என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tehran"

    • மே 1 ஆம் தேதி தெஹ்ரானில் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே அவர்கள் அனைவரும் காணாமல் போனார்கள்.
    • இந்த விஷயத்தை ஈரானிய அதிகாரிகளிடம் எடுத்துச் சென்றுள்ளது.

    ஈரானுக்குச் சென்ற மூன்று இந்தியர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களைக் கண்டுபிடிக்க தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    இது தொடர்பாக தூதரகம் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. பஞ்சாபில் இருந்து ஈரானுக்குச் சென்ற மூன்று இந்தியர்கள் காணாமல் போயுள்ளதாக தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

    காணாமல் போன மூன்று பேர் ஹுஷான்பிரீத் சிங் , ஜஸ்பால் சிங் மற்றும் அம்ரித்பால் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மே 1 ஆம் தேதி தெஹ்ரானில் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே அவர்கள் அனைவரும் காணாமல் போனார்கள்.

    "ஈரானுக்குப் பயணம் செய்த பின்னர் தங்கள் உறவினர்கள் காணாமல் போனதாக மூன்று இந்தியர்களின் குடும்பத்தினர் இந்திய தூதரகத்தை அணுகியுள்ளனர். தூதரகம் இந்த விஷயத்தை ஈரானிய அதிகாரிகளிடம் எடுத்துச் சென்றுள்ளது.

    காணாமல் போன இந்தியர்களை உடனடியாக அடையாளம் கண்டு அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது" என்று இந்திய தூதரகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    • இதே காரணத்திற்காக கடந்த வருடம் மஹ்சா அமினி, அதிகாரிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்
    • அதிகாரிகள் தாக்கியதில் அர்மிடாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக நண்பர்கள் தெரிவித்தனர்

    மேற்காசியாவில் உள்ள அரபு நாடான ஈரானில் பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் தீவிரமாக அமலில் உள்ளது. இச்சட்டத்தை மீறும் பெண்களுக்கு கசையடியும், அபராதமும் தண்டனையாக உள்ளது. அந்நாட்டிற்கு வருகை தரும் அயல்நாட்டு பெண்களும் உடல் வெளியே தெரியும்படியான ஆடைகள் அணிவது தடை செய்யப்பட்டுள்ளது.

    சுமார் 1 வருடத்திற்கு முன் மஹ்சா அமினி (Mahsa Amini) எனும் இள வயது பெண் ஆடை கட்டுப்பாட்டை மீறியதாக  அந்நாட்டின் மத கட்டுப்பாட்டு அமலாக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரணையின் போது மர்மமான முறையில் இறந்தார். இதனையடுத்து அந்நாட்டில் பெரும் போராட்டம் நடைபெற்றது. உலகளவில் பெண் உரிமை ஆர்வலர்கள் ஈரான் அரசின் பழமைவாத கட்டுப்பாடுகளை கடுமையாக விமர்சித்தனர்.

    இந்நிலையில் ஈரானின் கெர்மன்ஷா (Kermanshah) பகுதியை சேர்ந்த 16 வயதான அர்மிடா கராவந்த் (Armita Garawand) எனும் சிறுமி, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஷோஹடா (Shohada) மெட்ரோ ரெயில் நிலைய சுரங்க நடைபாதையில் (subway) தனது நண்பர்களுடன் நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அவரது உடையை கண்டு, அந்நாட்டின் மத கட்டுப்பாட்டு அமலாக்க பெண் அதிகாரிகள் அர்மிடா ஆடை கட்டுப்பாட்டை மீறியதாக குற்றம் சாட்டி அவரை தடுத்து நிறுத்தினார். அதற்கு பிறகு அவர்களால் அர்மிடா விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார். ஆனால், சிறிது நேரத்தில் அச்சிறுமி மயக்கமடைந்து 'கோமா' நிலைக்கு சென்று விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது அச்சிறுமி டெஹ்ரானின் ஃபாஹர் (Fajr) மருத்துவமனையில் கடும் பாதுகாப்புக்கிடையே சிகிச்சை பெற்று வருகிறாள்.

    அச்சிறுமி குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக கோமா நிலைக்கு சென்று விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தாலும் அச்சிறுமியின் நண்பர்கள் இதனை மறுத்தனர். மத கட்டுப்பாட்டு அதிகாரிகளால் அச்சிறுமி கடுமையாக தாக்கப்பட்டதாகவும், அவளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதனால் மயங்கியதாகவும் குற்றம்சாட்டினர்.

    இதையடுத்து, கடந்த ஆண்டை போல் போராட்டம் வெடிப்பதை தடுக்க ஈரான் காவல்துறை தயார் நிலையில் உள்ளது.

    ஈரானில் கடந்த 2017-ம் ஆண்டு பாராளுமன்றம் மீது நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான 8 ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. #Iran
    தெஹ்ரான்:

    ஈரான் தலைநகர் தெஹ்ரானில், ஐ.எஸ் பயங்கரவாதிகள் கடந்த 2017-ம் ஆண்டு பாராளுமன்றம் மற்றும் வழிபாட்டுத்  தலம் மீது நடத்திய தாக்குதலில் 18 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஐ.எஸ் அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த தாக்குதலில் சம்பந்தபட்ட ஐ.எஸ் அமைப்பினரை பிடித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இந்த பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக சுமார் 8 பயங்கரவாதிகளுக்கு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த வழக்கில் மேலும் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

    ஈரான் நாட்டில் 2007-ம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் அதிக அளவிலான குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. #Iran
    ×