search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "responsibility"

    • வையாபுரி மணிகண்டன் அறிக்கை
    • பொதுமக்கள் காய்ச்சலால் பாதிக்கப்படாத வகையில் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் போன்றவற்றை வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

    சமீப நாட்களாக சில மணி நேரங்கள் பெய்த மழையினால் திறந்த வெளிகளில், காலி மனைகளில் மழைநீர் தேங்கி, கொசுக்கள் உற்பத்தியாகியுள்ளது.

    இந்த கொசுக்களால் டெங்கு, மலேரியா, டைபாய்டு போன்ற காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக குழந்தைகள், பெண்களை இந்த காய்ச்சல் அதிகளவு தாக்குகிறது. புதுவை சுகாதாரத்துறையின் அலட்சியத்தால் 2 அப்பாவி பெண்கள் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியு ள்ளனர். இதற்கு சுகாதார த்துறையும், அரசும்தான் முழு பொறுப்பேற்க வேண்டும். டெங்கு பாதித்து பலியான பெண்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

    இனியும் காலம் கடத்தாமல் போர்க்கால அடிப்படையில் மாநிலத்தில் எங்கும் மழைநீர் தேங்கா தவாறு உரிய நடவடி க்கைகளை மேற்கொள்ள அரசு எந்திரம் முடுக்கிவிட வேண்டும். முத்தியால்பேட்டை உட்பட அனைத்து தொகுதிகளிலும் கொசு மருந்து தெளிக்க வேண்டும்.

    பொதுமக்கள் காய்ச்சலால் பாதிக்கப்படாத வகையில் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் போன்றவற்றை வழங்க வேண்டும். டெங்குவால் பாதிக்கப்பட்டு பலியான பெண்கள் வசித்த பகுதிகள் மட்டுமின்றி, காய்ச்சலால் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும்.

    இவ்வாறு வையாபுரி மணிகண்டன் அறிக்கையில் கூறியுள்ளார்.

    • ஆணையத்தின் நடவடிக்கைகள் சுறுசுறுப்படைந்துள்ளது. மனை, வீடு வாங்குவது, விற்பதில் விதிமீறல் இருந்தால் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கலாம்.
    • அடுக்குமாடி குடியிருப்பில் 8 வீடுகளுக்கு மேல் கட்டவும் பதிவு செய்ய வேண்டும்.

    புதுச்சேரி:

    ரியல் எஸ்டேட் தொடர்புடைய விஷய ங்களை முறைப்படுத்த ஒழங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்டத்தை 2018-ல் மத்திய அரசு கொண்டுவந்தது. வீடு, மனை வாங்குபவர்களின் நலனை பாதுகாக்க இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்தில் ரெரா எனப்படும் ஒழுங்குமுறை ஆணையம் ஆரம்பிக்கப்பட வேண்டும். இதன்படி புதுவையில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட்டது.

    இந்த ஆணையத்துக்கு தலைவர், 2 உறுப்பினர்களை நியமனம் செய்தது. தலைவர், ஒரு உறுப்பினர் பதவி யேற்கவில்லை. ஒருவர் ராஜினாமா செய்தார். இதனால் ஆணையம் முடங்கியிருந்தது. இந்த நிலையில் ஆணையத்தின் தலைவராக குமரன் நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினராக நுகர்வோர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அசோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவர்கள் 2 பேரும் ஜவகர் நகர் நகர, கிராம அமைப்பு துறை அலுவலக வளாகத்தில் உள்ள ஆணையத்தின் அலுவ லகத்தில் பொறுப்பேற்றனர். இதனால் ஆணையத்தின் நடவடிக்கைகள் சுறுசுறுப்படைந்துள்ளது. மனை, வீடு வாங்குவது, விற்பதில் விதிமீறல் இருந்தால் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கலாம்.

