என் மலர்tooltip icon

    உலகம்

    • ஈரானில் செல்போன் மற்றும் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.
    • ஒரே இரவில் 70 பேரின் உடல்கள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. பொருளாதார நெருக்கடி மற்றும் விலை வாசி உயர்வு ஆகியவற்றால் மக்களின் போராட்டங்கள் 2-வது வாரத்தை எட்டி உள்ளது. ஈரான் முழுவதும் போராட்டம் பரவி தீவிரமடைந்துள்ளது. சாலைகளில் ஆயிரகணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்புகிறார்கள்.

    போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதில் ஏற்பட்ட மோதல்களால் வன்முறை வெடித்தது. வாகனங்கள், அரசு கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் ஈரானில் செல்போன் மற்றும் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. ஆனாலும் போராட்டம் கட்டுக்குள் வராமல் தீவிரமடைந்து உள்ளது.

    இந்தநிலையில் ஈரானில் போராட்டம்-வன்முறையில் பலியானவர்கள் எண்ணிக்கை 116-ஆக உயர்ந்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. 2600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே தலைநகர் தெக்ரானில் போராட்டங்களில் காயம் அடைந்தவர்களால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. முதலுதவி செய்வதற்குக்கூட நேரம் இல்லை என்ற மருத்துவப் பணியாளர்கள் தெரிவித்தனர். ரஷ்டில் உள்ள பூர்சினா மருத்துவமனைக்கு ஒரே இரவில் 70 பேரின் உடல்கள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே போராட்டக்காரர்களுக்கு ஈரான் அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதுதொடர்பாக ஈரானின் அட்டர்னி ஜெனரல் முகமது மொவஹேதி ஆசாத் கூறும்போது, போராட்டத்தில் பங்கேற்கும் எவரும் கடவுளின் எதிரி என்று கருதப்படுவார்கள். அது மரண தண்டனைக்குரிய குற்றம் என்று தெரிவித்து உள்ளார்.

    மேலும் ஈரான் அரசு தொலைக்காட்சியில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கலவரக்காரர்களுக்கு உதவியவர்கள் கூட இந்த குற்றச்சாட்டை எதிர்கொள்ள நேரிடும். வக்கீல்கள் கவனமாகவும் தாமதமின்றியும் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்து, தேசத் துரோகம் மற்றும் பாதுகாப்பின்மையை உருவாக்கி, நாட்டின் மீது வெளிநாட்டு ஆதிக்கத்தை நாடுபவர்களுக்கு எதிராக விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும்.

    நடவடிக்கைகள் எந்தவித மென்மை, கருணை அல்லது சலுகையும் இன்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஈரானில் போராட்டங்களை அமெரிக்கா தூண்டிவிடுவதாக ஈரான் உச்சதலைவர் அயதுல்லா அலி கமேனி குற்றம்சாட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினால் ஈரான் விவகாரத்தில் தலையிடுவோம் என்றும் ஈரான் மக்களுக்கு துணை நிற்போம் என்றும் அமெரிக்கா தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் ஈரானில் போராட்டக்காரர்களுக்கு உதவ தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

    ஈரான் இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் சுதந்திரத்தை நோக்கியுள்ளது. அதற்கு அமெரிக்கா உதவத் தயாராக உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

    மேலும், ஈரானுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை விடுத்த எச்சரிக்கையில், அதிபர் டிரம்ப்புடன் விளையாட வேண்டாம். அவர் ஒன்றைச் செய்வேன் என்று சொன்னால், அதை அவர் நிச்சயமாகச் செய்வார் என்று தெரிவித்து உள்ளது.

    இதற்கிடையே ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கான ராணுவத் திட்டங்கள் டிரம்ப்பிடம் வழங்கப்பட்டதாகவும், ஆனால் அவர் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும் அமெரிக்க ஊட கங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

    • மரியா கொரினா மச்சாடோ வெனிசுலா அதிபர் மதுரோவின் தீவிர எதிர்ப்பு நிலை கொண்டனர்
    • இந்தியா பாகிஸ்தான் போரை நானே நிறுத்தினேன். மேலும் 7 போர்களை நிறுத்தினேன்.

