என் மலர்tooltip icon

    உலகம்

    • இளைஞர்களை திரட்டிப் போராடியதில் பாலேந்திர ஷா முக்கியப் பங்கு வகித்தார்.
    • கர்நாடகாவில் முதுகலை பயின்றார்.

    நேபாளத்தில் சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. கடந்த ஆண்டு ஜென் இசட் இளம் தலைமுறையினர் நடத்திய போராட்டத்தால் அப்போதைய பிரதமா் கே.பி.சா்மா ஒலி பதவி விலகலுக்கு பிறகு அங்கு தேர்தல் நடந்தது. 

    பாராளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபையில் மொத்தம் 275 இடங்கள் உள்ளன. இதில் 165 இடங்கள் நேரடித் தோ்தல் மூலமும், மீதமுள்ள 110 இடங்களுக்கு விகிதாசார பிரதிநிதித்துவ முறையிலும் உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்டுவர். பெரும்பான்மைக்கு 138 இடங்கள் தேவை.

    தேர்தலில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சார்பில் கே.பி.சர்மா ஒலியும், நேபாளி காங்கிரஸ் சாா்பில் அதன் தலைவா் ககன் தாபாவும் பிரதமா் வேட்பாளா்களாகக் களமிறங்கினா்.

    ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி சாா்பில் 35 வயதான காத்மாண்டு பெருநகர மேயா் பாலேந்திர ஷா பாலன் பிரதமா் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார்.

    நேபாளத்தின் செல்வாக்குமிக்க தலைவரான கே.பி. சர்மா ஒலியை அவரது சொந்தத் தொகுதியான ஜாப்பா-5 இல் பாலேந்திர ஷா மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

    ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி சாா்பில் போட்டியிட்ட பாலேந்திர ஷா 68,348 வாக்குகள் பெற்ற நிலையில் சர்மா ஒலி 18,734 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதன் மூலம் மூத்த தலைவர், முன்னாள் பிரதமர் சர்மா ஒலியை 35 வயது முன்னாள் மேயர் 49,614 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

    74 வயதான ஒலி, 1990 முதல் இந்தத் தொகுதியில் ஏழு தேர்தல்களில் ஆறில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 4 முறை நேபாள் பிரதமர் பதவியில் இருந்துள்ளார். 

    இதற்கிடையே நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் 165 இடங்களில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் பாலேந்திர ஷாவின் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அக்கட்சி ஆட்சி அமைக்க உள்ள நிலையில் பாலேந்திர ஷா பிரதமர் பொறுப்பேற்க உள்ளார்.

    யார் இந்த பாலேந்திர ஷா?

    பாலேந்திர ஷா அடிப்படையில் ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியர் ஆவார்.  இசை மீதான ஆர்வத்தால் ராப் பாடகர் ஆகி அதன் மூலம் நேபாள் இளைஞர்கள் மத்தியில் புகழ் பெற்றார்.  

    இந்தியாவின் கர்நாடகாவில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பாலேந்திர ஷா முதுகலை பட்டம் பெற்றவர்.

    2022 இல் காத்மாண்டு மாநகராட்சி மேயராக பாலேந்திர ஷா சுயேச்சையாக வென்று சாதனை படைத்தார்.

    2026 பொதுத்தேர்தலில் போட்டியிட கடந்த ஜனவரி மாதம் மேயர் பதவியைத் துறந்து, ராஷ்ட்ரிய ஸ்வதந்திர கட்சியில் இணைந்தார்.

    2025 இல் கே.பி. ஒலி அரசு சமூக வலைதளங்களுக்குத் தடை விதித்தபோது, அதற்கு எதிராக இளைஞர்களைத் திரட்டிப் போராடியதில் பாலேந்திர ஷா முக்கியப் பங்கு வகித்தார். அந்தப் போராட்டமே ஒலி அரசின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.

    இந்த தேர்தல் முடிவு ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்கு எதிராக இளைஞர்கள் அளித்த தீர்ப்பாக இது பார்க்கப்படுகிறது.  