    ஆணையம் விசாரணை நடத்தி தீர்ப்பு அளிக்கும். தீர்ப்பு திருப்தி தராவிட்டால் சென்னை ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு தீர்பாயத்தை அணுகலாம். 500 சதுர மீட்டருக்கு மேல் உள்ள இடத்தை விற்பனை நோக்கில் மாற்ற ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பில் 8 வீடுகளுக்கு மேல் கட்டவும் பதிவு செய்ய வேண்டும்.

    பதிவு செய்த பின் சாலை, பூங்கா உட்பட பொது பயன்பாடு இடங்களை ரியல்எஸ்டேட் உரிமையாளர்கள் மாற்ற முடியாது. உறுதிமொழி அளித்தபடி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வீடுகளை ஒப்படைக்க வேண்டும் என்பது உட்பட பல விதிமுறைகள் பொதுமக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

    இலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் தினத்தன்று 8 இடங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் இன்று பொறுப்பேற்றது. #Islamicstate #Islamicstate #EasterAttack #Srilankablast
    கொழும்பு:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறு அன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் இதுவரை 10 இந்தியர்கள் உள்பட 321 பேர் உயிரிழந்துள்ளனர். 

    இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்காத நிலையில் நியூசிலாந்து நாட்டின் கிரைஸ்ட் சர்ச் நகரத்திலுள்ள மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு பழிவாங்கவே இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டதாக இலங்கை ராணுவ மந்திரி இன்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 



    இந்நிலையில், ஈஸ்டர் தினத்தன்று 8 இடங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் இன்று பொறுப்பேற்றது. அவ்வியக்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ‘அமாக்’ இணையத்தளத்தில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. #Islamicstate #Islamicstate #EasterAttack #Srilankablast
    உத்தரபிரதேசத்தில் அரசியல் மாற்றத்தை கொண்டு வருவேன் என பிரியங்கா காந்தி கூறியுள்ளார். #PriyankaGandhi #UttarPradesh
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரியும், சோனியாவின் மகளுமான பிரியங்கா, தீவிர அரசியல் களத்தில் இறங்கி உள்ளார். கட்சியின் பொதுச்செயலாளராகவும், உத்தரபிரதேச கிழக்கு பிராந்திய பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ள அவர், கடந்த மாதம் உத்தரபிரதேசத்தில் தனது கட்சிப்பணிகளை தொடங்கினார்.

    தற்போது பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் பிரயாக்ராஜ் மற்றும் மிர்சாபூர் மாவட்டங்களில் பிரியங்கா, கங்கை நதி யாத்திரை மேற்கொள்கிறார். 3 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரையை திரிவேணி சங்கமத்தில் இருந்து இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறார். கங்கை நதியில் சுமார் 140 கி.மீ. தூரத்துக்கு செல்லும் அவர் நதிக்கரையில் உள்ள கிராம மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.

    இந்த பயணத்தை முன்னிட்டு உத்தரபிரதேச மக்களுக்கு பிரியங்கா, கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதிக்கு கட்சியின் பொறுப்பாளராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என்னை நியமித்து உள்ளார். இந்த மாநில மக்களுக்கும், எனக்கும் பழைய தொடர்பு ஒன்று உண்டு. ஒரு காங்கிரஸ் தொண்டராக உத்தரபிரதேசத்தில் உங்கள் ஆதரவுடன் அரசியல் மாற்றத்தை கொண்டு வரவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது.

    மாநிலத்தில் தற்போதைய அரசியல் சூழலில் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளிகள் அனைவரும் கடும் அழுத்தத்தில் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் வலிகளை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர். உங்கள் கருத்துகளை கேட்காமல், கவலைகளை பகிர்ந்து கொள்ளாமல் மாநிலத்தில் எந்த அரசியல் மாற்றத்தையும் கொண்டு வர முடியாது.

