என் மலர்
நீங்கள் தேடியது "Gold prices"
- கோல்ட் இ.டி.எப். என்பது தங்கத்தை ஷேர் வடிவில் வாங்கும் முறையாகும்.
- எல்லா ஆப்களும் உறுதியானவை அல்ல
மாலைமலர் வாசகர்களுக்கு அன்பார்ந்த வணக்கங்கள். செல்வம் என்னும் சிம்மாசனத்தில் அமர ஆசைப்பட்டு, அதற்கான வழி, வகைகளைப் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இன்று பார்ப்பது இந்தியர்களின் டார்லிங் என வர்ணிக்கப்படும் தங்கத்தின் மீதான முதலீடுகள்.
நாற்பதாயிரம் வருடங்களுக்கு முந்தைய குகை ஓவியங்களில் தங்கம் பற்றிய குறிப்பு காணப்படுவது, தங்கத்துக்கும், நமக்குமான நீண்ட உறவைக் காட்டுகிறது. மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்று மனிதர்களின் மூவாசைகளில் ஒன்றான தங்கத்தை அழகுக்காக உபயோகித்தோம்; ஆபரணமாக அணிந்தோம்; பஸ்பமாகச் செய்து ஆரோக்கியத்தைக் காக்க உண்டோம். பண்டமாற்றாக, கரன்சியாக பலப்பல உருவங்கள் எடுத்து நம்முடன் பயணித்த தங்கம் இன்று ஒரு முதலீட்டு முறையாக - ஒருவரின் மொத்த முதலீட்டில் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை இருக்கவேண்டிய பொருளாக – பார்க்கப்படுகிறது.
தங்கத்தின் மீதான காதலில் முதல் இடத்தில் சீனா இருக்க, இரண்டாம் இடத்தில் இந்தியா இருக்கிறது. இவ்வுலகில் உள்ள தங்கத்தில் இருபது சதவிகிதம் (சுமார் 25000 டன்) இந்தியாவின் வீடுகளிலும், கோவில்களிலும் தூங்குகிறது. ஆனாலும் நம் தங்க தாகம் தீராததால் வருடாவருடம் 600 டன் முதல் 1000 டன் வரை தங்கம் இறக்குமதி செய்கிறோம்.
தங்கம் என்பது பெண் குழந்தைகளுக்கு சீதனமாகக் கொடுக்க வேண்டிய பொருள் என்னும் நமது எண்ணம் மாறி, கல்வியும், வேலையுமே அவர்கள் உயர்வுக்கு வழி என்ற விழிப்புணர்வு வந்தபின் தங்கத்தின் மீதான நம் மோகம் குறைந்துள்ளது. ஆனால் இன்று அது ஒரு நல்ல மாற்று முதலீடாக உருவெடுத்திருக்கிறது. ஏனெனில், போர், பயங்கரவாதம் போன்ற நேரங்களில் பங்குச்சந்தை, மியூச்சுவல் பண்ட் போன்ற முதலீடுகளின் மதிப்பு குறையும்; ஆனால் தங்கம் அமெரிக்க டாலருக்கு மாற்றாக நிற்பதால் அதன் மதிப்பு கூடும்.
பொதுவாக நாம் தங்கத்தை விற்பதை விட அதன் மீது கடன் வாங்குவதையே பெரிதும் விரும்புகிறோம். கோவிட் காலத்தில் வருமானம் பாதிக்கப்பட்டதில் நமக்கு பெரிதும் கை கொடுத்தது, அவ்வப்போது ஆசையாக வாங்கி வைத்த கால் சவரன், அரை சவரன் நகைகள்தானே? ஆனால் பெரும்பாலானவர்கள் தங்கள் தங்கத்தை விற்கவில்லை; தங்களிடம் இருக்கும் தங்கத்தின் மீது கடன் பெறவே முற்பட்டனர்.

வேறு எல்லாத் தொழில்களும் பாதிக்கப்பட்டாலும், தங்க அடமானக் கடன் தரும் தொழில் மட்டும் ஜரூராக நடைபெற்றது; இன்றும் நடைபெற்று வருகிறது. இது சாதாரண மக்களின் சேமிப்பை எந்த அளவு பாதிக்கிறது, தேவை ஏற்படும் போது தங்கத்தை அடகு வைத்து கடன் பெறுவது சரியா, அல்லது விற்பதுதான் சரியா என்பது பற்றி பலவிதக் கருத்துக்கள் நிலவுகின்றன.