    2025 ஆம் ஆண்டிற்கான நோபல் அமைதிப் பரிசை வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ வென்றார். இவர் வெனிசுலா அதிபர் மதுரோவின் தீவிர எதிர்ப்பு நிலை கொண்டனர், அமெரிக்க அதிபர் டிரம்ப் உடைய ஆதரவாளர்.

    இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்கா வெனிசுலாவுக்குள் அதிரடியாக நுழைந்து, தலைநகர் காரகஸில் உள்ள அதிபர் மாளிகையில் இருந்து மதுரோவையும் அவரது மனைவியையும் கடத்தி அமெரிக்காவுக்கு கொண்டு சென்றது.

    இந்நிலையில் தனக்கு வழங்கப்பட அமைதிக்கான நோபல் பரிசை டொனால்ட் டிரம்ப்புக்கு கைமாற்ற மரியா விருப்பம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து விளக்கம் அளித்துள்ள நோபல் கமிட்டி, "நோபல் பரிசை ஒருமுறை அறிவித்த பிறகு, அதை மாற்றவ, யாருடனும் பகிர்ந்து கொள்ளவோ அல்லது ரத்து செய்யவோஇயலாது" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

    நேற்று முன் தினம் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், "இந்தியா பாகிஸ்தான் போரை நானே நிறுத்தினேன். மேலும் 7 போர்களை நிறுத்தினேன்.

    ஒன்றும் செய்யாமல் ஒபாமாவுக்கு நோபல் வழங்கப்பட்டது. ஆனால் அமைதிக்கான நோபல் பரிசுக்கு என்னை விட தகுதியானவர் யாரும் இல்லை" என்று மீண்டும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    வெனிசுலாவின் இடைக்கால அதிபராக துணை அதிபர் சிலியா ரோட்ரிக்ஸ் பதவி ஏற்றுள்ளார். மரியா கொரினா மச்சாடோ, "வெனிசுலா அதிபராக ஆதரவு தருவீர்களா என்ற கேள்வுக்கு பதிலளித்த டிரம்ப், அவருக்கு நோபல் விருதை கொடுத்திருக்கவே கூடாது. அவருக்கு உள்நாட்டில் மக்களிடம் பெரிய செல்வாக்கு இல்லை" என்று தெரிவித்திருந்தார்.  

    • அடுத்த இலக்கு ரஷிய அதிபர் புதின் என ஜெலன்ஸ்கி மறைமுகமாக குறிப்பிட்டார்.
    • ரஷிய அதிபர் புதின் மீது சர்வதேச நீதிமன்றத்தின் பிடிவாரண்ட் நிலுவையில் உள்ளது.

    வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்கப் படைகள் கைது செய்துள்ள நிலையில், அடுத்த இலக்கு ரஷிய அதிபர் புதின் என ஜெலன்ஸ்கி மறைமுகமாக குறிப்பிட்டார்.

    இந்நிலையில் புதினை கைது செய்ய அமெரிக்கா உத்தரவிடுமா என்ற கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், "அதற்கான அவசியம் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை.

    அவருடன் எப்போதும் ஒரு சிறந்த உறவை வைத்திருக்கவே விரும்பினேன். ஆனால் தற்போதைய நிலைமை ஏமாற்றமளிக்கிறது. உக்ரைன்-ரஷிய போரைத் தடுக்க முடியாததில் எனக்கு வருத்தம் உண்டு" என்று கூறினார்.

    ரஷியாவின் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருப்பதாகவும், பல ரஷிய வீரர்கள் போரில் கொல்லப்படுவதாகவும் குறிப்பிட்ட டிரம்ப் , இந்தப் போரை மிக விரைவில் முடிவுக்குக் கொண்டு வர விரும்புவதாக தெரிவித்தார்.

    உக்ரைனில் செய்த போர் குற்றங்களுக்காக ரஷிய அதிபர் புதின் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடிவாரண்ட் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.   

