search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலிஸ்தான்"

    • காலிஸ்தான் ஆதரவாளர் குர்பிரித்சிங் என்பவர் தாக்கி காயப்படுத்தியதாக புகார்கள் எழுந்தது.
    • பின்னர் அவர் ஜல்வர்த் கிரவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் வசித்து வரும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது இந்திய தூதரகம் முன்பு போராட்டமும் நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் இங்கிலாந்து தலைநகர் லண்டன் மேற்கு பகுதியில் உள்ள சவுத்ஹாலில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி இந்திய சுதந்திரதின விழாவையொட்டி நடந்த நிகழ்ச்சியில் ஏராளமான இந்திய வம்சாவளியினர் கலந்து கொண்டனர். அப்போது ஆஷிஷ் சர்மா மற்றும் நானக் சிங் ஆகிய 2 இந்திய வம்சாவளியினரை காலிஸ்தான் ஆதரவாளர் குர்பிரித்சிங் என்பவர் தாக்கி காயப்படுத்தியதாக புகார்கள் எழுந்தது.

    இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியானது. இச் சம்பவம் தொடர்பாக குர்பி ரித் சிங்கை இங்கிலாந்து போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜல்வர்த் கிரவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு 28 மாத ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    • கோவில் முன்பு வைக்கப்பட்டுள்ள பலகை மீது பிரதமர் மோடிக்கு எதிராக வாசகம் எழுதப்பட்டிருந்தது.
    • இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    கலிபோர்னியா:

    காலிஸ்தான் பிரிவினைவாத ஆதரவாளர்கள், வெளிநாடுகளில் இந்தியாவுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதில் இந்து கோவில், இந்திய தூதரகம் உள்ளிட்டவை மீது தாக்குதல் நடத்தப்பட்டன. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சுவாமி நாராயணன் கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதற்கு இந்தியா, அமெரிக்கா கடும் கண்டனங்களை தெரிவித்தன. இந்த நிலையில் கலிபோர்னியாவில் இந்து கோவில் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கலிபோர்னியாவில் ஹேவார்டில் பகுதியில் விஜய் ஷெராவாசி என்ற இந்து கோவில் உள்ளது.

    இந்த கோவில் முன்பு வைக்கப்பட்டுள்ள பலகை மீது பிரதமர் மோடிக்கு எதிராக வாசகம் எழுதப்பட்டிருந்தது. மேலும் காலிஸ்தான் வாழ்க என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதை பார்த்து கோவில் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் போலீசில் புகார் செய்துள்ளனர்.

    இச்சம்பவத்திற்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கோவில் நிர்வாகம் எக்ஸ் வலை தளத்தில் கூறும்போது, இந்த சம்பவம் இந்திய சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிகாரிகளின் காழ்ப்புணர்ச்சியாளர்களுக்கு எதிராக விரைவான விசாரணை மற்றும் உடனடி நடவடிக்கைக்கு நாங்கள் அழுத்தம் கொடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளது,

    • கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத ஆதரவாளர்கள், இந்து கோவில்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
    • இதனால் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் சர்ரே பகுதியில் வசித்து வருபவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல தொழிலதிபர் சதீஷ் குமார். இவர் சர்ரே பகுதியில் உள்ள லட்சுமி நாராயண் கோவில் தலைவராக உள்ளார்.

    இந்தநிலையில் சதீஷ் குமாரின் மூத்த மகன் வீட்டில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள்.

    அவர்கள் 14 ரவுண்டுகள் சுட்டனர். இதில் இந்த கோவில் நிர்வாகியின் மகன் வீடு சேதடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் யார் என்பது குறித்து தீவிரவாத விசாரணை நடந்து வருகிறது.

    கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத ஆதரவாளர்கள், இந்து கோவில்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

    சர்ரேரில் உள்ள லட்சுமி நாராயண் கோவில் மீது மூன்று முறை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நிலையில்தான் கோவில் நிர்வாகியின் மகன் வீடு மீது துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இதனால் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இது தொடர்பாக சதீஷ் குமார் கூறும்போது, "எனது மகன் வீடு மீது தாக்குதல் நடந்துள்ளது. இதை காலிஸ்தான் ஆதரவாளர்கள் செய்தார்களா? அல்லது மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் செய்ததா? என்பதை என்னால் கூற முடியாது. போலீஸ் விசாரணையில் தாக்குதல் நடத்தியது யார் என்பது தெரிய வரும் என்றார்.

