என் மலர்
உலகம்
- பஹ்ரைன் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
- ஈரானின் தாக்குதலை துரோகத் தாக்குதல் என பஹ்ரைன் கூறுகிறது.
அமெரிக்கா இஸ்ரேல் உடன் இணைந்து ஈரான் மீது கூட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகள் மீது ஈரான் சரமாரி ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈரான் தாக்குதல் நடத்தும் வளைகுடா நாடுகளில் பஹ்ரைனும் ஒன்று. தங்கள் நாட்டின் மீது ஈரான் தாக்குதல் நடத்துவதை துரோகம் என்று பஹ்ரைன் தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் தங்கள் நாட்டின் மீது ஈரான் செலுத்திய 78 ஏவுகணைகள், 143 டிரோன்களை அழித்ததாக பஹ்ரைன் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.
- அயதுல்லா காமேனி கொலைக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
- பிரதமர் அலுவலகத்தை ஏற்கனவே தாக்கியிருந்த நிலையில், தற்போது விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
அமெரிக்கா இஸ்ரேல் உடன் இணைந்து ஈரான் மீது கூட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகள் மீது ஈரான் சரமாரி ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
அதேபோல் இஸ்ரேல் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலின் வான் பாதுகாப்பு சிஸ்டத்தை தாண்டி ஈரான் ஏவுகணைகள் இஸ்ரேல் பகுதிகளை துளைத்து வருகிறது. இதனால் இஸ்ரேலும் அதிக சேதத்தை சந்தித்து வருகிறது.
ஈரான் தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டதும், கடுங்கோபத்தில் ஈரான் இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியது. இதில் நெதன்யாகு உயிர் தப்பினார்.
இந்த நிலையில் பென் குரியன் விமான நிலையத்தை ஈரான் ஏவுகணைகள் தாக்கியதால் ஈரான் மீடியாக்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆனால், இஸ்ரேல் ராணுவம் இது தொடர்பாக தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.
இஸ்ரேல்- ஈரான் இடையிலான போர் இன்று 7-வது நாளாக நீடித்து வருகிறது. ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை. இதனால் போர் வார கணக்கில் நீடிக்கும் எனத் தெரிகிறது.
- ஈரான் துபாய் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது.
- இதனால் பொதுமக்களுக்கு செல்போன் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா இஸ்ரேல் உடன் இணைந்து ஈரான் மீது கூட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகள் மீது ஈரான் சரமாரி ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் ஈரன் தாக்குதல் நடத்தி வருகிறது. துபாய் விமான நிலையம், பிரபல ஹோட்டல்கள் உள்ளிட்டவைகளை தாக்கி வருகிறது.
இந்த நிலையில் ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்படலாம் என துபாயில் வசித்து வரும் மக்களுக்கு செல்போன் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
- அமெரிக்காவின் போர் அமைச்சகம் ஒரு புதிய திட்டத்தை வெளியிட்டது.
- ஆந்திரோபிக் நிறுவனத்துடன் இருந்த ஒப்பந்தத்தை பென்டகன் ரத்து செய்தது.
நவீன கால போர்கள் வீரர்களின் எண்ணிக்கையை விட, தரவுகளின் வேகத்தை வைத்தே தீர்மானிக்கப்படுகின்றன.
தாக்குதல் நடத்த முதலில் இலக்குகளை தீர்மானிக்க வேண்டும். இலக்குகளை தீர்மானிக்க, தரவுகளை ஆய்வு செய்ய வேண்டும்.
தாக்குதல் நடத்த வேண்டிய இடத்தின் சாட்டிலைட் புகைப்படங்கள், உளவு மற்றும் கண்காணிப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் இந்த தரவுகளில் அடங்கும்.
ராட்சதனின் வருகை:
ஏஐ என்ற ராட்சத தொழில்நுட்பம் வரும் வரை இந்த தரவுகளை ஆய்வு செய்வது ராணுவ நிபுணர்களால் செய்யப்பட்டு வந்தது.
நிபுணர்கள் என்றாலும் அவர்களும் மனிதர்களே, தரவுகளை ஆய்வு செய்து முடிவெடுக்க மனிதர்களுக்கு நேரம் எடுக்கும். எனவே இலக்கை நிர்ணயித்து தாக்குதல் நடத்துவதும் மிக நீண்ட செயல்முறையாக இருந்து வந்தது.
