என் மலர்
நீங்கள் தேடியது "Gold Coin"
- கோல்ட் இ.டி.எப். என்பது தங்கத்தை ஷேர் வடிவில் வாங்கும் முறையாகும்.
- எல்லா ஆப்களும் உறுதியானவை அல்ல
மாலைமலர் வாசகர்களுக்கு அன்பார்ந்த வணக்கங்கள். செல்வம் என்னும் சிம்மாசனத்தில் அமர ஆசைப்பட்டு, அதற்கான வழி, வகைகளைப் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இன்று பார்ப்பது இந்தியர்களின் டார்லிங் என வர்ணிக்கப்படும் தங்கத்தின் மீதான முதலீடுகள்.
நாற்பதாயிரம் வருடங்களுக்கு முந்தைய குகை ஓவியங்களில் தங்கம் பற்றிய குறிப்பு காணப்படுவது, தங்கத்துக்கும், நமக்குமான நீண்ட உறவைக் காட்டுகிறது. மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்று மனிதர்களின் மூவாசைகளில் ஒன்றான தங்கத்தை அழகுக்காக உபயோகித்தோம்; ஆபரணமாக அணிந்தோம்; பஸ்பமாகச் செய்து ஆரோக்கியத்தைக் காக்க உண்டோம். பண்டமாற்றாக, கரன்சியாக பலப்பல உருவங்கள் எடுத்து நம்முடன் பயணித்த தங்கம் இன்று ஒரு முதலீட்டு முறையாக - ஒருவரின் மொத்த முதலீட்டில் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை இருக்கவேண்டிய பொருளாக – பார்க்கப்படுகிறது.
தங்கத்தின் மீதான காதலில் முதல் இடத்தில் சீனா இருக்க, இரண்டாம் இடத்தில் இந்தியா இருக்கிறது. இவ்வுலகில் உள்ள தங்கத்தில் இருபது சதவிகிதம் (சுமார் 25000 டன்) இந்தியாவின் வீடுகளிலும், கோவில்களிலும் தூங்குகிறது. ஆனாலும் நம் தங்க தாகம் தீராததால் வருடாவருடம் 600 டன் முதல் 1000 டன் வரை தங்கம் இறக்குமதி செய்கிறோம்.
தங்கம் என்பது பெண் குழந்தைகளுக்கு சீதனமாகக் கொடுக்க வேண்டிய பொருள் என்னும் நமது எண்ணம் மாறி, கல்வியும், வேலையுமே அவர்கள் உயர்வுக்கு வழி என்ற விழிப்புணர்வு வந்தபின் தங்கத்தின் மீதான நம் மோகம் குறைந்துள்ளது. ஆனால் இன்று அது ஒரு நல்ல மாற்று முதலீடாக உருவெடுத்திருக்கிறது. ஏனெனில், போர், பயங்கரவாதம் போன்ற நேரங்களில் பங்குச்சந்தை, மியூச்சுவல் பண்ட் போன்ற முதலீடுகளின் மதிப்பு குறையும்; ஆனால் தங்கம் அமெரிக்க டாலருக்கு மாற்றாக நிற்பதால் அதன் மதிப்பு கூடும்.
பொதுவாக நாம் தங்கத்தை விற்பதை விட அதன் மீது கடன் வாங்குவதையே பெரிதும் விரும்புகிறோம். கோவிட் காலத்தில் வருமானம் பாதிக்கப்பட்டதில் நமக்கு பெரிதும் கை கொடுத்தது, அவ்வப்போது ஆசையாக வாங்கி வைத்த கால் சவரன், அரை சவரன் நகைகள்தானே? ஆனால் பெரும்பாலானவர்கள் தங்கள் தங்கத்தை விற்கவில்லை; தங்களிடம் இருக்கும் தங்கத்தின் மீது கடன் பெறவே முற்பட்டனர்.

வேறு எல்லாத் தொழில்களும் பாதிக்கப்பட்டாலும், தங்க அடமானக் கடன் தரும் தொழில் மட்டும் ஜரூராக நடைபெற்றது; இன்றும் நடைபெற்று வருகிறது. இது சாதாரண மக்களின் சேமிப்பை எந்த அளவு பாதிக்கிறது, தேவை ஏற்படும் போது தங்கத்தை அடகு வைத்து கடன் பெறுவது சரியா, அல்லது விற்பதுதான் சரியா என்பது பற்றி பலவிதக் கருத்துக்கள் நிலவுகின்றன.