    • நியூ யார்க்கின் மேயராக பதவியேற்ற முதல் முஸ்லீம் மம்தானி.
    • அந்த நபர் இரண்டாவது குண்டைப் பற்றவைத்து ஓடிவந்து வீச முயன்றபோது சுற்றி வளைக்கப்பட்டார்.

    அமெரிக்காவின் நியூ யார்க் நகரின் மேயர் தேர்தலில் வெற்றி பெற்று ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோரான் மம்தானி கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார்.

    நியூ யார்க்கின் மேயராக பதவியேற்ற முதல் முஸ்லீம் என்ற பெருமையை அவர் பெற்றார். அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கடுமையாக மம்தானி விமர்சித்தும் வருகுறார்.

    இந்த சூழலில் நியூ யார்க்கில் மம்தானி இல்லத்திற்கு வெளியே, வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரான் போர் நடந்து வரும் சூழலில் மம்தானி இல்லத்தின் முன் முஸ்லிம்களுக்கு எதிராக வலதுசாரிகள் நேற்று போராட்டம் நடத்தினர்.

    அமெரிக்காவை இஸ்லாம் மயமாக்குவதை நிறுத்த வேண்டும், நியூ யார்க்கில் பொது இடங்களில் தொழுகை நடத்தும் உரிமையை பறிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

    அப்போது போராட்டக்காரர்கள் இருந்த திசையை நோக்கி ஒரு மர்ம நபர் வெடிகுண்டை வீசியுள்ளார்.

    முதல் குண்டு காவல்துறையினருக்கு சில அடி தூரத்தில் விழுந்து அணைந்து போனது. உடனே குண்டு வீசிய நபர் அங்கிருந்து ஓடிச் சென்று மற்றொரு நபரிடம் இருந்து இரண்டாவது வெடிகுண்டைப் பெற்றார்.

    அந்த நபர் இரண்டாவது குண்டைப் பற்றவைத்து ஓடிவந்து வீச முயன்றபோது, போலீசார் அந்த இடத்தைச் சுற்றி வளைத்து இருவரையும் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களில் குண்டை வீசியவர் 18 வயது அமீர் பாலத் மற்றும் அவருக்கு உதவியவர் 19 வயது இப்ராஹிம் நிக் என்பது தெரியவந்துள்ளது.

    குண்டு வீசப்பட்ட போது மேயர் மம்தானியும் அவரது மனைவி ரமா துவஜியும் வீட்டில் இருந்தார்களா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

    இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் மேயர் மீதான கொலை முயற்சி என்று வேகமாகப் பரவி வருகிறது.

    கைது செய்யப்பட்டவர்களின் உண்மையான நோக்கம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • கப்பல்கள் கடலில் செல்ல Marine Insurance அவசியம்.
    • ஹார்முஸ் ஜலசந்தி வழியில் கப்பல்களின் இன்சூரன்ஸ் இப்போது பலமடங்கு அதிகரிக்கும்.

    மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல முயலும் எந்தவொரு கப்பலும் தீயிட்டு கொளுத்தப்படும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது

    உலகின் ஒட்டுமொத்த எண்ணெய் தேவையில் ஐந்தில் ஒரு பங்கு, அதாவது 20% இந்தப் பாதை வழியாகவே செல்கிறது. தினமும் சுமார் 2 கோடி பேரல் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் இதன் வழியாகக் கொண்டு செல்லப்படுகிறது.

    ஹார்முஸ் ஜலசந்தியை இரான் முடக்கியால் என்ன ஆகும்?

    ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளதால் அவ்வழியே செல்லும் எல்லா கப்பல்களையும் அவர்கள் நிறுத்த வேண்டியதில்லை.

    அதற்கு மாறாக கடலில் குண்டு வைக்கலாம். அவ்வழியே வரும் கப்பல்கள் மீது டிரோன் தாக்குதல் நடத்தலாம் அல்லது கப்பல்களை சிறைபிடிக்கலாம். இதனால் அந்த பாதை வழியிலான கப்பல் போக்குவரத்து அதிக ஆபத்து நிறைந்ததாக ஆகிவிடும்.