ஆனால் ஏஐ ஆயிரக்கணக்கான தரவுகளை நிமிடங்களில் முழுமையாக ஆய்வு செய்து துல்லியமான முடிவுகளை வழங்குகிறது. இது எளிதில் இலக்கை தீர்மானிக்க உதவுகிறது.

போரில் வெற்றி என்பது யார் பலசாலி என்பதை விட யார் வேகமாக செயல்படுகின்றனர் என்பதை பொறுத்தே உள்ளது.
எனவே ஏஐ மூலம் மனிதர்களுக்கு கிடைக்கும் இந்த வேகம், போர் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
அந்த வகையில் மனிதர்கள் முடிவெடுக்கும் முறையிலிருந்து, இயந்திரங்களே மின்னல் வேகத்தில் முடிவெடுத்துத் தாக்கும் புதிய முறைக்கு அமெரிக்கா மாறியுள்ளது.
கடந்த ஜனவரி அமெரிக்காவின் போர் அமைச்சகம் ஒரு புதிய திட்டத்தை வெளியிட்டது.
ராணுவத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் ஏஐ-ஐ முழுமையாகப் புகுத்துவது, நவீன ஏஐ மாடல்களைப் பயன்படுத்தி எதிரிகளின் நகர்வுகளைக் கணிப்பது உள்ளிட்ட அம்சங்கள் இதில் இடம்பெற்றன.
இந்த ஏஐ பலத்தை பயன்படுத்தி ஏற்கனவே 2 நாடுகளின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது நவீன போர் முறையில் ஏஐ உடைய முக்கியத்துவத்தை உணர்த்தி உள்ளது.

ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்
கடந்த ஜனவரி 3 ஆம் தேதி இரவு, "ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்" என்ற பெயரில் வெனிசுலா நாட்டில் அமெரிக்க ராணுவம் அதிரடியாக நுழைந்தது.
அந்நாட்டு தலைநகரில் அமைந்துள்ள அதிபர் மாளிகைக்கு உள்ளேயே நேரடியாக புகுந்து அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்து அமெரிக்காவுக்கு நாடுகடத்திச் சென்றது.
இந்த தாக்குதலுக்கு முன் பல ஆயிரம் மணிநேர ஆடியோ பதிவுகளை ஏஐ தொழில்நுட்பம் மூலம் பகுப்பாய்வு செய்து, மதுரோவின் பாதுகாப்பில் இருந்த ஓட்டைகளை கண்டறிந்த அமெரிக்க ராணுவம், அதன் மூலம் தாக்குதலை திட்டமிட்டது பின்னர் தெரியவந்தது.

ஆபரேஷன் எபிக் ஃபியூரி:
இதேபோல் கடந்த வாரம் சனிக்கிழமை, பிப்ரவரி 28 ஆம் தேதி ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்க ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டார்.
இந்தத் தாக்குதல் வெறும் ஏவுகணைத் தாக்குதல் மட்டுமல்ல, இது உலகின் முதல் ஏஐ-ஆல் வழிநடத்தப்பட்ட போர்முறை என்று அழைக்கப்படுகிறது.
அண்மையில் ராணுவத்துக்கு தங்களின் முழு ஏஐ அணுகலையும் வழங்க முடியாது என மறுத்ததால் ஆந்திரோபிக் நிறுவனத்துடன் இருந்த ஒப்பந்தத்தை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் ரத்து செய்தது.
இந்நிலையில் ஆந்திராபிக் நிறுவனத்தின் கிளாட் ஏஐ உதவியுடனே ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது.
வழக்கமாக ராணுவ அதிகாரிகள் பல வாரங்கள் செய்ய வேண்டிய வேலையை கிளாட் ஏஐ வெறும் சில மணிநேரங்களில் செய்து முடித்தது.
செயற்கைக்கோள் படங்கள், உளவுத் தகவல்கள் மற்றும் தொலைபேசி உரையாடல்கள் என பல கோடி தகவல்களை ஏஐ சில நிமிடங்களில் அலசி ஆராய்ந்தது.