தங்கத்தை ஏன் அடகு வைக்கிறோம்? என்றாவது ஒரு நாள் மீட்டு விடலாம் என்ற நம்பிக்கையின் காரணமாகத்தானே? இந்த நம்பிக்கைக்கு வலுவான அடித்தளமாக, போதுமான வருமானம் இருப்பவர்கள் நகையை அடகு வைக்கலாம். இப்போதைக்கு தினசரி வாழ்வை நடத்துவதற்கே வருமானம் போதாமல் இருப்பவர்கள் இன்னும் கடன் சுமையையும், வட்டிச் சுமையையும் ஏற்றிக் கொள்வதைத் தவிர்த்து, தங்கத்தை விற்றுவிட்டு ஒரு நல்ல நேரமும், வருமானமும் வரும்வரை காத்திருந்து மீண்டும் வாங்கலாம்.
இதுவரை நகைக்கடன்களுக்கு வட்டியை மட்டும் கட்டி, கடனை மீண்டும் புதுப்பிக்கும் வசதி இருந்தது. இனி கடன் தொகை + வட்டி என முழுப்பணத்தையும் மொத்தமாகவோ, சில்லறையாகவோ கட்டி கடனை முடித்தபின்னரே மீண்டும் கடன் தரப்படும். தங்கத்தின் மீது கடன் பெற விரும்புவோர் இதனை நினைவுகொள்வது நல்லது.
டிசம்பர் 1, 2016இல் சிபிடிடி (CBDT) அறிவிப்பின்படி ஒரு இந்தியர் எவ்வளவு தங்கம் வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். ஆனால் அதற்கு முறையான கணக்குகள் இருக்க வேண்டும். நம்மில் பலரிடமும் பாரம்பரியமாக வந்த நகைகள் இருக்கும்; ஆனால் அதற்கு கணக்கு இருக்க வாய்ப்பில்லை என்பதால் திருமணமான பெண்கள் 500 கிராம் வரைக்கும், திருமணமாகாத பெண்கள் 250 கிராம் வரைக்கும், ஆண்கள் 100 கிராம் வரைக்கும் கணக்குக் காட்டத் தேவையில்லை.
இதற்கு மேல் தங்கம் இருக்கும் பட்சத்தில், அதை வாங்கிய ரசீது, அந்த வருடத்தின் வருமான வரித் தாக்கல் நகல் போன்றவற்றைக் காட்ட வேண்டும். பாரம்பரியமாக வந்த தங்கம் என்றால் உயில், செட்டில்மென்ட் பத்திரம், தானப் பத்திரம் போன்ற சான்றுகளைக் காட்ட வேண்டும். இதுவரை இந்த விதிமுறைகளை அரசாங்கம் நிர்ப்பந்திக்கவில்லை என்றாலும், வரக்கூடிய காலங்களில் கடுமை காட்டலாம்.
ஆகவே, தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் முதலில் தங்களிடம் ஏற்கெனவே இருக்கும் தங்கத்தின் அளவை கணக்கெடுத்து பின் செயல்படுவது நல்லது. தங்கம் வாங்கிய ரசீதுகளை பத்திரப்படுத்தி வைப்பது அவசியம். நாம் வாங்கும் தங்கத்தின் அளவு நம் வருமானத்திற்கு உட்பட்டதாக இருப்பதும் மிக அவசியம்.

சுந்தரி ஜகதீசன்
தங்கத்தை ஆபரணமாக மாற்றும் போது செய்கூலி, சேதாரம் என்று ஒரு 20 சதவிகித செலவு; வாங்கிய பின்னும் அதை பத்திரமாகப் பாதுகாக்க லாக்கர் செலவு - இவை தவிர அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்யமுடியாத நிலை - போன்ற காரணங்களால் இன்று முதலீட்டாளர்கள், தங்க நகைகள் வாங்குவதை விட பேப்பர் கோல்ட் வாங்குவதை விரும்புகிறார்கள்.