தங்கத்தை ஏன் அடகு வைக்கிறோம்? என்றாவது ஒரு நாள் மீட்டு விடலாம் என்ற நம்பிக்கையின் காரணமாகத்தானே? இந்த நம்பிக்கைக்கு வலுவான அடித்தளமாக, போதுமான வருமானம் இருப்பவர்கள் நகையை அடகு வைக்கலாம். இப்போதைக்கு தினசரி வாழ்வை நடத்துவதற்கே வருமானம் போதாமல் இருப்பவர்கள் இன்னும் கடன் சுமையையும், வட்டிச் சுமையையும் ஏற்றிக் கொள்வதைத் தவிர்த்து, தங்கத்தை விற்றுவிட்டு ஒரு நல்ல நேரமும், வருமானமும் வரும்வரை காத்திருந்து மீண்டும் வாங்கலாம்.
இதுவரை நகைக்கடன்களுக்கு வட்டியை மட்டும் கட்டி, கடனை மீண்டும் புதுப்பிக்கும் வசதி இருந்தது. இனி கடன் தொகை + வட்டி என முழுப்பணத்தையும் மொத்தமாகவோ, சில்லறையாகவோ கட்டி கடனை முடித்தபின்னரே மீண்டும் கடன் தரப்படும். தங்கத்தின் மீது கடன் பெற விரும்புவோர் இதனை நினைவுகொள்வது நல்லது.
டிசம்பர் 1, 2016இல் சிபிடிடி (CBDT) அறிவிப்பின்படி ஒரு இந்தியர் எவ்வளவு தங்கம் வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். ஆனால் அதற்கு முறையான கணக்குகள் இருக்க வேண்டும். நம்மில் பலரிடமும் பாரம்பரியமாக வந்த நகைகள் இருக்கும்; ஆனால் அதற்கு கணக்கு இருக்க வாய்ப்பில்லை என்பதால் திருமணமான பெண்கள் 500 கிராம் வரைக்கும், திருமணமாகாத பெண்கள் 250 கிராம் வரைக்கும், ஆண்கள் 100 கிராம் வரைக்கும் கணக்குக் காட்டத் தேவையில்லை.
இதற்கு மேல் தங்கம் இருக்கும் பட்சத்தில், அதை வாங்கிய ரசீது, அந்த வருடத்தின் வருமான வரித் தாக்கல் நகல் போன்றவற்றைக் காட்ட வேண்டும். பாரம்பரியமாக வந்த தங்கம் என்றால் உயில், செட்டில்மென்ட் பத்திரம், தானப் பத்திரம் போன்ற சான்றுகளைக் காட்ட வேண்டும். இதுவரை இந்த விதிமுறைகளை அரசாங்கம் நிர்ப்பந்திக்கவில்லை என்றாலும், வரக்கூடிய காலங்களில் கடுமை காட்டலாம்.
ஆகவே, தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் முதலில் தங்களிடம் ஏற்கெனவே இருக்கும் தங்கத்தின் அளவை கணக்கெடுத்து பின் செயல்படுவது நல்லது. தங்கம் வாங்கிய ரசீதுகளை பத்திரப்படுத்தி வைப்பது அவசியம். நாம் வாங்கும் தங்கத்தின் அளவு நம் வருமானத்திற்கு உட்பட்டதாக இருப்பதும் மிக அவசியம்.

சுந்தரி ஜகதீசன்
தங்கத்தை ஆபரணமாக மாற்றும் போது செய்கூலி, சேதாரம் என்று ஒரு 20 சதவிகித செலவு; வாங்கிய பின்னும் அதை பத்திரமாகப் பாதுகாக்க லாக்கர் செலவு - இவை தவிர அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்யமுடியாத நிலை - போன்ற காரணங்களால் இன்று முதலீட்டாளர்கள், தங்க நகைகள் வாங்குவதை விட பேப்பர் கோல்ட் வாங்குவதை விரும்புகிறார்கள்.