    • Grok AI செயலியை முழுமையாகத் தடை செய்த முதல் நாடு.
    • ஏஐ செயல்கள் மனித உரிமை மீறல் மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்.

    எலோன் மஸ்க்கின் Grok AI ChatBot இந்தோனேசியாவில் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.இந்தச் செயலி மூலம் ஆபாசமான மற்றும் தவறான (Deepfake) புகைப்படங்கள் உருவாக்கப்படுவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து, இந்தோனேசியாவில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    Grok AI மூலம் பெண்களின் புகைப்படங்களை அவர்களின் அனுமதியின்றி ஆபாசமாகச் சித்திரிக்க முடியும் என்ற புகார்கள் சமீபகாலமாக உலகளவில் அதிகரித்தன.

    இதுதொடர்பாக, இந்தோனேசியாவின் தகவல் மற்றும் டிஜிட்டல் விவகாரங்கள் துறை அமைச்சர் மியுத்யா ஹபீத் (Meutya Hafid), "இந்த வகையான செயல்கள் மனித உரிமை மீறல் மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்" என்று கூறி இந்தத் தடையை அறிவித்தார்.

    Grok AI செயலியை முழுமையாகத் தடை செய்த முதல் நாடு இந்தோனேசியா என்பது குறிப்பிடத்தக்கது.

    • தென் கொரிய டிரோனை சுட்டு வீழ்த்தியதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
    • அதற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என தென்கொரியா மறுத்துள்ளது.

    சியோல்:

    தங்களது வான்பரப்பில் தென் கொரியாவின் டிரோன் அத்துமீறி பறந்தது என வடகொரியா குற்றம் சாட்டியது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.

    இதுகுறித்து வடகொரிய ராணுவம் வெளியிட்டுள்ள செய்தியில், தென் கொரியாவின் டிரோன்கள் எல்லை தாண்டி வந்து 3 மணி நேரத்திற்கும் மேலாக பறந்ததாக கூறப்பட்டது. அந்த டிரோன்கள் தங்கள் நாட்டில் உள்ள முக்கிய இடங்களை புகைப்படம் எடுத்ததாகவும் கூறிய வடகொரியா, உளவு பார்க்கும் செயல்களில் ஈடுபட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தது.

    இந்நிலையில், அந்த டிரோன் தங்களுடையது அல்ல. வடகொரியாவைத் தூண்டும் எண்ணம் தங்களுக்கு இல்லை என தென் கொரியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    அத்துடன் கொரிய தீபகற்பத்தில் பதற்றங்களைக் குறைக்கவும், நம்பிக்கையை வளர்க்கவும் தென்கொரியா தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • போராட்டம் வன்முறையாக வெடித்ததில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டாலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதனால் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளத. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர்.

    போராட்டக்காரர்களைக் கலைக்கப் போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். நிலைமை மோசமானதால் மத்திய வங்கி ஆளுநரான முகமது ரெசா ஃபர்சின் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, பணவீக்கம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெட்ரோல் விலை மாற்றம் ஆகியவையே இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணங்களாகும். பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பாதுகாப்புப் படையிருக்கும் இடையே பல இடங்களில் மோதல் வெடித்ததை தொடர்ந்து வன்முறையாக மாறியது. வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    போராட்டங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் அது பலனளிக்கவில்லை. ஈரான் முழுவதும் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளது. மேலும், ஈரான் முழுவதும் இணையம் மற்றும் செல்போன் சேவைகள் முடக்கப்பட்டன.

    போராட்டங்கள் 2 வாரத்திற்கு மேல் நடைபெறுவதால், போராட்டக்காரர்களுக்கு எதிராக ஒடுக்கு முறையை கையாள இருப்பதாக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி சூசகமாக தெரிவித்திருந்தார். நீதித்துறை தலைவரும் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என எச்சரித்திருந்தார்.

    இந்த நிலையில் ஈரான் அட்டர்னி ஜெனரல் "போராட்டத்தில் பங்கேற்கும் யாராக இருந்தாலும் அவர்கள் கடவுளின் எதிராக பரிசீலனை செய்யப்படுவார்கள். மேலும், மரண தண்டனைக்கான குற்றச்சாட்டு பதியப்படும்" என எச்சரித்ளத்ளார்.

