search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    டெங்கு பலிக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்
    X

    கோப்பு படம்.

    டெங்கு பலிக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்

    • வையாபுரி மணிகண்டன் அறிக்கை
    • பொதுமக்கள் காய்ச்சலால் பாதிக்கப்படாத வகையில் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் போன்றவற்றை வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

    சமீப நாட்களாக சில மணி நேரங்கள் பெய்த மழையினால் திறந்த வெளிகளில், காலி மனைகளில் மழைநீர் தேங்கி, கொசுக்கள் உற்பத்தியாகியுள்ளது.

    இந்த கொசுக்களால் டெங்கு, மலேரியா, டைபாய்டு போன்ற காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக குழந்தைகள், பெண்களை இந்த காய்ச்சல் அதிகளவு தாக்குகிறது. புதுவை சுகாதாரத்துறையின் அலட்சியத்தால் 2 அப்பாவி பெண்கள் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியு ள்ளனர். இதற்கு சுகாதார த்துறையும், அரசும்தான் முழு பொறுப்பேற்க வேண்டும். டெங்கு பாதித்து பலியான பெண்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

    இனியும் காலம் கடத்தாமல் போர்க்கால அடிப்படையில் மாநிலத்தில் எங்கும் மழைநீர் தேங்கா தவாறு உரிய நடவடி க்கைகளை மேற்கொள்ள அரசு எந்திரம் முடுக்கிவிட வேண்டும். முத்தியால்பேட்டை உட்பட அனைத்து தொகுதிகளிலும் கொசு மருந்து தெளிக்க வேண்டும்.

    பொதுமக்கள் காய்ச்சலால் பாதிக்கப்படாத வகையில் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் போன்றவற்றை வழங்க வேண்டும். டெங்குவால் பாதிக்கப்பட்டு பலியான பெண்கள் வசித்த பகுதிகள் மட்டுமின்றி, காய்ச்சலால் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும்.

    இவ்வாறு வையாபுரி மணிகண்டன் அறிக்கையில் கூறியுள்ளார்.

    Next Story
    ×