    எனவே உங்கள் வீட்டுக்கே நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வருகிறேன். அவ்வாறு உங்கள் கருத்துக்களை அறிந்த பிறகு உண்மையின் அடித்தளத்தில் மாநிலத்தில் அரசியல் மாற்றத்தை நாம் இணைந்து கொண்டு வருவோம். உங்கள் பிரச்சினைகளுக்கான தீர்வை நோக்கி நாம் நகர்வோம்.

    இவ்வாறு பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

    கங்கை நதி யாத்திரைக்காக பிரியங்கா நேற்றே உத்தரபிரதேசம் சென்றார். லக்னோ விமான நிலையத்தில் அவரை மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ்பப்பர் மற்றும் மூத்த தலைவர்கள் வரவேற்றனர். அங்கிருந்து கட்சி அலுவலகம் சென்ற பிரியங்கா, கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் அவர் மாலையில் பிரயாக்ராஜ் நகருக்கு சென்று சேர்ந்தார். அவரது கங்கை நதி யாத்திரைக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் பிரயாக்ராஜ் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது. மேலும் இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. 
    காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை மற்றும் சட்ட விதிகளுக்குட்பட்டு 7 பேர் இன்று முதல் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #Thirunavukkarasar
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில முன்னணி அமைப்புகளின் தலைவர்கள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, அழைப்பாளர்களாக இல்லாதவர்கள் மற்றும் ஏற்கனவே கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட முரளிதரன், சீனிவாசமூர்த்தி ஆகியவர்களோடு சேர்ந்துகொண்டு கூட்டத்திற்குள் அத்துமீறி நுழைய முயற்சித்தும், சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு களங்கம் கற்பிக்கின்ற வகையிலும், இன்றைய கூட்டத்தின் நடவடிக்கைகளை சீர்குலைக்கின்ற வகையிலும் செயல்பட்ட காரணத்தினால் காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை மற்றும் சட்ட விதிகளுக்குட்பட்டு இன்று முதல் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுகிறார்கள். நீக்கப்பட்டவர்களின் பெயர் வருமாறு:-

    முரளிதரன், சீனிவாசமூர்த்தி, கடல் தமிழ்வாணன், வில்லிவாக்கம் ஜான்சன், ஏ.வி.எம்.ஷெரிப், பொன் மனோகரன், திருவொற்றியூர் பாஸ்கர்.

    இவர்களோடு கட்சிக்காரர்கள் கட்சி சம்பந்தமான நடவடிக்கைகள் மற்றும் தொடர்புகள் வைத்துக்கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்படுகிறது.

    மேற்கண்ட தகவல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Thirunavukkarasar
    பாகிஸ்தானில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் அரசியல் கட்சி தலைவர் உள்பட 20 பேர் பலி ஆகினர். இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலீபான் அமைப்பு பொறுப்பு ஏற்றது. #Pakistan #SuicideAttack
    பெஷாவர்:

    பயங்கரவாதிகளின் சொர்க்க புரியாக திகழ்கிற பாகிஸ்தானில் வருகிற 25-ந் தேதி நாடாளுமன்றத்துக்கும், சில மாகாண சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    தேர்தல் பிரசாரத்தின்போது பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான்கான், அவாமி தேசிய கட்சி தலைவர்கள் உள்பட 6 அரசியல் தலைவர்கள் உயிருக்கு ஆபத்து உள்ளதாக அந்த நாட்டின் தேசிய பயங்கரவாத தடுப்பு ஆணையம் நேற்று முன்தினம் காலை எச்சரிக்கை விடுத்தது.

    இது தொடர்பாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்துக்கும், மாகாண உள்துறை அமைச்சகங்களுக்கும் 12 பயங்கரவாத உஷார் குறிப்புகளை அனுப்பி உள்ளதாக அந்த ஆணையம் தெரிவித்தது.

