என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
- நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜீனத் வஹீத்துக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
- பிரசவத்துக்கு பின்னர் தாயும், குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டியைச் சேர்ந்தவர் முகமது வஹீத்தின் மனைவி ஜீனத் வஹீத் (வயது 27). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு ராவல்பிண்டியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு ஒரே நேரத்தில் 2 பெண் குழந்தைகள் உள்பட அழகான 6 குழந்தைகள் பிறந்தனர்.
பிரசவத்துக்கு பின்னர் தாயும், குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். எனினும் பாதுகாப்பு கருதி தற்போது அந்த குழந்தைகள் இன்குபேட்டரில் வைக்கப்பட்டு உள்ளனர்.
- 93 இடங்களில் அதிபரின் முய்சு கட்சி 60-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றியுள்ளது.
- முக்கிய எதிர்க்கட்சியால் 12 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.
மாலத்தீவில் நேற்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 284,663 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். நேற்று மாலை 5 மணி வரைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் 72.96% வாக்குகள் பதிவாகின. ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 826 ஆண்களும், ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 867 பெண்களும் வாக்களித்திருந்தனர்.
93 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்ற தேர்தலில் மொத்தமாக 368 வேட்பாளர்கள் களம் கண்டனர். அதில் 130 பேர் சுயேட்சையாக போட்டியிட்டனர். இதில் அதிபராக இருக்கும் மொய்சு தலைமையிலான பிஎன்சி கட்சி 90 தொகுதிகளிலும் போட்டியிட்டது. முக்கிய எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி 89 இடங்களிலும் போட்டியிட்டது.
வாக்குப்பதிவு முடிந்த கையோடு, வாக்கு எண்ணிக்கை உடனடியாக தொடங்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே மொய்சுவின் பிஎன்சி கட்சி பெரும்பலாலான இடங்களில் முன்னணி வகித்தன.
மொய்சு தலைமையிலான பிஎன்சி 60 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று சூப்பர் மெஜாரிட்டியை பெற்றுள்ளது. அதேவேளையில் எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 10 இடங்களில் சுயேட்சையாக நின்றவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த தேர்தலில் மூன்று பெண்கள் மட்டும் வெற்றி பெற்றுள்ளனர். பிஎன்சி கட்சி சார்பில் மூன்று பெண்கள் களம் நிறுத்தப்பட்டனர். அந்த மூன்று பெண்களும் வெற்றி பெற்றுள்ளனர்.
கடந்த 2019 தேர்தலில் மாலத்தீவு ஜனநாயக கட்சி 64 இடங்களை கைப்பற்றி சூப்பர் மெஜாரிட்டி பெற்றது. பிஎன்சி-பிபிஎம் கூட்டணி எட்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
மாலி, அட்டு, ஃபுவாஹ்முலாஹ் ஆகிய நகரங்களில் பிஎன்சி ஆதிக்கம் செலுத்தி அதிகப்படியான இடங்களை பிடித்துள்ளன.
மாலத்தீவு அதிபர் முய்சு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். சீனாவுடன் நட்பை மேம்படுத்த விரும்புகிறார். இந்திய ராணுவம் மலேசியாவில் இருந்து வெளியேற உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மக்கள் மீது அடுத்தடுத்து வந்த கார்கள் மோதியதால் பெரும் விபத்து.
- சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்.
இலங்கையின் பதுளை மாவட்டத்தில் கார் பந்தய திடலில் இன்று கார் பந்தயப் போட்டி நடைபெற்றது.
ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 21 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காயம் அடைந்தவர்கள் தியத்தலாவ, பண்டாரவளை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கார் பந்தயத்தின்போது, கார் செல்வதற்கான பாதையைவிட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதியுள்ளது. விபத்துக்குள்ளான காரை சூழ்ந்த மக்கள் மீது அடுத்தடுத்து வந்த கார்கள் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது.
இதனால், உயிரிழப்புகளும், படுகாயங்களும் அதிகளவில் பதிவாகியுள்ளது. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் விபத்து நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- 16 அடி நீளம் கொண்ட பாம்பு ரெயிலுக்குள் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- ஜப்பானில் புல்லட் ரெயில் சேவை தொடங்கிய 60 வருடங்களில் காலதாமதமாக ரெயில் நிலையத்தை வந்தடைவது இதுவே முதல் முறை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜப்பான் நாட்டில் புல்லட் ரெயில் சேவை மக்களுக்கு பெரிதும் பயன்படும் சேவையாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஜப்பானில் நகோயா மற்றும் டோக்கியோ நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் புல்லட் ரெயிலில் 16 அடி நீளம் கொண்ட பாம்பு புகுந்துள்ளது.
