search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parliament elecion"

    என் கவுண்டர் ஸ்பெ‌ஷலிஸ்ட் என பெயரெடுத்த ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை ராமநாதபுரம் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவில் இருந்து சென்னை காவலர் நலப்பிரிவு கூடுதல் துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் உள்துறை செயலாளர் நிரஞ்சன்மார்டி அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறார்.

    இதேபோல் போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளையும், டி.எஸ்.பி.க்களையும் இடமாற்றம் செய்து வருகிறார்.

    ஏற்கனவே துணை கமி‌ஷனர்கள், இணை கமி‌ஷனர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் பலர் மாற்றப்பட்ட நிலையில் இப்போது ஏ.டி.எஸ்.பி.க்கள், டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

    அந்த வகையில், என் கவுண்டர் ஸ்பெ‌ஷலிஸ்ட் என பெயரெடுத்த ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை ராமநாதபுரம் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவில் இருந்து சென்னை காவலர் நலப்பிரிவு கூடுதல் துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் உள்பட 26 ஏ.டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 33 உதவி கமி‌ஷனர்களும் மாற்றப்பட்டுள்ளனர். அதில் ஆவடி உதவி கமி‌ஷனர் ஜான்சுந்தர், கோயம்பேடு உதவி கமி‌ஷனராக ஜெயராமன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதேபோல் 89 டி.எஸ்.பி.க்களையும் பணியிட மாற்றம் செய்ய டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

    சென்னையில் ஒரே இடத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்யவும் பட்டியல் தயாராகி வருகிறது. போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே. விசுவநாதன் இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளார்.
    பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தற்போது அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெறுவதன் மூலம் அ.தி.மு.க. -பா.ஜனதா கூட்டணி உறுதியாகி விட்டது. #ParliamentElection #ADMK #BJP
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. பிரதான கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க.வில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்படைந்துள்ளன.

    இந்த தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜனதா இடையே கூட்டணி அமைகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா எந்த கட்சியுடனும் கூட்டணி சேராமல் தனித்து போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்றார்.

    ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா நெருக்கம் காட்டி வந்தது. அ.தி.மு.க.வில் நெருக்கடி ஏற்பட்டபோது அரசுக்கு பல்வேறு வகையில் பா.ஜனதா பக்க பலமாக செயல்பட்டது.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கு பா.ஜனதா ஆயத்தமான போது தமிழக மூத்த அமைச்சர்கள் டெல்லி சென்று பா.ஜனதா தலைவர்களையும், மத்திய மந்திரிகளையும் சந்தித்து ரகசியமாக பேச்சு நடத்தினார்கள்.

    அவர்கள் கூட்டணி தொடர்பாக பேச்சு நடத்தியதாக கூறப்பட்டது. இதன் மூலம் அ.தி.மு.க. - பா.ஜனதா கூட்டணி ஏற்படும் என தகவல் வெளியானது. ஆனால் பா.ஜனதாவுடன் கூட்டணி சேர அ.தி.மு.க.வில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். என்றாலும் கூட்டணி பேச்சுவார்த்தையை ரகசியமாக நடத்தி வந்தனர்.

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா அதிக இடங்களை கேட்டது. இதற்கு அ.தி.மு.க. தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு உள்ள மக்கள் செல்வாக்கு அடிப்படையில்தான் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    பா.ஜனதா 12 தொகுதிகள் கேட்டது. குறிப்பாக மேற்கு மண்டலத்தில் அதிக தொகுதிகளில் போட்டியிட விரும்பியது. இதற்கும் அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தது.

    ஒற்றை இலக்க எண்ணில்தான் சீட் தர முடியும். அதுவும் நாங்கள் தரும் தொகுதிகளில்தான் போட்டியிட வேண்டும் என்று அ.தி.மு.க. நிபந்தனை விதித்தது. இதனால் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது.

