என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மடகாஸ்கர் அதிபர்"

    • ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றும் சூழல் ஏற்பட்டது.
    • பலரும் ஆதரவு அளித்ததால் போராட்டங்களால் நாடு ஸ்தம்பித்தது.

    கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மடகாஸ்கரில் அதிபர் Andry Rajoelina தலைமையிலான ஆட்சிக்கு எதிராக Gen-Z போராட்டம் நடைபெற்று வருகிறது. தண்ணீர், மின் பற்றாக்குறை காரணமாக தொடங்கிய போராட்டம் தீவிரமடைந்தது. இதனை தொடர்ந்து மடகாஸ்கர் ராணுவத்தின் 'CAPSAT பிரிவு' முழு ராணுவத்தையும் கைப்பற்றி அதிபருக்கு எதிராக திரும்பியது. இதனால் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றும் சூழல் ஏற்பட்டது.

    இதனிடையே, Gen-Z போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள், வர்த்தக சங்கங்கள் என பலரும் ஆதரவு அளித்ததால் போராட்டங்களால் நாடு ஸ்தம்பித்தது. 16 ஆண்டுகளில், ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் தங்களை வளப்படுத்திக் கொள்வதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை, அதே நேரத்தில் மக்கள் ஏழைகளாகவே இருக்கிறார்கள் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர்.

    இந்த நிலையில், Gen-Z போராட்டம் தீவிரம் அடைந்ததால் அபதிர் Andry Rajoelina நாட்டை விட்டு வெளியேறினார்.

    ஆட்சி அதிகாரத்தை பலவந்தமாக கைப்பற்றும் முயற்சி நடந்து வருவதாக மடகாஸ்கர் அதிபர் குற்றம் சாட்டியிருந்த நிலையில், கடந்த சில தினங்களாக பொது இடங்களில் அதிபர் காணப்படாததால் அவர் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.

    • தண்ணீர், மின் பற்றாக்குறை காரணமாக Gen-Z போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மடகாஸ்கர் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மடகாஸ்கரில் அதிபர் Andry Rajoelina தலைமையிலான ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் Gen-Z போராட்டத்திற்கு அந்நாட்டு ராணுவம் ஆதரவு தெரிவித்துள்ளது.

    தண்ணீர், மின் பற்றாக்குறை காரணமாக தொடங்கிய போராட்டம் தீவிரமடைந்தது. இந்நிலையில், மடகாஸ்கர் ராணுவத்தின் 'CAPSAT பிரிவு' முழு ராணுவத்தையும் கைப்பற்றி அதிபருக்கு எதிராக திரும்பியுள்ளது. இதனால் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஆட்சி அதிகாரத்தை பலவந்தமாக கைப்பற்றும் முயற்சி நடந்து வருவதாக மடகாஸ்கர் அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்.

    அண்மையில் நேபாளத்தில் நடைபெற்ற Gen-Z போராட்டத்தில் ஆட்சி கவிழ்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    மடகாஸ்கர் அதிபர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் 55.66 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்த ஆன்ட்ரி ரஜோலினா இன்று பதவியேற்றார். #AndryRajoelina #MadagascarPresident
    அன்டனானாரிவோ:

    ஆப்பிரிக்க கண்டத்தின் தென்கிழக்கே இந்தியப் பெருங்கடல் பகுதியிலுள்ள தீவு நாடுகளில் ஒன்றான மடகாஸ்கர் நாட்டின் அதிபர் பதவிக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு கடந்த 8-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    இந்த தேர்தலில் 55.66 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்த ஆன்ட்ரி ரஜோலினா நேற்று அந்நாட்டின் அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.



    தனது ஆட்சிக்காலத்தில் நாட்டில் உள்ள 6 மாகாணங்களும் சரிசமமான வளர்ச்சியை பெறும் என தனது பதவியேற்பு விழா பேருரையில் குறிப்பிட்ட ஆன்ட்ரி ரஜோலினா, சூரிய ஆற்றலின் மூலம் மின்சார உற்பத்தி மையங்கள் நிறுவப்பட்டு, மக்களுக்கு மிககுறைவான விலையில் வினியோகிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

    மடகாஸ்கர் நாட்டில் சுதந்திரத்துக்கு பின்னர் தொடர்ந்து மூன்றாவது முறையாக சுமுகமான முறையில் இங்கு ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததன் மூலம் உலக அரசியல் வரலாற்றில் நமது நாடு தனி முத்திரையை பதித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். இவ்விழாவில் சுமார் 35 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். #AndryRajoelina #MadagascarPresident
    ×