இது தொடர்பான தகவல்கள் வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நகோயா- டோக்கியோ இடையே செயல்படும் ஷிங்கன்செயிங் ரெயில் இயக்கத்தில் இருந்த போது ரெயிலுக்குள் பாம்பு இருந்ததை பயணி ஒருவர் கவனித்துள்ளார். உடனடியாக அவர் இதுகுறித்து ரெயில்வே ஊழியர்களுக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் ரெயிலை நிறுத்தத்தில் நிறுத்திய அதிகாரிகள் வனத்துறை உதவியுடன் அந்த பாம்பை அகற்றினர்.
16 அடி நீளம் கொண்ட அந்த பாம்பு ரெயிலுக்குள் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் ரெயில் புறப்பாட்டில் 17 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டதாகவும், ஜப்பானில் புல்லட் ரெயில் சேவை தொடங்கிய 60 வருடங்களில் காலதாமதமாக ரெயில் நிலையத்தை வந்தடைவது இதுவே முதல் முறை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சமூக வலைதளங்களில் பிரபலமாகி வரும் நாய் மெட்ரோ ரெயில், படகில் ஒய்யாரமாக பயணம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி பயனர்களை கவர்ந்து வருகிறது.
- இஸ்தான்புல் நகராட்சி அதிகாரிகள் அந்த நாயின் அனைத்து பயணங்களையும் மைக்ரோ சிப் மூலம் பதிவு செய்தனர்.
துருக்கியின் இஸ்தான்புல் நகரத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வருகிறார்கள். கம்பீரமான அரண்மனை, அலங்கரிக்கப்பட்ட மர மாளிகைகள், பூங்காக்கள், படகு சவாரிகள் என சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இந்நகரத்தில் பஸ், ரெயில், மெட்ரோ ரெயிலில் தினமும் ஒரு தெரு நாய் ஒய்யாரமாக சவாரி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒரு காலத்தில் தெரு நாயாக இருந்த போஜி என்ற பெயர் கொண்ட அந்த நாய் தற்போது மெட்ரோ ரெயில்கள் மட்டுமல்லாது படகு, பஸ்சிலும் பயணம் செய்கிறது. தங்க பழுப்பு நிற ரோமங்கள், கருமையான கண்கள் மற்றும் நெகில் காதுகளுடன் அலைந்து திரியும் நாய் 'அனடோலியன் ஷெப்பர்டு' கலவையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் பிரபலமாகி வரும் அந்த நாய் மெட்ரோ ரெயில், படகில் ஒய்யாரமாக பயணம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி பயனர்களை கவர்ந்து வருகிறது. இஸ்தான்புல் நகராட்சி அதிகாரிகள் அந்த நாயின் அனைத்து பயணங்களையும் மைக்ரோ சிப் மூலம் பதிவு செய்தனர்.
ஒரு நாளில் குறைந்தது 29 மெட்ரோ நிலையங்களில் இந்த நாய் பயணிக்கிறது என்றும், படகில் செல்லும் போதும் கண்காணிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சமூக வலைதளங்களில் பிரபலமானதால் இந்த நாய்க்கு தனியாக ஒரு வலைதள கணக்கை உருவாக்கி உள்ளதாகவும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
- துப்பாக்கி சூட்டில் பலர் குண்டு பாய்ந்து கீழே விழுந்தனர்.
- துப்பாக்கி சூடு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அமெரிக்காவின் டென்னசி மாகாணம் , மெம்பிஸில் உள்ள ஆரஞ்சு மவுண்ட் பகுதியில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். அப்போது அங்கு திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதனால் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அலறியடித்தப்படி ஓடினார்கள். துப்பாக்கி சூட்டில் பலர் குண்டு பாய்ந்து கீழே விழுந்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் விரைந்து வந்தனர். இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்தது தெரியவந்தது.16 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த துப்பாக்கி சூடு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 2 ஹெலிகாப்டர்களின் தொடர்பு துண்டானது.