பேப்பர் கோல்ட் என்று செல்லமாகக் குறிப்பிடப்படும் டிஜிட்டல் கோல்ட் மார்ச் 2003இல் அறிமுகமானது. 99.9 சதவீதம் சுத்தமான இந்தத் தங்கத்தின் விலை, உலகம் முழுவதும் ஒன்றாகவே இருப்பது அதன் கவர்ச்சி அம்சங்களில் ஒன்று. செய்கூலி, சேதாரத்தின் நஷ்டங்கள், பாதுகாக்கும் செலவு இவை இல்லாதிருப்பதும் ஒரு முக்கியமான பாஸிட்டிவ் விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
கோல்ட் இ.டி.எப். என்பது தங்கத்தை ஷேர் வடிவில் வாங்கும் முறையாகும். 99.9 சதவீதம் சுத்தமான தங்கத்தை உலகம் முழுவதும் உள்ள அதே விலையில் வாங்கி ஷேர்களாகப் பிரித்து விற்கின்றனர். இதனால் இதன் விலையில் வெளிப்படைத்தன்மை அதிகம். எஸ்.பி.ஐ., ஐ.டி.பி.ஐ. ஆக்சிஸ் போன்ற வங்கிகளும், இன்வெஸ்கோ, நிப்பான் போன்ற நிறுவனங்களும் இதில் ஈடுபட்டுள்ளன. குறைந்த பட்சமாக ஒரு கிராம் வாங்கலாம். இதில் சிப் வசதி கிடையாது. என்ட்ரி லோட், எக்ஸிட் லோட் என்று எதுவும் கிடையாது. எக்ஸ்பென்ஸ் ரேஷியோவும் 0.5 சதவீதம் முதல் 1.25 சதவீதம் அளவே. இதற்கு ஒரு டீமேட் அக்கவுன்ட் தேவை. ஏற்கெனவே டீமேட் அக்கவுன்ட் துவங்கி பங்குச் சந்தையில் ஈடுபட்டுள்ளவர்கள் இதை எளிதாக வாங்கலாம்.
கோல்ட் மியூச்சுவல் பண்டுகளின் அடிப்படை முதலீடு தங்கம் அல்ல; தங்க வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களே. இதனால் இங்கு வெளிப்படைத்தன்மை குறைகிறது. குறைந்த பட்ச முதலீடு ரூ.1000/. இதற்கு டீமேட் அக்கவுன்ட் தேவை இல்லை. சிப் வசதி உண்டு. என்ட்ரி லோட் இல்லை; ஆனால் எக்ஸிட் லோட் உண்டு. எக்ஸ்பென்ஸ் ரேஷியோவும் அதிகம்.
கோல்ட் இ.டி.எப். வாங்குவதா அல்லது கோல்ட் மியூச்சுவல் பண்டில் இறங்குவதா என்பது பற்றி ஒரு பட்டிமன்றமே நடத்தலாம். இதில் முடிவெடுக்க வேண்டியவர்கள் நாம்தான். ஷேர் மார்க்கெட் முதலீட்டை விரும்புபவர்கள் இ.டி.எப்பிலும், மியூச்சுவல் பண்ட் முதலீடு சுலபம் என்று எண்ணுபவர்கள் கோல்ட் மியூச்சுவல் பண்டிலும் முதலீடு செய்யலாம்.
டிஜிட்டல் கோல்டை எம்.எம்.டி.சி என்ற அரசு நிறுவனமும், பேம்ப் என்ற ஸ்விஸ் நிறுவனமும் சேர்ந்து அறிமுகப்படுத்தின. இன்று ஜிபே, தனிஷ்க் போன்றவற்றின் ஆப்களில் ஒரு மில்லிகிராம் 24 காரட் தங்கத்தின் விலை சுமார் ரூ.10. இருந்த இடத்தில் இருந்தபடியே ஒரு நொடியில் தங்கம் வாங்கும் வசதி இந்த ஆப்களில் உள்ளது. நமக்குப் பணம் தேவை என்றால் இங்கேயே விற்க முடியும். தங்க வடிவில் தேவை என்றாலும் உடனே கிராம் கணக்கில் தங்கம் நம் கையில் தரப்படும். இல்லாவிட்டால் சில அங்கீகரிக்கப்பட்ட நகைக்கடைகள் மூலம் நகையாகவும் வாங்கிக் கொள்ளலாம்.