    கப்பல்கள் கடலில் செல்ல Marine Insurance அவசியம். இப்போது ஹார்முஸ் ஜலசந்தி ஆபத்தான பாதையாக மாறியுள்ளதால் அப்பகுதி செல்லும் கப்பல்களின் இன்சூரன்ஸ் இப்போது பலமடங்கு அதிகரிக்கும். கிட்டத்தட்ட இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை 25 மடங்கு கூட அதிகரிக்கலாம்.

    இன்சூரன்ஸ் பிரீமியம் அதிகரித்தால் அந்த பாதை வழியாக கப்பல் நிறுவனங்கள் செல்ல விரும்பாது. இதனால் எண்ணெய் போக்குவரத்து குறைந்து பெட்ரோல் டீசல் விலை தாறுமாறாக உயரும்.

    அதாவது ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முழுவதுமாக முடக்காமல் அச்சுறுத்தல் கொடுத்தாலே கப்பல்களுக்கான இன்சூரன்ஸ் தொகை உயர்ந்துவிடும். இதனால் கப்பல் போக்குவரத்து குறைந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்து விடும்.

    ஆதலால் போர் என்பது வெறும் குண்டு மட்டும் அல்ல, சில நேரங்களில் இத்தகைய பொருளாதார கணக்குகளும் போருக்கான பெரிய ஆயுதமாக பயன்படுத்தப்படும் என்பதற்கு ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கிய ஈரானின் நடவடிக்கை நமக்கு உணர்த்துகிறது. 

    • அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவை இணைந்து ஈரான் மீது போர் தொடுத்துள்ளன.
    • இஸ்ரேல் மீது மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்திவருகிறது.

    டெஹ்ரான்:

    ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு தாக்குதல் 8-வது நாளாக நீடிக்கிறது. இதற்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

    மேலும், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், சவுதி அரேபியா, கத்தார் போன்ற வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் வளங்கள், ஹோட்டல்கள், விமான நிலையங்கள் போன்றவற்றை ஈரான் கடுமையாக தாக்கி வருகிறது. ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போர் எட்டாவது நாளாக தொடர்கிறது.

    இந்நிலையில், ஜோர்டானின் விமானப் படைத்தளத்தில் உள்ள அமெரிக்காவின் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை இயக்குவதற்காக 2700 கோடி ரூபாய் மதிப்பிலான ரேடார் அமைப்புகளை ஈரான் தாக்கி அழித்தது.

    தென் கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் 8 தாட் அமைப்புகளைக் அமெரிக்கா கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஈரானின் மன்னிப்புக்குப் பிறகு, மத்திய கிழக்கு நாடுகள் நன்றி ஜனாதிபதி டிரம்ப் என்று கூறியுள்ளனர்.
    • அதற்கு உங்களை வரவேற்கிறோம் என்று கூறியுள்ளேன்- டிரம்ப்.

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான சண்டையில் ஈரான் வளைகுடா நாடுகள் மீது ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் கடுமையான வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் வளங்கள், பொது இடங்கள், விமான நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக துபாய் விமான நிலையம் தாக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று ஈரான் அதிபர் மசூத் பெசாஸ்கியன் வளைகுடா நாடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்டார். ஈரான் மீது அங்கிருந்து தாக்குதல் நடத்தப்படாத வரை நாங்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில் ஈரான் அதிபர் மன்னிப்பு கேட்டது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது:-

    தாக்குதலுக்கு உள்ளாகி தோற்கடிக்கப்பட்ட ஈரான், மன்னிப்பு கேட்டு அதன் மத்திய கிழக்கு அண்டை நாடுகளிடம் சரணடைந்துள்ளது. மேலும் இனி அவர்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டோன் என்று உறுதியளித்துள்ளது.

    இந்த வாக்குறுதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதலின் காரணமாக மட்டுமே ஈரானால் அளிக்கப்பட்டுள்ளது.

    ஈரான் மத்திய கிழக்கைக் கைப்பற்றி ஆட்சி செய்ய விரும்புகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் இதுவரை தோல்வியை சந்திக்காத ஈரான், சுற்றியுள்ள மத்திய கிழக்கு நாடுகளிடம் தோற்றது இதுவே முதல் முறை.

