என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cargo ship"

    • கரை ஒதுங்கியுள்ள கண்டெய்னர்கள் அனைத்தும் காலியாக இருக்கின்றன.
    • கடலில் மிதக்கும் பொட்களை யாரும் தொடக்கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருப்பதால் மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று அரபிக்கடலில் பயங்கரமாக காற்று அடித்தபடி இருந்தது.

    அப்போது கேரள மாநிலம் விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து சென்ற லைபீரியா நாட்டு சரக்கு கப்பல் கொச்சி அருகே நடுக்கடலில் கவிழ்ந்தது. 630 கண்டெய்னர்களுடன் அந்த கப்பல் கடலில் கவிழ்ந்தது. இதுகுறித்து தகவலறிந்த கடற்படையினர் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து அந்த கப்பலில் இருந்த கேப்டன், 20 ஊழியர்கள் என 24 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

    இந்தநிலையில் கடலில் கவிழ்ந்த கப்பல் கடலுக்குள் முழுவதுமாக மூழ்கியது. அதில் இருந்த 630 கண்டெய்னர்களும் கடலுக்குள் விழுந்தன. அவற்றில் 73 கண்டெய்னர்கள் பொருட்கள் எதுவும் இல்லாமல் வெற்றாகவும், 13 கண்டெய்னர்களில் தீங்கு விளைவிக்கும் ரசாயன பொருட்களும், 12 கண்டெய்னர்களில் கால்சியம் கார்பைடும் இருந்திருக்கிறது.

    மேலும் அந்த கப்பலில் 84.44 மெட்ரிக் டன் டீசல், 367.1 மெட்ரிக் டன் உலை எண்ணையும் இருந்திருக்கிறது. அவை அனைத்துடன் கப்பல் முழுமையான மூழ்கியதால் அவை கடலில் கசிந்து ஆபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டது. கடலில் சுமார் 3.7 கிலோமீட்டர் அகலம் மற்றும் நீள பரப்பில் எண்ணெய் பரவியது.

    கடலில் பரவியிருக்கும் எண்ணெய் படலத்தை நீக்கும் பணி அகச்சிவப்பு கேமராக்களின் உதவியுடன் கண்டு பிடிக்கப்பட்டு அகற்றும் பணி கடலோர காவல் படையினரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடல் பகுதியில் தொடர்ந்து பலத்த காற்று அடித்து வருவதால் இந்த பணிகள் மிகவும் சிரமத்துடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்தநிலையில் கடலுக்குள் விழுந்த கண்டெய்னர்கள் கடற்கரைகளில் கரை ஒதுங்கி வருகின்றன. கொல்லம் மற்றும் ஆலப்புழா கடற்கரை பகுதிகளில் கரை ஒதுங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் கொல்லம் மற்றும் ஆலப்புழாவில் 4 இடங்களில் கண்டெய்னர்கள் குவிந்து கிடக்கின்றன.

    கரை ஒதுங்கியுள்ள கண்டெய்னர்கள் அனைத்தும் காலியாக இருக்கின்றன. தொடர்ந்து கண்டெய்னர்கள் கரை ஒதுங்கியபடி இருப்பதால் கொச்சி மற்றும் ஆலப்புழா கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதிகளில் வசித்துவரும் கடலோர கிராம மக்கள் வெளியேறவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

    கால்சியம் கார்பைட் தண்ணீருடன் வினைபுரிந்து அசிட்டிலின் வாயுவை உருவாக்கும். அது எரியும் தன்மை கொண்டது என்பதால் கடற்கரைகளில் ஒதுங்கி கிடக்கும் கண்டெய்னர்களின் அருகாமையில் யாரும் செல்லக்கூடாது எனவும், கடலில் மிதக்கும் பொட்களை யாரும் தொடக்கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.

    கப்பலில் இருந்து கடலுக்குள் விழுந்த கண்டெய்னர்கள் எங்கெல்லாம் ஒதுங்குகின்றன? அவற்றில் இருக்கும் ஆபத்தான பொருட்கள் எதுவும் கடலில் மிதக்கிறதா? என்று சுங்கத்துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.