ஆனால் எல்லா ஆப்களும் உறுதியானவை அல்ல. சமீபத்தில் ஆதித்ய பிர்லா கேப்பிடல் நிறுவனம் வழங்கும் ஆப்பில் சைபர் தாக்குதல் ஏற்பட்டு, 435 பேர் அக்கவுன்ட்டுகளில் இருந்து தங்கம் மாயமானது. அந்த நிறுவனம் இதை சரிக்கட்டி விட்டாலும், ஆப்பில் தங்கம் வாங்குபவர்கள் ஸ்ட்ராங்கான பாஸ்வர்ட் உபயோகிப்பது, அடிக்கடி ஆப் நடவடிக்கைகளைக் கண்காணிப்பது போன்ற முன்ஜாக்கிரதை ஏற்பாடுகளைக் கைக்கொள்வது நலம்.
தங்க இறக்குமதியைக் குறைக்க 2015இல் மோடி அரசு சில திட்டங்களை முன்வைத்தது. அதில் ஒன்று சாவரின் கோல்ட் பாண்ட். தற்போது இதனை வழங்குவதை அரசு நிறுத்தி வைத்துள்ளது என்றாலும் முன்பு வாங்கியவர்கள் சந்தையில் விற்பதால், தங்கம் விலை குறையும்போது வாங்கி வைக்கலாம்.
தற்போது தங்கத்தின் விலை சவரனுக்கு சுமார் ரூ. 86.720/ ஆக உள்ளது. இனி வரக்கூடிய காலங்களில் இது இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்பே கூறியது போல் நம் மொத்த முதலீட்டில் 5 முதல் 10 சதவிகிதம் தங்கம் நகை வடிவிலோ, அல்லது பேப்பர் உருவிலோ இருப்பது நல்லது.
உங்களிடம் எவ்வளவு கிராம் தங்கம் உள்ளது? தற்போது வாங்க எண்ணினால் நகை அல்லது இ.டி.எப். அல்லது கோல்ட் பாண்ட் அல்லது டிஜிட்டல் கோல்ட் போன்றவற்றில் எதை வாங்க விரும்புவீர்கள்?
- வருகிற மாதங்களில் பண்டிகைகள் மற்றும் சுப நிகழ்ச்சிகள் அதிகம் வர உள்ளது.
- இந்திய ரிசர்வ் வங்கி 4. 32 லட்சம் கோடி தங்கத்தை இருப்பு வைத்திருக்கிறது.
புதுடெல்லி:
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் தங்கத்தை முதலீடாக வாங்க விரும்புவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தேவைப்படுபவர்கள் மட்டுமே தங்க நகைகளை வாங்குகிறார்கள். முதலீடாக வாங்க விரும்புபவர்கள் தங்க நாணயங்கள் மற்றும் பிஸ்கட்டுகளை அதிக அளவில் வாங்குகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளில் தங்கத்தின் விலை 33 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது இதற்கு காரணமாக உள்ளது.
2024-25 ஆம் ஆண்டில் தங்க நகைகளின் தேவை 7 சதவீதமாக அதிகரித்தது. ஆனால் இந்த காலகட்டத்தில் தங்க நாணயங்கள் மற்றும் பிஸ்கட்டுகளுக்கான தேவை 25 சதவீதம் அதிகரித்துள்ளது.
வருகிற 2025-26-ம் ஆண்டிலும் இதே நிலை தொடர வாய்ப்புள்ளது. இதனால் தங்க நாணயங்கள் மற்றும் பிஸ்கட்டுகளுக்கான தேவை மேலும் 10 சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பீட்டு நிறுவனமான ஐசிஆர்ஏ தெரிவித்துள்ளது.
தங்கத்தின் விலை உயர்வு காரணமாக விற்பனை குறைந்து வந்தாலும் நகைக்கடைகளுக்கு 14 முதல் 16 சதவீதம் வரை வருவாய் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
வருகிற மாதங்களில் பண்டிகைகள் மற்றும் சுப நிகழ்ச்சிகள் அதிகம் வர உள்ளது. இதனால தங்க நகைகளுக்கான தேவை அதிகரிக்கும்.
