என் மலர்tooltip icon

    உலகம்

    • ஸ்ரீதர் வேம்புவின் விவாகரத்து வழக்கு கலிபோர்னியா நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
    • கலிபோர்னியாவில் சட்டப்படி மனைவியின் ஒப்புதல் இல்லாமல் கணவர், சொத்துகளை விற்க முடியாது.

    உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஜோஹோ (ZOHO) நிறுவனத்தின் சி.இ.ஓ ஸ்ரீதர் வேம்பு. இவருக்கு பிரமிளா என்பவருடன் திருமணமாகி ஒரு மகன் உள்ளார். அவர் கலிபோர்னியாவில் வசித்து வந்தபோது மனைவி பிரமிளாவை பிரிவதாக ஸ்ரீதர் வேம்பு அறிவித்தார்.

    இவர்களது விவாகரத்து வழக்கு கலிபோர்னியா நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதனிடையே, ஜோஹோ நிறுவன சி.இ.ஒ ஸ்ரீதர் வேம்பு, ஆட்டிசம் குறைபாடு உடைய மகனையும், தன்னையும் 2020ம் ஆண்டு நிர்கதியாக விட்டுச் சென்றுவிட்டதாக அவரது மனைவி பிரமிளா குற்றச்சாட்டினார்.

    மேலும், கலிபோர்னியாவில் தன்னுடன் வாழ்ந்த காலத்திலேயே ஜோஹோ நிறுவனத்தில் அவர் பெயரில் இருந்த பங்குகள் மற்றும் அறிவுசார் சொத்துகளை தனக்கு தெரியாமலேயே அவரது சகோதரி, சகோதரியின் கணவர் பெயருக்கு மாற்றிவிட்டதாகவும், விவாகரத்துக்கு பிறகு தனக்கு சொத்தில் சரிபாதியை ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்ற நிலையை தவிர்க்வே ஸ்ரீதர் வேம்பு இவ்வாறு செய்ததாகவும் இந்தியா திரும்பிய பிறகு ஸ்ரீதர் வேம்பு ஒரு முறை கூட என்னையும், மகனையும் பார்க்க வரவில்லை என்றும் பிரமிளா குற்றம்சாட்டியுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கலிபோர்னியாவில் சட்டப்படி மனைவியின் ஒப்புதல் இல்லாமல் கணவர், சொத்துகளை விற்க முடியாது. ஆனால், வேம்பு அவரது உறவினர்கள் பெயர்களில் சொத்துகளை மாற்றி, மனைவி பிரமிளாவையும் அவரது மகனையும் நிர்கதியாக விட்டுச் சென்றுவிட்டதாக பிரமிளா சார்பில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதாடினர்.

    இந்நிலையில், கலிபோர்னியா நீதிமன்றம் விவாகரத்து வழக்கில் ஸ்ரீதர் வேம்புவை தனது மனைவியின் உரிமைகளை பாதுகாக்க $1.7 பில்லியன் மதிப்பிலான (சுமார் ரூ.15,000 கோடி) பத்திரம் (bond) தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.

    கலிபோர்னியா சட்டப்படி, திருமணத்திற்கு பிறகு உருவான சொத்துகள் இருவரின் உரிமையாகப் பகிரப்பட வேண்டும் என்ற விதியின் படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

    • வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்குப் பிறகு அமைந்துள்ள இடைக்கால அரசு அமைந்தது
    • வங்கதேச இடைக்கால அரசு பாகிஸ்தானுடன் உறவை வலுப்படுத்தி வருகிறது.

    பாகிஸ்தானிடம் JF-17 Thunder ரக போர் விமானங்களை வாங்குவது குறித்து பேச்சுவார்த்தையை வங்கதேசம் தொடங்கியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

    போர் விமானங்கள் மட்டுமின்றி, Super Mushshak பயிற்சி விமானங்களை விரைவாக வழங்கவும், வங்கதேச விமானிகளுக்கு பயிற்சிகளை அளிக்கவும் பாகிஸ்தானிடம் வங்கதேசம் கேட்டுள்ளது.

    வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்குப் பிறகு அமைந்துள்ள இடைக்கால அரசு, பாகிஸ்தானுடன் உறவை வலுப்படுத்தி வருகிறது.

    குறிப்பாக வங்கதேசம் தலைநகர் டாக்காவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு வங்கதேச அரசு நேரடி விமான சேவையை வருகிற 29-ந்தேதியில் இருந்து தொடங்க இருக்கிறது. கடந்த 2012-ம் ஆண்டுக்கு பிறகு இரு நகரங்களுக்கு இடையே நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • பேந்தர் ஹப் என்பது உணவகத்துடன் கூடிய மனமகிழ் மன்றமாக உருவாக்கப்பட்டுள்ளது.
    • பிரமாண்ட திறப்பு விழாவில் ஷாருக்கானை காண ஏராளமான ரசிகர் கூட்டம் குவிந்தது.