பேப்பர் கோல்ட் என்று செல்லமாகக் குறிப்பிடப்படும் டிஜிட்டல் கோல்ட் மார்ச் 2003இல் அறிமுகமானது. 99.9 சதவீதம் சுத்தமான இந்தத் தங்கத்தின் விலை, உலகம் முழுவதும் ஒன்றாகவே இருப்பது அதன் கவர்ச்சி அம்சங்களில் ஒன்று. செய்கூலி, சேதாரத்தின் நஷ்டங்கள், பாதுகாக்கும் செலவு இவை இல்லாதிருப்பதும் ஒரு முக்கியமான பாஸிட்டிவ் விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
கோல்ட் இ.டி.எப். என்பது தங்கத்தை ஷேர் வடிவில் வாங்கும் முறையாகும். 99.9 சதவீதம் சுத்தமான தங்கத்தை உலகம் முழுவதும் உள்ள அதே விலையில் வாங்கி ஷேர்களாகப் பிரித்து விற்கின்றனர். இதனால் இதன் விலையில் வெளிப்படைத்தன்மை அதிகம். எஸ்.பி.ஐ., ஐ.டி.பி.ஐ. ஆக்சிஸ் போன்ற வங்கிகளும், இன்வெஸ்கோ, நிப்பான் போன்ற நிறுவனங்களும் இதில் ஈடுபட்டுள்ளன. குறைந்த பட்சமாக ஒரு கிராம் வாங்கலாம். இதில் சிப் வசதி கிடையாது. என்ட்ரி லோட், எக்ஸிட் லோட் என்று எதுவும் கிடையாது. எக்ஸ்பென்ஸ் ரேஷியோவும் 0.5 சதவீதம் முதல் 1.25 சதவீதம் அளவே. இதற்கு ஒரு டீமேட் அக்கவுன்ட் தேவை. ஏற்கெனவே டீமேட் அக்கவுன்ட் துவங்கி பங்குச் சந்தையில் ஈடுபட்டுள்ளவர்கள் இதை எளிதாக வாங்கலாம்.
கோல்ட் மியூச்சுவல் பண்டுகளின் அடிப்படை முதலீடு தங்கம் அல்ல; தங்க வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களே. இதனால் இங்கு வெளிப்படைத்தன்மை குறைகிறது. குறைந்த பட்ச முதலீடு ரூ.1000/. இதற்கு டீமேட் அக்கவுன்ட் தேவை இல்லை. சிப் வசதி உண்டு. என்ட்ரி லோட் இல்லை; ஆனால் எக்ஸிட் லோட் உண்டு. எக்ஸ்பென்ஸ் ரேஷியோவும் அதிகம்.
கோல்ட் இ.டி.எப். வாங்குவதா அல்லது கோல்ட் மியூச்சுவல் பண்டில் இறங்குவதா என்பது பற்றி ஒரு பட்டிமன்றமே நடத்தலாம். இதில் முடிவெடுக்க வேண்டியவர்கள் நாம்தான். ஷேர் மார்க்கெட் முதலீட்டை விரும்புபவர்கள் இ.டி.எப்பிலும், மியூச்சுவல் பண்ட் முதலீடு சுலபம் என்று எண்ணுபவர்கள் கோல்ட் மியூச்சுவல் பண்டிலும் முதலீடு செய்யலாம்.
டிஜிட்டல் கோல்டை எம்.எம்.டி.சி என்ற அரசு நிறுவனமும், பேம்ப் என்ற ஸ்விஸ் நிறுவனமும் சேர்ந்து அறிமுகப்படுத்தின. இன்று ஜிபே, தனிஷ்க் போன்றவற்றின் ஆப்களில் ஒரு மில்லிகிராம் 24 காரட் தங்கத்தின் விலை சுமார் ரூ.10. இருந்த இடத்தில் இருந்தபடியே ஒரு நொடியில் தங்கம் வாங்கும் வசதி இந்த ஆப்களில் உள்ளது. நமக்குப் பணம் தேவை என்றால் இங்கேயே விற்க முடியும். தங்க வடிவில் தேவை என்றாலும் உடனே கிராம் கணக்கில் தங்கம் நம் கையில் தரப்படும். இல்லாவிட்டால் சில அங்கீகரிக்கப்பட்ட நகைக்கடைகள் மூலம் நகையாகவும் வாங்கிக் கொள்ளலாம்.
ஆனால் எல்லா ஆப்களும் உறுதியானவை அல்ல. சமீபத்தில் ஆதித்ய பிர்லா கேப்பிடல் நிறுவனம் வழங்கும் ஆப்பில் சைபர் தாக்குதல் ஏற்பட்டு, 435 பேர் அக்கவுன்ட்டுகளில் இருந்து தங்கம் மாயமானது. அந்த நிறுவனம் இதை சரிக்கட்டி விட்டாலும், ஆப்பில் தங்கம் வாங்குபவர்கள் ஸ்ட்ராங்கான பாஸ்வர்ட் உபயோகிப்பது, அடிக்கடி ஆப் நடவடிக்கைகளைக் கண்காணிப்பது போன்ற முன்ஜாக்கிரதை ஏற்பாடுகளைக் கைக்கொள்வது நலம்.
