search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Israeli"

    ராணுவ சோதனை சாவடி மீது காரை மோதிய பாலஸ்தீன வாலிபரை இஸ்ரேல் ராணுவவீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் பாலஸ்தீன வாலிபர் பலியானார். #Palestine #Israel
    ரமல்லா:

    இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. சர்ச்சைக்குரிய மேற்கு கரை நகரில் இஸ்ரேலியர்களை குறிவைத்து பாலஸ்தீனர்கள் தாக்குதல் நடத்துவதும், அவர்களை இஸ்ரேலிய போலீசார் அல்லது ராணுவவீரர்கள் சுட்டுக்கொல்வதும் வாடிக்கையாக உள்ளது.

    இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மேற்கு கரை நகரில் அல்-பீரக் என்கிற இடத்தில் உள்ள இஸ்ரேல் ராணுவ சோதனை சாவடி மீது பாலஸ்தீன வாலிபர் ஒருவர் காரை ஓட்டி வந்து மோதினார். இதையடுத்து இஸ்ரேல் ராணுவவீரர்கள் அந்த காரின் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் காரை ஓட்டிவந்த பாலஸ்தீன வாலிபரின் உடலை துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. அவர் காருக்குள்ளேயே பலியானார். சுட்டுக்கொல்லப்பட்ட அந்த நபர் கிழக்கு ஜெருசலேமின் ராஸ் அல்-அமுவுத் பகுதியை சேர்ந்த அகமத் அப்பாசி (வயது 21) என்பது தெரியவந்துள்ளது.

    மேற்கூறிய தகவல்கள் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #Palestine #Israel
    இஸ்ரேல் விமானம் இஸ்லாமாபாத்தில் தரை இறங்கியதாக கூறுவது பொய்யான தகவல் என பாகிஸ்தான் தகவல் துறை மந்திரி பவத் சவுத்ரி கருத்து தெரிவித்துள்ளார். #Pakistan #Israeli #AircraftLanding #Islamabad
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே தூதரக உறவு இல்லை. இந்த நிலையில், இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரில் இருந்து தனியார் விமானம் ஒன்று, கடந்த 25-ந் தேதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வந்து தரை இறங்கியது; அங்கு 10 மணி நேரம் தங்கி இருந்து விட்டு மீண்டும் டெல் அவிவ் புறப்பட்டு சென்றது என்று இஸ்ரேல் பத்திரிகையாளர் அவி சார்ப், டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். இது பாகிஸ்தானில் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பரவியது.

    இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு மீது பலரும் சமூக வலைத்தளங்களில் சாடினர். இஸ்ரேல் விமானம் ரகசியமாக வந்து சென்றதின் பின்னணி என்ன என எதிர்க்கட்சிகளும் கேள்வி எழுப்பி, அரசு அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தின.

    ஆனால் இஸ்ரேல் விமானம், இஸ்லாமாபாத்தில் வந்து தரை இறங்கியது என்ற தகவல் அடிப்படை ஆதாரமற்றது என பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுபற்றி அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி ஷா மெக்மூது குரேஷி கூறும்போது, “இஸ்ரேல் விமானம் இஸ்லாமாபாத்தில் தரை இறங்கியதாக கூறுவது பொய்யான தகவல்” என்றார்.

    பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி, “இஸ்ரேலுடன் பாகிஸ்தான் எந்தவிதமான உறவும் வைத்துக் கொண்டிருக்கவில்லை” என்று கூறி உள்ளார்.

    பாகிஸ்தான் தகவல் துறை மந்திரி பவத் சவுத்ரி கருத்து தெரிவித்தபோது, “ இஸ்ரேலுடனோ, இந்தியாவுடனோ அரசானது ரகசிய பேச்சு வார்த்தை நடத்தாது” என குறிப்பிட்டார். #Pakistan #Israeli #AircraftLanding #Islamabad
    பாலஸ்தீனத்தில் காசா எல்லையில் நடந்த போராட்டத்தின்போது இஸ்ரேல் துப்பாக்கிச்சூட்டில் குண்டுபாய்ந்து பாலஸ்தீனியர் ஒருவர் உயிரிழந்தார். #Palestinain #Israel #Gaza
    காசா:

    இஸ்ரேல் 1948-ம் ஆண்டு உருவானது. அப்போது நடந்த மோதல்களில் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வெளியேற்றப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக சென்றனர். அப்போது இடம் பெயர்ந்த சுமார் 7 லட்சம் பேர், திரும்பி வர அனுமதிக்கப்பட வேண்டும் என்பது பாலஸ்தீனியர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது.இந்த கோரிக்கையை வலியுறுத்தியும், இஸ்ரேல் படையினரின் அத்துமீறல்களை எதிர்த்தும் அவ்வப்போது பாலஸ்தீனியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    அந்த வகையில், பாலஸ்தீனத்தில் இஸ்ரேல், காசா எல்லையில் நேற்று முன்தினம் பெரிய அளவில் ஒரு போராட்டம் நடந்தது. இஸ்ரேலுக்கு எதிரான இந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போது வன்முறை மூண்டது. டயர்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. கற்களும், வெடிப்பொருட்களும் வீசப்பட்டன. இஸ்ரேல் படையினர் எதிர் தாக்குதல் நடத்தினர். துப்பாக்கிச்சூடும் நடத்தினர். இதில் குண்டுபாய்ந்து பாலஸ்தீனியர் ஒருவர் உயிரிழந்தார். டஜன் கணக்கிலான பாலஸ்தீனியர்கள் படுகாயம் அடைந்தனர்.

    இதுபற்றி காசா அதிகாரிகள் கூறும்போது, “வன்முறை மூண்டதில் 90 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 10 பேர் துப்பாக்கிச்சூட்டில் சிக்கியவர்கள்” என்று குறிப்பிட்டனர். பாலஸ்தீனத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஹமாஸ் இயக்கத்தினர்தான் வன்முறையை தூண்டி விட்டதாக இஸ்ரேல் கூறுகிறது. #Palestinain #Israel #Gaza
    ×