அமெரிக்கா: அரசியல் விளம்பரங்களை தற்காலிகமாக நிறுத்திய கூகுள் நிறுவனம்

ஜோ பைடன் பதவியேற்பு நடைபெற உள்ள நிலையில் வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையில் தங்கள் இணையதள பக்கங்களில் அரசியல் ரீதியிலான விளம்பரங்களை வெளியிட கூகுள் நிறுவனம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.
அதிகரிக்கும் கொரோனா - போர்ச்சுகலில் மீண்டும் ஊரடங்கு அமல்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் போர்ச்சுகல் நாட்டில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் கொலை வழக்கில் முன்னாள் போராளி பிள்ளையான் விடுதலை

இலங்கையில் கொலை வழக்கில் முன்னாள் போராளி பிள்ளையானை விடுதலை செய்து கோர்ட்டு உத்தரவிட்டது.
டொனால்டு டிரம்ப் அமெரிக்காவுக்கு ஆபத்தானவர் - பாராளுமன்ற சபாநாயகர்

டொனால்டு டிரம்ப் அமெரிக்காவுக்கு ஆபத்தானவர் என பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

கர்ப்பிணி பெண்ணை கொலைசெய்து அவரது வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்த குற்றத்திற்காக பெண் ஒருவருக்கு அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்ய முடியாது -துணை அதிபர் பென்ஸ்

அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை துணை அதிபர் மைக் பென்ஸ் நிராகரித்தார்.
அமீரக ஆசிரியையின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானம்

அமீரகத்தில் பள்ளிக்கூட ஆசிரியையாக பணியாற்றி வந்த சையத் ரபாத் பர்வீன் நேற்று டெல்லியில் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானமாக அளிக்கப்பட்டது.
முதியோர்களுக்கு, வீட்டில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு- அமீரக சுகாதாரத்துறை அதிகாரி தகவல்

அமீரகத்தில் விரைவில் முதியவர்களுக்கு வீட்டில் வைத்தே கொரோ னா தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் டாக்டர் பரிதா அல் ஹொசானி தெரிவித்தார்.
கொரோனா பாதிப்பு: அமீரகத்தில், ஒரே நாளில் 3 ஆயிரத்தை தாண்டியது

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 480 டிபிஐ மற்றும் பிசிஆர் பரிசோதனை முடிவுகளில் 3 ஆயிரத்து 243 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9.19 கோடியை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9.19 கோடியைக் கடந்துள்ளது.
மெக்சிகோவில் போதைப்பொருள் கும்பலுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை - 10 பேர் பலி

மெக்சிகோவில் போதைப்பொருள் கும்பலுக்கும், போலீசாருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் 10 பேர் பலியானார்கள்.
அதிரும் அமெரிக்கா - ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலி

அதிகரித்து வரும் கொரோனா தொற்றால், அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3.89 லட்சத்தைத் தாண்டியது.
தொடரும் என் மீதான குற்றச்சாட்டு குறித்து கோபம் இருந்தாலும், நான் வன்முறையை விரும்பவில்லை - டிரம்ப்

அமெரிக்க பாராளுமன்ற வன்முறை குறித்து கருத்து தெரிவித்த டொனால்டு டிரம்ப், தான் வன்முறையை விரும்பவில்லை என்றார்.
பிரான்சில் அதிகரிக்கும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 28 லட்சத்தை தாண்டியது

பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 28 லட்சத்தைக் கடந்தது.
நேபாளத்துக்கு 2.5 கோடி டோஸ் தடுப்பூசி - ரஷியா வழங்குகிறது

ரஷியாவும், நேபாளத்துக்கு 25 மில்லியன் அதாவது 2.5 கோடி டோஸ் தடுப்பூசியை வினியோகிக்க சம்மதித்து உள்ளது.
ரஷியாவில் அடுக்கு மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து - பச்சிளம் குழந்தை உட்பட 8 பேர் உடல் கருகி பலி

ரஷியாவில் அடுக்கு மாடி குடியிருப்பில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி ஒரு பச்சிளம் குழந்தை உட்பட 8 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கியூபாவை பயங்கரவாத ஆதரவு நாடாக அமெரிக்கா மீண்டும் அறிவித்தது

ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் கியூபாவை பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடாக மீண்டும் அறிவித்துள்ளது.
இங்கிலாந்தில் ஒரே நாளில் 1243 பேர் கொரோனாவுக்கு பலி

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,243 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
ஜோ பைடன் பதவி ஏற்பு விழா: வாஷிங்டனில் அவசர நிலை பிரகடனம் - டிரம்ப் உத்தரவு

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ள நிலையில் வாஷிங்டனில் 24-ந் தேதி வரை அவசர நிலை அமல்படுத்தற்கான உத்தரவை டொனால்டு டிரம்ப் பிறப்பித்தார்.
அமெரிக்காவில் உயிரியல் பூங்காவில் 2 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா பாதிப்பு

அமெரிக்காவில் உயிரியல் பூங்காவில் 2 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவிடம் இருந்து 3 பகுதிகளை மீட்போம் - நேபாள பிரதமர் மீண்டும் சர்ச்சை பேச்சு

இந்தியாவிடம் இருந்து 3 பகுதிகள் மீட்கப்படும் என்று நேபாள பிரதமர் கே.பி.சர்மாஒலி, மீண்டும் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.