என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு தங்க நாணயம்-சீருடைகள்
Byமாலை மலர்2 July 2018 12:23 PM GMT (Updated: 2 July 2018 12:23 PM GMT)
திருச்சிற்றம்பலம் அருகே அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு அப்பகுதி மக்கள் தங்க நாணயம் மற்றும் சீருடைகள் வழங்கினர்.
திருச்சிற்றம்பலம்:
திருச்சிற்றம்பலம் அருகே உள்ள துலுக்கவிடுதி வடக்கு கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டுமென கிராம மக்கள் முடிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து, கடந்த 1 மாதகாமாக கிராம மக்கள் வீடு வீடாக சென்று பெற்றோர்களைச் சந்திந்து தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க ஆலோசனை வழங்கினர். அதனை ஏற்றுக் கொண்ட பெரும்பாலான பெற்றோர்கள தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க முன்வந்தனர்.
அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களை வரவேற்று பரிசுகள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பேராவூரணி வட்டார தொடக்க கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் ( பட்டுக்கோட்டை) பாண்டியன் முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ. கோவிந்தராசு, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.
அரசு பள்ளியில் சேரும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் துலுக்கவிடுதி பள்ளி வளர்ச்சி கரங்கள் மற்றும் நேரு நற்பணி மன்றம், முன்னாள், இன்னாள் இளைஞர்கள் ஆகியோர் இணைந்து 28 மாணவர்களுக்கு தலா 1 கிராம் தங்கநாணயத்தை பரிசாக வழங்கினர். பள்ளியின் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செந்தில்குமார் 28 மாணவர்களுக்கும் தலா ஆயிரம் வீதம் வழங்கினார். 57 மாணவர்களுக்கு இலவச பள்ளிச் சீருடைகளை பார்த்தசாரதி வழங்கினார்.
விழாவில், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பிரகலாதன், துணைத்தலைவர் துரைமாணிக்கம், கவுரவத் தலைவர் அண்ணா பரமசிவம், ராமநாதன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவி ஆனந்தி, பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் செல்வராசு, துணைத் தலைவர் மாரிமுத்து, அன்னையர் குழு தலைவி மகேஸ்வரி, பேராவூரணி கான் முகமது, ராமையன், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் வேலு, கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகனை துலுக்கவிடுதி வடக்கு கிராம மக்கள் செய்திருந்தனர். தலைமை ஆசிரியை வாசுகி நன்றி கூறினார். # tamilnews
திருச்சிற்றம்பலம் அருகே உள்ள துலுக்கவிடுதி வடக்கு கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டுமென கிராம மக்கள் முடிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து, கடந்த 1 மாதகாமாக கிராம மக்கள் வீடு வீடாக சென்று பெற்றோர்களைச் சந்திந்து தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க ஆலோசனை வழங்கினர். அதனை ஏற்றுக் கொண்ட பெரும்பாலான பெற்றோர்கள தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க முன்வந்தனர்.
அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களை வரவேற்று பரிசுகள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பேராவூரணி வட்டார தொடக்க கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் ( பட்டுக்கோட்டை) பாண்டியன் முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ. கோவிந்தராசு, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.
அரசு பள்ளியில் சேரும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் துலுக்கவிடுதி பள்ளி வளர்ச்சி கரங்கள் மற்றும் நேரு நற்பணி மன்றம், முன்னாள், இன்னாள் இளைஞர்கள் ஆகியோர் இணைந்து 28 மாணவர்களுக்கு தலா 1 கிராம் தங்கநாணயத்தை பரிசாக வழங்கினர். பள்ளியின் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செந்தில்குமார் 28 மாணவர்களுக்கும் தலா ஆயிரம் வீதம் வழங்கினார். 57 மாணவர்களுக்கு இலவச பள்ளிச் சீருடைகளை பார்த்தசாரதி வழங்கினார்.
விழாவில், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பிரகலாதன், துணைத்தலைவர் துரைமாணிக்கம், கவுரவத் தலைவர் அண்ணா பரமசிவம், ராமநாதன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவி ஆனந்தி, பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் செல்வராசு, துணைத் தலைவர் மாரிமுத்து, அன்னையர் குழு தலைவி மகேஸ்வரி, பேராவூரணி கான் முகமது, ராமையன், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் வேலு, கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகனை துலுக்கவிடுதி வடக்கு கிராம மக்கள் செய்திருந்தனர். தலைமை ஆசிரியை வாசுகி நன்றி கூறினார். # tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X