    துபாய் தேராவில் ஜுவல் ஆப் கிரீக் வளாகத்தில் நிறுவப்பட்ட 'பேந்தர் ஹப் மற்றும் ஏ.டி.கே. ஸ்கொயர் உணவக திறப்பு விழா பிரமாண்டமாக நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஷாருக்கான் கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

    துபாயை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கண்ணன் ரவி குழுமத்தின் (கே.ஆர்.ஜி) சார்பில் தேரா பகுதியில் உள்ள ஜுவல் ஆப் கிரீக் வளாகத்தில் 'பேந்தர் ஹப் மற்றும் ஏ.டி.கே. ஸ்கொயர் உணவகம் நிறுவப்பட்டது. பேந்தர் ஹப் என்பது உணவகத்துடன் கூடிய மனமகிழ் மன்றமாக உருவாக்கப்பட்டுள்ளது.

    அதேபோல ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் உணவு வகைகளை வழங்கும் விதமாக ஏ.டி.கே. ஸ்கொயர் என்ற பெயரில் உணகவமும் நிறுவப்பட்டது.

     

    இந்த பேந்தர் ஹப் மற்றும் ஏ.டி.கே. ஸ்கொயர் உணவகத்தை திறந்து வைக்க பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வருகை புரிந்தார்.

    அவரை கே.ஆர் குழுமத்தின் தலைவர் கண்ணன் ரவி மற்றும் பராக் ரெஸ்டாரண்ட் மேலாண்மை இயக்குனர் தீபக் ரவி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

     பிறகு அந்த நிறுவனங்களை நடிகர் ஷாருக்கான் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பிரமாண்ட திறப்பு விழாவில் அவரை காண ஏராளமான ரசிகர் கூட்டம் குவிந்தது.

    தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் சுவீடன் நாட்டை சேர்ந்த பிரபல மேஜிக் நிபுணர் ஜோ லேபரோவின் நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

    அவருடன் கனடாவில் வசித்து வரும் இந்திய வம்சாவளி நடிகையும், நடனக்கலைஞருமான நோரா பத்தேஹி கலந்துகொண்டு ரசிகர்களை மகிழ்வித்தார்.

     

    தொடர்ந்து 2-வது நாளும் அந்த வளாகத்தில் திறப்பு விழா நிகழ்ச்சிகள் தொடர்ந்தது. இதில் குஷ்பு, ரோஜா, ஆர்.கே செல்வமணி, ஜெய், ஜெயப்பிரகாஷ், லைக்கா சுபாஸ்கரன், யுவன் சங்கர் ராஜா, மிர்ச்சி சிவா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி, அம்மா கிரியேஷன்ஸ் சிவா, சித்ரா லட்சுமணன், சுப்பு பஞ்சு, வைபவ், அஜய் ராஜ், ராஜீவ் கோவிந்தன், மாதம்பட்டி ரங்கராஜ், அரவிந்த் ஆகாஷ் மற்றும் வழக்கறிஞர் விஜயன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரபலங்கள் வருகை புரிந்திருந்தனர்.

    • கிரீன்லாந்து அதன் மக்களுக்கே சொந்தமானது.
    • ஐரோப்பிய ஒன்றியத்தின் முழு ஆதரவும் ஒற்றுமையும் உண்டு.

    டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசமான கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு சொந்தமானது என்று அதிபர் டிரம்ப் கூறி வருகிறார்.

    கிரீன்லாந்தை கைப்பற்ற ராணுவ நடவடிக்கை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் பரிசீலனையில் உள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்தது. இதற்கு டென்மார்க் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இந்தநிலையில் கிரீன்லாந்து விவகாரத்தில் டிரம்ப்புக்கு ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    கிரீன்லாந்து அதன் மக்களுக்கே சொந்தமானது. டென்மார்க் அல்லது கிரீன்லாந்தின் ஒப்புதல் இல்லாமல் எந்த முடிவும் எடுக்க முடியாது. அவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் முழு ஆதரவும் ஒற்றுமையும் உண்டு.

    சைப்ரஸ், லத்தீன் அமெரிக்கா, கிரீன்லாந்து, உக்ரைன் அல்லது காசா என எங்கு நடந்தாலும், சர்வதேச சட்ட மீறல்களை ஐரோப்பிய ஒன்றியத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 66 சர்வதேச அமைப்புகளிலிருந்து அமெரிக்கா விலகும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டு உள்ளார்.
    • இந்த நடவடிக்கை அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கு இனி சேவை செய்யாத அமைப்புகளை இலக்காகக் கொண்டுள்ளது என்று தெரிவித்தது.