    • கனடா பிரதமர் ட்ரூடோ இந்தியா மீது பகிரங்கமாக குற்றம் சாட்டினார்
    • செப்டம்பர் 21ல், இந்தியா, கனடா குடிமக்களுக்கு விசா வழங்குதலை தடை செய்தது

    கடந்த ஜூன் மாதம், கனடாவின் மேற்கு பகுதியில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் இந்தியாவை சேர்ந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்திப்சிங் நிஜ்ஜார் சுட்டு கொல்லப்பட்டார்.

    இதையடுத்து, இந்த கொலையில் இந்திய அரசின் உளவு அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) குற்றம் சாட்டினார். ஆனால், இந்த குற்றச்சாட்டை இந்திய அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்தது. இதனை தொடர்ந்து இரு தரப்பு உறவுகள் நலிவடைய தொடங்கியது.

    அதன் தொடர்ச்சியாக இந்தியா, கனடாவிலிருந்து இந்தியாவிற்கு வர விரும்புபவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த "விசா" (visa) எனப்படும் நாட்டிற்குல் நுழையும் அனுமதியை நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்வதாக கூறி, கடந்த செப்டம்பர் 21 அன்று ரத்து செய்தது.

    இந்நிலையில் இன்று, இந்தியாவிற்கு வர விரும்பும் கனடா குடிமக்களுக்கு அனுமதி வழங்கும் எலக்ட்ரானிக் விசா (e-visa) எனப்படும் இணையவழி அனுமதி வழங்கல் முறையை இந்தியா மீண்டும் தொடங்கியுள்ளது.

    கிட்டத்தட்ட 2 மாதங்களாக தடை செய்யப்பட்டிருந்த அனுமதி மீண்டும் தொடங்கப்பட்டிருப்பது இரு நாடுகளுக்கு இடையே பயணம் செய்பவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • 41 தூதரக அதிகாரிகளை கனடா அரசு திரும்பப் பெற்றது
    • சர்வதேச சட்ட விதியை இந்தியா மீறியதாக கனடா விமர்சனம்

    காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியா- கனடா இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்திய புலனாய்வு அமைப்பிற்கு நிஜ்ஜார் கொலையில் தொடர்பு இருப்பதாக தெரிவித்த கனடா, உயர் அதிகாரியை அந்நாட்டில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டது. இந்தியாவும் பதிலடியாக இந்தியாவில் உள்ள தூதரக அதிகாரிகளை வெளியேற்ற காலக்கெடு விதித்தது.

    இந்த நிலையில் 41 தூதரக அதிகாரிகளை கனடா திரும்பப் பெற்றுளளது. இதுபோன்று முன்னதாக நடந்தது இல்லை எனத் தெரிவித்த கனடா, சர்வதேச சட்டத்தை இந்தியா மீறியதாகவும் தெரிவித்தது.

    அதேவேளையில் இந்தியா, கனடாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. இந்த நிலையில் கனடாவிற்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால், இந்தியாவை எந்த வகையிலும் விமர்சிக்கவில்லை.

    அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில் ''இந்தியாவில் இருந்து கனடா தூதர்கள் வெளியேற்றப்பட்டது எங்களுக்கு கவலை அளிக்கிறது'' எனத் தெரிவித்துள்ளார்.

    பிரிட்டன் வெளியுறவுத்துறை அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் ''இந்திய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட இந்த முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை'' எனத் தெரிவித்துள்ளார்.

    கனடாவின் 41 தூதரக அதிகாரிகள் வெளியேறியுள்ளதால் இந்தியாவின் பல நகரங்களில், கனடா தூதரகம் இயங்காமல் உள்ளது.

    இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வரும் வல்லுனர்கள் ''இந்தியாவுடடான உறவை அமெரிக்கா, இங்கிலாந்து மோசமடைய விரும்பாது. ஏனென்னால் ஆசிய கண்டனத்தில் முக்கிய எதிரியாக திகழும் சீனாவிற்கு பதிலடிகொடுக்க இந்தியா அவர்களுக்கு முக்கியமான நாடாக இருக்கும்'' எனத் தெரிவித்துள்ளனர்.

    • தூதரக அதிகாரிகள் 41 பேரை திரும்பப்பெற்ற நிலையில் இந்த முடிவு
    • டெல்லி, பெங்களூருவில் எச்சரிக்கையுடன் செயல்பட வலியுறுத்தல்

    காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொல்லப்பட்ட சம்பவத்தில் கனடா, இந்திய புலனாய்வு அமைப்பு மீது குற்றம்சாட்டியது. இந்த விவகாரத்தில் இருந்து இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    தற்போது இந்தியாவில் இருந்து 41 தூதரக அதிகாரிகளை கனடா திரும்பப் பெற்றுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் வாழும் கனடா நாட்டினர் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என கனடா வலியுறுத்தியுள்ளது.

    தங்கள் நாட்டினருக்காக வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில், "இந்தியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளது.

    மேலும், "இருநாட்டு உறவு மோதல் முற்றியுள்ள நிலையில் இந்தியாவில் கனடாவுக்கு எதிராக போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கனடாவுக்கு எதிராக எதிர்மறை உணர்வுப்பூர்வ கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன. கனடா எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட ஆர்ப்பாட்டங்கள் நடைபெறலாம். ஒருவேளை கனடா நாட்டினர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படலாம்.

    டெல்லியில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து ஒதுங்கியிருக்கவும். தனிப்பட்ட தகவல்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

    மும்பை, சண்டிகர், பெங்களூரு ஆகிய நகரங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். ஏதாவது உதவி தேவைப்பட்டால் கனடா நாட்டினர் டெல்லியில் உள்ள தூதர அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    பிக்பாக்கெட், சிறிய காயம் போன்ற சம்பவங்கள் பொதுவானது. குற்றவாளிகள் வெளிநாட்டினரை இலக்காக வைத்து தாக்கலாம். குறிப்பாக முக்கிய நகரங்கள் மற்றும் சுற்றுலாப் பகுதிகளில் இதுபோன்று நடக்கலாம் என எச்சரித்துள்ளது.

    • காலிஸ்தான் பயங்கரவாதி கொலையில் இந்திய புலனாய்வு அமைப்புக்கு தொடர்பு என கனடா குற்றச்சாட்டு
    • இந்திய உயர் தூதர் அதிகாரியை வெளியேற்ற உத்தரவிட்டதால் இருதரப்பு உறவில் விரிசல்

    காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார், கனடாவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவின் புலனாய்வு அமைப்பிற்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம்சாட்டியது. அதோடு இந்திய உயர் தூதர் அதிகாரியை வெளியேற உத்தரவிட்டது.

    இதற்கு பதிலடியாக இந்தியாவில் உள்ள கனடா நாட்டின் தூதருக்கு சம்மன் அனுப்பிய மத்திய அரசு, தூதர்களை வெளியேற்ற உத்தரவிட்டது.

    இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் இந்தியாவில் உள்ள கனடா தூதரகத்தில் இருந்து அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்ட 41 பேரை கனடா திரும்பப் பெற்றுள்ளது.

    இந்த தகவலை கனடா நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி மெலானி ஜோலி தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து பாதுகாப்பாக வெளியேற நாங்கள் அனைத்து வசதிகளையும் செய்துள்ளோம் என்று கூறிய அவர், இதற்கான அர்த்தம் எங்களுடைய அதிகாரிகள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் தற்போது வெளியேறிவிட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.