இந்திய ரிசர்வ் வங்கி 4. 32 லட்சம் கோடி தங்கத்தை இருப்பு வைத்திருக்கிறது.
2024 மார்ச் மாத நிலவரப்படி, ரிசர்வ் வங்கியிடம் ரூ.2,74,714.27 கோடி மதிப்புள்ள 822.10 டன் தங்கம் இருந்தது. இந்த ஆண்டு மார்ச் 31 நிலவரப்படி, ரூ.4.32 லட்சம் கோடி மதிப்புள்ள 879.58 மெட்ரிக் டன்னாக தங்கம் இருப்பு உயர்ந்துள்ளது. அதாவது ரிசர்வ் வங்கியிடம் உள்ள தங்க இருப்பு 57.48 மெட்ரிக் டன் அதிகரித்துள்ளது.
மேலும் வங்கி மோசடிகள் 3 மடங்காக அதிகரித்துள்ளது. டிஜிட்டல் பணம் செலுத்துதலில் மோசடிகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- இங்கிலாந்தில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட ரோமானிய நாணயம் ஆகும்.
- நாணய சேகரிப்பில் தீவிர ஆர்வம் கொண்ட ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர் அதனை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
லண்டன்:
இங்கிலாந்தின் மேற்கு மிட்லாண்ட்ஸ் பிராந்தியம் கிங்ஸ்வின்போர்டைச் சேர்ந்தவர் ரான் வால்டர்ஸ் (வயது 76). கடந்த ஆண்டு இவர் அங்குள்ள வால் ஹீத் நகரில் பழங்கால தங்க நாணயம் ஒன்றைக் கண்டெடுத்தார். பின்னர் நடைபெற்ற ஆய்வில் அது ஆலஸ் விட்டெலியஸ் என்ற மன்னர் காலத்தைச் சேர்ந்த ரோமானிய நாணயம் என்பது தெரிய வந்தது.
1,900 ஆண்டுகள் பழமை வாய்ந்த இதுவே இங்கிலாந்தில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட ரோமானிய நாணயம் ஆகும். இதனை தற்போது வால்டர்ஸ் விற்க முடிவு செய்தார். அதன்படி ஸ்டோர்பிரிட்ஜ் நகரில் நடைபெற்ற ஏலத்தின்போது அந்த நாணயம் சுமார் ரூ.5 லட்சத்துக்கு விற்பனையானது. நாணய சேகரிப்பில் தீவிர ஆர்வம் கொண்ட ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர் அதனை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
- ஆறுமுகநேரியில் நகர தி.மு.க. செயலாளரின் அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
- புதிய உறுப்பினர்களை சேர்த்தவர்களை பாராட்டி தங்க காசுகள் மற்றும் வெள்ளி காசுகள் வழங்கப்பட்டது.
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பேரூராட்சியில் தி.மு.க.வை சேர்ந்த கலாவதி கல்யாண சுந்தரம் தலைவராகவும், கல்யாணசுந்தரம் துணைத் தலைவராகவும் செயல்பட்டு வருகின்றனர்.
தங்க காசுகள்
இவர்கள் கடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்ற போது அனைத்து வார்டு கவுன்சிலர்களுக்கும் தங்களின் சொந்த செலவில் இருசக்கர வாகனம் வழங்கினர். இது மாநில அளவில் பேசப்பட்டது.
இந்நிலையில் தற்போது முன்னாள் முதல் -அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தி.மு.க. வில் உறுப்பினர் சேர்க்கை பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. இதன்படி ஆறுமுகநேரி பேரூராட்சி பகுதியில் அதிக உறுப்பி னர்களை சேர்த்த தி.மு.க .வை சேர்ந்த 6 பேருக்கு தங்க காசுகளையும், 20 பேருக்கு வெள்ளி காசுகளையும் நகர தி.மு.க. செய லாளர் நவநீத பாண்டியன் வழங்கி உள்ளார்.
அலுவலகம் திறப்பு
ஆறுமுகநேரியில் நகர தி.மு.க. செயலாளரின் அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நகரச் செயலாளர் நவநீத பாண்டி யன் தலைமை தாங்கினார். நகர இளைஞரணி அமைப் பாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட பிரதிநிதி ராதா கிருஷ்ணன் வரவேற்று பேசினார். பேரூராட்சி துணைத் தலைவர் கல்யாண சுந்தரம் அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்பு ரையாற்றினார்.
