என் மலர்
உலகம்
- ஒரு லிட்டர் பெட்ரோல் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 321 க்கு விற்பனை ஆகிறது.
- சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100.80 க்கு விற்பனை.
ஈரான் மீதான இஸ்ரேல் - அமெரிக்க தாக்குதலும், பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலும் ஒரு வாரத்தை எட்டியுள்ளது.
மேலும் உலகின் ஐந்தில் ஒரு பங்கு அதாவது 20 சதவீத எண்ணெய் தேவைக்கான ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது.
இதனால் மத்திய கிழக்கில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யமுடியாமல் கப்பல்கள் தவித்து வருகின்றன.
இதனால் உலக நாடுகளில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு பெட்ரோல், டீசல், எரிவாயு விலைகள் உயர்ந்து வருகின்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சில நாட்களிலேயே ஒரு பேரல் 78 டாலரிலிருந்து 107 டாலராக உயர்ந்துள்ளது.
இதனிடையே பாகிஸ்தானில் பெட்ரோல் விலையை ரூ.55 உயர்த்தி அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
இதன் மூலம் பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 321 க்கு விற்பனை ஆகிறது. டீசல் ஒரு லிட்டர், பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 335.86 க்கு விற்பனை ஆகிறது
பாகிஸ்தான் தனது 90% எண்ணெய் மற்றும் 99% எல்என்ஜி எரிவாயு இறக்குமதிக்கு ஹார்முஸ் ஜலசந்தி பாதையையே நம்பியுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியானவுடன் லாகூர், கராச்சி, இஸ்லாமாபாத் போன்ற முக்கிய நகரங்களில் உள்ள பெட்ரோல் பங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கிலோமீட்டர் கணக்கில் வாகனங்கள் வரிசையில் நின்றன.
பல இடங்களில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. சில பங்குகளில் பெட்ரோல் இல்லை என்று மூடப்பட்டதால் பதற்றம் நிலவியது.
மேலும், எரிபொருள் தட்டுப்பாட்டைக் குறைக்க ஊழியர்களுக்கு Work From Home முறையை அமல்படுத்துவது குறித்தும் பாகிஸ்தான் அரசு ஆலோசித்து வருகிறது.
மறுபுறம், ஆப்கானிஸ்தான் உடனான மோதல் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே பிற ஆசிய நாடுகளிலும் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் பெட்ரோல் டீசல் பங்குகளில் இருப்பு உள்ளபோதே வாங்கி வைக்க மக்களை படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தற்சமயம் உயரவில்லை என்றாலும் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100.80 க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.92.61 க்கும் விற்பனையாகி வருகிறது.
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, "இந்தியாவில் எரிசக்தி தட்டுப்பாடு எதுவும் இல்லை, எரிபொருள் விநியோகம் தடையின்றித் தொடரும்" என்று உறுதியளித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக வரும் செய்திகள் வதந்தி என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மறுத்துள்ளது.
இதற்கிடையே நேற்று நள்ளிரவு நாடு முழுவதும் 14.2 கிலோ வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் 14.2 கிலோ வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ. 928.50 க்கு விற்கப்படுகிறது. அதேபோல வணிக பயன்பாட்டுக்கான சமையல் சிலிண்டர் விலை ரூ.115 உயர்ந்துள்ளது.
- பந்தர் அப்பாஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிர்வு.
- இதே வாரத்தின் தொடக்கத்திலும் ஏற்பட்டது.
தெற்கு ஈரானில் உள்ள பந்தர் அப்பாஸ் நகருக்கு அருகே ரிக்டர் அளவில் 4.1 ஆகப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகாலை 3.17 மணிக்கு பந்தர் அப்பாஸ் நகருக்கு மேற்கே சுமார் 74 கிலோமீட்டர் தொலைவில், பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
பந்தர் அப்பாஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் லேசான அதிர்வுகளை உணர்ந்தனர்,
உலகளாவிய கப்பல் போக்குவரத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியின் அருகேயும் அதிர்வு உணரப்பட்டது.
4.1 என்பது மிதமான நிலநடுக்கமாகக் கருதப்படுவதால், பெரிய அளவிலான உயிர்ச் சேதமோ அல்லது கட்டிடப் பாதிப்புகளோ இதுவரை பதிவாகவில்லை.
