search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "enrollment"

    • சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
    • மேற்கண்ட தகவலை மண்டல இணைப்பதிவாளர் ஜினு தெரிவித்துள்ளர்.

    சிவகங்கை

    சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023-2024-ம் ஆண்டு அஞ்சல் வழி / பகுதி நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சியில் சேர 12-ம் வகுப்பு கல்வி தேர்ச்சி பெற்ற அனைவரும் www.tncuicm.com என்ற இணையதளம் வாயிலாக 30.11.2023-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி கட்டணம் ரூ .20 ஆயிரத்து 750 ஆகும்.

    சனி மற்றும் ஞாயிற்றுக்கிழ மைகளில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். பயிற்சி காலம் ஒரு ஆண்டு ஆகும்.மேற்படி பயிற்சிக்கு ஏற்கனவே ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு பெற்றவர்கள் விண்ணப் பிக்கலாம்.

    மேற்கண்ட முறையில் பட்டப்படிப்பு முடித்த வர்கள் இப்பயிற்சியில் சேருவதற்கான பயிற்சிக் கட்டணத்தை 30.11.2023-ம் தேதிக்குள் செலுத்தும் பட்சத்தில் இவர்கள் சிவ கங்கை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் நிரப்பப்பட உள்ள காலிப்பணியி டங்களுக்கு www.drbsvg.net என்ற இணையதளத்தில் வருகிற டிசம்பர் 1-ந்தேதிக் குள் விண்ணப்பிக்கலாம்.

    மேற்கண்ட தகவலை மண்டல இணைப்பதிவாளர் ஜினு தெரிவித்துள்ளர்.

    • மாநகராட்சி பள்ளிகளில் அரசின் காலை உணவுத்திட்டம் வரும் கல்வியாண்டில் செயல்படுத்–தப்பட உள்ளது.
    • துணை மேயர் பாலசுப்பிரமணியம், கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் வெளிமாநில, வெளிமாவட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகிறார்கள். தொழிலாளர்களின் குழந்தைகள் மாநகர பகுதிக்கு உட்பட்ட பள்ளிகளில் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிகளில் படித்து இடைநின்ற, படிப்பை பாதியில் விட்ட குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்ப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் தலைமை தாங்கினார். மேயர் தினேஷ்குமார் பேசும்போது, `பள்ளியில் இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சி பள்ளிகளில் அரசின் காலை உணவுத்திட்டம் வரும் கல்வியாண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. அதை சிறப்பாக செயல்–படுத்த வேண்டும். ஆத்துப்பாளையம், வெங்கமேடு பகுதிகளில் வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் 84 பேர் பள்ளி செல்லாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது. அவர்களை அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தேவைப்பட்டால் அவர்களின் தாய்மொழியை கற்றுக்கொடுக்கவும் ஆசிரியர்களை நியமிக்கலாம்' என்றார். இந்த கூட்டத்தில் துணை மேயர் பாலசுப்பிரமணியம், கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • இப்படி தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளை சம்பந்தப்பட்ட பள்ளிகளில் 29-ந் தேதி சேர்க்க வேண்டும்.
    • நாளை காலையில் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் நடைபெறும் குலுக்கலில் குறித்த நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள 249 சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் 2,922 இடங்கள் 25 சதவீத இடஒதுக்கீட்டில் நிர்ணயம் செய்யப்பட்டு ள்ளது.

    இதற்காக இணையதளம் வழியாக 4,963 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    தற்போது தஞ்சை மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் சுயநிதியில் செயல்படும் 249 பள்ளிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கு மேல் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதால் நாளை (செவ்வாய்கிழமை) 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் முதன்மைக்கல்வி அலுவலரால் நியமிக்கப்படும் கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

    தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளின் பெயர் பட்டியல் விண்ணப்ப எண்ணுடன் இணையதளம் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளியின் தகவல் பலகையில் 24-ந் தேதி வெளியிடப்படும். இப்படி தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளை சம்பந்தப்பட்ட பள்ளிகளில் 29-ந் தேதி சேர்க்க வேண்டும்.