    அவர்கள் கடலோர பகுதிகளில் தொடர்ந்து உஷார் நிலையில் இருந்து கண்காணித்து வருகிறார்கள். மேலும் கப்பல் மூழ்கிய பகுதியில் இருந்து 20 கடல்மைல் தொலைவு, அதாவது 37 கிலோமீட்டர் தூரத்துக்கு மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கப்பலில் இருந்த ரசாயனம் கடலில் கொட்டியதால் அப்பகுதி ஆபத்தான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கரை ஒதுங்கிய பொருட்களை தொட வேண்டாம் என பொதுமக்களுக்கு கடற்படை அறிவுறுத்தியுள்ளது.

    கொச்சிக்கு பெட்ரோலிய பொருட்களை ஏற்றி வந்த சரக்கு கப்பல் கடலில் சாய்ந்து விபத்துக்குள்ளானது. விழிஞ்சத்திலிருந்து கொச்சி துறைமுகத்திற்கு MSC ELSA3- கப்பலில் பொருட்கள் ஏற்றி கொண்டு செல்லப்பட்டது.

    கப்பல் கொச்சியிலிருந்து தென்மேற்கு சுமார் 38 மைல் தொலைவில் இருந்ததுபோது கடலில் சாய்ந்தது. அப்போது கப்பலில் இருந்த ரசாயனம் கடலில் விழுந்தது. இதனை தொடர்ந்து கப்பல் நிர்வாகம் உதவி கோரி இந்திய அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.

    அதனை தொடர்ந்து, மீட்பு பணியில் 2 கப்பல்களும் ராணுவ ஹெலிகாப்டரும் ஈடுபட்டது. இந்த மீட்பு பணியில் கப்பலில் இருந்த 24 பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

    கப்பலில் இருந்த ரசாயனம் கடலில் கொட்டியதால் அப்பகுதி ஆபத்தான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கரை ஒதுங்கிய பொருட்களை தொட வேண்டாம் என பொதுமக்களுக்கு கடற்படை அறிவுறுத்தியுள்ளது.   



    • மே 2-வது வாரத்தில் 2-வது பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.
    • வருகிற ஜூலை 15-ந் தேதி சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க வாய்ப்புகள் உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதனை தனியார் கப்பல் போக்குவரத்து நிறுவனமான சுபம் கப்பல் நிறுவனம் இயக்கி வருகிறது.

    இந்த நிலையில், சுற்றுலாப்பயணிகளை கவரும் நோக்கில் பயண கட்டணத்தை குறைத்து அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பயணிகள் கப்பல் நிறுவன தலைவர் சுந்தர்ராஜன் நாகையில் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16-ந் தேதி முதல் நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு கப்பல் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் கப்பல் பயணிகளுக்கு உதவிடும் வகையில் தற்போதைய கட்டணமான ரூ.8,500-ல் இருந்து ரூ. 8000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் தங்களது உடைமைகளாக 10 கிலோ மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், அதனை 7 கிலோ ஹேண்ட் பேக் எடையாகவும், 15 கிலோ செக் இன் எடையாகவும் எடுத்துச் செல்ல அனுமதி வழங்க உள்ளோம்.

    இது தவிர ரூ.15,000-க்கு 2 இரவுகள் பயணம் உட்பட மூன்று நாள் கொண்ட சுற்றுலா பேக்கேஜ் திட்டம், ரூ.30,000-க்கு 5 இரவுகள் 6 நாள் கொண்ட சுற்றுலா பேக்கேஜ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பேக்கேஜ் மூலம் ராமர் பாலத்தை நேரடியாக பார்வையிடவும், அதில் நடந்து செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பேக்கேஜ் திட்டத்தில் இருவழி பயண கட்டணம், தங்கும் வசதி, போக்குவரத்து வசதியும் செய்து கொடுக்கப்படும்.

    அதேபோல் நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது அதற்கான ஒப்புதல் பெறும் பணி நடைபெற்று வருகிறது. வருகிற ஜூலை 15-ந் தேதி வாக்கில் இந்த சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க வாய்ப்புகள் உள்ளது.