இதே வாரத்தின் தொடக்கத்தில், ஈரானின் பார்ஸ் மாகாணத்தில் உள்ள கெராஷ்பகுதியில் ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
- 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த இந்தோனேசிய அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது.
- அதிக ஆபத்துள்ள டிஜிட்டல் தளங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த இந்தோனேசிய அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. இது தொடர்பான புதிய அரசாணையில் அந்த நாட்டு தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் துறை மந்திரி மியுத்யா ஹபீத் கையெழுத்திட்டார்.
இந்த தடையின்படி, 16 வயது பூர்த்தியாகாத சிறுவர்கள் யூடியூப், டிக்டாக் போன்ற சமூக வலைதளங்களில் கணக்குகள் வைத்துக்கொள்ள முடியாது. அதிக ஆபத்துள்ள டிஜிட்டல் தளங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இந்த தடை இருப்பது குறிப்பிடத்தக்கது.
- வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.
- இளைஞர் போராட்டங்களின் போது ராஷ்ட்ரிய சுதந்திரக் கட்சி முக்கிய பங்காற்றியது.
காத்மண்டு:
நேபாளத்தில் சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. கடந்த ஆண்டு ஜென் இசட் இளம் தலைமுறையினர் நடத்திய போராட்டத்தால் அப்போதைய பிரதமா் கே.பி.சா்மா ஒலி பதவி விலகலுக்கு பிறகு அங்கு தேர்தல் நடந்தது.
பாராளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபையில் மொத்தம் 275 இடங்கள் உள்ளன. இதில் 165 இடங்கள் நேரடித் தோ்தல் மூலமும், மீதமுள்ள 110 இடங்களுக்கு விகிதாசார பிரதிநிதித்துவ முறையிலும் உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா். பெரும்பான்மைக்கு 138 இடங்கள் தேவை.
தேர்தலில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சார்பில் கே.பி.சர்மா ஒலியும், நேபாளி காங்கிரஸ் சாா்பில் அதன் தலைவா் ககன் தாபாவும் பிரதமா் வேட்பாளா்களாகக் களமிறங்கினா்.
ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி சாா்பில் 35 வயதான காத்மாண்டு பெருநகர மேயா் பாலேந்திர ஷா பாலன் பிரதமா் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார்.
இதற்கிடையே, வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்குச்சீட்டு எண்ணும் பணி மும்முரமாக நடந்தது. இதில் 160 தொகுதிகளில் முன்னிலை நிலவரம் வெளியான நிலையில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி 110 தொகுதிகளில் முன்னிலை பெற்றது.
இந்நிலையில், ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி சாா்பில் 35 வயதான காத்மாண்டு பெருநகர மேயா் பாலேந்திர ஷா பாலன் அதிக இடங்களில் வென்று நேபாளத்தின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார். இவரது வெற்றியை அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
- எம்.எல்.எஸ். கோப்பை வென்ற மெஸ்சி தலைமையிலான இன்டர் மியாமி அணி வெள்ளை மாளிகைக்கு சென்றது.
- லயோனல் மெஸ்சி அதிபர் டிரம்ப்பிற்கு பிங்க் நிற கால்பந்து, எண் 47 கொண்ட ஜெர்சியை பரிசளித்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் நடந்த மாஸ்டர் லீக் சாக்கர் எனும் கால்பந்து தொடரில் லயோனல் மெஸ்சி தலைமையிலான இன்டர் மியாமி அணி
முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இதற்கிடையே, முதல் முறையாக எம்.எல்.எஸ். கோப்பை வென்ற மெஸ்சி தலைமையிலான இன்டர் மியாமி அணியை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு அழைத்து கவுரவித்தார். அப்போது, லயோனல் மெஸ்சி அதிபர் டிரம்ப்பிற்கு பிங்க் நிற கால்பந்தினையும், எண் 47 கொண்ட ஜெர்சியும் பரிசாக அளித்தார். அங்கு அதிபர் டிரம்ப் பேசியதாவது:
இதுவரை எந்த ஓர் அமெரிக்க அதிபருக்கும் கிடைக்காத ஒரு தனித்துவமான வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. வெள்ளை மாளிகைக்கு வருக, லயோனல் மெஸ்சி.
