என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » islamic state
நீங்கள் தேடியது "Islamic state"
இலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் தினத்தன்று 8 இடங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் இன்று பொறுப்பேற்றது. #Islamicstate #Islamicstate #EasterAttack #Srilankablast
கொழும்பு:
இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறு அன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் இதுவரை 10 இந்தியர்கள் உள்பட 321 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்காத நிலையில் நியூசிலாந்து நாட்டின் கிரைஸ்ட் சர்ச் நகரத்திலுள்ள மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு பழிவாங்கவே இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டதாக இலங்கை ராணுவ மந்திரி இன்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில், ஈஸ்டர் தினத்தன்று 8 இடங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் இன்று பொறுப்பேற்றது. அவ்வியக்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ‘அமாக்’ இணையத்தளத்தில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. #Islamicstate #Islamicstate #EasterAttack #Srilankablast
ஈரானில் கடந்த 2017-ம் ஆண்டு பாராளுமன்றம் மீது நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான 8 ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. #Iran
தெஹ்ரான்:
ஈரான் தலைநகர் தெஹ்ரானில், ஐ.எஸ் பயங்கரவாதிகள் கடந்த 2017-ம் ஆண்டு பாராளுமன்றம் மற்றும் வழிபாட்டுத் தலம் மீது நடத்திய தாக்குதலில் 18 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஐ.எஸ் அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த தாக்குதலில் சம்பந்தபட்ட ஐ.எஸ் அமைப்பினரை பிடித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இந்த பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக சுமார் 8 பயங்கரவாதிகளுக்கு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த வழக்கில் மேலும் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஈரான் நாட்டில் 2007-ம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் அதிக அளவிலான குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. #Iran
ஈரான் தலைநகர் தெஹ்ரானில், ஐ.எஸ் பயங்கரவாதிகள் கடந்த 2017-ம் ஆண்டு பாராளுமன்றம் மற்றும் வழிபாட்டுத் தலம் மீது நடத்திய தாக்குதலில் 18 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஐ.எஸ் அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த தாக்குதலில் சம்பந்தபட்ட ஐ.எஸ் அமைப்பினரை பிடித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இந்த பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக சுமார் 8 பயங்கரவாதிகளுக்கு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த வழக்கில் மேலும் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஈரான் நாட்டில் 2007-ம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் அதிக அளவிலான குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. #Iran
ஈராக் பாராளுமன்றத்துக்கு 329 புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. #Iraqelection
பாக்தாத்:
தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் சிக்கியிருந்த ஈராக்கிலிருந்து அமெரிக்க பாதுகாப்புப்படை வாபஸ் பெறப்பட்ட மூன்றாண்டுகளுக்கு பின்னர் கடந்த 2014-ம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்ததாக புகார்கள் எழுந்தன. நடப்பு பாராளுமன்றத்தின் காலம் முடிவடைவதற்குள் நியாயமான வகையில் அடுத்த தேர்தலை நடத்த வேண்டும் உள்ளூர் மக்களும் சர்வதேச அரசியல் நோக்கர்களும் வலியுறுத்தி வந்தனர்.
ஆனால், புதிய வாக்காளர்கள் கணக்கெடுப்பு மற்றும் பாதுகாப்பு நிலவரங்களை காரணம் காட்டி அடுத்தடுத்து தேர்தல் தேதி ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே ஈராக் நாட்டுக்கு உட்பட்ட மோசூல் உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்றிய ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போராலும் தேர்தல் தாமதமானது.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆண்களும் பெண்களும் நீண்ட வரிசையில் ஆர்வத்துடன் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
ஈராக் பிரதமர் ஹைடர் அல் அபாடி மற்றும் முன்னாள் பிரதமர் நூரி அல்-மாலிக்கி இடையில் இந்த தேர்தலில் பலத்த போட்டி நிலவுகிறது.
ஈராக் நாட்டு அரசியலமைப்பு சட்டத்தின்படி தேர்தல் வெற்றி தொடர்பான அறிவிக்கையை அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட் அறிவிக்கும்.
இந்த அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் பாராளுமன்றம் கூடும். மூத்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடருக்கு தலைமை தாங்கி புதிய சபாநாயகருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார்.
329 இடங்களில் மூன்றில் இரண்டு மடங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற கட்சி உறுப்பினர்கள் அதிபரை தேர்வு செய்வார்கள். அந்த அதிபர் பிரதமர் பதவிக்கான நபரை அறிவிப்பார். புதிய பிரதமர் தலைமையிலான மந்திரிசபை 30 நாட்களுக்குள் பதவி ஏற்றுகொள்ளும். #Iraqelection
தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் சிக்கியிருந்த ஈராக்கிலிருந்து அமெரிக்க பாதுகாப்புப்படை வாபஸ் பெறப்பட்ட மூன்றாண்டுகளுக்கு பின்னர் கடந்த 2014-ம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்ததாக புகார்கள் எழுந்தன. நடப்பு பாராளுமன்றத்தின் காலம் முடிவடைவதற்குள் நியாயமான வகையில் அடுத்த தேர்தலை நடத்த வேண்டும் உள்ளூர் மக்களும் சர்வதேச அரசியல் நோக்கர்களும் வலியுறுத்தி வந்தனர்.
ஆனால், புதிய வாக்காளர்கள் கணக்கெடுப்பு மற்றும் பாதுகாப்பு நிலவரங்களை காரணம் காட்டி அடுத்தடுத்து தேர்தல் தேதி ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே ஈராக் நாட்டுக்கு உட்பட்ட மோசூல் உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்றிய ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போராலும் தேர்தல் தாமதமானது.
இந்நிலையில், 329 இடங்களை கொண்ட ஈராக் பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. 18 மாகாணங்களுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் இந்த தேர்தலில் சுமார் 7 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆண்களும் பெண்களும் நீண்ட வரிசையில் ஆர்வத்துடன் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
ஈராக் பிரதமர் ஹைடர் அல் அபாடி மற்றும் முன்னாள் பிரதமர் நூரி அல்-மாலிக்கி இடையில் இந்த தேர்தலில் பலத்த போட்டி நிலவுகிறது.
ஈராக் நாட்டு அரசியலமைப்பு சட்டத்தின்படி தேர்தல் வெற்றி தொடர்பான அறிவிக்கையை அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட் அறிவிக்கும்.
இந்த அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் பாராளுமன்றம் கூடும். மூத்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடருக்கு தலைமை தாங்கி புதிய சபாநாயகருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார்.
329 இடங்களில் மூன்றில் இரண்டு மடங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற கட்சி உறுப்பினர்கள் அதிபரை தேர்வு செய்வார்கள். அந்த அதிபர் பிரதமர் பதவிக்கான நபரை அறிவிப்பார். புதிய பிரதமர் தலைமையிலான மந்திரிசபை 30 நாட்களுக்குள் பதவி ஏற்றுகொள்ளும். #Iraqelection
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X