தங்க இறக்குமதியைக் குறைக்க 2015இல் மோடி அரசு சில திட்டங்களை முன்வைத்தது. அதில் ஒன்று சாவரின் கோல்ட் பாண்ட். தற்போது இதனை வழங்குவதை அரசு நிறுத்தி வைத்துள்ளது என்றாலும் முன்பு வாங்கியவர்கள் சந்தையில் விற்பதால், தங்கம் விலை குறையும்போது வாங்கி வைக்கலாம்.
தற்போது தங்கத்தின் விலை சவரனுக்கு சுமார் ரூ. 86.720/ ஆக உள்ளது. இனி வரக்கூடிய காலங்களில் இது இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்பே கூறியது போல் நம் மொத்த முதலீட்டில் 5 முதல் 10 சதவிகிதம் தங்கம் நகை வடிவிலோ, அல்லது பேப்பர் உருவிலோ இருப்பது நல்லது.
உங்களிடம் எவ்வளவு கிராம் தங்கம் உள்ளது? தற்போது வாங்க எண்ணினால் நகை அல்லது இ.டி.எப். அல்லது கோல்ட் பாண்ட் அல்லது டிஜிட்டல் கோல்ட் போன்றவற்றில் எதை வாங்க விரும்புவீர்கள்?
- இந்திய குடும்பங்களிடம் 25 ஆயிரம் டன் வரை தங்கம் இருக்கும் என்று உலக தங்க கவுன்சில் கூறுகிறது.
- அதன் இப்போதைய மதிப்பு ரூ.190 லட்சம் கோடி இருக்கும்.
சென்னை:
மண்ணில் போட்டதும், பொன்னில் போட்டதும் வீணாகாது என்பார்கள். அதனை மெய்யாக்கும் வகையில் தங்கத்தின் விலை விண்ணை முட்டி சென்று கொண்டு இருக்கிறது. இந்தியாவில் ரிசர்வ் வங்கியிடம் தற்போது 890 டன் அளவு தங்கம் கையிருப்பு இருக்கிறது. அதேபோல இந்திய குடும்பங்களிடம் 25 ஆயிரம் டன் வரை தங்கம் இருக்கும் என்று உலக தங்க கவுன்சில் கூறுகிறது.
அதன் இப்போதைய மதிப்பு ரூ.190 லட்சம் கோடி இருக்கும். உலகிலேயே அதிக மக்கள் தங்கம் வைத்திருக்கும் நாடுகள் எது என்றால் அது இந்தியாதான். மேலும் கடந்த 2016-ம் ஆண்டு ஐசிஇ-360 என்ற சர்வேயில் இந்தியாவில் 87 சதவீத வீடுகளில் தங்கம் இருக்கிறது என்று அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அந்த சமயத்தில் ஒரு வீட்டில் 10 கிராமம் 22 காரட் தங்கம் இருந்திருந்தால், அதன் அன்றைய மதிப்பு வெறும் ரூ.28 ஆயிரத்து 560 தான். ஆனால் இன்றைய அதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 700 ஆகும்.
இதுகுறித்து தங்க கவுன்சில் அமைப்பை சேர்ந்தவர்கள் கூறும்போது, இந்தியாவில் 2021-ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி இந்தியாவில் உள்ள 62 சதவீத குடும்பங்கள் தொடக்கநிலை நடுத்தர குடும்பங்கள். அதாவது ஏழைகளுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள். எனவே இவர்களது வீடுகளில் குறைந்தது ஒரு பவுன் தங்கம் என்ற அளவிலாவது இருக்கும்.
அந்த அடிப்படையில் இந்த 62 சதவீத குடும்பங்களும் லட்சாதிபதி என்ற நிலையை எட்டி உள்ளனர். அதேபோல் 125 பவுன், அதாவது 1,000 கிராம் தங்கம் வைத்திருந்த லட்சாதிபதி குடும்பங்கள் எல்லாம் இப்போது கோடீஸ்வர குடும்பங்களாக உயர்ந்துள்ளனர். மேலும் ஏழை குடும்பங்களில் காதில் போட்டிருக்கும் கம்மல், தோடு என்ற சிறிய தங்க நகை ஆபரணமாக இருந்தாலும், அவர்களுக்கு அதன் மூலம் நல்ல லாபம் கிடைத்து இருக்கிறது. தங்கம் விலை உயர்வு ஏழைகளை லட்சாதிபதிகள் ஆகவும், லட்சாதிபதிகளை கோடீசுவரர்களாகவும் மாற்றி இருக்கிறது என்றனர்.