    அதுபோல் மே 2-வது வாரத்தில் 2-வது பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. இதில் 250 இருக்கைகளில், 220 எக்கனாமிக் இருக்கைகளும், 20 பிசினஸ் இருக்கைகளும், 10 சூட் ரூம்கள் வசதியும் இருக்கும். வடகிழக்கு பருவமழை காலகட்டங்களில் கப்பல் போக்குவரத்தை நிறுத்தி வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம். ஆனால் இந்த 2-வது கப்பல் போக்குவரத்தானது புயல் சின்னம் உருவாகும் காலத்தை தவிர்த்து, ஆண்டு முழுவதும் மற்ற அனைத்து நாட்களிலும் இயங்கும் வகையுடன் கூடிய தரத்தில் உருவாக்கி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நேற்று முன் தினம் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
    • 16 மணி நேரம் ஆகியும் தியணைப்பு படையினரால் தீயை அணைக்க முடியவில்லை.

    நெதர்லாந்து நாட்டின் கடற்கரை பகுதியில் 3000 கார்களை ஏற்றி சென்ற ஒரு சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் பலத்த காயமடைந்தனர்.

    இச்சம்பவத்தில் ஒரு இந்திய மாலுமி உயிரிழந்தார்.

    199 மீட்டர் நீளமுள்ள பனாமாவில் பதிவு செய்யப்பட்ட "ஃப்ரெமாண்டில் ஹைவே" எனும் கப்பல் ஜெர்மனியிலிருந்து எகிப்து நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அக்கப்பலில் நேற்று முன் தினம் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பலர் கடலில் குதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தீயணைப்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

    இது குறித்து இந்திய தூதரகம் தெரிவித்திருப்பதாவது:

    இறந்த இந்திய மாலுமியின் குடும்பத்தோடு நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அவரது உடலை இந்தியா கொண்டு செல்ல அனைத்து உதவிகளையும் செய்கிறோம். காயமடைந்த 20 பேருடனும் தொடர்பில் உள்ளோம். அந்த கப்பல் நிறுவனத்திடமிருந்தும், நெதர்லாந்து அரசாங்கத்திடமிருந்தும் தேவைப்படும் தகவல்களை பெற்று வருகிறோம்.

    இவ்வாறு தூதரகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

    23 மாலுமிகளை மீட்க மீட்பு படகுகளும், ஹெலிகாப்டர்களும் உபயோகப்படுத்தப்பட்டதாக டச்சு கடலோர காவற்படை தெரிவித்துள்ளது.

    தீ விபத்து குறித்து வெளியாகும் படங்களில் அக்கப்பலிலிருந்து புகை வருவது தெரிகிறது. கப்பலில் இருந்த 25 எலக்ட்ரிக் கார்களில் ஒன்றிலிருந்து இந்த தீ உருவாகியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ உருவாகி 16 மணி நேரம் ஆகியும் தியணைப்பு படையினரால் தீயை அணைக்க முடியவில்லை.

    தீயை முழுவதும் அணைக்க பல நாட்கள் ஆகலாம் என்றும் தீயை அணைக்க நீரை கப்பலில் கொண்டு தேக்கி வைத்து பயன்படுத்தும் போது நீரின் பாரத்தினால் கப்பல் கவிழ்ந்து விடும் ஆபத்து இருப்பதால், தீயை அணைக்க சரியான வழிமுறையை திட்டமிட வேண்டும் எனவும், நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    வாடன் கடலில் உள்ள அமலேண்ட் தீவின் கடற்கரை பகுதியிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் அருகே இக்கப்பலிலிருந்து உதவி கோரும் அழைப்பு முதலில் வந்ததாக கடலோர காவற்படை தெரிவித்தது.

    • ஒரு பொய் வழக்கு காரணமாக மாலத்தீவு சிவில் நீதிமன்றத்தால் கப்பல் கைப்பற்றப்பட்டு உள்ளது.
    • பணியாளர்களுக்கு உணவு, டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது என்று கூறுவது தவறானது.

    சென்னை:

    கன்னியாகுமரியை சேர்ந்த விக்டர் அனிஷ், கேரளாவை சேர்ந்த நந்தகுமார் ஆகியோர் புரவலன் 1 என்ற சரக்கு கப்பலில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வேலைக்கு சேர்ந்து உள்ளனர்.

    அந்த சரக்கு கப்பல் மாலத்தீவு துறைமுகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி துறைமுகத்துக்கு வருவதாக திட்டமிடப்பட்டு இருந்தது.