தொடர்ந்து அவர் கட்சிக்கு அதிகப்படியான புதிய உறுப்பினர்களை சேர்த்தவர்களை பாராட்டி தங்க காசுகள் மற்றும் வெள்ளி காசுகளை வழங்கி னார். அதன்படி ஜான் பாஸ்கர், சரவண வெங்க டேஷ், மகேஷ், செல்வம், ஜெயக்குமார், முகேஷ்குமார் ஆகியோர் தங்க காசுகளை பெற்றுக் கொண்டனர். மேலும் 20 பேருக்கு வெள்ளி காசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் வருகிற 17-ந்தேதி ராமேஸ்வரத்தில் நடைபெற இருக்கும் பி.எல்.ஏ.2 பயிற்சி பாசறை கூட்டத்தில் தகுதியான அனைவரும் தவறாமல் கலந்து கொள்வதென்று வலியுறுத்தப்பட்டது. விழாவில் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தெற்கு மாவட்ட துணை அமைப் பாளர் மகேஷ், 14-வது வார்டு கவுன்சிலர் நிர்மலா தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஒரு சில தங்க நாணயங்களின் விளிம்பில் டெல்லி நாணயத்தின் சித்தரிப்பு உள்ளது.
- ஆந்திர மாநில தொல்லியல் துறை தங்க நாணயங்களை இன்னும் கைப்பற்றவில்லை.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம், சித்தேபள்ளி கிராமத்தில் அங்காளம்மா கோவில் உள்ளது.
இந்த கோவில் அருகே உள்ள மலையில் பாறாங்கல் ஒன்றின் அடியில் நேற்று தங்க புதையல் கண்டெடுக்கப்பட்டது. இதில் 450-க்கும் மேற்பட்ட தங்கக் காசுகள் இருந்தன.
இதுகுறித்து இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) இயக்குனர் கே முனிரத்தினம் ரெட்டி கூறுகையில்:-
புதையலில் இருந்த தங்க காசுகள் 15 மற்றும் 17-ம் நூற்றாண்டுகளில் இருந்த தங்க நாணயங்கள், விஜயநகர மன்னர் I மற்றும் II ஹரிஹரர் மற்றும் டெல்லி சுல்தான்களுக்கு சொந்தமானது.
ஒரு சில தங்க நாணயங்களின் விளிம்பில் டெல்லி நாணயத்தின் சித்தரிப்பு உள்ளது. இப்பகுதியில் உள்ள பழமையான கோவிலுக்கு அருகிலேயே இந்த நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டது.
இடைக்காலங்களில், முறையான வங்கி முறை இல்லாததால், மக்கள் தங்கள் பணத்தை கோவில்களில் டெபாசிட் செய்தனர்.
ஆந்திர மாநில தொல்லியல் துறை தங்க நாணயங்களை இன்னும் கைப்பற்றவில்லை.
இந்த நாணயங்களை அருங்காட்சியகங்களில் வைத்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.
- இன்று காலை வழக்கம் போல் தனியார் ஷோரூமை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது.
- தடயவியல் நிபு ணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து முக்கிய தடயங்களை சேகரித்தனர்.
கடலூர்:
கடலூர் - சிதம்பரம் சாலையில் செல்லங்குப்பம் பகுதி அருகே மோட்டார் சைக்கிள் விற்பனை ஷோரூம் உள்ளது. இந்த ஷோரூமை நேற்று இரவு அங்கு பணிபுரியும் ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்று விட்டனர். இன்று காலை வழக்கம் போல் தனியார் ஷோரூமை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அதிர்ச்சி காத்தி ருந்தது. அங்கு ஒரு அறை யில் வைக்கப்பட்டிருந்த லாக்கர் உடைந்து பொருட் கள் சிதறி கிடந்தது. பின்னர் லாக்கரை சென்று பார்த்த போது 3 லட்ச ரூபாய் ரொக்க பணம் மற்றும் 6 கிராம் தங்க நாணயத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. கொள்ளையர்கள் ஷோரூம் க்குள் எப்படி வந்தனர்? என பார்வை யிட்ட போது, பின்புறம் இருந்த ஜன்னலை அறுத்து மர்ம நபர்கள் உள்ளே வந்து பணம் மற்றும் தங்க நாணயத்தை திருடியது தெரியவந்தது.