    2023-24-ம் கல்வியாண்டிற்கு 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு வகுப்பான எல்.கே.ஜி. மற்றும் முதல் வகுப்பில் சேர்க்கை செய்வதற்கு இணையதளம் வழியாக விண்ணப்பித்த அனைத்து பெற்றோர்களும் நாளை காலையில் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் நடைபெறும் குலுக்கலில் குறித்த நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குடியிருப்பு பகுதியில் உள்ள இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களை கொண்டு நடைபெற்று வருகிறது.
    • பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தீவிர மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    திருவாரூர்:

    கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் 2023- 2024 ஆம் கல்வியாண்டிற்கான எல்.கே.ஜி. வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை அந்தந்த குடியிருப்பு பகுதியில் உள்ள இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களை கொண்டு நடைபெற்று வருகிறது.

    இந்த மாணவர் சேர்க்கை நிகழ்வில் 106 தன்னார்வ–லர்கள் கலந்து கொண்டு எல்கேஜி வகுப்பில் 113 மாணவர்களும், ஒன்றாம் வகுப்பில் 382 மாணவர்களும் மற்ற எல்லா வகுப்புகளையும் சேர்த்து மொத்தம் 706 மாணவர்களையும் பள்ளியில் சேர்த்துள்ளனர்.

    மாணவர் சேர்க்கை நிகழ்வில் கொரடாச்சேரி வட்டார கல்வி அலுவலர்கள் வீ.விமலா, கி.சுமதி, ஆசிரியர் பயிற்றுநர் க.சரவணன், ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் ஜி.தியாகு, அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று அரசு பள்ளியில் பயில்வதால் கிடைக்ககூடிய பயன்பாடுகள் குறித்து பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தீவிர மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    மணக்கால் , எருக்காட்டூர் பகுதிகளில் ஆட்டோ விளம்பரம் மற்றும் மாணவர் விழிப்புணர்வு பேரணி மூலம் மாணவர் சேர்க்கை செய்யப்பட்டது.

    • இதற்கு, தி.மு.க. நகர துணைச் செயலாளர் வக்கீல் பாரி இப்ராஹிம் முன்னிலை வகித்தார்.
    • வழக்கறிஞர் இள‌.புகழேந்தி இம்முகாமில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

    கடலூர்:

    கடலூர் மேற்கு மாவட்டம், விருத்தாசலம் தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், தி.மு.க.வில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் சிறப்பு முகாம், விருத்தாசலம் ஒன்றியச் செயலாளர் வேல்முருகன் தலைமையில், விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டை தேரடி வீதியில் நடந்தது இதற்கு, தி.மு.க. நகர துணைச் செயலாளர் வக்கீல் பாரி இப்ராஹிம் முன்னிலை வகித்தார். முன்னதாக, நகர செயலாளர் செல்வம் வரவேற்றார். கடலூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க. தேர்தல் பொறுப்பாளருமான வழக்கறிஞர் இள.புகழேந்தி இம்முகாமில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, தி.மு.க.வில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் சிறப்பு முகாமினை தொடக்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி வெங்கடாஜலபதி, ஒன்றிய துணை செயலாளர் முத்துவேல், நகர அவைத் தலைவர் முஹம்மது யூசுப், பொருளாளர் சேட்டு, ஒன்றிய பிரதிநிதி கோ.மணி, சோழப்பிரகாஷ், டைலர் நடராஜன், டைலர் கணேசன், ஜெயசக்தி, கண்ணன், இளைஞரணி விக்ரம், ராஜேஷ் உள்ளிட்ட வார்டு கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • வேதாரண்யம் கிழக்கு ஒன்றிய செயலாளர்சதாசிவம் தலைமையில் இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஜோதி.செல்லபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தி.மு.க. கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நாகை மாவட்ட செயலாளர்கவுதமன் ஆகியோர் அறிவுறுத்தலின்படி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மலர்வண்ண ன்வழிகாட்டுதல்படி, வேதாரண்யம் கிழக்கு ஒன்றிய செயலாளர்சதாசிவம் தலைமையில் இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது .

    நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஜோதி.செல்லபாண்டியன், மாவட்ட கவுன்சிலர் சோழன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சத்தியமூர்த்தி , மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தாமோதரன் , மாணவரணி துணை அமைப்பாளர் செந்தாமரைச்செல்வன், அயலக அணி துணை அமைப்பாளர் சம்பத், மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் மோகனா தசமணி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கலைக்கோவன், ஒன்றிய கழக அவைத் தலைவர் ஏகாம்பரம் , மாவட்ட பிரதிநிதிசெல்வம், ஒன்றிய துணைச் செயலாளர் சேதுராஜன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கவியரசன், ரெத்தினசாமி மற்றும் கத்தரிப்புலம், கிளை செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

    • துணை அமைப்பாளர்கள் கோகுல்,சுரேஷ், சிவ சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • திருப்பூர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளரும், பொங்கலூர் சேர்மனுமான எஸ்.குமார் தலைமை வகித்தார்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் கள்ளிப்பாளையத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பாக இல்லம் தோறும் இளைஞர் அணிக்கு உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளரும், பொங்கலூர் சேர்மனுமான எஸ்.குமார் தலைமை வகித்தார். திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செ.ராஜசேகரன்,பொங்கலூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பொங்கலூர் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் லோகு பிரசாத், துணை அமைப்பாளர்கள் கோகுல்,சுரேஷ், சிவ சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சோழவந்தான் அருகே தொழிற்பயிற்சி சேர்க்கை முகாம் நடைபெற்றது.
    • 6 மாத பயிற்சி திட்டத்தில் ஏராளமான மாணவமாணவிகள் சேர்ந்தனர்.

     சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் கிராமத்தில் கல்வி அறக்கட்டளை சார்பில் மத்திய அரசின் தீன்தயாள் உபத்யாய கிராமின் கவுசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சியில் 2022-23-ம் ஆண்டிற்கான மாணவ-மாணவிகள் சேர்க்கை முகாம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார்.

    ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகா ஞானசேகரன் முன்னிலை வகித்தார். துணை பொது மேலாளர் சுப்பிரமணி வரவேற்றார். 6 மாத பயிற்சி திட்டத்தில் ஏராளமான மாணவமாணவிகள் சேர்ந்தனர். பயிற்சிக்கான குறைந்தபட்ச கல்வி தகுதி பிளஸ்-2 தேர்ச்சி ஆகும். பெண்களுக்கு தங்கும் இடவசதியுடன், வெளியூர் மாணவர்களுக்கு பயிற்சி ஊக்க தொகை வழங்கப்படுகிறது என்று கல்வி அறக்கட்டளையை சேர்ந்த ஜோசப் ஜெபராஜ், சவுந்தரியா ஆகியோர் தெரிவித்தனர்.

    • பி.எம்., கிசான் ஐ.டி.,யில் தங்களை இணைத்து வருகின்றனர்.
    • ஏராளமான விவசாயிகள் இ சேவை மையங்களுக்கு வருகின்றனர்.

    உடுமலை :

    ஆண்டுக்கு ரூ. 6,000 பெறும் பிரதமரின் கவுரவ ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் உடுமலை, பல்லடம், தாராபுரம் என திருப்பூர் மாவட்டத்தைச்சேர்ந்த ஏராளமான விவசாயிகள் இணைந்துள்ளனர். விவசாயி அல்லாதவர்கள், வருமான வரி செலுத்துபவர்கள் எ போலி பயனாளிகளை கண்டறிந்து அவர்களை நீக்கும் பணியில் வேளாண் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஊக்கத்தொகை பெறும் விவசாயிகள், தங்கள் நில ஆவணங்களை அந்தந்த வட்டாரங்களில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தில் வழங்கி பி.எம்., கிசான் ஐ.டி.,யில் தங்களை இணைத்து வருகின்றனர்.