    ஈரானின் மன்னிப்புக்குப் பிறகு, மத்திய கிழக்கு நாடுகள் நன்றி ஜனாதிபதி டிரம்ப் என்று கூறியுள்ளனர். அதற்கு உங்களை வரவேற்கிறோம் என்று கூறியுள்ளேன்.

    சனிக்கிழமை (அமெரிக்கா நேரப்படி) ஈரான் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்படும். ஈரானின் மோசமான நடத்தை காரணமாக இதுவரை இலக்காக இல்லாத பகுதிகள் தாக்கப்படும்.

    இவ்வாறு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்று டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில், ஒருபோதும் சரணடையமாட்டோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

    • வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் தொடராது என ஈரான் அதிபர் தெரிவித்துள்ளார்.
    • இருந்தபோதிலும் ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தல் இருந்து கொண்டுதான் உள்ளது.

    ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு தாக்குதல் இன்றுடன் 8-வது நாளாக நீடிக்கிறது. இதற்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

    மேலும், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், சவுதி அரேபியா, கத்தார் போன்ற வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் வளங்கள், ஹோட்டல்கள், விமான நிலையங்கள் போன்றவற்றை ஈரான் கடுமையாக தாக்கி வருகிறது.

    இந்த நிலையில் அமெரிக்காவின் தாக்குதலுக்கு உதவாத வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம். தாக்குதல் நடத்தியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக ஈரான் அதிபர் மசூத் பெசாஸ்கியன் தெரிவித்திருந்தார்.

    அவர் மன்னிப்பு கேட்ட நிலையில், டிரோன் தாக்குதல் வளைகுடா நாடுகள் மீது நீடித்தன. இந்த நிலையில் கத்தார் அரசு பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கான உயர் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

    கத்தார் உள்துறை அமைச்சர் அந்நாட்டு மக்களுக்கு செல்போன் மூலம் புதிய எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் பாதுகாப்பு அச்சுறுத்துதலுக்கான உயர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்கள் தொடர்ந்து பூட்டிய வீட்டிற்குள் இருக்க வலியுறுத்தியுள்ளார். இன்று 2-வது நாளாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஐக்கிய அரபு அமீரகம் "ஈரானின் ஏவுகணை அச்சுறுத்தலுக்கு வான் பாதுகாப்பு பதில் கொடுத்து வருகிறது. மக்கள் தொடர்ந்து பாதுகாப்பான இடத்தில் இருக்கவும். மக்கள் எச்சரிக்கை மற்றும் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் உள்ள அப்டேட்ஸ்களை பின்பற்ற வேண்டும்" என கேட்டுக்கொண்டுள்ளது.

    • பயணிகள் பாதுகாப்பு கருதி ரெயில் சுரங்கப்பாதைகளுக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
    • மத்திய கிழக்கு நாடுகள் மீதான தாக்குதல்களுக்கு மன்னிப்பு கேட்டார்.

    மத்திய கிழக்கில் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் எட்டாவது நாளை எட்டியுள்ளது.

    ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல் தொடர்ந்து வரும் சூழலில் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மற்றும் தூரகங்கள் மீது ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில் இன்று துபாயில் பல இடங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. குறிப்பாக உலகின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமான துபாய் சர்வதேச விமான நிலையமும் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது.

    துபாய் விமான நிலையத்தின் மேல் குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து கரும்புகை சூழ்ந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

    விமான நிலையத்தில் எச்சரிக்கை ஒலி கேட்டவுடன், அங்கிருந்த பயணிகள் பாதுகாப்பு கருதி ரெயில் சுரங்கப்பாதைகளுக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

    துபாய் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில் சில மணி நேரங்களுக்கு பின் பகுதி அளவு செயல்பட தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    எமிரேட்ஸ் நிறுவனம் தனது அனைத்து விமானங்களையும் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்துள்ளது.