இத்தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப் புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபு ணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து முக்கிய தடயங்களை சேகரித்தனர். கடலூர் - சிதம்பரம் சாலையில் மக்கள் நட மாட்டமும், வாகன போக்கு வரத்தும் 24 மணி நேரமும் இருந்து வரும் நிலையில் மர்ம நபர்கள் பணம் மற்றும் தங்க நாணயத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 2020 ஜூலை முதல் 2023 டிசம்பர் வரை 38.6 கிலோ தங்கக் காசுகளை சகோதரர்களான கணேஷ் மற்றும் சுவாமிநாதன் வாங்கியுள்ளனர்
- மோசடி வழக்குகளில் சிக்கியதால் கணேஷ் மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டனர்
சென்னை தியாகராயர் நகரில் பிரபல நகைக் கடையில் 28.5 கிலோ தங்கக் காசுகளை வாங்கிவிட்டு ஏமாற்றியாக கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்களான கணேஷ் மற்றும் சுவாமிநாதன் மீது நகைக் கடையின் மேலாளர் சந்தோஷ்குமார் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், "கடந்த 2020 ஜூலை முதல் 2023 டிசம்பர் வரை 38.6 கிலோ தங்கக் காசுகளை சகோதரர்களான கணேஷ் மற்றும் சுவாமிநாதன் வாங்கியுள்ளனர். 9.47 கிலோ தங்கக் காசுக்கு மட்டும் பணம் கொடுத்த சகோதரர்கள் மீதமுள்ள 28.5 கிலோ தங்கக் காசுக்கு பணம் தராமல் ஏமாற்றியதாக" தெரிவிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.600 கோடி மோசடி செய்ததாக சகோதரர்கள் கணேஷ் மீது சுவாமிநாதன் மீது வழக்குகள் உள்ளன. மோசடி வழக்குகளில் சிக்கியதால் கணேஷ் மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டனர்.
நிதி நிறுவனம் நடத்தி சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கியதால் இவர்கள் ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்படுகின்றனர்.
- பதான், ஜவான் திரைப்படங்கள் 1000 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தன.
- இந்த பெருமையை பெறும் முதல் இந்திய நடிகர் ஷாருக்கான் தான்.
பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் இந்திய சினிமாத்துறையில் வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்து வருகிறார். கடந்தாண்டு அவர் நடிப்பில் வெளியான பதான், ஜவான் திரைப்படங்கள் 1000 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தன
இந்நிலையில், ஷாருக்கானுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக அவரின் உருவம் பதித்த சிறப்பு தங்க நாணயம் ஒன்றை பாரீஸில் உள்ள க்ரெவின் மியூஸியம் வெளியிட்டுள்ளது.
இந்த பெருமையை பெறும் முதல் இந்திய நடிகர் என்ற சாதனையை ஷாருக் கான் படைத்துள்ளார்.
இந்த நிலையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஷாருக்கானுக்கு லோகார்னோ திரைப்பட விழாவில் ஷாருக்கானுக்கு பெருமை மிகு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அகழாய்வில் தற்போது வரை 11 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.
- 3-ம் கட்ட அகழாய்வில் முதல் முறையாக தங்க நாணயம் கிடைத்துள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. அகழாய்வில் தற்போது வரை 11 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அதில் ஏராளமான மண்பாண்ட ஓடுகள், ஆட்ட காய்கள், சுடுமண் முத்திரைகள், ஆபரணங்கள், செப்புக்காசுகள், சூது பவளம், செவ்வந்திக்கல் உள்பட 1,800-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் புதிதாக தோண்டப்பட்ட அகழாய்வு குழியில் 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஏற்றுமதி வணிகத்திற்கு பயன்படுத்திய தென்னிந்திய பணம் என்று சொல்லப்படும் தங்க நாணயம் சேதமடையாமல் முழுமையாக கிடைத்துள்ளது.