இன்று எனது மகன் என்னிடம் யார் வருகிறார் என்று தெரியுமா கேட்டான்? எனக்கு நிறைய வேலை இருப்பதால் தெரியவில்லை என்றேன். அவன், மெஸ்சி எனக் கூறினான். அவன் கால்பந்தின் மிகப்பெரிய ரசிகன். உங்களது தீவிரமான ரசிகன்.
ரொனால்டோவும் சிறந்த வீரர். நீங்களும் சிறந்தவர். சிறந்தவர் மெஸ்சியா அல்லது பீலேவா? பீலேவை விட மெஸ்சி சிறந்தவர் என தெரிவித்தார்.
- ஈரானை அழிவின் விளிம்பிலிருந்து மீட்டெடுக்க அயராது உழைப்போம்
- ஈரான்மீது கூட்டுத் தாக்குதலை தொடர்ந்து இன்றுடன் ஒருவாரம் ஆகிறது.
நிபந்தனையற்ற சரணடைதலை தவிர, ஈரானுடன் வேறு எந்தப் பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும் ஈரானில் முழுமையான ஆட்சி மாற்றம் மட்டுமே போரை முடிவுக்குக் கொண்டுவரும் என்றும், நாட்டிற்கு யார் நல்லத் தலைவராக இருக்கமுடியும் என்பதற்கு தன்னிடம் சில யோசனைகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 'சரணடைந்த பிறகு, ஒரு சிறந்த மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவரை தேர்ந்தெடுத்து அமெரிக்காவும், அதன் அற்புதமான மற்றும் மிகவும் துணிச்சலான கூட்டணிகளும் மற்றும் பங்காளிகளும், ஈரானை அழிவின் விளிம்பிலிருந்து மீட்டெடுக்க அயராது உழைப்போம்' எனவும் சமூக வலைதளப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் பொருளாதாரத்தை உயர்த்த அவர்கள் பாடுபடுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான்மீது கூட்டுத் தாக்குதலை தொடர்ந்து இன்றுடன் ஒருவாரம் ஆகிறது. தொடர்ந்து தாக்குதலையும் இருநாடுகளும் தொடர்கின்றன. ஈரானும் பதிலடி கொடுத்துவருகிறது.
மேலும்அமெரிக்கப் படைகளுக்கு இடம் கொடுத்ததாகக் கூறி, ஈரான் தனது அண்டை நாடுகளான சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஆகிய நாடுகளின் மீதும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பெரும் போர்பதற்றம் நிலவிவருகிறது.
இந்தப் போர்ச்சூழல் மத்திய கிழக்கு மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிற்கும் பொருளாதார பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார பாதிப்பை தாண்டி, ஈரானில் உள்ள பொதுமக்கள், குழந்தைகள் இயல்புவாழ்க்கையை இழந்து தவித்துவருகின்றனர். இந்நிலையில் அதிபர் ட்ரம்பின் இந்த கூற்று வந்துள்ளது.
- எங்கள் நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதில் தயங்கமாட்டோம்.
- பிராந்தியத்தில் அமைதி திரும்ப உறுதி பூண்டுள்ளோம்.
அமெரிக்கா- இஸ்ரேல் ஆகியவை ஈரான் மீது கூட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. போரில் ஈரானை வீழ்த்தாமல் விடமாட்டோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் சபதம் ஏற்றுள்ளார். அதேவேளையில் பதிலடி கொடுப்போம் என அஞ்சாமல் ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. அதுவும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
ஒரு சில தினங்களுக்கு முன் ஈரான் பேச்சுவார்த்தைக்கு முன் வந்தது. அது மிகவும் காலதாமதமானது என்று டிரம்ப் கூறியிருந்தார்.
இந்த நிலையில் பேச்சுவார்த்தை குறித்த மத்தியஸ்தம் குறித்து ஈரான் அதிபர் மசூத் பெசெஸ்கியன் கூறுகையில் "இது தெளிவாக இருக்கட்டும். பிராந்தியத்தில் அமைதிய நிலவ நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். ஆனால், எங்கள் நாட்டின் இறையாண்மை மற்றும் கண்ணியத்தை பாதுகாப்பதில் நாங்கள் தயங்கமாட்டோம். ஈரான் மக்களை குறைத்து மதிப்பிட்டு, இந்த மோதலை யார் தூண்டினார்களோ, அவர்களை நோக்கி மத்தியஸ்தம் இருக்கம் வேண்டும்" என்றார்.