    41 பேரின் தூதருக்கான விலக்கு திரும்பப்பெறுவது இதுவரையும் இல்லாத ஒன்று. மேலும், சர்வதேச சட்டத்தை மீறுவதாகும். இருந்தாலும், பழிக்குப்பழி நடவடிக்கையில் இறங்கும் எண்ணம் கனடாவிற்கு இல்லை. கனடா தொடர்ந்து சர்வதேச சட்டத்தை பாதுகாக்கும் வகையில் தொடரும் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காலிஸ்தான் பயங்கரவாதி கொலையில் இந்திய ஏஜென்சிக்கு தொடர்பு என கனடா குற்றச்சாட்டு
    • தூதர்களை வெறியேற்ற இரு நாடுகளும் பரஸ்பர நடவடிக்கை

    காலிஸ்தான் பயங்கரவாதி தலைவர் நிஜ்ஜார், இந்தியாவில் இருந்து வெளியேறி கனடாவில் வசித்து வந்தார். கனடா நாட்டின் குடியுரிமை பெற்றிருந்த அவரை, கடந்த ஜூன் மாதம் 18-ந்தேதி முகமூடி அணிந்த இருவர் சுட்டுக்கொலை செய்தனர்.

    இந்த கொலையில் இந்திய அரசின் விசாரணை அமைப்புகளுக்கு (Agency) தொடர்பு இருப்பதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். மேலும், கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தின் உயர் அதிகாரியை வெளியேற்றவும் கனடா உத்தரவிட்டது.

    இதற்கு பதிலடியாக இந்தியாவில் உள்ள கனடா தூதரகத்தின் உயர் அதிகாரிகளை வெளியேறும்படி இந்திய பதிலடியாக தெரிவித்தது.

    இதனால் இரண்டு நாடுகள் இடையிலான உறவில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இந்த விசயத்தை இன்னும் பெரிதாக்க விரும்பவில்லை. இந்தியாவுடன் நட்புறவுடன் இருக்க விரும்புவதாக ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார்.

    இந்த விவகாரம் அப்படியே சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், கனடாவின் வெளியுறவுத்துறை மந்திரி மெலனி ஜோலி ஆகியோர் அமெரிக்காவின் வாஷிங்டனில் ரகசிய சந்திப்பில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கனடா தூதர் அதிகாரிகள் மற்றும் இருநாட்டு ராஜதந்திர உறவுகள் பாதிப்பு ஆகியவற்றை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இந்த சந்திப்பு நடைபெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

    இந்தியாவில் உள்ள கனடா தூதரகத்தில் இருந்து சுமார் 30 அதிகாரிகளை சிங்கப்பூர் அல்லது மலேசியாவில் உள்ள தூதரகத்திற்கு மாற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா 10-ந்தேதி வரை காலக்கெடு விதித்திருந்தது.

    கனடாவின் குற்றச்சாட்டு அபத்தமானது என்று இந்தியா கடுமையாக எதிர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • கனடா வாழ் மக்களுக்கு விசா வழங்க இந்திய அரசு இடைக்கால தடை விதித்துள்ளது.
    • எங்களுடன் இணைந்து பணியாற்ற வாருங்கள் என இந்தியாவுக்கு கனடா பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

    ஒட்டாவா:

    இந்தியாவால் தேடப்படும் பல சீக்கிய பயங்கரவாதிகள் சிலர் கொல்லப்பட்டனர். கனடாவில் நிகழ்ந்த இந்தக் கொலைகளுக்கு இந்தியாதான் காரணம் என்று கனடா குற்றம் சாட்டியதோடு, இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றியது.

    இதுதொடர்பாக கனடாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது மட்டுமின்றி, பதிலடியாக கனடா உயர் தூதரக அதிகாரியை நாட்டை விட்டே வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும், கனடா வாழ் மக்களுக்கு விசா வழங்க இந்தியா இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் கனடா, இந்தியா இடையேயான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கனடாவுடன் இந்தியா இணைந்து பணியாற்ற வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது:

    இந்த விவகாரம் தொடர்பாக நான் பிரதமர் மோடியிடம் வெளிப்படையாக உரையாடினேன். அப்போது என் கவலைகளைப் பகிர்ந்துகொண்டேன்.

    இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ளவும், முழு வெளிப்படைத் தன்மையை வெளிப்படுத்த எங்களுடன் இணைந்து பணியாற்றவும் இந்திய அரசை கேட்டுக்கொண்டேன்.

