search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "membership"

    • கட்சியின் நிறுவன தலைவர் ராஜ்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.
    • தொடர்ந்து கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டையை கட்சி நிறுவன தலைவர் ராஜ்குமார் வழங்கினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளத்தில் தமிழர் விடுதலை களம் கட்சி சார்பில் சட்டம் மற்றும் அரசியல் பயிற்சியரங்கம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. கட்சியின் நிறுவன தலைவர் ராஜ்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். வடக்கு மாவட்ட செயலாளர் காளிராஜ் முன்னிலை வகித்தார். விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர் சரவணகுமார் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீரோடைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி விளாத்திகளும் பகுதி விவசாய பொதுமக்களுக்கு மழை நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.அதனைத் தொடர்ந்து கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டையை கட்சி நிறுவன தலைவர் ராஜ்குமார் வழங்கினார்.

    இதில் மாநிலத் துணைத் தலைவர் சாமி, மாநில சட்ட ஆலோசகர் பிரபுஜீவன், வடக்கு மாவட்ட பொருளாளர் ஆறுமுகப்பெருமாள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • 1 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் பணி கடந்த ஏப்ரல் 3-ந்தேதி தொடங்கி ஜூன் 3-ந்தேதி வரை நடைபெற்றது.
    • உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் மாவட்டம் வாரியாக வழங்கி இருந்தனர்.

    சென்னை:

    தி.மு.க.வில் 1 கோடியே 10 லட்சத்திற்கு மேல் உறுப்பினர்கள் இருந்த நிலையில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி மேலும் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் பணி கடந்த ஏப்ரல் 3-ந்தேதி தொடங்கி ஜூன் 3-ந்தேதி வரை நடைபெற்றது.

    இதில் மேலும் 1 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். இதற்கான உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் மாவட்டம் வாரியாக வழங்கி இருந்தனர்.

    இவ்வாறு தலைமைக் கழகத்திற்கு வரப்பெற்ற படிவங்கள் முறைப்படி பரிசீலனை செய்யப்பட்டு புதிதாக சேர்க்கப்பட்டவர்களுக்கு உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை தலைமைக் கழகம் தயாரித்துள்ளது.

    இதில் 1 முதல் 1000 வரை எண் கொண்ட ரசீதுகள் வைத்திருக்கும் நிர்வாகிகள், தங்களிடம் உள்ள உறுப்பினர் சேர்த்தல் பட்டியலையும், ஒரிஜினல் ரசீதையும் நவம்பர் 7-ந்தேதி முதல் 10-ந்தேதிக்குள் அறிவாலயம் வந்து பட்டியலை சரிபார்த்து உரிமைச் சீட்டுகளை பெற்றுச் செல்ல வேண்டும் என்று தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

    புதிய உறுப்பினர் உரிமை சீட்டுகளை தலைமைக்கழகத்தில் பெற்றுக் கொள்பவர்கள் அதை உரியவரிடம் ஒப்படைத்து அத்தாட்சி கடிதம் பெற்று அதை தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.

    • மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் தொடங்கி வைத்தனர்
    • குன்னூர் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் பிரவீன் உள்பட பலர் பங்கேற்பு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கீழ்கோத்தகிரி ஒன்றியம் குனியட்டி கிராமத்தில் இல்லந்தோறும் இளைஞரணி தி.மு.க உறுப்பினர் சேர்க்கை நடந்தது. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வினோத்குமார், ஒன்றிய செயலாளர் பீமன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில்குன்னியட்டி கிளை செயலாளர் குமார், ஊர் தலைவர் பெள்ளிராஜ், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் சரத்குமார், ஒன்றிய இளைஞரணி மிதுன், குன்னூர் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் பிரவீன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சந்திப், நகர மாணவரணி துணை அமைப்பாளர்வினோத் குமார், நகர ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் ஸ்ரீதர், தனசக்தி, சாஜு உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • இளைஞரணி சார்பில் இல்லம் தோறும் இளைஞர் அணிக்கு உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சியில் தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பல்லடம்

    பல்லடத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் இல்லம் தோறும் இளைஞர் அணிக்கு உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும், பல்லடம் நகராட்சி 2 -வது வார்டு நகர் மன்ற உறுப்பினருமான ராஜசேகரன் தலைமையில் 14வது வார்டு பகுதியில் இல்லம் தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் வார்டு செயலாளர் சண்முகம், நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சிலம்பரசன், தாமோதரன் மற்றும் கவின்,ஆர்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளி, 2 கோடி தொண்டர்களுடன் அந்த பட்டியலில் தி.மு.க. முதலிடம் பிடித்து உள்ளது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நல்லாட்சியையும், மாநில மக்களுடன் அவர் மேற்கொண்ட பயணத்தை யும் கண்டு, நாள் தோறும் ஏராளமானோர் கட்சியில் இணைந்து வருகின்றனர்.

