என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரக்கு கப்பல்"

    • கரை ஒதுங்கியுள்ள கண்டெய்னர்கள் அனைத்தும் காலியாக இருக்கின்றன.
    • கடலில் மிதக்கும் பொட்களை யாரும் தொடக்கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருப்பதால் மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று அரபிக்கடலில் பயங்கரமாக காற்று அடித்தபடி இருந்தது.

    அப்போது கேரள மாநிலம் விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து சென்ற லைபீரியா நாட்டு சரக்கு கப்பல் கொச்சி அருகே நடுக்கடலில் கவிழ்ந்தது. 630 கண்டெய்னர்களுடன் அந்த கப்பல் கடலில் கவிழ்ந்தது. இதுகுறித்து தகவலறிந்த கடற்படையினர் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து அந்த கப்பலில் இருந்த கேப்டன், 20 ஊழியர்கள் என 24 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

    இந்தநிலையில் கடலில் கவிழ்ந்த கப்பல் கடலுக்குள் முழுவதுமாக மூழ்கியது. அதில் இருந்த 630 கண்டெய்னர்களும் கடலுக்குள் விழுந்தன. அவற்றில் 73 கண்டெய்னர்கள் பொருட்கள் எதுவும் இல்லாமல் வெற்றாகவும், 13 கண்டெய்னர்களில் தீங்கு விளைவிக்கும் ரசாயன பொருட்களும், 12 கண்டெய்னர்களில் கால்சியம் கார்பைடும் இருந்திருக்கிறது.

    மேலும் அந்த கப்பலில் 84.44 மெட்ரிக் டன் டீசல், 367.1 மெட்ரிக் டன் உலை எண்ணையும் இருந்திருக்கிறது. அவை அனைத்துடன் கப்பல் முழுமையான மூழ்கியதால் அவை கடலில் கசிந்து ஆபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டது. கடலில் சுமார் 3.7 கிலோமீட்டர் அகலம் மற்றும் நீள பரப்பில் எண்ணெய் பரவியது.

    கடலில் பரவியிருக்கும் எண்ணெய் படலத்தை நீக்கும் பணி அகச்சிவப்பு கேமராக்களின் உதவியுடன் கண்டு பிடிக்கப்பட்டு அகற்றும் பணி கடலோர காவல் படையினரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடல் பகுதியில் தொடர்ந்து பலத்த காற்று அடித்து வருவதால் இந்த பணிகள் மிகவும் சிரமத்துடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்தநிலையில் கடலுக்குள் விழுந்த கண்டெய்னர்கள் கடற்கரைகளில் கரை ஒதுங்கி வருகின்றன. கொல்லம் மற்றும் ஆலப்புழா கடற்கரை பகுதிகளில் கரை ஒதுங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் கொல்லம் மற்றும் ஆலப்புழாவில் 4 இடங்களில் கண்டெய்னர்கள் குவிந்து கிடக்கின்றன.

    கரை ஒதுங்கியுள்ள கண்டெய்னர்கள் அனைத்தும் காலியாக இருக்கின்றன. தொடர்ந்து கண்டெய்னர்கள் கரை ஒதுங்கியபடி இருப்பதால் கொச்சி மற்றும் ஆலப்புழா கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதிகளில் வசித்துவரும் கடலோர கிராம மக்கள் வெளியேறவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

    கால்சியம் கார்பைட் தண்ணீருடன் வினைபுரிந்து அசிட்டிலின் வாயுவை உருவாக்கும். அது எரியும் தன்மை கொண்டது என்பதால் கடற்கரைகளில் ஒதுங்கி கிடக்கும் கண்டெய்னர்களின் அருகாமையில் யாரும் செல்லக்கூடாது எனவும், கடலில் மிதக்கும் பொட்களை யாரும் தொடக்கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.