    இந்தியா வளர்ந்து வரும் முக்கியத்துவம் வாய்ந்த நாடு. உலகெங்கிலும் நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டிய ஒரு நாடு. நாங்கள் பிரச்சினைகளைத் உருவாக்கவோ அல்லது அதிகப்படுத்தவோ நினைக்கவில்லை. இந்த விஷயத்தின் உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கான செயல்முறைகளை மேற்கொள்ள எங்களுடன் இணைந்து பணியாற்றுமாறு இந்திய அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்தார்.

    • காலிஸ்தான் தலைவர் கொலையில் தொடர்புடையதால் இந்திய தூதரக அதிகாரியை கனடா வெளியேற்றியது.
    • இதற்கு பதிலடியாக கனடா தூதரக உயரதிகாரியை வெளியேற்ற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

    ஒட்டாவா:

    பிரிட்டிஷ் கொலம்பியாவில் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் என்பவர் கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார். இக்கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதாக கனடா குற்றம்சாட்டியது.

    இதனால் இந்தியா, கனடா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்திய தூதரக அதிகாரியை வெளியேற கனடா உத்தரவிட, அதற்கு பதிலடியாக கனடா தூதரக உயரதிகாரியை வெளியேற்ற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

    இதற்கிடையே, காலிஸ்தான் தலைவர் கொலையில் இந்தியா மீது கனடா அரசு குற்றம் சாட்டியதற்கு அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், கனடா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அத்தியாவசிய தேவையின்றி இந்திய பயணத்தை கனடா நாட்டவர்கள் தவிர்க்க வேண்டும். தகுந்த பாதுகாப்புடன் இந்தியாவிற்கு, குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் போன்ற பதற்றம் மிக்க பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் பயணம் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

    • காலிஸ்தான் தலைவர் கொலையில் இந்தியாவுக்கு தொடர்புள்ளது என கனடா குற்றம்சாட்டியது.
    • கனடா பிரதமரின் குற்றச்சாட்டு கவலை அளிக்கிறது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    வாஷிங்டன்:

    பிரிட்டிஷ் கொலம்பியாவில் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் என்பவர் கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளது என கனடா குற்றம்சாட்டியது.

    கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, காலிஸ்தான் தலைவர் கொலை சம்பவத்தை இந்தியர்கள் நடத்தி இருக்கலாம். கொலைக்கு பின் அவர்களே முக்கிய காரணமாக இருக்கலாம் என குற்றம்சாட்டினார்.

    இதனால் இந்தியா, கனடா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்திய தூதரக அதிகாரியை வெளியேற கனடா உத்தரவிட, அதற்கு பதிலடியாக கனடா தூதரக உயரதிகாரியை வெளியேற்ற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

    இந்நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் அட்ரினே வாட்சன் கூறுகையில், ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த குற்றச்சாட்டுகள் மிகுந்த கவலை அளிக்கின்றன. கனடா கூட்டாளிகளுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம். கனடாவின் விசாரணை நடவடிக்கைகள் மற்றும் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவது மிகவும் முக்கியம் என தெரிவித்தார்.

    • காலிஸ்தான் பயங்கரவாதி கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றச்சாட்டு
    • கனடாவில் இருந்து இந்திய அதிகாரி வெளியேற்றப்பட்ட நிலையில், இந்தியா பதிலடி

    கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளது என கனடா குற்றம்சாட்டியுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்திய தூதரகத்தின் உயர் அதிகாரியை வெளியேற கனடா அரசு உத்தரவிட்டது.

    கனடாவின் இந்த உத்தரவையடுத்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்தியாவுக்கான கனடாவின் தூதருக்கு சம்மன் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து அவரிடம், கனடாவில் ராஜதந்திர அளவிலான மூத்த தூதரக அதிகாரி இன்னும் ஐந்து நாட்களில் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

    நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுதல், இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளில் அவர்களுடைய ஈடுபாடு ஆகியவை குறித்து தங்களது கவலையை தெரிவித்த இந்தியா, இந்த முடிவை எடுத்துள்ளது.

    ×