    66 சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை கூறியதாவது:-

    அமெரிக்க நலன்களுக்கு எதிராக செயல்படுவதாக கருதப்படும் 35 ஐ.நா அல்லாத குழுக்கள் மற்றும் 31 ஐ.நா அமைப்புகளுக்கு நிதி வழங்குவதையும், அவற்றுடன் தொடர்பு கொள்வதையும் நிறுத்தும் படி அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் இந்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஐ.நா. பருவநிலை ஒப்பந்தம் உள்பட 66 சர்வதேச அமைப்புகளிலிருந்து அமெரிக்கா விலகும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டு உள்ளார். இந்த நடவடிக்கை அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கு இனி சேவை செய்யாத அமைப்புகளை இலக்காகக் கொண்டுள்ளது என்று தெரிவித்தது.

    ஐ.நா. பருவநிலை ஒப்பந்தம், இந்தியாவும் பிரான்சும் இணைந்து வழிநடத்தும் தூய்மையான எரிசக்தி முன்னெடுப்பான சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு, இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம், பருவ நிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையேயான குழு உள்பட 66 அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகி உள்ளது.

    • பால் பொருள்களில் பயன்படுத்தப்பட்ட ஒரு மூலப்பொருள் தேவையான தரநிலைகளை பூர்த்தி செய்யவில்லை.
    • கடந்த டிசம்பர் மாதம் முதல் பால் பொருளில் நச்சுப் பொருள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ளது.

    பிறந்த குழந்தைகளுக்கு வழங்கப்படும் பால் பொருட்களின் முதன்மையாக கருதப்படுவது நெஸ்லே நிறுவனத்தின் பொருட்கள் தான். இவை குழந்தைக்கான ஃபார்முலா பால் என்பது 12 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குத் தாய்ப்பாலுக்கு மாற்றாக வழங்கப்படும் ஒரு சத்தான உணவாகும்.

    இந்த நிலையில், பிரான்ஸ், ஜெர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் நெஸ்லே நிறுவனம் தனது குழந்தை உணவுப் பவுடர் ஃபார்முலாவை திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது.

    பால் பொருள்களில் பயன்படுத்தப்பட்ட ஒரு மூலப்பொருள் தேவையான தரநிலைகளை பூர்த்தி செய்யவில்லை எனவும் அந்த பால் பொருள்களில் குமட்டல், வாந்தி, செரிமானச் சிக்கலை ஏற்படுத்தக்கூடிய நச்சுப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.

    இதனிடையே கடந்த டிசம்பர் மாதம் முதல் பால் பொருளில் நச்சுப் பொருள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், குழந்தை உணவுப் பவுடர் ஃபார்முலாவை திரும்பப்பெறும் நடவடிக்கையை நெஸ்லே மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேலும், பால் பொருள்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் அவற்றை திருப்பி அளித்து முழுமையான பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும், அதற்கான வழிகாட்டுதல்களை நெஸ்லே வழங்கி வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • டாக்டர் மகாதீர் முகம்மது மலேசியாவின் பிரதமராகப் பதவி வகித்தவர்.
    • கடந்த ஜூலையில் மகாதீர் தனது 100-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

    கோலாலம்பூர்:

    டாக்டர் மகாதீர் மலேசியாவின் பிரதமராகப் பதவி வகித்தவர். கடந்த ஆண்டு ஜூலையில் மகாதீர் முகம்மது தனது 100-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

    இந்நிலையில், மகாதீர் தனது இல்லத்தில் கீழே விழுந்ததில் அவருக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் கோலாலம்பூரில் உள்ள தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

    டாக்டர் மகாதீர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    • போதைப் பொருள் கடத்துவதாகக் கூறி வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
    • வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்களை அமெரிக்கா பறிமுதல் செய்து வருகிறது.

    வாஷிங்டன்:

    வெனிசுலா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.

    இதையடுத்து, வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதரவு அளிப்பதாகக்கூறி அந்நாட்டின் மீது அமெரிக்கா கடந்த சில நாட்களுக்குமுன் தாக்குதல் நடத்தியது. அந்நாட்டு அதிபர் மதுரோவை அமெரிக்கா கைது செய்தது. இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    வெனிசுலாவில் இருந்து பிற நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்களையும் அமெரிக்கா பறிமுதல் செய்து வருகிறது.

    இந்நிலையில், வட அட்லாண்டிக் கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பலை அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது. இந்தக் கப்பல் ரஷியாவுக்கு சொந்தமானது என தகவல் வெளியானது. அந்தக் கப்பலில் ரஷிய தேசிய கொடி பொருத்தப்பட்டிருந்ததாகவும், கப்பல் ரஷியாவுக்கு சென்றுகொண்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • மக்கள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர்.
    • நாணய மதிப்பு வீழ்ச்சியால் ஈரானின் மத்திய வங்கி கவர்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    டெஹ்ரான்:

    ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டாலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது. டிசம்பர் 28 அன்று, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக வீழ்ந்தது.

    பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் ஆத்திரமடைந்த மக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர். போராட்டக்காரர்களைக் கலைக்கப் போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். நிலைமை மோசமானதால் மத்திய வங்கி ஆளுநரான முகமது ரெசா ஃபர்சின் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, பணவீக்கம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெட்ரோல் விலை மாற்றம் ஆகியவையே இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணங்களாகும். பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பாதுகாப்புப் படையிருக்கும் இடையே பல இடங்களில் மோதல் வெடித்ததை தொடர்ந்து வன்முறையாக மாறியது.

    இந்நிலையில், தற்போது வரை வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.

    • கடந்த 2012-ம் ஆண்டு டாக்கா- கராச்சி இடையே விமான சேவை நிறுத்தப்பட்டது.
    • இந்திய வான்வழியை வங்கதேசம் பயன்படுத்தும் எனத் தெரிகிறது.

    வங்கதேசம் தலைநகர் டாக்காவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு வங்கதேச அரசு நேரடி விமான சேவையை தொடங்க இருக்கிறது. கடந்த 2012-ம் ஆண்டு இரு நகரங்களுக்கு இடையே நேரடி விமான சேவை இருந்தது. பின்னர் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் சேவை தொடங்க இருக்கிறது. வருகிற 29-ந்தேதியில் இருந்து விமான சேவை தொடங்க இருக்கிறது.

    முன்னதாக துபாய் அல்லது தோஹாக வழியாக விமானங்கள் இயக்கப்பட்டது. டாக்கா- கராச்சி இடையில் 2370 கி.மீ, தூரம் ஆகும். இந்திய வான்வழியாக விமான சேவை இயக்கப்படும் எனத் தெரிகிறது. ஆனால், வங்கதேச அரசு இயக்கும் பிமானம் வங்கதேசம் ஏர்லைன்ஸ் இந்தியாவிடம் இன்னும் அனுமதி வாங்கவில்லை.

    வாரத்திற்கு இரண்டு முறை விமானம் இயக்கப்பட இருக்கிறது. ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்க்கப்பட்டு, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைக்கப்பட்டதில் இருந்து வங்கதேசம், பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வருகிறது. டிப்ளோமேட்டிக், வர்த்தகம், மக்களுக்கு இடையிலான தொடர்பை கட்டமைப்பு பேச்சுவாத்த்தை நடைபெற்று வருகிறது.

    தற்போது துபாய் அல்லது தோஹாக வழியாக செல்ல 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் ஆகும். சில விமான நிறுவன விமானங்கள் 18 மணி முதல் 22 மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளும். தற்போது நேரடி சேவை மூலம் இந்த நேரம் மிகவும் குறையும்.

    • காயமடைந்த விமானி மற்றும் துணை விமானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
    • இந்த விபத்து குறித்த இலங்கை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இலங்கையின் நுவரெலியாவில் உள்ள கிரிகரி ஏரியில், கடல் விமானம் ஒன்று சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்செல்வதற்காக ஏரியில் இறங்க முயன்றபோது பலத்த காற்று காரணமாக தடுமாறி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் காயமடைந்த விமானி மற்றும் துணை விமானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சுற்றுலா பயணிகள் விமானத்தில் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இந்த விபத்து குறித்த இலங்கை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. 

    • ப்ளூஃபின் டுனா மீனின் தனித்துவமான சுவையால் இதனை வாங்க கடும் போட்டி நிலவுகிறது.
    • அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்பதால் இந்த மீன் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போயுள்ளது.

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள டோயோசு சந்தையில் 243 கிலோ எடையுள்ள ப்ளூஃபின் டுனா மீன் ரூ.28 கோடிக்கு ஏலம் போனது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    ப்ளூஃபின் டுனா மீனின் தனித்துவமான சுவையால் இதனை வாங்க கடும் போட்டி நிலவுகிறது. புத்தாண்டில் கிடைக்கும் முதல் மீன் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் எனவும் நம்பப்படுவதால் இந்த மீன் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போயுள்ளது. இதுவரை இவ்வளவு பெரிய தொகைக்கு எந்த மீனும் ஏலம் போனதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    புளூஃபின் டுனா நீண்ட ஆயுளுக்கும் பெயர் பெற்றது. சுமார் 40 வருடங்கள் வாழும் இந்த மீன் கடலின் ஆழத்திற்கு சென்று வேட்டையாடக்கூடியது. மிகப்பெரிய இந்த மீன் அரிதாகவே கிடைக்கிறது. மனித உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை இந்த மீன் வழங்குகிறது. அதனால் இந்த மீன் கோடிகளில் விலை போகிறது.


    ×