    சென்னை:

    மறைந்த முதலமைச்சர் அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்ட தி.மு.க. வில் தற்போது 2 கோடி தொண்டர்கள் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழாவையொட்டி தி.மு.க.வில் மேலும் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் நடை பெற்ற தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கேட்டுக் கொண்டார். இதற்காக அந்த கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

    இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 4-ந்தேதி புதிய உறுப்பினர் சேர்க்கையை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் அன்றைய தினமே உறுப்பினர் சேர்க்கை தொடங்கியது. கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3 ந் தேதிக்குள் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பதால் ஒன்றியம், நகரம், பேரூர், பகுதி, கிளை கழகம் வாரியாக உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடந்து வந்தது. இப்போது இந்த பணி முடிவடைந்துள்ளது.

    இதையொட்டி தி.மு.க.வின் புதுப்பிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அதில் தி.மு.க.தொடர்பான பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் இடம் பெற்று உள்ளன. குறிப்பாக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. வில் 2 கோடி கட்சி உறுப்பினர்கள், 23 சார்பு அணிகள், 125 சட்டமன்ற உறுப்பினர்கள், 20 மக்களவை உறுப்பினர்கள், 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 1.5 கோடி தொண்டர்களுடன் கொண்ட கட்சி அ.தி.மு.க. தான் என்று கூறப்பட்டு வந்தது. தற்போது அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளி, 2 கோடி தொண்டர்களுடன் அந்த பட்டியலில் தி.மு.க. முதலிடம் பிடித்து உள்ளது.

    இது குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நல்லாட்சியையும், மாநில மக்களுடன் அவர் மேற்கொண்ட பயணத்தை யும் கண்டு, நாள் தோறும் ஏராளமானோர் கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் எங்கள் இலக்கான 2 கோடி கட்சி உறுப்பினர்கள் தி.மு.க.வில் இடம் பெற வேண்டும் என பாடுபட்டோம். அந்த இலக்கை இப்போது நாங்கள் அடைந்துவிட்டோம் என்று தெரிவித்தார்.

    • நாமக்கல் மாவட்டத்திற்கான மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • ஊரகப் பகுதிக்கு என 8 உறுப்பினர்களும் நகர்ப்புற பகுதிக்கு என 4 உறுப்பினர்க ளும் என மொத்தம் 12 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்திற்கான மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஊரகப் பகுதிக்கு என 8 உறுப்பினர்களும் நகர்ப்புற பகுதிக்கு என 4 உறுப்பினர்களும் என மொத்தம் 12 உறுப்பினர்கள் தேர்ந்தெ டுக்கப்பட உள்ளனர்.

    ஏற்கனவே வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் இத்தேர்தலில் போட்டியிடவும் வாக்களிக்கவும் தகுதியானவர்கள். இத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மாவட்ட ஊராட்சி அலுவலகம், அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களிலும் கிடைக்கும்.

    வேட்புமனுக்களை நாமக்கல் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள தேர்தல் நடத்தும் அலுவலர், உதவித்தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவல கத்தில் தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலராக கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதி வாளர் செல்வக்குமரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஊரகப் பகுதிக்கான உதவித்தேர்தல் நடத்தும் அலுவலராக உதவி திட்ட அலுவலர் செல்வி நிய மிக்கப்பட்டுள்ளார். நகர்ப்பு றத்தில் நகராட்சிக்கு ஊரக வளர்ச்சி உதவி இயக்கு நர்(தணிக்கை) உமா மற்றும் பேரூராட்சி மாவட்ட ஊராட்சி செயலர் ரவிச்சந்தி ரன் ஆகியோர் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்க ளாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நாளை (சனிக்கிழமை) காலை 11 மணி முதல் மாலை 3 மணிக்குள் தங்களின் வேட்புமனுவினை தாக்கல் செய்யலாம். தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 12-ந்தேதி அன்று காலை 11 மணிக்கு பரிசீ லிக்கப்படும். வேட்புமனு வினை திரும்ப பெற்றுக் கொள்ள விரும்புவர்கள், அதற்கான அறிவிப்பை 14-ந்தேதி மாலை 3 மணிக்குள் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவித் தேர்தல் நடத்தும் அலுவல ரிடம் வழங்கலாம்.

    தேர்தல் 23-ந்தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதல்தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் காலை 10 மணி முதல் மாலை 3 மணிவரை நடைபெறும். வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தகவலை நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

    • 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று கட்சித் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்களுக்கு கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டார்.
    • சட்டமன்ற தொகுதியிலும் 10 ஆயிரம், 20 ஆயிரம் புதிய உறுப்பினர்களை தான் சேர்த்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    தி.மு.க.வில் கிட்டத்தட்ட 1 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மேலும் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று கட்சித் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்களுக்கு கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டார்.

