங்கியது. தென்மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகம் ஒரு வினாடிக்கு 8 மீட்டர் முதல் 9 மீட்டர் என்ற அளவில் உள்ளதாக காற்றாலை பணியாளர்கள் தெரிவித்தனர்.

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் போது, தேனி மாவட்டத்தில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் என்றும் கூறினர்.நேற்று முன்தினம் இரவு முதல் தென்மேற்கு காற்று வீசத் தொடங்கியதால், காற்றாலைகளில் மின்சார உற்பத்தி அதிகரித்து வருகிறது.

    நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரையில் ஒரு காற்றாலையின் மின்சார உற்பத்தி 16 ஆயிரம் யூனிட் என்ற அளவில் காணப்பட்டது. இனிவரும் நாட்களில் தென்மேற்கு பருவக்காற்றின் வேகமும், காற்றாலை மின்சார உற்பத்தியும் கணிசமாக அதிகரிக்கும் என்பதால், காற்றாலை மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்தும் வகையில் மின்வாரியத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
    ×