- 7 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு தெற்கே பசிபிக் பெருங்கடலில் அந்நாட்டு கடற்படையை சேர்ந்த 2 ஹெலிகாப்டர்கள் பயிற்சியில் ஈடுபட்டன. அதில் தலா 4 பேர் பயணம் செய்தனர்.
டோக்கியோவிற்கு தெற்கே 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டோரிஷிமா தீவு அருகே திடீரென்று 2 ஹெலிகாப்டர்களின் தொடர்பு துண்டானது.இதையடுத்து சம்பவ இடத்தில் 2 ஹெலிகாப்டர்களும் கடலில் விழுந்து கிடந்தது. இரண்டு ஹெலிகாப்டர்களும் தண்ணீரில் விழுந்து நொறுங்குவதற்கு முன்பு ஒன்றுடன் ஒன்று மோதியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விபத்தில் ஒருவர் பலியானார். 7 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
- தேர்தலில் அதிபர் முகமது முய்சுக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.
- அதிபர் மீது ஊழல் குற்றச்சாட்டும் எழுந்துள்ளதால் அவர் பதவி விலக வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவில் இன்று பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. மொத்தம் உள்ள 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில் 368 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். இதனால் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது.
இந்த தேர்தலில் அதிபர் முகமது முய்சுக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. சீன ஆதரவாளரான அவர் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை தொடர்ந்து எடுத்து வருகிறார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் அதிபர் மீது ஊழல் குற்றச்சாட்டும் எழுந்துள்ளதால் அவர் பதவி விலக வலியுறுத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே இந்த பாராளுமன்ற தேர்தல், அதிபர் முகமது முய்சுவின் செல்வாக்கை சோதிக்கும் களமாக இருக்கும்.
- இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கு இடையே போர் மூள்வதற்கான சூழல் காணப்படுகிறது.
- அமெரிக்க அரசு இஸ்ரேல் நாட்டிற்கு 13 பில்லியன் மதிப்பிலான ராணுவ உதவிக்கு ஒப்புதல் அளித்தது.
டெல் அவிவ்:
இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சில வாரமாகவே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் போருக்கான பதற்ற நிலை நீடித்து வருகிறது.
ஈரான் சில மாதங்களில் அணு ஆயுதங்களைக் கட்டமைக்க உள்ளது என இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் குற்றம்சாட்டின.
இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஈரான், நாங்கள் தற்போது மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், அமைதிக்காகவும், குடிமக்களின் நன்மைக்காகவும் என தெரிவித்துள்ளது.
ஈராக் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்த ராணுவ தளத்தின்மீது இரவோடு இரவாக இஸ்ரேல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது. இந்த தளத்தில் ராணுவ வீரர்கள், ஈரான் ஆதரவு பெற்ற துணைராணுவப் படையினர் தங்கி உள்ளனர். இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கு இடையே போர் மூள்வதற்கான சூழல் காணப்படும் சூழலில் இது 3-வது உலகப்போருக்கு வழிவகுக்குமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, இஸ்ரேலின் 'அயர்ன் டோம்' வான் பாதுகாப்பு அமைப்பு உள்பட இஸ்ரேல் ராணுவத்தின் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, அமெரிக்க அரசு இஸ்ரேல் நாட்டிற்கு 13 பில்லியன் மதிப்பிலான ராணுவ உதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில், ராணுவ உதவிக்கு ஒப்புதல் அளித்துள்ள அமெரிக்க செனட் சபைக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.
இதனால் இஸ்ரேல், ஈரான் இடையிலான போர் பதற்றம் தணிவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.
- அமெரிக்கா, சீனா இடையே வர்த்தக மோதல் இருந்து வருகிறது.
- வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன் ஷாங்காய் மற்றும் பீஜிங் செல்கிறார்.
வாஷிங்டன்:
அமெரிக்கா, சீனா என்னும் இரு பெரும் பொருளாதார வல்லரசு நாடுகள் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவிவருகிறது.
தைவான் மீதான சீனாவின் ஆதிக்கம், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் மனித உரிமைகள் மீறல், தென் சீனக்கடல் பகுதியில் சீன ராணுவ ஆதிக்கம், உக்ரைன் போரில் சீனாவின் ரஷிய ஆதரவு நிலை என பல்வேறு பிரச்சனைகளில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது. இன்னொரு புறம் இரு தரப்பு வர்த்தக மோதலும் இருக்கிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் வரும் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஷாங்காய் மற்றும் பீஜிங் செல்லும் வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன், அங்கு வெளியுறவு மந்திரி வாங் யீ உள்ளிட்ட சீன அதிகாரிகளைச் சந்திக்கிறார். மேலும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பார் எனவும் தகவல் வெளியானது.