காமேனி எங்கே இருக்கிறார், அவரது பாதுகாப்பு வளையம் எப்படி இருக்கிறது என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து, எங்கே தாக்கினால் வெற்றி கிடைக்கும் என்பதை ராணுவ அதிகாரிகளுக்கு ஏஐ பரிந்துரைத்தது.
தாக்குதலை தொடங்குவதற்கு முன்பே, பல்வேறு வழிகளில் தாக்குதல் நடத்தினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதற்கான சாத்தியக்கூறுகளை கணினி மூலம் ஒத்திகை பார்த்து ஏஐ சொல்லியுள்ளது.

கொலைச் சங்கிலி
ராணுவத்தில் கொலைச் சங்கிலி, அதாவது 'Kill chain' என்ற ஒரு வார்த்தை பிரயோகம் உண்டு. ஓர் இலக்கைக் கண்டுபிடித்து அதைத் தாக்குவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரமே Kill chain என்று அழைக்கப்படும்.
மனிதர்கள் தரவுகளை கையாண்ட வரை இதற்கு பல நாட்கள் அல்லது வாரங்கள் ஆகும்.
மெஷின் லேர்னிங் அல்காரிதம்கள் மூலம் கிளாட் போன்ற ஏஐ கருவிகளால் தரவுகள் ப்ராசஸ் செய்யப்படுவதால், இந்த முடிவெடுக்கும் நேரம் வெறும் நிமிடங்களாகக் குறைந்துவிட்டது.
இதனால் எதிரிகள் தப்பிச் செல்லும் முன்பே அமெரிக்கப் படைகளால் மின்னல் வேகத்தில் முடிவெடுத்து தாக்க முடிகிறது.

160 சிறுமிகள்:
அதேநேரம் உயிரைப் பறிக்கும் முடிவுகளை எடுக்கும்போது, மனிதர்களுக்குப் பதில் இயந்திரங்களை அதிகம் நம்புவது ஆபத்தானது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஏஐ தவறான ஒரு இடத்தைக் குறிவைத்தால், அப்பாவி மக்கள் கொல்லப்பட வாய்ப்புள்ளது.
அமெரிக்க தாக்குதலில் தெற்கு ஈரானில் உள்ள மினாப் நகரில் உள்ள ஒரு பெண்கள் தொடக்கப்பள்ளி கடந்த சனிக்கிழமை தாக்கப்பட்டதும் இதில் 160 சிறுமிகள் கொல்லப்பட்டதும் இதற்கு உதாரணமாகும்.
இனிவரும் காலங்களில் போர்கள் ஆயுதங்களால் மட்டுமின்றி, ஏஐ தொழில்நுட்பத்தாலும், அல்காரிதம் எனப்படும் கணினி சூத்திரங்களாலும் தான் தீர்மானிக்கப்படும் என்பதை இந்த போர் உலகுக்கு எடுத்துக்காட்டியுள்ளது.
- ஈரானின் இஸ்பஹான் உள்பட பல்வேறு நகரங்கள் மீதும் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டன.
- இன்று ஈரானிய டிரோன் விமானம் தாங்கி கப்பலை தாக்கினோம்.
அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் இன்று 7-வது நாளாக நீடித்து வருகிறது. இதில் ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் படைகள் தொடர்ந்து ஏவுகணை-குண்டுகளை வீசின.
தலைநகர் தெக்ரானில் ராணுவம் மற்றும் அரசு தொடர்பான கட்டமைப்புகளை இலக்காக வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. இதனால் தெக்ரான் முழுவதும் குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டு கொண்டிருந்தன.
இன்று காலை தெக்ரானில் ஜோம்ஹுரி அவென்யூவில் உள்ள மார்க்கெட்டில் குண்டு வீசப்பட்டது. இதில் குடியிருப்பு பகுதிகள் கடும் சேதமடைந்தன. தாக்குதல்களைத் தொடர்ந்து மத்திய மற்றும் கிழக்கு தெக்ரானில் உள்ள வீதிகள் பெரும்பாலும் வெறிச்சோடி காணப்பட்டன.