    கப்பலில் இருந்து கடலுக்குள் விழுந்த கண்டெய்னர்கள் எங்கெல்லாம் ஒதுங்குகின்றன? அவற்றில் இருக்கும் ஆபத்தான பொருட்கள் எதுவும் கடலில் மிதக்கிறதா? என்று சுங்கத்துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.

    அவர்கள் கடலோர பகுதிகளில் தொடர்ந்து உஷார் நிலையில் இருந்து கண்காணித்து வருகிறார்கள். மேலும் கப்பல் மூழ்கிய பகுதியில் இருந்து 20 கடல்மைல் தொலைவு, அதாவது 37 கிலோமீட்டர் தூரத்துக்கு மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கப்பலில் இருந்த ரசாயனம் கடலில் கொட்டியதால் அப்பகுதி ஆபத்தான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கரை ஒதுங்கிய பொருட்களை தொட வேண்டாம் என பொதுமக்களுக்கு கடற்படை அறிவுறுத்தியுள்ளது.

    கொச்சிக்கு பெட்ரோலிய பொருட்களை ஏற்றி வந்த சரக்கு கப்பல் கடலில் சாய்ந்து விபத்துக்குள்ளானது. விழிஞ்சத்திலிருந்து கொச்சி துறைமுகத்திற்கு MSC ELSA3- கப்பலில் பொருட்கள் ஏற்றி கொண்டு செல்லப்பட்டது.

    கப்பல் கொச்சியிலிருந்து தென்மேற்கு சுமார் 38 மைல் தொலைவில் இருந்ததுபோது கடலில் சாய்ந்தது. அப்போது கப்பலில் இருந்த ரசாயனம் கடலில் விழுந்தது. இதனை தொடர்ந்து கப்பல் நிர்வாகம் உதவி கோரி இந்திய அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.

    அதனை தொடர்ந்து, மீட்பு பணியில் 2 கப்பல்களும் ராணுவ ஹெலிகாப்டரும் ஈடுபட்டது. இந்த மீட்பு பணியில் கப்பலில் இருந்த 24 பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

    கப்பலில் இருந்த ரசாயனம் கடலில் கொட்டியதால் அப்பகுதி ஆபத்தான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கரை ஒதுங்கிய பொருட்களை தொட வேண்டாம் என பொதுமக்களுக்கு கடற்படை அறிவுறுத்தியுள்ளது.   



    • மே 2-வது வாரத்தில் 2-வது பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.
    • வருகிற ஜூலை 15-ந் தேதி சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க வாய்ப்புகள் உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதனை தனியார் கப்பல் போக்குவரத்து நிறுவனமான சுபம் கப்பல் நிறுவனம் இயக்கி வருகிறது.

    இந்த நிலையில், சுற்றுலாப்பயணிகளை கவரும் நோக்கில் பயண கட்டணத்தை குறைத்து அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பயணிகள் கப்பல் நிறுவன தலைவர் சுந்தர்ராஜன் நாகையில் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16-ந் தேதி முதல் நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு கப்பல் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் கப்பல் பயணிகளுக்கு உதவிடும் வகையில் தற்போதைய கட்டணமான ரூ.8,500-ல் இருந்து ரூ. 8000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் தங்களது உடைமைகளாக 10 கிலோ மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், அதனை 7 கிலோ ஹேண்ட் பேக் எடையாகவும், 15 கிலோ செக் இன் எடையாகவும் எடுத்துச் செல்ல அனுமதி வழங்க உள்ளோம்.

    இது தவிர ரூ.15,000-க்கு 2 இரவுகள் பயணம் உட்பட மூன்று நாள் கொண்ட சுற்றுலா பேக்கேஜ் திட்டம், ரூ.30,000-க்கு 5 இரவுகள் 6 நாள் கொண்ட சுற்றுலா பேக்கேஜ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பேக்கேஜ் மூலம் ராமர் பாலத்தை நேரடியாக பார்வையிடவும், அதில் நடந்து செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பேக்கேஜ் திட்டத்தில் இருவழி பயண கட்டணம், தங்கும் வசதி, போக்குவரத்து வசதியும் செய்து கொடுக்கப்படும்.