    மாலத்தீவு துறைமுகத்துக்கு வெளியே சுமார் 3 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இந்த சரக்கு கப்பல் கடந்த 13 மாதங்களாக அங்கேயே நிறுத்தப்பட்டு உள்ளது. அவர்கள் இருவரும் அந்த கப்பலிலேயே சிக்கி தவித்து வருகின்றனர். கப்பலை விட்டு வெளியேற அனுமதிக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் புறக்கணிக்கப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

    இதுகுறித்து கேரளாவை சேர்ந்த நந்தகுமார் கூறியதாவது:-

    நான் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த கப்பலில் பணிக்கு சேர்ந்தபோது கப்பல் தூத்துக்குடிக்கு செல்ல திட்டமிடப்பட்டது. மேலும் மாலுமிகள் பணியில் சேருவார்கள். பின்னர் கப்பல் இந்தியாவுக்கு செல்லும் என்று கூறினார்கள்.

    ஆனால் 2 மாதங்கள் ஆகியும் யாரும் பணிக்கு வரவில்லை. எனவே என்னை விடுவிக்குமாறு நிர்வாகத்திடம் கூறினேன். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். பின்னர் இலங்கையை சேர்ந்த 4 பணியாளர்கள் வேலைக்கு சேர்ந்தனர்.

    இப்போது மொத்தம் 7 பணியாளர்கள் உள்ளோம். ஆனால் கப்பல் புறப்படுவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. அத்தியாவசிய பொருட்களை கொண்டு வரும் படகுகளை நம்பியே வாழ்கிறோம். சரக்கு கப்பல் நிர்வாகம், கப்பல் போக்குவரத்து அமைச்சகம், சர்வதேச போக்குவரத்து தொழிலாளர் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு மின்னஞ்சல் மூலம் புகார்கள் அனுப்பப்பட்டு உள்ளன.

    ஒவ்வொரு புகாருக்கு பிறகும் நிர்வாகம் விளக்கம் அளிக்கும். அதன் பிறகு அமைதியாக இருந்துவிடும். கடந்த 13 மாதங்களாக சம்பளமும், சரியான உணவும் தராமல் அலைக்கழிக்கிறார்கள். தற்போது டீசல் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கன்னியாகுமரியை சேர்ந்த விக்டர் அனிஷ் கூறும்போது, "எனது அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் கப்பலில் இருந்து விடுவிக்கும்படி கேட்டுக் கொண்டேன். அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. ஆனால் என்னை வீட்டுக்கு செல்ல அனுமதிக்கவில்லை" என்றார்.

    சமீபத்தில் நந்தகுமார் அளித்த புகாரை தொடர்ந்து கப்பல் போக்குவரத்து அமைச்சகம், கப்பல் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னையில் உள்ள கப்பல் மாஸ்டரிடம் கேட்டது. இதையடுத்து கப்பல் மாஸ்டரின் வேண்டு கோளை ஏற்று கப்பல் நிறுவனம் பணியாளர்கள் கையெழுத்திட்ட பிறகு 60 நாட்களுக்கு ஆயிரம் டாலர் தருவதாகவும் சென்னை அலுவலகத்தில் அந்த பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் உறுதி அளித்துள்ளது.

    மேலும் இதுகுறித்து கப்பல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அப்துல் அஜீஸ் கூறும்போது, "ஒரு பொய் வழக்கு காரணமாக மாலத்தீவு சிவில் நீதிமன்றத்தால் கப்பல் கைப்பற்றப்பட்டு உள்ளது. பணியாளர்களுக்கு உணவு, டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது என்று கூறுவது தவறானது. அவர்களுக்கு தேவையானதை வழங்கி வருகிறோம்.

    கப்பலை விடுவிக்குமாறு இந்திய அரசிடம் முறையிட்டு உள்ளோம். ஆனால் அது மாலத்தீவில் சட்ட வழக்குகளில் சிக்கி உள்ளது. கப்பல் குழுவினர் விரைவில் கப்பலை விட்டு வெளியேற உள்ளனர். அவர்களுக்கு வரும் நாட்களில் சம்பளம் தருவதாக உறுதி அளித்துள்ளோம்" என்றார்.

    • இம்மாத துவக்கத்தில் குஜராத் மாநிலத்தின் முந்த்ரா துறைமுகத்தில் நங்கூரமிட்டது.
    • முதலமைச்சர் பினராயி விஜயன் இந்த துறைமுகத்திற்கு பெயர்சூட்டினார்.