அதேபோல் ஈரானின் இஸ்பஹான் உள்பட பல்வேறு நகரங்கள் மீதும் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டன.
இந்த நிலையில் ஈரானின் ஐரிஸ் ஷாஹித் பகேரி போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதில் அந்த கப்பல் தீப்பிடித்து எரிந்தது. டிரோன் விமானம் தாங்கி கப்பலான ஐரிஸ் ஷாஹித் பகேரி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வீடியோவை அமெரிக்க ராணுவம் வெளியிட்டு உள்ளது.
முழு ஈரானிய கடற்படையையும் மூழ்கடிக்கும் பணியில் அமெரிக்கப் படைகள் பின்வாங்க போவதில்லை என்று அமெரிக்க ராணுவம் தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க உயர் ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது,"தற்போது நடந்து வரும் போரில் 30-க்கும் மேற்பட்ட ஈரான் கப்பல்களை அமெரிக்கா மூழ்கடித்துள்ளது. இன்று ஈரானிய டிரோன் விமானம் தாங்கி கப்பலை தாக்கினோம்.
இது 2-ம் உலகப்போரின் விமானம் தாங்கி கப்பலின் அளவு ஆகும். ஈரான் படைகளின் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் கணிசமாகக் குறைந்துவிட்டன" என்றார்.
இதற்கிடையே இஸ்ரேலின் ராணுவ தளபதி கூறும் போது," 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுதங்களுடன் 2,500 தாக்குதல்களை நடத்திய பிறகு ஈரானுடனான போரில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து உள்ளோம்" என்றார்.
இஸ்ரேல் மீது ஈரான் நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை சரமாரியாக ஏவுகணைகளை வீசியது. அதை தடுக்க இஸ்ரேல் வான்பாதுகாப்பு அமைப்பு தீவிரமாக செயல்பட்டது. இருந்தபோதிலும் இஸ்ரேலுக்குள் சில ஏவுகணைகள் விழுந்து வெடித்தன. இதனால் இஸ்ரேல் முழுவதும் தாக்குதலுக்கான அபாய ஒலிகள் எழுப்பப்பட்டன.
அதேபோல் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது. பக்ரைன் தலைநகர் மனாமாவில் உள்ள ஒரு ஓட்டல் மற்றும் 2 குடியிருப்பு கட்டிடங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. இதில் அந்த கட்டிடங்கள் சேதமடைந்தன. மேலும் பக்ரைனில் உள்ள இஸ்ரேல் தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது டிரோன், ஏவுகணைகள் வீசப்பட்டன. அங்கு அமெரிக்க ராணுவம் பயன்படுத்தும் அலி அல்-சலேம் விமான தளம் மீது ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளது.
கத்தாரில் அமெரிக்க ராணுவ தளமான அல் உதெய்த் விமான தளத்தை குறிவைத்து நடத் தப்பட்ட டிரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல் சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈரானுக்கு ஆதரவாக உள்ள லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுத்து வருகிறது. இதில் தெற்கு பெய்ரூட்டில் சரமாரியாக ஏவுகணைகள் வீசப்படுகின்றன. பதிலுக்கு ஹிஸ்புல்லாவும் தாக்குதல் நடத்தி வருகிறது.
எல்லையில் உள்ள இஸ்ரேலிய நிலைகள் மீது ராக்கெட்டுகள் மற்றும் பீரங்கி குண்டுகளை வீசிய தாக ஹிஸ்புல்லா தெரிவித்து உள்ளது. இதற்கிடையே எல்லையில் இருந்து 5 கி.மீ தொலைவு வரை வசிக்கும் இஸ்ரேலியர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று ஹிஸ்புல்லா இயக் கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- ஈரானிலும் புதிய தலைவர் நியமனத்தில் நான் தனிப்பட்ட முறையில் ஈடுபட வேண்டும்.
- ஈரானை வழிநடத்த பகுத்தறிவு மற்றும் விவேகமுள்ள ஒருவரை நியமிக்க வேண்டும்.
அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்துகிறது.