    இதற்கிடையே துபாய் அரசு தனது வான் பாதுகாப்பு அமைப்பை முடுக்கிவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

    நகரில் விழுந்த ஏவுகணைச் சிதறல்களால் சிறிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டதாகவும், ஆனால் உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

    முன்னதாக சில தினங்கள் முன் ஈரான் நடத்திய தாக்குதலில் பாம் ஜுமேராவில் உள்ள சொகுசு குடியிருப்புப் பகுதி புர்ஜ் அல் அரப் ஹோட்டல் அமெரிக்கத் தூதரகம் ஆகியவை பாதிப்புக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

    மத்திய கிழக்கு நாடுகள் மீதான தாக்குதல்களுக்கு மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான், அந்த நாடுகள் ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தாதவரை அந்த நாடுகள் மீது இனி நேரடி தாக்குதல் நடத்த மாட்டோம் என இன்று உறுதி அளித்துள்ளார்.  

    • இந்த நடவடிக்கை பெரும் விமர்சனங்களுக்கும் உள்ளானது.
    • அரசாங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் அமைதி வாரியம் பாலஸ்தீனியர்களுக்கு பயனளிக்கவில்லை என்றால் அதில் இருந்து இந்தோனேசியா விலகும் என்று அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாண்டோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்தோனேசிய அரசாங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரைத் தொடர்ந்து இந்தோனேசியா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் ஆயிரக்கணக்கான துருப்புக்களை காசாவிற்கு அனுப்புவதாக உறுதியளித்ததற்காக முஸ்லிம் குழுக்களிடமிருந்து முன்னாள் ஜெனரலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், இவரது இந்த நடவடிக்கை பெரும் விமர்சனங்களுக்கும் உள்ளானது.

    அமைதி வாரிய உறுப்பினராக இந்தோனேசியா இணைந்தால், காசாவில் நீடித்த அமைதி அடைவதை நோக்கமாகக் கொண்டிருப்பதாக உள்ளூர் முஸ்லிம் குழுக்களின் தலைவர்களிடம் பிரபோவோ கடந்த வாரம் தெரிவித்ததாக அந்நாட்டு அரசாங்க தொடர்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாலஸ்தீனியர்களுக்கு நன்மைகளை வழங்காவிட்டால் அல்லது இந்தோனேசியாவின் தேசிய நலன்களுடன் ஒத்துப்போகவில்லை என்றால், வாரியத்திலிருந்து விலகுவோம் என்று அவர் மேலும் கூறினார். இதனை இஸ்லாமிய சகோதரத்துவ முன்னணியின் ஹனிஃப் அலடாஸை மேற்கோள் காட்டி ஒரு அறிக்கை கூறியுள்ளது.

    • தங்க ஏற்றுமதிகளுக்கான போக்குவரத்து மையமாக துபாய் செயல்பட்டு வருகிறது.
    • புதிய வர்த்தகங்களை மேற்கொள்ள தயங்குகின்றனர்.

    ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்ட நிலையில் ஈரான் புரட்சிகர ராணுவம் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க ராணுவ தளங்கள், தூதரகங்கள் மற்றும் விமான நிலையங்களை தாக்கி வருகிறது.

    உலகின் 20 சதவீத எண்ணெய் தேவைக்கான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.

    இதற்கிடையே மத்திய கிழக்கு நாடான துபாயில் ஏற்றுமதி செய்யமுடியாமல் தேக்கமடைந்த தங்கம் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    ஆசிய நாடுகளுக்கு தங்கத்தை சுத்திகரித்து ஏற்றுமதி செய்யும் மையமாகவும், பிரிட்டன், சுவிட்சர்லாந்து ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் தங்க ஏற்றுமதிகளுக்கான போக்குவரத்து மையமாகவும் துபாய் செயல்பட்டு வருகிறது.

    இந்த சூழலில் மத்திய கிழக்கு மீது ஈரான் தாக்குதல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பாலான வான்வழிப் பாதைகள் மூடப்பட்டுள்ளன.