    கருணாநிதியின் பிறந்த நாளான ஜுன் 3-ந் தேதிக் குள் இப்பணியை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

    இதன்படி ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களும் தலைமைக் கழகத்தில் இருந்து விண்ணப்ப படிவங்களை பெற்று தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்களிடம் கொடுத்திருந்தனர்.

    துண்டறிக்கைகள், திண்ணை பிரசாரங்கள் முக்கிய இடங்களில் முகாம்கள், வீடு தோறும் தேடிச் சென்று புதிய உறுப்பினர்களை தி.மு.க.வில் சேர்ப்பது என்று மாவட்டச் செயலாளர்கள் முடிவு செய்து பணிகளை துவக்கினார்கள்.

    இந்த புதிய உறுப்பினர் சேர்க்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் கடந்த மாதம் தொடங்கி வைத்தார். ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 50 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் வீதம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 234 தொகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரப்படுத்தப்பட்டது.

    உறுப்பினர் சேர்க்கையில் டபுள் என்ட்ரி இருக்ககூடாது, போலியாக பெயர்களை எழுதக் கூடாது, வாக்காளர் அட்டை ஜெராக்ஸ் நகல் இணைக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டதால் உறுப்பினர் சேர்க்கை எதிர்பார்த்த அளவுக்கு இன்னும் முடிவடையவில்லை.

    ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 10 ஆயிரம், 20 ஆயிரம் புதிய உறுப்பினர்களை தான் சேர்த்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்துக்கான பணத்தை பொது மக்களிடம் இருந்து வாங்க முடியாது என்பதால் அதையும் சொந்த பணத்தில் கட்சிக்காரர்கள் தலைமையில் செலுத்தி வருகின்றனர்.

    கட்சி தேர்தலின்போது ஏற்கனவே சேர்த்திருந்த உறுப்பினர்களை இந்த பட்டியலுடன் சேர்க்கக் கூடாது என்று கூறுவதால் எதிர்பார்த்த அளவுக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்க முடியாமல் தவித்து வருவதாக கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    சென்னையில் அடுக்கு மாடி வீடுகள் அதிகம் உள்ளதால் வீடு வீடாக ஏறி இறங்கி உறுப்பினர்களை சேர்ப்பது சிரமமாக உள்ளதாகவும் வாக்காளர் அடையாள அட்டை வேண்டும் என்று சொல்லும் போது சிலர் உறுப்பினராக சேர தயங்குவதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ஆனால் அ.தி.மு.க.வில் சத்தமின்றி வீடு வீடாக விண்ணப்ப படிவத்தை கொடுத்து புதிய உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர்.

    எனவே அதிக உறுப்பினர்களை தி.மு.க. சேர்க்குமா? அல்லது அ.தி.மு.க. சேர்க்குமா? என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும்.

    • சோழவந்தானில் புதிய உரம் அறிமுக நிகழ்ச்சி-உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
    • சங்கத்தின் செயலாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டாரத்தில் டான்பெட்டின் புதிய உரம் அறிமுக நிகழ்ச்சி மற்றும் உறுப்பினர் கல்வி திட்டம், உறுப்பினர் சேர்க்கை முகாம் சோழவந்தான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்தது. துணைப்பதிவாளர் பார்த்திபன் தலைமை தாங்கினார். மதுரை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குநர் கார்த்திகேயன், வாடிப்பட்டி கள அலுவலர் தங்க நாககுரு மற்றும் ராமலிங்கம் வடிவேலன் உள்பட பலர் கலந்து கொண்டர்.

    வாடிப்பட்டி வட்டாரத்தில் உள்ள சோழவந்தான் 1, 2 திருவேடகம், தென்கரை , இரும்பாடி, கருப்பட்டி, கரட்டுப்பட்டி, மன்னாடிமங்கலம், சித்தாலங்குடி , கச்சைகட்டி , ராமையன்பட்டி, போடிநாயக்கன்பட்டி, நீரேத்தான் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • வாடிப்பட்டி அருகே அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து பேசினார்.

    சோழவந்தான்

    வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் மன்னாடிமங்கலத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து பேசினார். ஒன்றிய செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். மன்னாடிமங்கலம் தெற்கு கிளை செயலாளர் ராஜபாண்டி வரவேற்றார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பையா, ஒன்றிய செயலாளர்கள் செல்லம்பட்டி ராஜா, மதுரை மேற்கு அரியூர் ராதாகிருஷ்ணன், யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா,பொதுக்குழு நாகராஜ், பேரூர் செயலாளர்கள் சோழவந்தான் முருகேசன், வாடிப்பட்டி அசோக், மாவட்ட மகளிரணி செயலாளர் லட்சுமி, இணை செயலாளர் வனிதா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், சோழவந்தான் பேரூராட்சி கவுன்சிலர்கள் சண்முக பாண்டியராஜா, ரேகா ராமச்சந்திரன், கணேசன், சோழவந்தான் நகர இளைஞரணி மணி, எம்.ஜி.ஆர். ஒன்றிய இளைஞரணி செயலாளர் தண்டபாணி, மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க வடக்கு ஒன்றியத்தின் சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது
    • இதில் மயிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார்.