தங்கம் என்பது வெறும் உலோகம் மட்டுமல்ல. அது இந்திய குடும்பங்களின் உறுதியான நம்பிக்கை, மரபின் அடையாளம், எதிர்கால பாதுகாப்பு ஆகும். எனவே எவ்வளவு விலை தங்கம் வந்தாலும், நமது கலாசார நிகழ்வுகளுடன் அது தொடர்பில் இருப்பதால் விற்பனை குறையாது என்பது மட்டும் உறுதி.
- இன்று காலை தங்கம் ஒரு சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்தது.
- வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது.
தங்கம் விலை இந்த மாத தொடக்கத்தில் இருந்தே ஏறுமுகத்துடன் காணப்பட்டது. மே 1-ந்தேதி, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.70 ஆயிரத்து 40-க்கு விற்பனை செய்யப்பட்டது. இது தொடர்ந்து அதிகரித்து, மே 5-ந்தேதி சவரன் ரூ.71 ஆயிரத்து 200-க்கும், மே 6-ந்தேதி சவரன் ரூ.72 ஆயிரத்து 800-க்கும் விற்பனையானது. மே 8-ந்தேதி, ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 40-க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதன்பிறகு, தங்கத்தின் விலை படிப்படியாக குறைய தொடங்கியது. அந்த வகையில் கடந்த 10-ந்தேதி ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 45-க்கும், ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்து 360-க்கும் விற்பனையானது. நேற்றுமுன்தினம் (ஞாயிற்றுகிழமை) விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இன்றி விற்பனையானது.
இதற்கிடையே தங்கத்தின் விலை நேற்று காலை, மாலை என 2 முறை சரிந்தது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில், கிராமுக்கு ரூ.265-ம், சவரனுக்கு ரூ.2,360-ம் தங்கம் விலை குறைந்தது.
இந்த நிலையில், இன்று காலை தங்கம் விலை சற்று உயர்ந்தது. கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,765-க்கும் சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,120-க்கும் விற்பனையாது.
திடீரென இன்று மாலையிலும் தங்கத்தின் விலை 2 ஆவது முறையாக உயர்ந்தது. காலை நேர விற்பனையை காட்டிலும் மாலையில் கிராம் ரூ.90-ம், சவரனுக்கு ரூ.720-ம் உயர்ந்தது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.8 ஆயிரத்து 855-க்கும், ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளி விலை குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.109-க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.109-க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
12-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,000
11-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,360
10-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,360
09-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,120
08-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,040
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
12-05-2025- ஒரு கிராம் ரூ.110
11-05-2025- ஒரு கிராம் ரூ.110
10-05-2025- ஒரு கிராம் ரூ.110
09-05-2025- ஒரு கிராம் ரூ.110
08-05-2025- ஒரு கிராம் ரூ.110
தங்கம் விலை கடந்த மாதம் (செப்டம்பர்) முதல் வாரத்தில் இருந்து உயர்ந்து வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 900-ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்தது.
தொடர்ந்து விலை அதிகரித்து வந்த நிலையில் கடந்த 6-ந்தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்தை தொட்டது. அதனைத்தொடர்ந்தும் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிராமுக்கு ரூ.46 உயர்ந்து இருக்கிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 37-க்கும், ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 296-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளியை பொறுத்தவரையில் நேற்று கிராமுக்கு 20 காசும், கிலோவுக்கு ரூ.200-ம் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 41 ரூபாய் 50 காசுக்கும், ஒரு கிலோ ரூ.41 ஆயிரத்து 500-க்கும் விற்பனை ஆனது.
இந்த நிலையில் தங்கம் விலை தொடர்ந்து உயரும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து சென்னை தங்கம் மற்றும் வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானி கூறியதாவது:-
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து இருக்கிறது. உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து இருக்கிறது. கடந்த 2 வாரத்தில் ஒரு அவுன்ஸ் (31.1 கிராம்) தங்கத்துக்கு எதிராக 40 டாலர் அதிகரித்து உள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடையும் என்பதால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே தான் இருக்கும். தீபாவளி பண்டிகை நேரத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.25 ஆயிரத்தை கடந்து செல்லும்.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்தால் மட்டுமே தங்கம் விலை குறையும். ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார். #Goldprices