இதற்கிடையே மத்திய கிழக்கு நாடுகள் போர் நிறுத்தத்திற்கான முயற்சியை முன்னெடுக்க வேண்டும் என்று ஐ.நா. அழைப்பு விடுத்துள்ளது.
- இஸ்ரேல்-அமெரிக்கா இணைந்து ஈரான்மீது கூட்டுத் தாக்குதலை தொடர்ந்து வருகிறது.
- நேற்று அஜர்பைஜான் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியானது.
அஜர்பைஜானின் நக்சிவன் சர்வதேச விமான நிலையப் பகுதியில் நேற்று ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் இரண்டுபேர் காயமடைந்ததாக அஜர்பைஜான் அரசு தெரிவித்தது. மேலும் இதற்கு ஈரானுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது.
ஈரான் இதற்கு விளக்கம் மற்றும் மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஈரான் நாட்டிலிருந்து தனது தூதரக பணியாளர்களை திரும்பப் பெற்றுள்ளது அஜர்பைஜான். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த உத்தரவை பிறப்பித்ததாக அஜர்பைஜான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தெஹ்ரானில் உள்ள தூதரகம் மற்றும் தப்ரிஸில் உள்ள துணைத் தூதரகம் ஆகியவற்றில் இருந்து அதிகாரிகள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
அஜர்பைஜான் இஸ்ரேலுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருப்பதை ஈரான் நீண்டகாலமாக எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
- 20 சதவீத பணியாளர்களுடன் அலுவலகங்கள் இயங்கும்.
- மானேஜர் ரேங்கில் உள்ளவர்கள் கட்டாயம் அலுவலகத்திற்கு வர வேண்டும்.
அமெரிக்கா இஸ்ரேல் உடன் இணைந்து ஈரான் மீது கூட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் மீதான கூட்டுத் தாக்குதல் இன்றுடன் 7-வது நாளாக நீடிக்கிறது. அமெரிக்கா- இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் இதுவரை 1332 பேர் கொல்லப்பட்டன. அமெரிக்கா- இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் ஈரானின் தலைநகர் தெஹ்ரான் கடும் சேதத்தை சந்தித்துள்ளது.
அமெரிக்கா- இஸ்ரேல் தாக்குதலால் ஈரானில் கடந்த ஒரு வாரமாக அரசு செயல்பாடுகள் (பணிகள்) முடங்கியிருந்தன. இந்த நிலையில் நாளை மறுநாள் இருந்து படிப்படியாக நிர்வாக செயல்பாடுகள் தொடங்கும் என ஈரானி அறிவித்துள்ளது.
அனைத்து அமைச்சர்கள், அமைப்புகள் மற்றும் நிர்வாக அமைப்புகளுடன் நிர்வாக செயல்பாடுகள் படிப்படியாக தொடங்கும். தெஹ்ரான் பிராந்தியங்களில் 20 சதவீதம் பணியாளர்களுடன் நாளை மறுநாள் (ஞாயிறு) முதல் செயல்பட தொடங்கும்.
ரிமோட் மூலம் அனைத்து பெண் பணியாளர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
குறிப்பிட்ட வங்கிகள் திறக்கப்படும்.
அத்தியாவசிய சேவைகள் வழக்கம் போல் தொடரும். மானேஜர் ரேங்கில் உள்ள அனைவருக்கும் ரிமோட் பணி என்பது கிடையாது. அலுவலகத்திற்கு வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா- இஸ்ரேல் கூட்டு தாக்குதலுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகள் மீது ஈரான் சரமாரி ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
- நேற்று மாலை வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.
- இளைஞர் போராட்டங்களின் போது ராஷ்ட்ரிய சுதந்திரக் கட்சி முக்கிய பங்காற்றியது.