இதுகுறித்து அகழாய்வு இயக்குனர் பொன்பாஸ்கர் கூறுகையில், 'தங்க நாணயத்தின் ஒரு பகுதி இதழ்கள் வடிவிலும், மறுபகுதியில் புள்ளி கோடுகளுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பண்டைய தமிழர்கள் தங்க ஆபரணம் போன்று தங்க நாணயத்தையும் நுணுக்கமான வேலைபாடுகளுடன் செய்துள்ளனர். 3-ம் கட்ட அகழாய்வில் முதல் முறையாக தங்க நாணயம் கிடைத்துள்ளது.
இந்த தங்க நாணயத்தை பார்க்கும்போது முன்னோர்கள் அதிகமாக ஏற்றுமதி வணிகத்தில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது' என்றார்.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு அரசு தொடக்க, நடுநிலை, மேல்நிலைப்பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது.
பெற்றோரின் ஆங்கில மோகத்தால் அரசு பள்ளிகள் மூடப்படும் நிலை உருவானதையடுத்து கடந்த 4 ஆண்டுகளாக அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வி செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் பெற்றோர் மத்தியில் அரசு பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்க ஆர்வம் குறைந்து வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள முடீஸ் அரசு மேல்நிலைப்பள்ளியில் 17 மாணவர்கள் மட்டுமே படித்ததால் அந்த பள்ளி கடந்த வாரம் தற்காலிகமாக மூடப்பட்டது. அங்கு பணியாற்றிய 10 ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்டனர்.
இந்தநிலையில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு பள்ளியில் சேர்ந்தால் ஒரு கிராம் தங்க நாணயம், ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு கோவையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதற்கு பலன் அளிக்கும் வகையில் நேற்று 2 மாணவிகள் உள்பட 3 பேர் பள்ளியில் சேர்ந்தனர். இதனால் மாணவர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தது. இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேஷ் கூறும்போது, பள்ளியில் நாளை மேலும் 4 மாணவர்கள் சேர உள்ளனர். இதனால் மாணவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துவிடும். கல்வி அதிகாரிகள் முன்னிலையில் புதிய மாணவர்களுக்கு தங்க நாணயம் மற்றும் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றார். #Tamilnews
திருச்சிற்றம்பலம் அருகே உள்ள துலுக்கவிடுதி வடக்கு கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டுமென கிராம மக்கள் முடிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து, கடந்த 1 மாதகாமாக கிராம மக்கள் வீடு வீடாக சென்று பெற்றோர்களைச் சந்திந்து தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க ஆலோசனை வழங்கினர். அதனை ஏற்றுக் கொண்ட பெரும்பாலான பெற்றோர்கள தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க முன்வந்தனர்.
அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களை வரவேற்று பரிசுகள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பேராவூரணி வட்டார தொடக்க கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் ( பட்டுக்கோட்டை) பாண்டியன் முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ. கோவிந்தராசு, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.
அரசு பள்ளியில் சேரும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் துலுக்கவிடுதி பள்ளி வளர்ச்சி கரங்கள் மற்றும் நேரு நற்பணி மன்றம், முன்னாள், இன்னாள் இளைஞர்கள் ஆகியோர் இணைந்து 28 மாணவர்களுக்கு தலா 1 கிராம் தங்கநாணயத்தை பரிசாக வழங்கினர். பள்ளியின் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செந்தில்குமார் 28 மாணவர்களுக்கும் தலா ஆயிரம் வீதம் வழங்கினார். 57 மாணவர்களுக்கு இலவச பள்ளிச் சீருடைகளை பார்த்தசாரதி வழங்கினார்.
விழாவில், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பிரகலாதன், துணைத்தலைவர் துரைமாணிக்கம், கவுரவத் தலைவர் அண்ணா பரமசிவம், ராமநாதன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவி ஆனந்தி, பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் செல்வராசு, துணைத் தலைவர் மாரிமுத்து, அன்னையர் குழு தலைவி மகேஸ்வரி, பேராவூரணி கான் முகமது, ராமையன், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் வேலு, கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகனை துலுக்கவிடுதி வடக்கு கிராம மக்கள் செய்திருந்தனர். தலைமை ஆசிரியை வாசுகி நன்றி கூறினார். # tamilnews