    • எட்டு போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அந்த நேரத்தில் நான் தலையிட்டுப் போரை நிறுத்தினேன்.
    • சர்வதேச விதிகள் எனக்குப் பொருந்தாது.

    இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதலைத் தான் தடுத்து நிறுத்தியுள்ளதாகவும், வரலாற்றில் தன்னை விட நோபல் அமைதிப் பரிசுக்குத் தகுதியானவர் யாரும் இல்லை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.

    நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பெரிய போர் வெடிக்கும் சூழல் இருந்தது.

    எட்டு போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அந்த நேரத்தில் நான் தலையிட்டுப் போரை நிறுத்தினேன்.

    வரலாற்றில் நோபல் அமைதிப் பரிசுக்கு என்னைப் போல தகுதியானவர்கள் வேறு யாரும் இல்லை. ஆனால், ஒபாமா எந்த ஒரு பணியும் செய்யாமலே நோபல் பரிசைப் பெற்றுக்கொண்டார்.

    இதுவரை சுமார் 8 பெரிய போர்களைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைத்துள்ளேன். அவற்றில் சில 25 முதல் 36 ஆண்டுகள் வரை நீடித்தவை" என்று தெரிவித்தார்.

    அதேநேரம், சர்வதேச விதிகள் எனக்குப் பொருந்தாது என்று கூறியுள்ள டிரம்ப் , வெனிசுலா மற்றும் ஈரான் விவகாரங்களிலும் தான் தலையிடுவேன் என்று தெரிவித்தார்.

    வெனிசுலா அதிபரைக் கடத்தியதற்கு மத்தியில் டிரம்ப் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கேட்பது பேசுபொருளாகி வருகிறது. 

    • எலிகளிடம் நடத்தப்பட்ட சோதனை வெற்றி அடைந்தது.
    • எளிய மருந்துகள் மூலமே மூட்டு தேய்மானத்தை குணப்படுத்த உதவலாம்

    இன்றைய காலக்கட்டத்தில் அவசர உலகத்தில் இயந்திர தனமாக அனைவரும் ஓடிக் கொண்டே பூமியை விட வேகமாக சுழன்று கொண்டிருக்கின்றோம். இந்நிலையில் நாம் நிற்க நடக்க, உட்கார வேலை செய்ய வாகனங்களை இயக்க என எல்லா விதத்திலும் நமக்கு கால்கள் மிகவும் அவசியம். அவ்விதத்தில் முழங்கால் மூட்டு வலி (Knee Pain) என்பது அனைவருக்கும் தவிர்க்க முடியாத ஒரு பிரச்சினையாக உள்ளது. அதிலும் 40-50 வயதை கடந்த பெண்களும், ஆண்களும் சற்று அதிகப்படியாகவே அவதிப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், மூட்டுத் தேய்மான சிகிச்சைக்கு புதிய முறையை அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

    மூட்டுகளில் தேய்ந்து போன குருத்தெலும்புகளை (Cartilage) மீண்டும் இயற்கையாக வளரச் செய்யும் முறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து அசத்தியுள்ளார்

    வயது முதிர்வால் மூட்டுகளில் அதிகரிக்கும் 15-PGDH என்ற புரதத்தைச் செயலிழக்கச் செய்து, உடலில் உள்ள ஸ்டெம் செல்களைத் தூண்டி இயற்கையாகவே குருத்தெலும்புகளை மீண்டும் வளரச் செய்ய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

    எலிகளிடம் நடத்தப்பட்ட சோதனை வெற்றி அடைந்ததாகவும், இதன் மூலம் எதிர்காலத்தில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை இல்லாமல் எளிய மருந்துகள் மூலமே மூட்டு தேய்மானத்தை குணப்படுத்த உதவலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பி.என்.பி. கட்சி தலைவரான கலிதா ஜியா கடந்த மாதம் இறுதியில் காலமானார்.
    • லண்டனில் இருந்து 17 வருடத்திற்குப் பிறகு அவரது மகன் தாரீக் ரகுமான் வங்கதேசம் திரும்பி பதவியை பெற்றுள்ளார்.