அயதுல்லா அலி கமெனி கொல்லப்பட்டதையடுத்து ஈரானின் புதிய உச்ச தலைவராக அவரது 2-வது மகன் மொஜ்தபா கமெனி தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் ஈரான் உச்ச தலைவராக மொஜ்தபா கமேனியை ஏற்க முடியாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
ஈரான் தங்களது நேரத்தை வீணடிக்கிறார்கள். கமெனியின் மகன் இலகுவானவர். அயதுல்லா அலி கமேனியின் கொள்கைகளைத் தொடரும் ஒரு புதிய ஈரானியத் தலைவரை ஏற்க முடியாது. இது அமெரிக்காவை 5 ஆண்டுகளில் மீண்டும் போருக்குத் தள்ளும். எனவே ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமெனியை ஏற்க முடியாது.
வெனிசுலாவில் நடந்தது போல, ஈரானிலும் புதிய தலைவர் நியமனத்தில் நான் தனிப்பட்ட முறையில் ஈடுபட வேண்டும். கமேனியின் மகன் எனக்கு ஏற்றுக் கொள்ள முடியாதவர். ஈரானுக்கு நல்லிணக்கத்தையும் அமைதியையும் கொண்டு வரக்கூடிய ஒருவரை நாங்கள் விரும்புகிறோம்.
ஈரானை வழிநடத்த பகுத்தறிவு மற்றும் விவேகமுள்ள ஒருவரை நியமிக்க வேண்டும்.
ஈரான் ராணுவம், புரட்சி கர காவல்படை தங்களது ஆயுதங்களை கீழே போடுமாறு அழைப்பு விடுக்கிறேன். புதிய, சிறந்த ஈரானை பெரும் ஆற்றலுடன் வடிவமைக்க எங்களுக்கு உதவ வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
ஈரானுடனான அமெரிக்க போர் எவ்வளவு காலம் தொடரலாம் என்பதில் எனக்கு எந்த நேர வரம்புகளும் இல்லை. ஈரானிடம் அணு ஆயுதம் இருக்க கூடாது.
அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்ய அமெரிக்காவை அணுகி உள்ளனர். ஆனால் அந்த கோரிக்கை கொஞ்சம் தாமதமாக வந்துள்ளது. அமெரிக்க ராணுவம் இஸ்ரேலிய படைகளுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது.
ஈரானின் ஏவுகணைகள் மற்றும் டிரோன் திறனை ஒவ்வொரு மணி நேரமும் அழித்து வருகிறது.
இவ்வாறு டிரம்ப் கூறினார்.
- இந்தியா தனது தேவையில் 40% எண்ணெயை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கிறது.
- எதிர்காலத்தில் இந்தியா அமெரிக்காவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயை வாங்கும்.
மத்திய கிழக்கில் போர் நடப்பதால் உலகம் முழுவதிலும் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா தனது தேவையில் 40% எண்ணெயை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கிறது.
இந்தியாவின் கச்சா எண்ணெய் இருப்பு 25 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது.
தற்போது ஹார்முஸ் ஜலசந்தி முடங்கியுள்ளதால், இந்தியாவிற்கு மாற்று வழி அவசியமாகிறது.
இந்தியாவுக்கு கூடுதல் எண்ணெய் வழங்குவதாக ரஷியா முன்வந்தது. ஏற்கனவே கப்பலில் ஏற்றப்பட்டு கடலில் தயார் நிலையில் உள்ள ரஷிய எண்ணெய்யை இந்தியாவுக்கு விற்பதில் ரஷியா முனைப்பு காட்டும் சூழலில் இந்தியா தயக்கம் காட்டியது.
ரஷிய எண்ணெய்யை வாங்க மாட்டோம் என்று அண்மையில் அமெரிக்காவுடன் செய்துகொண்ட வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா வாக்குறுதி அளித்தது. இதனால் ரஷிய எண்ணெய் இறக்குமதியை இந்தியா கணிசமாக குறைந்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் அவசர கால அடிப்படையில் அடுத்த 30 நாட்களுக்கு மட்டும் ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க அனுமதிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
"இந்த 30 நாள் சலுகை ஏற்கனவே நடுக்கடலில் உள்ள கப்பல்களுக்கு மட்டுமே பொருந்தும். இதனால் ரஷ்யாவிற்குப் பெரிய நிதி ஆதாயம் கிடைக்காது" என்று அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இந்தியா அமெரிக்காவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயை வாங்கும் என்று வாஷிங்டன் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் ரஷிய எண்ணெயை உடனடியாக வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
ஏற்கனவே சுமார் 2 கோடி பீப்பாய்கள் ரஷிய எண்ணெயை இந்திய நிறுவனங்கள் வர்த்தகர்களிடமிருந்து வாங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸும் ரஷிய எண்ணெயை வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
- அப்பாவி மாலுமிகள் மீது நடத்தப்படும் எந்தத் தாக்குதலையும் நியாயப்படுத்த முடியாது.
