என் மலர்
உலகம்

160 சிறுமிகள் கொலை.. ஈரான் பள்ளி மீதான தாக்குதல் குறித்து டிரம்ப் பதில்
- சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- பள்ளியின் மீது விழுந்திருக்கலாம்.
கடந்த வாரம் அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் ஈரானில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளி மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 160 பேர் உயிரிழந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பள்ளியை தாக்கியது அமெரிக்க இராணுவமே என்று கூறப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.
அவர் கூறுவதாவது, "எங்களிடம் உள்ள ஆதாரங்களின்படி, இது ஈரானே செய்த வேலை. அவர்களின் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மிகவும் தரம் குறைந்தவை.
இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் திறன் அவற்றுக்குக் கிடையாது. தவறுதலாக அவர்களின் ஏவுகணையே அந்தப் பள்ளியின் மீது விழுந்திருக்கலாம். நாங்கள் ஒருபோதும் பள்ளி குழந்தைகள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்" என்று கூறினார்.
Next Story






