என் மலர்tooltip icon

    உலகம்

    ஈரானில் தரையிறங்கிய சில நிமிடங்களில் 3 இந்தியர்கள் மாயம் - தூதரகம் அறிக்கை
    X

    ஈரானில் தரையிறங்கிய சில நிமிடங்களில் 3 இந்தியர்கள் மாயம் - தூதரகம் அறிக்கை

    • மே 1 ஆம் தேதி தெஹ்ரானில் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே அவர்கள் அனைவரும் காணாமல் போனார்கள்.
    • இந்த விஷயத்தை ஈரானிய அதிகாரிகளிடம் எடுத்துச் சென்றுள்ளது.

    ஈரானுக்குச் சென்ற மூன்று இந்தியர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களைக் கண்டுபிடிக்க தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    இது தொடர்பாக தூதரகம் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. பஞ்சாபில் இருந்து ஈரானுக்குச் சென்ற மூன்று இந்தியர்கள் காணாமல் போயுள்ளதாக தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

    காணாமல் போன மூன்று பேர் ஹுஷான்பிரீத் சிங் , ஜஸ்பால் சிங் மற்றும் அம்ரித்பால் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மே 1 ஆம் தேதி தெஹ்ரானில் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே அவர்கள் அனைவரும் காணாமல் போனார்கள்.

    "ஈரானுக்குப் பயணம் செய்த பின்னர் தங்கள் உறவினர்கள் காணாமல் போனதாக மூன்று இந்தியர்களின் குடும்பத்தினர் இந்திய தூதரகத்தை அணுகியுள்ளனர். தூதரகம் இந்த விஷயத்தை ஈரானிய அதிகாரிகளிடம் எடுத்துச் சென்றுள்ளது.

    காணாமல் போன இந்தியர்களை உடனடியாக அடையாளம் கண்டு அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது" என்று இந்திய தூதரகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×