search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவெண்காட்டில், தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம்
    X

    திருவெண்காட்டில், தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம்

    • வரும் நாடாளுமன்ற தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியை தி.மு.க. வெற்றி பெறபாடுபட வேண்டும்.
    • மயிலாடுதுறை மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையை நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிரப்படுத்த வேண்டும்.

    சீர்காழி;

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சீர்காழி கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய அவைத் தலைவர் நெடுஞ்செழியன் தலைமை வைத்தார்.

    தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணம், சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முத்துமகேந்திரன், ஜி. என்.ரவி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன், ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் முன்னிலை வகித்தனர்.

    தி.மு.க. ஒன்றிய செயலாளர் பஞ்சு குமார் வரவேற்றார். மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் எம்.எல்.ஏ.வுமான நிவேதா முருகன் கலந்து கொண்டு பேசுகையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியை தி.மு.க. வெற்றி பெறபாடுபட வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையை நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிர படுத்த வேண்டும் என்றார்

    கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி மாவட்ட அவைத் தலைவர் சீனிவாசன் ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன் மலர்விழி திருமாவளவன்,ரவிக்குமார் ரவிக்குமார் மாவட்டத் துணைச் செயலாளர் ஞானவேலன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ரவி, மாவட்ட கவுன்சிலர்கள் ஆனந்தன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜிபையர் அகமது, நிர்வாகிகள் துரைராஜன், சசிகுமார், குலோத்துங்கன், ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×