- இந்திய பொருளாதாரத்தில் நேரடி பாதிப்பு.
மத்திய கிழக்கில் வெடித்துள்ள போரினால் வளைகுடா பிராந்தியத்தில் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியான அந்நாட்டு ராணுவம் மத்திய கிழக்கில் மற்ற நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள், தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
மேலும் உலகின் 20 சதவீத எண்ணெய் தேவைக்கு பிரதான போக்குவரத்து பாதையாக இருந்த ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது.
இதனால் வெளிநாட்டு சரக்கு கப்பல்கள், அதன் மாலுமிகள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சுமார் 20,000 மாலுமிகள் மற்றும் 15,000 கப்பல் சுற்றுலா பயணிகள் வளைகுடா கடற்பரப்பில் சிக்கியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO)தெரிவித்துள்ளது .
போர் தொடங்கிய கடந்த சனிக்கிழமை முதல் இதுவரை 7 கப்பல் விபத்துகள் பதிவாகியுள்ளன. இதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர், 7 பேர் காயமடைந்துள்ளனர்.
"இது வெறும் பொருளாதாரப் பிரச்சினை மட்டுமல்ல, ஒரு மனிதாபிமானப் பிரச்சினை. அப்பாவி மாலுமிகள் மீது நடத்தப்படும் எந்தத் தாக்குதலையும் நியாயப்படுத்த முடியாது" என்று IMO தலைவர் டோமிங்குவேஸ் கூறியுள்ளார்.
இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் ராணுவம் முழு கட்டுபாட்டில் எடுத்துள்ளதால், அவ்வழியாக செல்லும் எண்ணெய் டாங்கர்களின் எண்ணிக்கை கடந்த வாரத்தை விட 90% குறைந்துவிட்டது.
இதனால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு பெட்ரோல் டீசல், எரிவாயு விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரத்தில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தும்.
"தேவைப்பட்டால் அமெரிக்க கடற்படை எண்ணெய் டாங்கர்களுக்குப் பாதுகாப்பாக வரும்" என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வணிகக் கப்பல்களுக்கு மலிவான விலையில் காப்பீடு வழங்கவும் அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
- ஆப்கான் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலை விசாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- கல்வி விசாவில் வந்த 95 சதவீத ஆப்கானியர்கள் அங்கேயே தஞ்சம் கோரியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
லண்டன்:
இங்கிலாந்துக்கு சட்டவிரோதமாக குடியேறுபவர்களைத் தடுக்க அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கல்வி விசா பெற்று இங்கிலாந்துக்குள் நுழைந்துவிட்டு, பின்னர் அங்கேயே தஞ்சம் கோருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகப் புகார் எழுந்தது.
இதையடுத்து ஆப்கானிஸ்தான், கேமரூன், மியான்மர் மற்றும் சூடான் ஆகிய 4 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி விசா வழங்குவதை நிறுத்துவதாக அந்நாட்டு உள்துறை மந்திரி ஷபானா மஹ்மூத் அறிவித்துள்ளார்.
குறிப்பாக, ஆப்கான் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலை விசாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கல்வி விசாவில் வந்த 95 சதவீத ஆப்கானியர்கள் அங்கேயே தஞ்சம் கோரியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய சட்டத்திருத்தம் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
- நிலச்சரிவு ஏதும் ஏற்படவில்லை, குண்டுவெடிப்பு காரணமாக 5 பேர் மட்டுமே பலியானார்கள் என கிளர்ச்சிக் குழுவின் அதிகாரி கூறினார்.