    வங்கதேச தேசியவாத கட்சி தலைவரான கலிதா ஜியா உடல்நிலை சரியில்லாமல் காலமானார். தாரீக் ரகுமான் பி.என்.பி. கட்சியின் செயல் தலைவராக இருந்து வந்தார். இந்த நிலையில், அவரது தாயார் காலமான நிலையில் தாரீக் ரகுமான் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் நிலைக்குழு, தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

    தாரீக் ரகுமான் லண்டனில் இருந்து கடந்த மாதம் 25-ந்தேதி 17 வருடங்களுக்குப் பிறகு வங்கதேசம் திரும்பினார். அவரது தாயாரும், வங்கதேசத்தின் மூன்று முறை பிரதமர் பதவி வகித்தவருமான கலிதா ஜியா டிசம்பர் 30-ந்தேதி காலமானார். அவரது மறைவால் தலைவர் பதவி காலியானது. இந்த நிலையில்தான் தாரீக் ரகுமான் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    அடுத்த மாதம் நடைபெற இருக்கும் பொதுத்தேர்தலில் போட்டியிட தாரீக் ரகுமான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

    • சிங்கம், புலி போன்ற விலங்குகள் கூட காண்டாமிருகத்திடம் சண்டை போட பயப்படும்.
    • காண்டாமிருகத்திடம் குட்டி மான் துணிச்சலுடன் சண்டை போட்ட நிகழ்வு போலந்து நாட்டில் நடந்துள்ளது.

    காடுகளில் வாழும் உயிரிளங்களில் மிக பலம் வாய்ந்த உயிரிளங்களில் காண்டாமிருகமும் ஒன்று. சிங்கம், புலி போன்ற விலங்குகள் கூட காண்டாமிருகத்திடம் சண்டை போட பயப்படும். அந்த அளவிற்கு பலம் கொண்ட காண்டாமிருகத்திடம் குட்டி மான் துணிச்சலுடன் சண்டை போட்ட நிகழ்வு போலந்து நாட்டில் நடந்துள்ளது.

    போலந்து - வ்ரோக்லாவ் உயிரியல் பூங்காவில் தான் காண்டாமிருகத்தை எதிர்த்து மான் குட்டி இன்று துணிச்சலாக சண்டை போட்டுள்ளது. குட்டியை மானின் துணிச்சலை மதித்து காண்டாமிருகமும் மான்குட்டிக்கு அடி படாதவாறு அதனுடன் செல்ல சண்டை போட்டுள்ளது.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. பலரும் மான்குட்டியின் துணிச்சலை பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வருகினறனர்.

    • அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் வீழ்ச்சி அடைவார்.
    • சில போராட்டக்காரர்கள் அமெரிக்காவின் தயவைப் பெறுவதற்காகவே செயல்படுகிறார்கள்.

    ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது.

    இதில் போராட்டக்காரர்கள் - பாதுகாப்பு படையினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இதில் 62 பேர் பலியாகி உள்ளனர். அங்கு போராட்டங்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.

    ஈரானில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினால் அமெரிக்கா தலையிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

    இந்த நிலையில் டிரம்ப்புக்கு ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    முழு உலகத்தைப் பற்றியும் ஆணவத்துடன் தீர்ப்பளிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். உலகின் சர்வாதிகாரிகளும் ஆணவ ஆட்சியாளர்களும் தங்கள் ஆணவத்தின் உச்சத்தில் இருந்தபோது தங்கள் வீழ்ச்சியைக் கண்டனர். அதேபோல் டிரம்ப்பும் வீழ்ச்சி அடைவார். ஆணவத்துடன் ஆட்சி செய்யும் தலைவர்கள் தவிர்க்க முடியாத வீழ்ச்சியைச் சந்திப்பார்கள்.

    ஈரானில் போராட்டத்தை அமெரிக்கா தூண்டிவிட்டு அமைதியின்மையை ஏற்படுத்தி வருகிறது.