    இந்த நிலையில் கூட்டணியை உறுதி செய்வதற்காக பா.ஜனதா மேலிட பிரதிநிதியான மத்திய மந்திரி பியூஷ்கோயல் நேற்று இரவு 8.40மணிக்கு விமானம் மூலம் சென்னை வந்தார்.

    அவர் விமான நிலையத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் அறையில் தமிழக தேர்தல் கூட்டணி தொடர்பாக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். சுமார் 40 நிமிடங்கள் இந்த ஆலோசனை நடந்தது.



    பின்னர் விமான நிலையத்தில் மத்திய மந்திரி பியூஷ் கூறுகையில், தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த வந்திருப்பதாகவும், எங்கள் கூட்டணி வலிமையானதாக இருக்கும், இங்கு பெறும் வெற்றி மோடி அரசாங்கத்துக்கு வலு சேர்க்க கூடியதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

    அதன் பிறகு மத்திய மந்திரி பியூஷ்கோயல் காரில் புறப்பட்டு நேராக ஆழ்வார்பேட்டையில் உள்ள தொழில் அதிபர் மகாலிங்கம் வீட்டுக்கு சென்றார்.

    அங்கு அவர் முன்னிலையில் அ.தி.மு.க.- பா.ஜனதா இடையே அதிகாரப்பூர்வமான முறையில் கூட்டணி உடன்பாடு மற்றும் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடந்தது. அ.தி.மு.க. தரப்பில் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி மற்றும் வைத்திலிங்கம் எம்.பி., கே.பி. முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பா.ஜனதா தரப்பில் தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர். இரவு 10 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை அதிகாலை 1 மணி வரை 3 மணி நேரம் நீடித்தது.

    இதில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மட்டும் 1 மணி நேரம் நடந்தது. அ.தி.மு.க.வின் கருத்துக்களும், விருப்பங்களும் மத்திய மந்திரி பியூஷ்கோயலிடம் எடுத்துக் கூறப்பட்டது. அதை கவனமாக கேட்டார். பின்னர் அவர் பா.ஜனதாவின் விருப்பத்தையும், பிரதமர் மோடி சொன்ன தகவல்களையும் அ.தி.மு.க.வினரிடம் எடுத்துக் கூறியதாக கூறப்படுகிறது.

    பா.ஜனதா தரப்பில் முதலில் 12 தொகுதிகள் கேட்கப்பட்டது. பின்னர் 10 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டது. இறுதியாக 8 தொகுதிகள் வரை கொடுக்க அ.தி.மு.க. முன் வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    பா.ஜனதா தரப்பில் தென்சென்னை, ஸ்ரீபெரும்புதூர், வேலூர், திருப்பூர், கோவை, கன்னியாகுமரி, தஞ்சை, சிவகங்கை, நெல்லை, மதுரை ஆகிய 10 தொகுதிகளை பா.ஜனதா கேட்டதாகவும், இதில் தென்சென்னை, தஞ்சை, மதுரை, நெல்லை ஆகிய தொகுதிகளை தர அ.தி.மு.க. மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதற்கு பா.ஜனதா சம்மதிக்கவில்லை. தனது நிலையில் பிடிவாதமாக இருந்ததால் நேற்றைய பேச்சு வார்த்தையில் தொகுதி உடன்பாடு எட்டப்படவில்லை.



    இதனால் இறுதியாக அ.தி. மு.க. ஒருங்கிணைப்பாளர்களான முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் பேச்சு நடத்தி விரைவில் தொகுதி உடன்பாடு காண முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இன்று மத்திய மந்திரி நிதின்கட்கரி சென்னை வருகிறார். அவரும் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. குழுவுடன் பேச்சு நடத்துகிறார்.

    அதன்பிறகு நாளை மத்திய மந்திரி பியூஷ்கோயல் மீண்டும் சென்னை வந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை சந்தித்து பேச திட்டமிட்டு இருக்கிறார்.

