தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை.. கடும் விலையேற்றத்துக்கு மத்தியில் இன்ப அதிர்ச்சி | #GOLD

தங்க ஏற்றுமதிகளுக்கான போக்குவரத்து மையமாக துபாய் செயல்பட்டு வருகிறது.புதிய வர்த்தகங்களை மேற்கொள்ள தயங்குகின்றனர்.
தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை.. கடும் விலையேற்றத்துக்கு மத்தியில் இன்ப அதிர்ச்சி | #GOLD
Published on

ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்ட நிலையில் ஈரான் புரட்சிகர ராணுவம் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க ராணுவ தளங்கள், தூதரகங்கள் மற்றும் விமான நிலையங்களை தாக்கி வருகிறது.

உலகின் 20 சதவீத எண்ணெய் தேவைக்கான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.

இதற்கிடையே மத்திய கிழக்கு நாடான துபாயில் ஏற்றுமதி செய்யமுடியாமல் தேக்கமடைந்த தங்கம் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆசிய நாடுகளுக்கு தங்கத்தை சுத்திகரித்து ஏற்றுமதி செய்யும் மையமாகவும், பிரிட்டன், சுவிட்சர்லாந்து ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் தங்க ஏற்றுமதிகளுக்கான போக்குவரத்து மையமாகவும் துபாய் செயல்பட்டு வருகிறது.

இந்த சூழலில் மத்திய கிழக்கு மீது ஈரான் தாக்குதல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பாலான வான்வழிப் பாதைகள் மூடப்பட்டுள்ளன.

இதனால் அங்கிருந்து தங்கத்தின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாலும் நிச்சயமற்ற சூழல் காரணமாகவும் வாடிக்கையாளர்களும் வணிக நிறுவனங்களும் புதிய வர்த்தகங்களை மேற்கொள்ள தயங்குகின்றனர்.

இயல்பு நிலை எப்போது திரும்பும் என தெரியாததால் காலவரையற்ற சேமிப்பு மற்றும் நிதி செலவுகளைக் குறைப்பதற்காக துபாய் வர்த்தகர்கள் தங்கத்தின் விலையில் தள்ளுபடிகளை அறிவித்துள்ளனர்.

அங்கு உலகளாவிய அளவுகோல் விலையில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 30 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.2700) வரை தள்ளுபடி வழங்குவதாகக் கூறப்படுகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com