நேபாளத்தில் நேற்று பாராளுமன்ற தேர்தல் நடந்தது. கடந்த ஆண்டு ஜென் இசட் இளம் தலைமுறையினர் நடத்திய போராட்டத்தால் அப்போதைய பிரதமா் கே.பி.சா்மா ஒலி பதவி விலகலுக்கு பிறகு அங்கு தேர்தல் நடந்தது.
நேபாள பாராளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபையில் மொத்தம் 275 இடங்கள் உள்ளன. இதில் 165 இடங்கள் நேரடித் தோ்தல் மூலமும் மீதமுள்ள 110 இடங்களுக்கு விகிதாசார பிரதிநிதித்துவ முறையிலும் உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா். பெரும்பான்மைக்கு 138 இடங்கள் தேவை.
தேர்தலில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சார்பில் கே.பி சர்மா ஒலியும், நேபாளி காங்கிரஸ் சாா்பில் அதன் தலைவா் ககன் தாபாவும் பிரதமா் வேட்பாளா்களாகக் களமிறங்கியுள்ளனா்.
அதேபோல் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி சாா்பில் 35 வயதான காத்மாண்டு பெருநகர மேயா் பாலேந்திர ஷா பாலன் பிரதமா் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார்.
நேற்று மாலை வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு சீட்டு எண்ணும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதில் 77 தொகுதிகளில் முன்னிலை நிலவரம் வெளியான நிலையில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி 59 தொகுதிகளில் முன்னிலை பெற்றது.
நேபாளி காங்கிரஸ் 9 தொகுதியிலும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் 5 தொகுதியிலும் முன்னிலை பெற்றிருந்தன. முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் பிரசண்டாவின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதியில் முன்னிலை பெற்றிருந்தது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கே.பி ஒலி அரசாங்கத்திற்கு எதிரான இளைஞர் போராட்டங்களின் போது ராஷ்ட்ரிய சுதந்திரக் கட்சி முக்கிய பங்காற்றியது. அக்கட்சிக்கு இளைஞர்கள் அமோக ஆதரவு வந்த நிலையில் தேர்தலில் முன்னிலை பெற்று வருகிறது.
- பஹ்ரைன் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
- ஈரானின் தாக்குதலை துரோகத் தாக்குதல் என பஹ்ரைன் கூறுகிறது.
அமெரிக்கா இஸ்ரேல் உடன் இணைந்து ஈரான் மீது கூட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகள் மீது ஈரான் சரமாரி ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈரான் தாக்குதல் நடத்தும் வளைகுடா நாடுகளில் பஹ்ரைனும் ஒன்று. தங்கள் நாட்டின் மீது ஈரான் தாக்குதல் நடத்துவதை துரோகம் என்று பஹ்ரைன் தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் தங்கள் நாட்டின் மீது ஈரான் செலுத்திய 78 ஏவுகணைகள், 143 டிரோன்களை அழித்ததாக பஹ்ரைன் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.
- அயதுல்லா காமேனி கொலைக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
- பிரதமர் அலுவலகத்தை ஏற்கனவே தாக்கியிருந்த நிலையில், தற்போது விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
அமெரிக்கா இஸ்ரேல் உடன் இணைந்து ஈரான் மீது கூட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகள் மீது ஈரான் சரமாரி ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
அதேபோல் இஸ்ரேல் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலின் வான் பாதுகாப்பு சிஸ்டத்தை தாண்டி ஈரான் ஏவுகணைகள் இஸ்ரேல் பகுதிகளை துளைத்து வருகிறது. இதனால் இஸ்ரேலும் அதிக சேதத்தை சந்தித்து வருகிறது.
ஈரான் தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டதும், கடுங்கோபத்தில் ஈரான் இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியது. இதில் நெதன்யாகு உயிர் தப்பினார்.
இந்த நிலையில் பென் குரியன் விமான நிலையத்தை ஈரான் ஏவுகணைகள் தாக்கியதால் ஈரான் மீடியாக்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆனால், இஸ்ரேல் ராணுவம் இது தொடர்பாக தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.
இஸ்ரேல்- ஈரான் இடையிலான போர் இன்று 7-வது நாளாக நீடித்து வருகிறது. ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை. இதனால் போர் வார கணக்கில் நீடிக்கும் எனத் தெரிகிறது.