    விழுப்புரம்:

    மயிலம் அருகே தீவனூர் பஸ் நிறுத்தம் அருகில் தி.மு.க வடக்கு ஒன்றியத்தின் சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இதில் மயிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். மயிலம் தெற்கு ஒன்றிய செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. வழக்கறிஞர் சேதுநாதன், மயிலம் ஒன்றிய குழு தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில். தலைமை கழக தொகுதி பொறுப்பாளர் ஜெரால்டு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி புதிய உறுப்பினர் சேர்க்கைகான படிவத்தை புதிய உறுப்பினர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். இதில் 17 ஊராட்சிகளில் இருந்து தி.மு.க.-வில் சேர்வதற்க்கு புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட. ஒன்றிய மற்றும் கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • தொகுதிக்கு 50 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும்.
    • தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    திருப்பரங்குன்றம்

    மதுரை புறநகர் தெற்கு மாவட்ட, தெற்கு பகுதி தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் இன்று திருநகரில் நடை பெற்றது. பகுதி செயலாளர் உசிலை சிவா தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் மணிமாறன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    புதிய உறுப்பினர் சேர்க்கையை உடனடியாக தொடங்க வேண்டும். கட்சி கொள்கைகளை கூறி அதிக இளைஞர்களை உறுப்பி னர்களாக்க வேண்டும். தி.மு.க.வின் திட்டங்களை பொது மக்களிடம் தெரி வித்து வீடுகள் தோறும் பாரா ளுமன்ற தேர்த லுக்கான பிரசாரத்தை தொடங்குங்கள்.

    விரைவில் குடும்ப பெண்களுக்கு உரிமைத் தொகை ரூ.1000 வழங்கப்பட உள்ளது. மகளிர்கள் அனைவரும் தி.மு.க. உறுப்பினர்களாக சேர்வதற்கு முன் வரு வார்கள். எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்கள் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணை செயலாளர் இலக்கு வன் கலந்து கொண்டு பேசும்போது, தொகுதிக்கு 50 ஆயிரம் உறுப்பினர்கள் வீதம் மாநிலம் முழுவதும் 1 கோடி புதிய உறுப்பி னர்களை சேர்க்க கட்சியின் தலைவர் மு. க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி நாம் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு வைத்து புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர் இந்திரா காந்தி, வட்டச் செயலாளர் சாமி வேல், மாநில நிர்வாகி கொடி சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    • பூத் கமிட்டி ஆய்வு மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • பல்லடம் தொகுதியில் தி.மு.க.விற்கு 1 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கரைப்புதூர்,கணபதிபாளையம்,ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியில் பூத் கமிட்டி ஆய்வு மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் என்.சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழக துணை செயலாளரும், பொங்கலூர் ஒன்றிய குழு தலைவருமான வழக்கறிஞர் எஸ்.குமார் முன்னிலை வகித்தார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளரும், பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவருமான பாலசுப்பிரமணியம் வரவேற்றார்.

    இந்த கூட்டத்தில் மாநில சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான் பேசுகையில், பல்லடம் தொகுதியில் தி.மு.க. அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் பல்வேறு திட்டங்கள் மக்களை மிகவும் கவர்ந்துள்ளது. வரும் பாராளுமன்ற மன்ற தேர்தலில் 40க்கு 40 இடங்களிலும் தி.மு.க. கூட்டணி தான் மகத்தான வெற்றியை பெறும். கோவை எம்.பி.தொகுதியில் பல்லடம் சட்டமன்ற தொகுதி அதிக வாக்குகளை பெற்று தர வேண்டும். தி.மு.க.வில் சேர இளைஞர்கள், மகளிர் வெகு ஆர்வமாக உள்ளனர். பல்லடம் தொகுதியில் தி.மு.க.விற்கு 1 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றார்.

    இந்த கூட்டத்தில் ஒன்றிய அவைத்தலைவர் பரமசிவம், ஒன்றிய பொருளாளர் கந்தசாமி, மாவட்ட பிரதிநிதி செந்தில்தியாகராஜன், கணபதிபாளையம் ஊராட்சி தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம், துணைத்தலைவர் முத்துக்குமார், 63வேல ம்பாளையம் ஊராட்சி தலைவர் நடராஜ், ஆறு முத்தாம்பாளையம் ஊராட்சி தலைவர் பாரதி சின்னப்பன், முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×