    இதில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு விடும் என்றும் அடுத்த வாரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

    பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி பியூஷ்கோயல் ஆகியோர் சென்னை வந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அ.தி.மு.க. குழுவுடன் இணைந்து தொகுதி பங்கீடு அறிவிப்பை வெளியிடுகிறார்கள்.

    தற்போது அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெறுவதன் மூலம் அ.தி.மு.க. -பா.ஜனதா கூட்டணி உறுதியாகி விட்டது. தொகுதி உடன்பாடு மட்டுமே இறுதி செய்யப்பட உள்ளது.

    இதுபற்றி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், “தமிழகத்தில் பா.ஜனதா வலுவான கூட்டணி அமைக்கும். அ.தி.மு.க.வுடன் பேச்சு வார்த்தை சுமூகமான முறையில் நடைபெற்று வருகிறது. மத்திய மந்திரி பியூஷ்கோயல் அ.தி.மு.க.வுடன் பேச்சு நடத்தி உள்ளார். தொகுதி பங்கீடு பற்றி தொடர்ந்து பேசி முடிவு செய்வோம்” என்றார்.

    தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, “தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிப்பதுதான் எங்கள் இலக்கு. அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதும் எங்கள் இலக்கு. இதற்காக பல கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகிறோம்” என்றார்.

    இதற்கிடையே புதுவை என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி நேற்று இரவு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

    அப்போது, “அ.தி.மு.க. கூட்டணியில் தான் நாங்கள் இருக்கிறோம். கடந்த தேர்தலைப் போல இந்த தேர்தலிலும் புதுச்சேரி தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. #ParliamentElection #ADMK #BJP 
    அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை விருப்ப மனு அளித்துள்ளதால் கரூர் தொகுதியில் தான் மீண்டும் போட்டியிட உத்தரவாதம் இல்லை என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார். #ThambiDurai #ADMK
    கரூர்:

    கரூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக அ.தி.மு.க.வை சேர்ந்த தம்பிதுரை இருந்து வருகிறார். இவர் பாராளுமன்ற துணை சபாநாயகர் பதவியையும் வகித்து வருகிறார்.

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தம்பிதுரை கடந்த சில மாதங்களாக கரூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டு, மனுக்களை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. சார்பில் பாராளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்ப மனு செய்துள்ளார். இதனிடையே விருப்ப மனு தாக்கலின் கடைசி நாளான நேற்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பியும் கரூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார்.

    தம்பிதுரை கரூர் தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வரும் நிலையில் அமைச்சரின் தந்தையும் அதே தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இது தொடர்பாக நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்த தம்பிதுரை, ஜனநாயக நாட்டில் அரசியலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்றார். இந்த நிலையில் இன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட சீத்தப்பட்டி காலனி பகுதியில் தம்பிதுரை எம்.பி. பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு, மனுக்களை பெற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். கரூர் பாராளுமன்ற தொகுதியில் நான் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளேன். எனக்கு சீட் கிடைக்கும் என்று எந்த உத்தரவாதமும் கிடையாது. சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பியும் கரூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

    அவருக்கு கரூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் அவரது வெற்றிக்காக பாடுபடுவேன். அ.தி.மு.க. சார்பில் யார் போட்டியிட்டாலும் வெற்றிக்கு அயராது உழைப்பேன்.

    தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க அ.தி.மு.க. சார்பில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் நான் இடம்பெறவில்லை. அதனால் நான் கூட்டணி குறித்து எதுவும் சொல்ல முடியாது. பாராளுமன்றத்தில் தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தோம். அதற்கும் கூட்டணிக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் நிருபர்கள் அவரிடம் திருப்பூர் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சிகள் எல்லாம் கலப்பட கூட்டணி அமைத்துள்ளது என்று விமர்சனம் செய்துள்ளாரே? என்று கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதில் அளித்த தம்பிதுரை, தேர்தல் கூட்டணி என்றாலே கலப்பட கூட்டணிதான் என்றார். #ThambiDurai #ADMK
    ×