- பலி எண்ணிக்கையை வெளியே சொல்லக் கூடாது என சுரங்க உரிமையாளர்கள் எங்களை மிரட்டுகிறார்கள் என தொழிலாளி கூறினார்
கின்ஷாசா:
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கனிமவள சுரங்கம் இடிந்து விழுந்து 200 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து பலியாகினர்.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கனிம வளம் நிறைந்த ருபாயா பகுதியில் மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்படும் டான்டலம் மற்றும் நியோபியம் உலோகங்களைப் பிரித்தெடுக்கும் ஒரு முக்கியமான கருப்பு நிற தாதுவான 'கோல்டன் தாது' உள்ள சுரங்கம் செயல்பட்டு வருகிறது.
இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுரங்கங்களில் கனிமங்களை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென சுரங்கம் ஆங்காங்கே சரிந்து விழுந்தது. சத்தம் கேட்டு தொழிலாளர்கள் அலறியடித்து வெளியே ஓடினர். ஆனால் அதற்குள் சுரங்கம் இடிந்து விழுந்து தொழிலாளர்கள் மண்ணோடு மண்ணாக புதைந்தனர்.
இந்த சுரங்கப் பகுதி தற்போது எம்.23 என்ற கிளர்ச்சிக் குழுவின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. ரவாண்டா நாட்டின் ஆதரவு பெற்ற இந்த கிளர்ச்சியாளர்கள், கடந்த 2024 மே மாதம் முதல் இந்த சுரங்கத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அங்கிருந்து எடுக்கப்படும் கனிமங்களுக்கு வரி விதிப்பதன் மூலம் மட்டும் மாதம் தோறும் சுமார் ரூ.6% கோடி (8 லட்சம் அமெரிக்க டாலர்) வருமானம் ஈட்டி வருகின்றனர்.
விபத்து குறித்துப் பேசிய கிளர்ச்சிக் குழுவின் அதிகாரி பென்னிகாஜ். "அங்கு நிலச்சரிவு ஏதும் ஏற்படவில்லை, குண்டுவெடிப்பு காரணமாக 5 பேர் மட்டுமே பலியானார்கள்" என மழுப்பலாகக் கூறி பலி எண்ணிக்கையை மறைக்க முயன்றார்.
ஆனால், மீட்புப் பணியில் ஈடுபட்ட இப்ராகிம் என்ற தொழிலாளி கூறுகையில், "நாங்கள் எங்கள் கண்ணெதிரே 200-க்கும் மேற்பட்ட உடல்களை மீட்டுள்ளோம். பலி எண்ணிக்கையை வெளியே சொல்லக் கூடாது என சுரங்க உரிமையாளர்கள் எங்களை மிரட்டுகிறார்கள்" எனப் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஸ்மார்ட்போன்கள். லேப்டாப்கள் மற்றும் விமான என்ஜின்கள் தயாரிக்கத் தேவையான 'டான்டலம்' எனும் அரிய உலோகம் இந்த 'கோல்டன்' தாதுவிலிருந்துதான் கிடைக்கிறது. இது வெப்பத்தை எதிர்க்கும் பண்புகளைக் கொண்டிருப்பதால், மின்னணுப் பொருட்களின் மின்தேக்கிகள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. உலகத் தேவையில் 15 சதவீதத்திற்கும் அதிகமான கோல்டன் தாது இந்த ருபாயா சுரங்கத்திலிருந்தே கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கடந்த மாதம் இதேபோன்ற ஒரு விபத்தில் 200 பேர் பலியான நிலையில், தற்போது மீண்டும் ஒரு பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது காங்கோ மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- இந்தக் கப்பலும் இலக்காகக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டது.
- நாங்கள் இந்தப் போரில் எந்தப் பக்கமும் சாயவில்லை.
இந்தியாவில் ராணுவ பயிற்சி முடிந்து திரும்பிக் கொண்டிருந்த ஈரானின் ஐரிஸ் டெனா போர்க்கப்பல் கடந்த மார்ச் 4 ஆம் தேதி இலங்கை அருகே இந்திய பெருங்கடலில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.