    சில போராட்டக்காரர்கள் அமெரிக்காவின் தயவைப் பெறுவதற்காகவே செயல்படுகிறார்கள். ஒரு சில நாசகாரர்கள் சொந்த நாட்டின் அரசு கட்டிடத்தை அழித்தனர். இத்தகைய நடவடிக்கைகள் அமெரிக்க அதிபரை மகிழ்விப்பதற்காகவே செய்யப்பட்டன.

    நீங்கள் யாராக இருந்தாலும் சரி ஒருமுறை நீங்கள் ஒரு வெளிநாட்டினருக்குக் கூலிக்கு வேலை செய்யத் தொடங்கிவிட்டால் அந்த தேசம் உங்களை நிராகரிக்கப்பட்டவராகக் கருதும். டிரம்பின் கைகள் ஈரானியர்களின் இரத்தத்தால் கறைபடிந்துள்ளது. இவ்விவகாரத்தில் ஈரான் ஒருபோதும் பின்வாங்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமெரிக்க நிறுவனங்கள் வெனிசுலாவின் எண்ணெய் தொழில்துறையை மீண்டும் கட்டியெழுப்பும்
    • அமெரிக்கா உடனடியாக 5 கோடி பேரல்கள் வரை கச்சா எண்ணெயைச் சுத்திகரித்து விற்கத் தொடங்கும்

    வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி ஆகியோரை போதை பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் அமெரிக்க ராணுவம் அதிரடியாக கைது செய்து அமெரிக்காவுக்கு அழைத்து சென்றது.

    இதையடுத்து வெனிசுலாவின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றார். இதற்கிடையே வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை அமெரிக்கா கையாளும் என்றும் எண்ணெயை விற்று அதிலிருந்து வரும் பணம் வெனிசுலா நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும் அமெரிக்க நிறுவனங்கள் வெனிசுலாவில் முதலீடுகளை செய்யும் என்றும் தெரிவித்தார்.

    இந்நிலையில் வெனிசுலாவின் எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதற்காக அமெரிக்க எண்ணெய் நிறுவன தலைவர்களுடன் டிரம்ப் வெள்ளை மாளிகையில் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

    வெனிசுலாவுடன் தற்போது நாங்கள் மிகவும் இணக்கமாக இருக்கிறோம். அமெரிக்க நிறுவனங்கள் வெனிசுலாவின் சிதைந்த எண்ணெய் தொழில்துறையை விரைவாக மீண்டும் கட்டியெழுப்பவும், மில்லியன்கணக்கான பேரல் எண்ணெய் உற்பத்தியை அமெரிக்கா, வெனிசுலா மக்கள் மற்றும் முழு உலகிற்கும் பயனளிக்கும் வகையில் கொண்டு வரவும் உதவ முடியும்.

    எந்த நிறுவனங்கள் வெனிசுலாவுக்கு செல்லும் என்பது குறித்த முடிவை நாங்கள் எடுப்போம். வெனிசுலா மிகவும் வெற்றிகரமானதாக இருக்கப் போகிறது.மேலும் அமெரிக்க மக்கள் பெரும் பயனாளிகளாக இருப்பார்கள்.

    அமெரிக்கா உடனடியாக 5 கோடி பேரல்கள் வரை கச்சா எண்ணெயைச் சுத்திகரித்து விற்கத் தொடங்கும் என்றும், இது காலவரையின்றித் தொடரும் என்றும் வெனிசுலாவும் ஒப்புக் கொண்டுள்ளது என்றார்.

    மேலும் அவர் கூறும் போது, நான் 8 போர்களை முடிவுக்கு கொண்டு வந்தேன். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போரை அணு ஆயுதங்கள் மோதல் இல்லாமல் விரைவாக முடிவுக்கு கொண்டு வந்தேன்.

    1 கோடி பேரின் உயிர்களை காப்பாற்றியதற்காக பாகிஸ்தான் பிரதமர் என்னை பாராட்டினார். வரலாற்றில் என்னை விட வேறு யாருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று என்னால் நினைக்க முடியவில்லை என்றார்.

    ×