    இதனால் அங்கிருந்து தங்கத்தின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாலும் நிச்சயமற்ற சூழல் காரணமாகவும் வாடிக்கையாளர்களும் வணிக நிறுவனங்களும் புதிய வர்த்தகங்களை மேற்கொள்ள தயங்குகின்றனர்.

    இயல்பு நிலை எப்போது திரும்பும் என தெரியாததால் காலவரையற்ற சேமிப்பு மற்றும் நிதி செலவுகளைக் குறைப்பதற்காக துபாய் வர்த்தகர்கள் தங்கத்தின் விலையில் தள்ளுபடிகளை அறிவித்துள்ளனர்.

    அங்கு உலகளாவிய அளவுகோல் விலையில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 30 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.2700) வரை தள்ளுபடி வழங்குவதாகக் கூறப்படுகிறது. 

    • ஈரான் மக்கள் சரணடைய வேண்டும் என்ற எதிரிகளின் ஆசை அவர்களின் கல்லறைகளுக்கே செல்லும்.
    • தெஹ்ரானில் உள்ள சர்வதேச விமான நிலையம் தீப்பிடித்து கடும் சேதத்தை சந்தித்துள்ளது.

    ஈரான் மீதான இஸ்ரேல் - அமெரிக்க தாக்குதல் ஒரு வாரத்தை எட்டியுள்ளது.

    ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்ட நிலையில் ஈரான் புரட்சிகர ராணுவம் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க ராணுவ தளங்கள், தூதரகங்கள் மற்றும் விமான நிலையங்களை தாக்கி வருகிறது.

    இந்நிலையில் அண்டை நாடுகள் மீதான தாக்குதல்களுக்கு ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் மன்னிப்பு கோரியுள்ளார்.

    அண்டை நாடுகளிலிருந்து ஈரான் மீது நேரடித் தாக்குதல் நடத்தப்படாத வரை, அந்த நாடுகளை இலக்காகக் கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தாது என்ற முடிவுக்கு வந்துள்ளதாக அவர் உறுதி அளித்துள்ளார்.

    ஈரானின் இடைக்காலத் தலைமை கவுன்சில் நேற்று இந்த முடிவிற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    அதே சமயம், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிடம் ஈரான் ஒருபோதும் சரணடையாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

    "ஈரான் மக்கள் சரணடைய வேண்டும் என்ற எதிரிகளின் ஆசை அவர்களின் கல்லறைகளுக்கே செல்லும்," என்று அவர் அரசு தொலைக்காட்சியில் ஆவேசமாகப் பேசினார்.

    ஈரான் அதிபர் அறிவிப்பால் மத்திய கிழக்கு நாடுகள் மீதான ஈரானின் தாக்குதல் படிப்படியாக வரும் நாட்களில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆனால் இதற்கிடையே ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேலும் அமெரிக்காவும் தொடர்ந்து வருகிறது. இன்று இஸ்ரேல் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதில் தெஹ்ரானில் உள்ள சர்வதேச விமான நிலையம் தீப்பிடித்து கடும் சேதத்தை சந்தித்துள்ளது. இஸ்ரேல் - அமெரிக்கா கூட்டு தாக்குதலால் ஈரானில் இதுவரை 1000-திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் ஈரான் தொடக்க பள்ளி மீதான அமெரிக்காவின் தாக்குதலில் உயிரிழந்த 160 சிறுமிகளும் அடங்குவர்.  

    • அமெரிக்காவிடம் இருந்து எண்ணெய் வாங்க முடிவு செய்தனர்.
    • எண்ணெய் விலைகளை குறைக்க உதவும் குறுகிய கால நடவடிக்கைகளை நாங்கள் செயல்படுத்தி உள்ளோம் என்றார்.

    ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்திய பொருட்கள் மீதான வரியை 50 சதவீதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உயர்த்தினார்.

    அதன்பின் இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டதால் இந்தியா மீதான வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. மேலும் ரஷிய எண்ணெயை வாங்குவதை இந்தியா குறைத்துவிட்டது என்று டிரம்ப் தெரிவித்தார்.