    அதேபோல் நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது அதற்கான ஒப்புதல் பெறும் பணி நடைபெற்று வருகிறது. வருகிற ஜூலை 15-ந் தேதி வாக்கில் இந்த சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க வாய்ப்புகள் உள்ளது.

    அதுபோல் மே 2-வது வாரத்தில் 2-வது பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. இதில் 250 இருக்கைகளில், 220 எக்கனாமிக் இருக்கைகளும், 20 பிசினஸ் இருக்கைகளும், 10 சூட் ரூம்கள் வசதியும் இருக்கும். வடகிழக்கு பருவமழை காலகட்டங்களில் கப்பல் போக்குவரத்தை நிறுத்தி வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம். ஆனால் இந்த 2-வது கப்பல் போக்குவரத்தானது புயல் சின்னம் உருவாகும் காலத்தை தவிர்த்து, ஆண்டு முழுவதும் மற்ற அனைத்து நாட்களிலும் இயங்கும் வகையுடன் கூடிய தரத்தில் உருவாக்கி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுச்சேரி துறைமுகத்தில் இருந்து கன்டெய்னர்களை ஏற்றுவதற்காக சென்னையில் இருந்து ஒரு கப்பல் புதுச்சேரி வந்தது.
    • திடீரென நீர்மட்டம் குறைந்ததால் எதிர்பாராத விதமாக கப்பல் தரை தட்டி நின்றது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி துறைமுகத்தில் இருந்து கன்டெய்னர்களை ஏற்றுவதற்காக நேற்று சென்னையில் இருந்து ஒரு கப்பல் புதுச்சேரி வந்தது. துறைமுக முகத்துவார பகுதியில் இருந்து துறைமுகத்தின் உள்ளே இழுவை படகுகள் மூலமாக சரக்கு கப்பல் இழுத்துச்செல்லப்பட்டது. அப்போது திடீரென நீர்மட்டம் குறைந்ததால் எதிர்பாராத விதமாக கப்பல் தரை தட்டி நின்றது.

    எனவே கப்பலை துறைமுகத்திற்கு இழுத்துச்செல்லும் பணி நிறுத்தப்பட்டது. நீர்மட்டம் உயர்ந்த பின்னர் கப்பலை துறைமுகத்திற்குள் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

    • ஒரு பொய் வழக்கு காரணமாக மாலத்தீவு சிவில் நீதிமன்றத்தால் கப்பல் கைப்பற்றப்பட்டு உள்ளது.
    • பணியாளர்களுக்கு உணவு, டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது என்று கூறுவது தவறானது.

    சென்னை:

    கன்னியாகுமரியை சேர்ந்த விக்டர் அனிஷ், கேரளாவை சேர்ந்த நந்தகுமார் ஆகியோர் புரவலன் 1 என்ற சரக்கு கப்பலில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வேலைக்கு சேர்ந்து உள்ளனர்.

    அந்த சரக்கு கப்பல் மாலத்தீவு துறைமுகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி துறைமுகத்துக்கு வருவதாக திட்டமிடப்பட்டு இருந்தது.

    மாலத்தீவு துறைமுகத்துக்கு வெளியே சுமார் 3 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இந்த சரக்கு கப்பல் கடந்த 13 மாதங்களாக அங்கேயே நிறுத்தப்பட்டு உள்ளது. அவர்கள் இருவரும் அந்த கப்பலிலேயே சிக்கி தவித்து வருகின்றனர். கப்பலை விட்டு வெளியேற அனுமதிக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் புறக்கணிக்கப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

    இதுகுறித்து கேரளாவை சேர்ந்த நந்தகுமார் கூறியதாவது:-

    நான் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த கப்பலில் பணிக்கு சேர்ந்தபோது கப்பல் தூத்துக்குடிக்கு செல்ல திட்டமிடப்பட்டது. மேலும் மாலுமிகள் பணியில் சேருவார்கள். பின்னர் கப்பல் இந்தியாவுக்கு செல்லும் என்று கூறினார்கள்.