    கிரேன்களை சுமந்து வந்த சீன சரக்கு கப்பல் கேரளா மாநிலத்தின் விழிஞம் துறைமுகத்தில் நங்கூரமிட்டது. சீனாவை சேர்ந்த ஜென் ஹூவா சரக்கு கப்பல் கடந்த ஆகஸ்ட் மாதம் கிளம்பிய நிலையில், இம்மாத துவக்கத்தில் குஜராத் மாநிலத்தின் முந்த்ரா துறைமுகத்தில் நங்கூரமிட்டது.

    நேற்று கேரளா வந்தடைந்த, சரக்கு கப்பலுக்கு விழஞம் துறைமுகத்தில் வைத்து பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் மத்திய மந்திரி சர்பனந்தா சொனோவல் கப்பலை வரவேற்க துறைமுகம் வந்திருந்தனர்.

    கடந்த மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் பினராயி விஜயன் இந்த துறைமுகத்திற்கு பெயர்சூட்டினார். பிறகு, இந்த துறைமுகத்திற்கான லச்சினையும் அறிமுகம் செய்யப்பட்டது. கேரளா அரசின் கனவு திட்டமாக பார்க்கப்படும் இது, சர்வதேச கடல்சார் போக்குவரத்திற்கு வாயில்கதவுகளை திறக்கும் வகையில் இருக்கும் என்று தெரிகிறது.

    • 6 ஆயிரம் டன் உப்புடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது.
    • கப்பலில் 4 இந்தியர்கள் உள்பட 14 பேர் இருந்தனர்.

    கிரீஸ் நாட்டில் அலெக்சாண்ட்ரியா துறைமுகத்தில் இருந்து இஸ்தான்புல்லுக்கு 6 ஆயிரம் டன் உப்புகளை ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது.

    லெஸ்போஸ் தீவு அருகே கப்பல் சென்று கொண்டிருந்த போது அதன் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. கடும் புயலில் சிக்கி அந்த கப்பல் கடலில் கவிழ்ந்தாக தெரியவந்துள்ளது.

    விபத்து நடந்த கப்பலில் 8 எகிப்தியர்கள், 4 இந்தியர்கள், 2 சீரியாவைச் சேர்ந்தவர் என 14 பேர் இருந்தனர். இதில் எகிப்து நாட்டை சேர்ந்த ஒருவர் மட்டும் உயிர் தப்பினார். ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. உயிரிழந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

    மாயமான 12 பேரையும் தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது. இந்த பணியில் கிரீஸ் நாட்டு கடலோர காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ஹெலிகாப்டர்கள் மற்றும் கப்பல்களும் தேடிவருகின்றன. கப்பல் கவிழ்ந்ததில் அதில் இருந்த 6 ஆயிரம் டன் உப்பு கடலில் கரைந்தது.

    • சரக்கு கப்பல் எம்.வி. புரவலானி தற்போது எம்.வி. ரகிமா என்ற பெயரில் இயங்கி வருகிறது.
    • வழக்கின் விசாரணையை வருகிற 13-ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

    தூத்துக்குடி:

    கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த நந்தக்குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

    அதில், சென்னையை சேர்ந்த புரவலான் கப்பல் போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு கப்பல் எம்.வி. புரவலானி தற்போது எம்.வி. ரகிமா என்ற பெயரில் இயங்கி வருகிறது.

    இந்த கப்பலில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆயில் சரி பார்ப்பவராக ஒப்பந்த அடிப்படையில் நான் பணியில் சேர்ந்தேன். 9 மாதங்களுக்கு தலா மாதம் ரூ.30 ஆயிரத்து 842 சம்பளம் என ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    ஆனால் பணியில் சேர்ந்தது முதல் கடந்த 13 மாதங்களாக எனக்கு ஊதியம் வழங்கவில்லை. முன் தொகையாக ரூ.50 ஆயிரம் மட்டுமே வழங்கி உள்ளனர்.

    எனவே எனக்கு ஊதியம் மற்றும் இழப்பீட்டு தொகையுடன் ரூ.4.48 லட்சம் தர வேண்டி உள்ளது. அதனை வழங்க கப்பல் நிறுவத்திற்கு உத்தரவிட வேண்டும். நிலுவையில் உள்ள சம்பளம் குறித்து பலமுறை கப்பல் நிறுவனத்திற்கு தகவல் அனுப்பியும் இதுவரை முறையான பதில் அளிக்கவில்லை. எனவே அதனை சிறை பிடிக்க வேண்டும் என கேட்டிருந்தார்.

    இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் முத்துசாமி ஆஜராகி தற்போது எம்.வி. ரகிமா கப்பல் மாலத்தீவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதுவரை மனுதாரருக்கு வழங்க வேண்டிய ஊதிய தொகையை சென்னை தனியார் கப்பல் நிறுவனம் வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. எனவே அதனை சிறைபிடித்து மனுதாரருக்கு உரிய இழப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாதிட்டார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்துஸ், தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள எம்.வி. ரகிமா கப்பலை சிறைபிடிக்க உத்தரவிட்டார்.

    மேலும் இந்த வழக்கின் விசாரணையை வருகிற 13-ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

    • அமெரிக்காவின் உத்தரவுப்படி ஈரான் சரக்கு கப்பலில் இருந்து எண்ணெயை திருடியது.
    • ஈரானிய எண்ணெய் பின்னர் அமெரிக்க துறைமுகங்களுக்கு மாற்றப்பட்டு அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டது.

    ஈரான்-அமெரிக்கா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்நிலையில் ஓமன் நாட்டின் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த அமெரிக்காவுக்கு சொந்தமான 'செயின்ட் நிக்கோலஸ்' என்ற கப்பலை ஈரான் கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

    இதுகுறித்து ஈரான் ராணுவம் கூறும் போது, சூயஸ் ராஜன் என்று பெயரிடப்பட்ட சரக்கு கப்பல் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் உத்தரவின்படி ஈரான் சரக்கு கப்பலில் இருந்து எண்ணெயை திருடியது.


    ஈரானிய எண்ணெய் பின்னர் அமெரிக்க துறைமுகங்களுக்கு மாற்றப்பட்டு அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதற்கு பதிலடியாக ஓமன் கடலில் எண்ணெய் ஏற்றிச் சென்ற அமெரிக்காவின் 'செயின்ட் நிக்கோலஸ்' கப்பலை ஈரான் கடற்படை கைப்பற்றியுள்ளது. கோர்ட்டு உத்தரவின்படி அமெரிக்க கப்பல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடத்தப்பட்ட கப்பல் சோமாலியா கடற்கரையை நோக்கி செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • கடத்தப்பட்ட கப்பலில் ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    டாக்கா:

    சோமாலிய கடற்கொள்ளையர்கள் அடிக்கடி வணிக கப்பல்களை கடத்தி செல்கிறார்கள். அரபிக் கடலில் செல்லும் கப்பல்களை கடத்திச் சென்று பிணைத் தொகை கேட்டு மிரட்டுகிறார்கள்.

    கடற்கொள்ளையர்களின் அட்டூழியங்களை ஒடுக்க இந்திய கடற்படை ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்திலும் சோமாலிய கடற்கொள்ளையர் கடத்திய கப்பலை இந்திய கடற்படை மீட்டது.

    இந்த நிலையில் இந்திய பெருங்கடல் அருகே வங்காளதேச நாட்டின் சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தி உள்ளனர்.


    அந்த கப்பலை மறித்து ஆயுதங்களுடன் 22 பேர் ஏறியுள்ளனர். கப்பலில் இருந்த ஊழியர்களை மிரட்டி சிறை பிடித்துள்ளனர். தற்போது கடத்தப்பட்ட கப்பல் சோமாலியா கடற்கரையை நோக்கி செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து இங்கிலாந்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கை அமைப்பு கூறும்போது, கடத்தப்பட்ட கப்பலில் ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கப்பலில் ஆயுதங்களுடன் 22 பேர் உள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

    கப்பலில் எத்தனை ஊழியர்கள் உள்ளனர். அவர்கள் எந்தெந்த நாடுகளை சேர்ந்தவர்கள் போன்ற தகவல்கள் வெளியாகவில்லை.

    • கப்பலில் பணியாற்றிய இந்திய குழுவினர் உடனடியாக தகவல் தெரிவித்து உதவியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டு உள்ளது
    • கப்பலில் பணியாற்றிய இந்திய குழுவினருக்கு எங்களது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம்.

    அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் படாப்ஸ்கோ நதியின் குறுக்கே உள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் மீது நேற்று அதிகாலை சரக்கு கப்பல் ஒன்று பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் பாலம் உடைந்து தண்ணீரில் விழுந்தது. விபத்து நடந்த சமயத்தில் பாலத்தின் மீது சென்ற வாகனங்கள், பாலம் சீரமைப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் உள்ளிட்டோர் நீரில் மூழ்கினர்.

    இந்தவிபத்தில் 6 பேர் நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.நீரில் மூழ்கிய 6 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.




    மேலும், பாலத்தின் மீது மோதிய கப்பல் சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு சொந்தமானது. சரக்கு கப்பலில் 22 இந்திய மாலுமிகள் பணியாற்றினர். சரக்கு கப்பல் பாலத்தின் மீது மோத உள்ளது குறித்து கப்பல் மாலுமிகள் முன்னதாக தகவல் தெரிவித்ததால் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டது.மேலும் பெரிய அளவிலான உயிர் சேதம் தவிர்க்கப்பட்டு உள்ளது.

    அந்த கப்பலில் 4 ஆயிரத்து 679 கண்டெய்னர்கள் இருந்து உள்ளது. இலங்கையை நோக்கி அந்த கப்பல் சென்று கொண்டு இருந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது.

    இந்த விபத்திற்கு இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்து உள்ளது. இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாக இந்திய தூதரகம் உதவி எண்களை அறிவித்து உள்ளது.



    இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது :-

    கப்பல் கட்டுப்பாட்டை இழந்தது குறித்து போக்குவரத்து ஊழியர்களுக்கு கப்பல் பணியாளர்கள் முன்னரே எச்சரித்தனர். இதன் மூலம் பால்டிமோர் பாலத்தில் போக்குவரத்து மூடப்பட்டு பெரும் உயிர்ச்சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டு உள்ளது.

    போக்குவரத்து அதிகாரிகளுக்கு கப்பலில் பணியாற்றிய இந்தியகுழுவினர் உடனடியாக தகவல் தெரிவித்து உதவியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டு உள்ளது. பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு உள்ளது. எனவே கப்பலில் பணியாற்றிய இந்திய குழுவினருக்கு எங்களது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம்.

    இவ்வாறு ஜோபைடன் கூறி உள்ளார்.

    • இஸ்ரேல் தொடர்பான கப்பலை ஈரான் சிறைப்பிடித்து வைத்துள்ளது.
    • சிறைப்பிடித்துள்ள சரக்கு கப்பலில் 17 இந்தியர்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஹிஸ்புல்லா உள்ளிட்ட அமைப்புகளுக்கு ஈரான் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்த அமைப்புகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதனால் சிரியா, லெபனான் உள்ளிட்ட நாடுகளில செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற அமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன் சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஈரான் படையின் இரண்டு முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை இஸ்ரேல்தான் நடத்தியது என ஈரான் குற்றம் சாட்டியது. மேலும், தக்க பதிலடி கொடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

    இதனால் மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பக்ரைன் நடுவே உள்ள கடற்பகுதியின் ஓர்முஸ் ஜலசந்தியில் இஸ்ரேல் தொடர்புடைய கப்பல் சென்று கொண்டிருந்தது. இந்த கப்பலை ஈரான் ராணுவம் சிறைப்பிடித்துள்ளது. இதனால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் கப்பலில் உள்ள 17 இந்தியர்களை பத்திரமாக மீட்பது குறித்து ஈரானுடன் பேசி வருவதாக இந்தியா தெரிவித்துள்ளார்.

    எம்எஸ்சி ஏரிஸ் என்ற சரக்கு கப்பல் ஈரான் கட்டுப்பாட்டில் இருப்பதை நாங்கள் அறிவோம். அதில் 17 இந்தியர்கள் இருப்பதாக எங்களுக்கு தெரியவந்துள்ளது. இந்தியர்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் விரைவாக விடுதலை ஆகியவற்றை உறுதி செய்வதற்காக தெஹ்ரான் மற்றும் டெல்லியில் உள்ள தூதரக வழிகளில் ஈரானிய அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம் என இந்திய அரசு தெரிவித்துள்ளது.

    இஸ்ரேல்- ஈரான் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியர்கள் ஈரான் மற்றும் இஸ்ரேல் பயணத்தை தவிர்க்குமாறு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×