    இந்த நிலையில், கைபர் பக்துங்வா மாகாண சட்டசபை தேர்தலில், பி.கே.- 78 (பெஷாவர்) தொகுதியில் களம் இறங்கிய அவாமி தேசிய கட்சியின் மூத்த தலைவர் ஹாரூண் பிலோர், பெஷாவர் நகரில் யாகாடூட் என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி அவர் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்தபோது, தற்கொலைப்படையை சேர்ந்த இளம் பயங்கரவாதி ஒருவர் உடலில் வெடிகுண்டுகளை கட்டி எடுத்து வந்து, பிரதான நுழைவாயிலில் வைத்து வெடிக்க வைத்தார். பலத்த சத்தத்துடன் குண்டுகள் வெடித்துச் சிதறின. உடனே கூட்டத்தினர் பதற்றத்தில் நாலாபுறமும் ஓட்டம் எடுத்தனர்.

    இருப்பினும் இந்த குண்டுவெடிப்பில் ஹாரூண் பிலோர் உள்ளிட்டோர் சிக்கி ரத்த வெள்ளத்தில் வீழ்ந்தனர். 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறிய நிலையில் உயிரிழந்தனர்.

    உடனடியாக பாதுகாப்பு படையினரும், மீட்பு படையினரும் விரைந்து வந்து மீட்பு பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர்.

    ஹாரூண் பிலோரும் மீட்கப்பட்டு, உடனடியாக ஆம்புலன்சில் லேடி ரீடிங் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சுமார் 50 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை தரப்பட்டது.

    இருப்பினும் ஆஸ்பத்திரியில் ஹாரூண் பிலோர் உள்ளிட்ட 7 பேர் இறந்து விட்டதால் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.

    இதற்கிடையே லேடி ரீடிங் ஆஸ்பத்திரி செய்தி தொடர்பாளர் ஜூல்பிகர் அலி பாபா கேல் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒரு சிறுமி உள்பட 6 பேரது உடல்நிலை கவலைக்கிடம் அளிக்கும் வகையில் உள்ளது” என்று குறிப்பிட்டார்.

    இந்த குண்டுவெடிப்பில் படுகாயம் அடைந்த ஒருவர் மீட்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட நிலையில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

    இந்த தாக்குதல் பற்றி பெஷாவர் கூடுதல் போலீஸ் ஐ.ஜி. ஷாப்கத் மாலிக் கூறும்போது, “முதல்கட்ட விசாரணையில் இந்த தற்கொலைப்படை தாக்குதல், அவாமி தேசிய கட்சியின் மூத்த தலைவர் ஹாரூண் பிலோரை குறிவைத்துத்தான் நடத்தப்பட்டு இருப்பது தெரியவந்து உள்ளது” என குறிப்பிட்டார்.

    உயிரிழந்த ஹாரூண் பிலோர் உடல், அவரது இல்லத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு நேற்று அவாமி தேசிய கட்சி தொண்டர்கள் திரளாக திரண்டு வந்து மறைந்த தலைவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் மாலை 5 மணிக்கு வாஜிர் பாக்கில் அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலீபான் அமைப்பு பொறுப்பு ஏற்றது.

    ஹாரூண் பிலோர் படுகொலையை தொடர்ந்து பி.கே.- 78 தொகுதி தேர்தலை தேர்தல் கமிஷன் ஒத்திவைத்தது. தேர்தல் பிரசார கூட்டத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலைமை தேர்தல் ஆணையர் சர்தார் முகமது ராசா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில் “இந்த தாக்குதல் பாதுகாப்பு அமைப்புகளின் பலவீனத்தையும், வெளிப்படையான தேர்தலுக்கு எதிரான சதியையும் காட்டுகிறது” என்றார். அவாமி தேசிய கட்சி, தலீபான் பயங்கரவாத அமைப்புக்கு எதிரானது ஆகும்.

    படுகொலை செய்யப்பட்ட ஹாரூண் பிலோரின் தந்தை பஷீர் பிலோர் 2012-ம் ஆண்டு பாகிஸ்தான் தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதலில் கொல்லப்பட்டவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.  #Pakistan #SuicideAttack  #tamilnews 
    ×