    ஆனால் 2 மாதங்கள் ஆகியும் யாரும் பணிக்கு வரவில்லை. எனவே என்னை விடுவிக்குமாறு நிர்வாகத்திடம் கூறினேன். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். பின்னர் இலங்கையை சேர்ந்த 4 பணியாளர்கள் வேலைக்கு சேர்ந்தனர்.

    இப்போது மொத்தம் 7 பணியாளர்கள் உள்ளோம். ஆனால் கப்பல் புறப்படுவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. அத்தியாவசிய பொருட்களை கொண்டு வரும் படகுகளை நம்பியே வாழ்கிறோம். சரக்கு கப்பல் நிர்வாகம், கப்பல் போக்குவரத்து அமைச்சகம், சர்வதேச போக்குவரத்து தொழிலாளர் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு மின்னஞ்சல் மூலம் புகார்கள் அனுப்பப்பட்டு உள்ளன.

    ஒவ்வொரு புகாருக்கு பிறகும் நிர்வாகம் விளக்கம் அளிக்கும். அதன் பிறகு அமைதியாக இருந்துவிடும். கடந்த 13 மாதங்களாக சம்பளமும், சரியான உணவும் தராமல் அலைக்கழிக்கிறார்கள். தற்போது டீசல் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கன்னியாகுமரியை சேர்ந்த விக்டர் அனிஷ் கூறும்போது, "எனது அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் கப்பலில் இருந்து விடுவிக்கும்படி கேட்டுக் கொண்டேன். அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. ஆனால் என்னை வீட்டுக்கு செல்ல அனுமதிக்கவில்லை" என்றார்.

    சமீபத்தில் நந்தகுமார் அளித்த புகாரை தொடர்ந்து கப்பல் போக்குவரத்து அமைச்சகம், கப்பல் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னையில் உள்ள கப்பல் மாஸ்டரிடம் கேட்டது. இதையடுத்து கப்பல் மாஸ்டரின் வேண்டு கோளை ஏற்று கப்பல் நிறுவனம் பணியாளர்கள் கையெழுத்திட்ட பிறகு 60 நாட்களுக்கு ஆயிரம் டாலர் தருவதாகவும் சென்னை அலுவலகத்தில் அந்த பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் உறுதி அளித்துள்ளது.

    மேலும் இதுகுறித்து கப்பல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அப்துல் அஜீஸ் கூறும்போது, "ஒரு பொய் வழக்கு காரணமாக மாலத்தீவு சிவில் நீதிமன்றத்தால் கப்பல் கைப்பற்றப்பட்டு உள்ளது. பணியாளர்களுக்கு உணவு, டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது என்று கூறுவது தவறானது. அவர்களுக்கு தேவையானதை வழங்கி வருகிறோம்.

    கப்பலை விடுவிக்குமாறு இந்திய அரசிடம் முறையிட்டு உள்ளோம். ஆனால் அது மாலத்தீவில் சட்ட வழக்குகளில் சிக்கி உள்ளது. கப்பல் குழுவினர் விரைவில் கப்பலை விட்டு வெளியேற உள்ளனர். அவர்களுக்கு வரும் நாட்களில் சம்பளம் தருவதாக உறுதி அளித்துள்ளோம்" என்றார்.

    • இம்மாத துவக்கத்தில் குஜராத் மாநிலத்தின் முந்த்ரா துறைமுகத்தில் நங்கூரமிட்டது.
    • முதலமைச்சர் பினராயி விஜயன் இந்த துறைமுகத்திற்கு பெயர்சூட்டினார்.

