search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனை கூட்டம்
    X

    அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனை கூட்டம்

    • சிவகங்கையில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கையில் உள்ள அ.தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர்-சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். செந்தில்நாதன் தலைமையில் நடந்தது.

    முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் பேசுகையில், எடப்பாடி பழனிசாமி சிவகங்கை மாவட்டத்திற்கு வந்து சென்ற பின்னர் சோதனைகளை எல்லாம் தகர்த்து பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு சிவகங்கை மாவட்டம் பெற்ற புண்ணியமாகும் . சிவகங்கை மாவட்டத்தில் 3 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றார்.

    முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன், நாகராஜன், நகரசெயலாளர் ராஜா, ஒன்றிய செய லாளர்கள் கருணாகரன், செல்வமணி, ஸ்டீபன்அருள்சாமி, சேவிவியர்தாஸ், சிவாஜி, கோபி, ஜெகதீஸ்வரன், பாரதிராஜன், சோனைரவி.

    மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் தமிழ்செல்வன், கூட்டுறவு சங்க தலைவர் சங்கர் ராமநாதன், தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் குழந்தை, மாவட்ட பாசறை இணை செயலாளர் மோசஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்களை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் நிர்வாகிகளுக்கு வழங்கினார்.

    Next Story
    ×