    இதற்கிடையே ஈரான் மீது அமெரிக்கா தொடுத்துள்ள போர் காரணமாக எரிசக்தி தட்டுப்பாட்டை தவிர்க்க ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை 30 நாட்களுக்கு இந்தியா கொள்முதல் செய்து கொள்ளலாம் என்று அமெரிக்கா அறிவித்தது.

    இந்த நிலையில் அமெரிக்க கருவூலத்துறை மந்திரி ஸ்காட் பெசென்ட் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    உலகில் எண்ணெய் நன்றாக விநியோகிக்கப்படுகிறது. நேற்று எங்கள் நட்பு நாடான இந்தியா ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்க கருவூலத்துறை ஒப்புதல் அளித்தது. இந்தியர்கள் மிகவும் நல்ல நடிகர்களாக உள்ளனர்.

    சில நாட்களுக்கு முன்பு ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துமாறு நாங்கள் அவர்களிடம் கேட்டிருந்தோம். அதை அவர்கள் செய்தார்கள். அமெரிக்காவிடம் இருந்து எண்ணெய் வாங்க முடிவு செய்தனர்.

    ஆனால் உலகெங்கிலும் உள்ள தற்காலிக எண்ணெய் விநியோக பாதிப்பால் ரஷிய எண்ணெயை வாங்கி கொள்ள நாங்கள் இந்தியா க்கு அனுமதி வழங்கி உள்ளோம். மற்ற ரஷிய எண்ணெய் மீதான தடையை நாங்கள் ரத்து செய்யலாம் என்றார்.

    அதேபோல் அமெரிக்க எரிசக்தித்துறை மந்திரி கிறிஸ் ரைட் கூறும்போது, இந்தியாவில் உள்ள எங்கள் நண்பர்கள் ஏற்கனவே தெற்காசியா முழுவதும் கப்பல்களில் உள்ள ரஷிய எண்ணெயை எடுத்துச் செல்லவும், அதை சுத்திகரிக்கவும், விரைவாக சந்தைக்கு நகர்த்தவும் அமெரிக்கா அனுமதிக்கிறது. எண்ணெய் விலைகளை குறைக்க உதவும் குறுகிய கால நடவடிக்கைகளை நாங்கள் செயல்படுத்தி உள்ளோம் என்றார்.

    ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெயை வாங்க அனுமதிக்க அமெரிக்கா யார் என்று கேட்டு மத்திய அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்பு தடுக்க முயன்றது.
    • ஓடுதளத்தில் நின்றிருந்த பல விமானங்கள் எரிந்தன.

    ஈரான் மீதான இஸ்ரேல் - அமெரிக்க தாக்குதலும், பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலும் ஒரு வாரத்தை எட்டியுள்ளது.

    இந்நிலையில் இன்று ஈரான் தலைநகர் தெஹ்ரானை குறிவைத்து மீண்டும் தாக்குதல் தாக்குதல் நடந்து வருகிறது.

    தெஹ்ரானில் உள்ள மிக முக்கியமான மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் ஏவுகணை மழை பொழிந்தன.

    இந்தத் தாக்குதலால் விமான நிலையத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. ஓடுதளத்தில் நின்றிருந்த பல விமானங்கள் எரிந்து சாம்பலாகின. அந்தப் பகுதி முழுவதும் அடர்ந்த கரும்புகை சூழ்ந்துள்ளது.

    விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்து பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர்.

    இஸ்ரேலிய போர் விமானங்களைத் தடுக்க ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்பு முயன்ற போதிலும், அது பலனளிக்கவில்லை எனத் தெரிகிறது.

    தாக்குதலைத் தொடர்ந்து மெஹ்ராபாத் விமான நிலையத்திலிருந்து அனைத்து விமானப் போக்குவரத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

    இந்தச் சம்பவத்தில் ஏற்பட்டுள்ள உயிர்ச்சேதங்கள் குறித்து ஈரான் அரசு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

    மெஹ்ராபாத் விமான நிலையம் பயணிகள் போக்குவரத்திற்கு மட்டுமின்றி, ஈரானின் ராணுவப் போக்குவரத்துக்கும் மிக முக்கியமான மையமாகும். 

    ×