    கிரேன்களை சுமந்து வந்த சீன சரக்கு கப்பல் கேரளா மாநிலத்தின் விழிஞம் துறைமுகத்தில் நங்கூரமிட்டது. சீனாவை சேர்ந்த ஜென் ஹூவா சரக்கு கப்பல் கடந்த ஆகஸ்ட் மாதம் கிளம்பிய நிலையில், இம்மாத துவக்கத்தில் குஜராத் மாநிலத்தின் முந்த்ரா துறைமுகத்தில் நங்கூரமிட்டது.

    நேற்று கேரளா வந்தடைந்த, சரக்கு கப்பலுக்கு விழஞம் துறைமுகத்தில் வைத்து பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் மத்திய மந்திரி சர்பனந்தா சொனோவல் கப்பலை வரவேற்க துறைமுகம் வந்திருந்தனர்.

    கடந்த மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் பினராயி விஜயன் இந்த துறைமுகத்திற்கு பெயர்சூட்டினார். பிறகு, இந்த துறைமுகத்திற்கான லச்சினையும் அறிமுகம் செய்யப்பட்டது. கேரளா அரசின் கனவு திட்டமாக பார்க்கப்படும் இது, சர்வதேச கடல்சார் போக்குவரத்திற்கு வாயில்கதவுகளை திறக்கும் வகையில் இருக்கும் என்று தெரிகிறது.

    • 6 ஆயிரம் டன் உப்புடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது.
    • கப்பலில் 4 இந்தியர்கள் உள்பட 14 பேர் இருந்தனர்.

    கிரீஸ் நாட்டில் அலெக்சாண்ட்ரியா துறைமுகத்தில் இருந்து இஸ்தான்புல்லுக்கு 6 ஆயிரம் டன் உப்புகளை ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது.

    லெஸ்போஸ் தீவு அருகே கப்பல் சென்று கொண்டிருந்த போது அதன் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. கடும் புயலில் சிக்கி அந்த கப்பல் கடலில் கவிழ்ந்தாக தெரியவந்துள்ளது.

    விபத்து நடந்த கப்பலில் 8 எகிப்தியர்கள், 4 இந்தியர்கள், 2 சீரியாவைச் சேர்ந்தவர் என 14 பேர் இருந்தனர். இதில் எகிப்து நாட்டை சேர்ந்த ஒருவர் மட்டும் உயிர் தப்பினார். ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. உயிரிழந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

    மாயமான 12 பேரையும் தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது. இந்த பணியில் கிரீஸ் நாட்டு கடலோர காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ஹெலிகாப்டர்கள் மற்றும் கப்பல்களும் தேடிவருகின்றன. கப்பல் கவிழ்ந்ததில் அதில் இருந்த 6 ஆயிரம் டன் உப்பு கடலில் கரைந்தது.

    • சரக்கு கப்பல் எம்.வி. புரவலானி தற்போது எம்.வி. ரகிமா என்ற பெயரில் இயங்கி வருகிறது.
    • வழக்கின் விசாரணையை வருகிற 13-ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

    தூத்துக்குடி:

    கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த நந்தக்குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

    அதில், சென்னையை சேர்ந்த புரவலான் கப்பல் போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு கப்பல் எம்.வி. புரவலானி தற்போது எம்.வி. ரகிமா என்ற பெயரில் இயங்கி வருகிறது.

    இந்த கப்பலில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆயில் சரி பார்ப்பவராக ஒப்பந்த அடிப்படையில் நான் பணியில் சேர்ந்தேன். 9 மாதங்களுக்கு தலா மாதம் ரூ.30 ஆயிரத்து 842 சம்பளம் என ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    ஆனால் பணியில் சேர்ந்தது முதல் கடந்த 13 மாதங்களாக எனக்கு ஊதியம் வழங்கவில்லை. முன் தொகையாக ரூ.50 ஆயிரம் மட்டுமே வழங்கி உள்ளனர்.