    இதன் வாயிலாக அவர்களின் நில விபரம் 'அப்டேட்' செய்யப்படும். இதில் தங்களை இணைத்துக்கொண்டவர்களுக்கு மட்டுமே வரும் நாட்களில் கவுரவ ஊக்கத்தொகை கிடைக்கும் என்ற நிலையில், இப்பணியை இம்மாதம் இறுதிக்குள் முடிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நில ஆவணங்களை அப்டேட் செய்ய இ சேவை மற்றும் கம்ப்யூட்டர் நிலையங்கள் வாயிலாக சிட்டா நகலை விவசாயிகளை பெற வேண்டும். ஆன்லைன் வழியாகவே சிட்டா நகல் பெறப்படும் நிலையில், பல இடங்களில் சர்வர் பிரச்னையால், இதை பெற முடியாத நிலையில், விவசாயிகள் அலைமோதுகின்றனர்.கால அவகாசம் குறைவாக உள்ள நிலையில் தினமும் ஏராளமான விவசாயிகள் இ சேவை மையங்களுக்கு வருகின்றனர். தொடர் பயன்பாடால் வரும் நாட்களில் சர்வர் முடங்கும் நிலை ஏற்படும் என்பதால் அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    • பொது சேவை மையங்கள் மூலம் 18 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.
    • அவிநாசி பேரூராட்சியில் பணிபுரியும் 134 தூய்மை பணியாளர்களை இத்திட்டத்தில் இணைப்பதற்கான பணி நடந்தது.

    அவிநாசி :

    அமைப்பு சாரா தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சார்பில் இ-ஷ்ராம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள இணைய தளத்தில், அமைப்பு சாரா தொழிலாளர்களை பதிவு செய்யும் பணி நடக்கிறது.

    பொது சேவை மையங்கள் மூலம் 18 முதல் 59 வயதுக்கு உட்பட்ட தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சிப்பணி, நடைபாதை வியாபாரிகள், ரிக்‌ஷா ஓட்டுனர்கள், கட்டுமான தொழிலாளர் வீட்டு பணியாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்கள், விவசாய தொழிலாளர் ஆகியோர் பதிவு செய்து கொள்ளலாம்.

    அதன்படி அவிநாசி பேரூராட்சியில் பணிபுரியும் 134 தூய்மை பணியாளர்களை இத்திட்டத்தில் இணைப்பதற்கான பணி நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொது சேவை மையத்தில் இருந்து வந்திருந்த ஊழியர்கள், இணைய தளத்தில் பயனாளிகளின் விவரங்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கருப்புசாமி உள்ளிட்ட அலுவலர்கள் முகாம் பணிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 படித்து முடித்த மாணவர்களுக்கு பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் போது அதே பள்ளியில் ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மேற்கொள்ளப்பட்டு வந்தது.
    • இனி பள்ளிகளில் பதிவு செய்யும் நடைமுறை கைவிடப்படுகின்றது. மதிப்பெண் சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து பதிவு செய்து பதிவு அட்டை வழங்கப்படும்.

    ஈரோடு:

    எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 படித்து முடித்த மாணவர்களுக்கு பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் போது அதே பள்ளியில் ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    மேலும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய நாளில் இருந்து குறிப்பிட்ட நாட்களுக்கு பதிவு செய்யும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே பதிவு மூப்பு எண் வழங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் இந்தாண்டு முதல் பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்யும் நடைமுறை கைவிடப்படுவதாகவும், அதற்கு பதிலாக வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அல்லது ஆன்லைன் மூலமும் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் வேலைவாய்ப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் பள்ளிகளுக்கு அனுப்ப பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

    வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் வேலைவாய்ப்பு பிரிவு இணையதளம் மூலம் 2011-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை நிகழ்நிலையாக அவரவர் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    இனி பள்ளிகளில் பதிவு செய்யும் நடைமுறை கைவிடப்படுகின்றது. மதிப்பெண் சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து பதிவு செய்து பதிவு அட்டை வழங்கப்படும்.

    மேலும் வேலைவாய்ப்பு இணையதளமான www.tnvelaivaaaippu.gov.in என்ற முகவரியில் நேரடியாக மாணவர்களே பதிவு செய்ய வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இ-சேவை மையங்கள் மூலமும் பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×