search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செஞ்சி    தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்
    X

    புதிய உறுப்பினர் சேர்க்கும் முகாமை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.

    செஞ்சி தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்

    • நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றிய குழுத்தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார்
    • அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு தி.மு.க. வில் புதிய உறுப்பினர் சேர்க்கும் முகாமை தொடங்கி வைத்தார்

    விழுப்புரம்:

    விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தி.மு.க.வில் புதிய உறுப்பி னர்கள் சேர்க்கும் சிறப்பு முகாம் கோனை ஊராட்சி அப்பம்பட்டில் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றிய குழுத்தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத் தலைவர் ஆறுமுகம் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு தி.மு.க. வில் புதிய உறுப்பினர் சேர்க்கும் முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் செஞ்சி வட்டார காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த அஞ்சாஞ்சேரி சரவணன் அக்கட்சியிலிருந்து விலகி அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்னிலையில் தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார். தி.மு.க.வில் இணைந்த சரவணனுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் சால்வை அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழு மலை விவசாய அணி அஞ்சாஞ்சேரி கணேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், ஒன்றிய குழு துணைத் தலைவர் ஜெயபாலன், ஒன்றிய அவைத் தலைவர் வாசு, துணை செயலாளர்கள் மதியழகன், அனுசுயா மணிபாலன், பொருளாளர் இக்பால், மாவட்ட பிரதி நிதிகள் குணசேகரன், கோடீஸ்வரன், ஒன்றிய இளைஞரணி அமைப் பாளர் ஜம்போதி பழனி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ரிஸ்வான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக செஞ்சி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டி ருந்த நீர்மோர் பந்தலை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்து பொது மக்களுக்கு தர்பூசணி, வெள்ளரிப்பிஞ்சு, ரொட்டி, நீர்மோர் ஆகிவற்றை வழங்கினார்.

    Next Story
    ×