    எனவே எனக்கு ஊதியம் மற்றும் இழப்பீட்டு தொகையுடன் ரூ.4.48 லட்சம் தர வேண்டி உள்ளது. அதனை வழங்க கப்பல் நிறுவத்திற்கு உத்தரவிட வேண்டும். நிலுவையில் உள்ள சம்பளம் குறித்து பலமுறை கப்பல் நிறுவனத்திற்கு தகவல் அனுப்பியும் இதுவரை முறையான பதில் அளிக்கவில்லை. எனவே அதனை சிறை பிடிக்க வேண்டும் என கேட்டிருந்தார்.

    இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் முத்துசாமி ஆஜராகி தற்போது எம்.வி. ரகிமா கப்பல் மாலத்தீவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதுவரை மனுதாரருக்கு வழங்க வேண்டிய ஊதிய தொகையை சென்னை தனியார் கப்பல் நிறுவனம் வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. எனவே அதனை சிறைபிடித்து மனுதாரருக்கு உரிய இழப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாதிட்டார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்துஸ், தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள எம்.வி. ரகிமா கப்பலை சிறைபிடிக்க உத்தரவிட்டார்.

    மேலும் இந்த வழக்கின் விசாரணையை வருகிற 13-ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

    • செங்கடல் பகுதியில் இஸ்ரேல் நோக்கி செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம்- ஹவுதி
    • ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை, கப்பல் மீது தாக்கியதில் தீப்பிடித்தது

    இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பு இடையேயான போரில் ஏமனில் செயல்படும் ஹவுதி அமைப்பினர் ஹமாசுக்கு ஆதரவாக உள்ளனர். இதற்கிடையே செங்கடல் பகுதியில் இஸ்ரேல் நோக்கி செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஹவுதி அமைப்பினர் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் செங்கடலில் பாப் அல்-மண்டப் ஜலசந்திக்கு வடக்கே சுமார் 60 கடல் மைல் தொலைவில் வணிக கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை, கப்பல் மீது தாக்கியதில் தீப்பிடித்தது என்றும் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த தாக்குதலையடுத்து செங்கடல் பகுதியில் இருந்து அமெரிக்க போர் கப்பலான யு.எஸ்.எஸ். மேசன் அங்கு சென்று உதவியதாக தெரிவித்தனர். ஏற்கனவே பிரான்ஸ் நாட்டு கப்பல் மீது டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த ஹவுதி அமைப்பினர் முயற்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா வந்த சரக்கு கப்பல் மீது அரபிக்கடலில் வைத்து டிரோன் தாக்குதல்.
    • இதனால் பாதுகாப்பு பணியில் 3 போர்க்கப்பல்களை இந்தியா அப்பகுதியில் நிறுத்தியுள்ளது.

    அரபிக் கடலில் லைபீரிய நாட்டு எண்ணெய் கப்பல் எம்.வி. கெம்புளூட்டோ மீது கடந்த 23-ந்தேதி டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் கடந்த 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தது.

    இதேபோன்று செங்கடலில் பயணித்த கபோன் நாட்டுக்குச் சொந்தமான எம்.வி. கெம் புளூட்டோ சரக்கு கப்பல் மீது 23-ந்தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் அரபிக்கடலின் மேற்கு பகுதியில் இந்திய எல்லையில் வைத்து தாக்கப்பட்டுள்ளது.

    இஸ்ரேல் போரில் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். மோர்முகாவோ, ஐ.என்.எஸ். கொச்சி, ஐ.என்.எஸ். கொல்கத்தா ஆகிய 3 போர்க்கப்பல்கள் அரபிக் கடலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

    தொலைதூர கண்காணிப்புக்கு அதிநவீன பி-81 என்ற ரோந்து விமானத்தையும் இந்திய விமானப்படை ஈடுபடுத்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனிடையே கடந்த 23-ந்தேதி தாக்குதலுக்கு உள்ளான எம்.வி. கெம் புளூட்டோ சரக்கு கப்பல் நேற்று மும்பை துறைமுகம் வந்தடைந்தது. இந்திய கடற்படையின் வெடிகுண்டு நிபுணர் குழு அந்தக் கப்பலை ஆய்வு செய்தது.