- 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ந் தேதி முதல் ஆகஸ்டு 11-ந் தேதி வரை நடக்கிறது
- கிர்கிஸ்தானில் நடந்த ஒலிம்பிக் தகுதிச்சுற்று அரையிறுதியில் கஜகஸ்தான் வீராங்கனை லாராவை வீழ்த்தி வினேஷ் போகத் வெற்றி பெற்றார்
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ந் தேதி முதல் ஆகஸ்டு 11-ந் தேதி வரை நடக்கிறது. இதன் மல்யுத்த போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்று கிர்கிஸ்தானில் உள்ள பிஷ்கேக்கில் நடைபெற்று வருகிறது.
ஆண்களில் பிரீ ஸ்டைல், கிரேக்கோ- ரோமன் பெண்களில் பிரீ ஸ்டைல் ஆகியவற்றில் மொத்தம் 18 எடை பிரிவுகளில் போட்டி நடக்கிறது. ஒவ்வொரு எடைப்பிரிவிலும் இறுதிப்போட்டியை எட்டும் வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.
மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷனுக்கு எதிராக போராட்டம் நடத்தி சர்ச்சையில் சிக்கிய ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டு பெண்கள் சாம்பியனான வினேஷ் போகத் (50 கிலோ) ஒலிம்பிக் போட்டியக்கு தகுதி பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இந்நிலையில், கிர்கிஸ்தானில் நடந்த ஒலிம்பிக் தகுதிச்சுற்று அரையிறுதியில் கஜகஸ்தான் வீராங்கனை லாராவை வீழ்த்தி வினேஷ் போகத் வெற்றி பெற்றார். மகளிர் 50 கிலோ எடைப்பிரிவில் நடந்த 3 போட்டிகளிலும் பங்கேற்று வென்றார் வினேஷ் போகத்.
இதன் மூலம், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை மாதம் நடைபெறவுள்ள 33வது ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்.
பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்துக்கு இந்தியாவில் இருந்து அன்திம் பன்ஹால்-க்கு அடுத்தபடியாக வினேஷ் போகத் தகுதி பெற்றுள்ளார்.
- ரஃபா நகரில் காசாவின் மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
- இந்த நகரில் மீது தாக்குதல் நடத்தினால்தான் தங்களது முழு நோக்கம் நிறைவடையும் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
காசா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், காசாவின் வடக்குப்பகுதியை ஏறக்குறைய உருக்குலைத்துவிட்டது. தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரும் இஸ்ரேல் ராணுவத்தின் கொடூர தாக்குதலுக்கு உள்ளானது. தங்களது இலக்கு முடிந்து விட்டதால் இந்த நகரில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்திருந்தது.
ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போரின் நோக்கம் நிறைவேற ரஃபா மீது தாக்குதல் நடத்த வேண்டும் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது. இந்த நகரில் சுமார் 10 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ரஃபாவின் அருகில் உள்ள டெல் சுல்தான் நகரின் மேற்கு பகுதியில் மக்கள் வசிக்கும் இடத்தின் மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை (நேற்று) நடத்திய தாக்குதலில் ஆறு குழந்தைகள் உள்பட 9 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட ஆறு குழந்தைகள், இரண்டு பெண்கள், ஒரு ஆண் ஆகியோரின் உடல்கள் ரஃபாவில் உள்ள அபு யூசெப் அல்-நஜ்ஜர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இறந்தவர்களின் உடல்களை கட்டிப்பிடித்து உறவினர்கள் கதறியது நெஞ்சை பிளப்பதுபோல் இருந்தது.
காசா எகிப்பு எல்லையில் அமைந்துள்ளது. காசாவில் மொத்த மக்களை தொகையான 2.3 மில்லியனில் பாதிக்கும் மேற்பட்டோர் ரஃபாவில் வசித்து வருகின்றனர். இஸ்ரேல் தாக்குதல் காரணமாக காசாவில் மற்ற பகுதிகளில் இருந்து இங்கு குடிபெயர்ந்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்