இதில் கப்பலில் இருந்த ஈரான் ராணுவ வீரர்கள் 87 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் மாயமாகினர். மீட்பு நடவடிக்கையில் ஈரான் கடற்படை ஈடுபட்டு வருகிறது.
இந்த சூழலில் மற்றொரு ஈரானிய போர் கப்பலான ஐரிஸ் புஷெர் அதில் இருந்த 208 வீரர்களை மனிதாபிமான அடிப்படையில் மீட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
மார்ச் 5 (வியாழக்கிழமை) அன்று, இந்தக் கப்பலில் இருந்த 53 அதிகாரிகள், 84 பயிற்சி அதிகாரிகள், 48 மூத்த மாலுமிகள் மற்றும் 23 மாலுமிகள் என மொத்தம் 208 வீரர்களை இலங்கை கடற்படை பத்திரமாக மீட்டது.
இந்த கப்பலின் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், அது நடுக்கடலில் தவித்தது. முந்தைய நாள் மற்றொரு கப்பல் தாக்கப்பட்டதால், இந்தக் கப்பலும் இலக்காகக்கூடும் என்ற அச்சத்தில் இந்த மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கொழும்பு துறைமுகம் வணிக ரீதியாக முக்கியமானது என்பதால், பாதுகாப்புக் கருதி இந்தக் கப்பலை இலங்கையின் வடகிழக்கில் உள்ள திருகோணமலை துறைமுகத்திற்கு இலங்கை கடற்படை கொண்டு செல்கிறது.
இலங்கை அதிபர் இது குறித்து தொலைக்காட்சியில் உரையாற்றுகையில், "நாங்கள் இந்தப் போரில் எந்தப் பக்கமும் சாயவில்லை.
எங்களின் நடுநிலைமையை பேணிக்கொண்டே, மனித உயிர்களைக் காக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். "இப்படி ஒரு போரில் எவரும் இறக்கக்கூடாது. ஒவ்வொரு உயிரும் விலையுயர்ந்தது" என்றார்.
இதற்கிடையே மார்ச் 4 அன்று தாக்குதலுக்கு உள்ளன ஐரிஸ் டேனா போர் கப்பலில் சுமார் 180 வீரர்கள் இருந்ததாகக் கருதப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி 32 வீரர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும் இதுவரை 87 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. காணாமல் போன 61 வீரர்கள் இன்னும் தேடப்பட்டு வருகின்றனர். இந்திய கடற்படையும் மீட்பு பணியில் உதவி வருகிறது.
- பிரதமர் மோடியின் உழைப்பையும் அவருடைய பொருளாதாரக் கொள்கைகளையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
- பொதுமக்களின் தரவுகளை கசியவிடாமல் யு.பி.ஐ.-யை சேவை கிராமப் புறங்களுக்கும் அறிமுகப்படுத்தி சாதனை படைத்துள்ளார்.
கனடா நாட்டின் பிரதமர் மார்க் கார்னி அரசு முறை பயணமாக கடந்த 28-ந் தேதி தொடங்கி மார்ச் 2-ந்தேதிவரை இந்தியாவுக்கு வந்திருந்தார். பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய அவர் கல்வி, வர்த்தகம், நிதி, ராணுவம் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டார். இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அங்குள்ள பிரதமர் அந்தோணி அல்பானிசை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் சிட்னியில் உள்ள ஐயோவி நிறுவனத்தில் உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடியின் உழைப்பையும் அவருடைய பொருளாதாரக் கொள்கைகளையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர், "நான் பார்த்த தலைவர்களிலேயே இந்திய பிரதமர் மோடி, மிகுந்த கவனம் கொண்டவராக உள்ளார். கோடிக்கணக்கான மக்களிடைய முறையான பொருளாதாரத்தை கொண்டு சேர்த்துள்ளார். பொதுமக்களின் தரவுகளை கசியவிடாமல் யு.பி.ஐ.-யை சேவை கிராமப் புறங்களுக்கும் அறிமுகப்படுத்தி சாதனை படைத்துள்ளார்.
2001-ம் ஆண்டு முதல் பொதுவாழ்க்கையில் கடந்த 25 ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடுமுறை எடுக்கவில்லை" என்று அவர் புகழாரம் சூட்டினார்.