    • செங்கடலில் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.
    • இந்தியா வரும் கப்பல்களுக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு கண்காணிப்பு அதிகரிப்பு.

    இஸ்ரேலுக்குள் கடந்த அக்டோபர் 7-ந்தேதி புகுந்த ஹமாஸ் அமைப்பினர் சுமார் 1,200 பேரை படுகொலை செய்தனர். அதற்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசாவுக்குள் புகுந்து கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இருதரப்பிலும் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்துள்ளது.

    இந்த போரில் மேற்கத்திய நாடுகளும், இஸ்லாமிய நாடுகளும் வெவ்வேறு சார்பு நிலைகளை எடுத்துள்ளதால் போர் விரிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்த பின்னணியில் ஈரான் அரசின் ஆதரவுடன் ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் செங்கடலில் பயணிக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்தனர்.

    கடந்த நவம்பர் 19-ந்தேதிக்கு பிறகு 20-க்கும் மேற்பட்ட சரக்குக் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். செங்கடல் வழியாக செல்லும் சரக்குக் கப்பல்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்கத் தொடங்கி இருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    கிளர்ச்சியாளர்கள் செங்கடல் வழியாக செல்லும் கப்பல்கள் மீது ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தொடர்ந்து தாக்குகிறார்கள். இதுவரை 60-க்கும் மேற்பட்ட டிரோன்களை அமெரிக்க கடற்படை கப்பல்கள் வழிமறித்து அழித்துள்ளன.

    கிளர்ச்சியாளர்கள் மிரட்டல் நீடிப்பதால் இந்தியாவுக்கு செங்கடல் வழியாக வரும் பெட்ரோலிய பொருட்கள் வருகையில் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதனால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து இந்திய கடற்படை போர் கப்பல்கள் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல், செங்கடல் பகுதிகளுக்கு அதிகமாக செல்ல தொடங்கி உள்ளன. 10 முக்கிய போர் கப்பல்கள் அந்த கடல் பகுதிகளில் ரோந்து சுற்றி வருகின்றன.

    இந்த போர் கப்பல்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க இந்திய கடற்படை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கிளர்ச்சியாளர்களை ஒடுக்கி இந்திய கப்பல்கள் சிரமமின்றி வர ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    • அமெரிக்காவின் உத்தரவுப்படி ஈரான் சரக்கு கப்பலில் இருந்து எண்ணெயை திருடியது.
    • ஈரானிய எண்ணெய் பின்னர் அமெரிக்க துறைமுகங்களுக்கு மாற்றப்பட்டு அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டது.

    ஈரான்-அமெரிக்கா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்நிலையில் ஓமன் நாட்டின் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த அமெரிக்காவுக்கு சொந்தமான 'செயின்ட் நிக்கோலஸ்' என்ற கப்பலை ஈரான் கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

    இதுகுறித்து ஈரான் ராணுவம் கூறும் போது, சூயஸ் ராஜன் என்று பெயரிடப்பட்ட சரக்கு கப்பல் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் உத்தரவின்படி ஈரான் சரக்கு கப்பலில் இருந்து எண்ணெயை திருடியது.


    ஈரானிய எண்ணெய் பின்னர் அமெரிக்க துறைமுகங்களுக்கு மாற்றப்பட்டு அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதற்கு பதிலடியாக ஓமன் கடலில் எண்ணெய் ஏற்றிச் சென்ற அமெரிக்காவின் 'செயின்ட் நிக்கோலஸ்' கப்பலை ஈரான் கடற்படை கைப்பற்றியுள்ளது. கோர்ட்டு உத்தரவின்படி அமெரிக்க கப்பல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

    ×