என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முத்துப்பேட்டை"

    • காவிரி ஆற்றுப்படுகையின் தென்கோடியில் முத்துப்பேட்டை சதுப்பு நில அலையாத்திக்காடு அழகுற அமைந்துள்ளது.
    • குட்டி குட்டியாக தீவுகள் போல் காணப்படும் மணல்பாங்கான இடத்தில் வெளிநாட்டு பறவைகளையும் ரசிக்கலாம்.

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய பரப்பளவு கொண்ட காடுகளில் ஒன்றாகும். இந்த காடு சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களில் இருந்து கடலோர கிராமங்களை பாதுகாக்கும் இயற்கை அரணாக விளங்குகிறது. மேலும் கடலோரங்களில் எற்படும் மண் அரிப்பை பெருமளவில் தடுத்து நிறுத்துகிறது.

    முத்துப்பேட்டை பகுதியில் 12 ஆயிரத்து 20 எக்டேர் பரப்பளவில் அலையாத்திக்காடு காணப்படுகிறது. திருவாரூர், தஞ்சை, நாகை ஆகிய மாவட்டங்களிலும் இந்த காடு பரவி உள்ளது.

    காவிரி ஆற்றுப்படுகையின் தென்கோடியில் முத்துப்பேட்டை சதுப்பு நில அலையாத்திக்காடு அழகுற அமைந்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினத்தின் மேற்கு பகுதியில் தொடங்கி நாகை மாவட்டத்தின் கோடியக்கரை கிழக்கு பகுதி வரை இந்த அலையாத்திக்காடு நீண்டுள்ளது.

    முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காட்டுக்குள் சுற்றுலாப் பயணிகள் சென்று பார்வையிடலாம். அதற்கேற்ற வகையில் மரப்பலகையால் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    காடுகளை உயரே இருந்து பார்க்க வசதியாக உயர் கோபுரங்கள், ஓய்வெடுக்க குடில்கள் என இயற்கையை ரசிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற வசதிகள் இங்கு உள்ளன. வனத்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.

    அலையாத்திக்காட்டுக்குள் செல்லும் ஆற்றின் வழியே படகில் நெடுந்தூரம் பயணம் செய்வது சுற்றுலாப் பயணிகளுக்கு புதுவிதமான அனுபவத்தை தரும்.

     

    குட்டி குட்டியாக தீவுகள் போல் காணப்படும் மணல்பாங்கான இடத்தில் வெளிநாட்டு பறவைகளையும் ரசிக்கலாம். இந்த அலையாத்திக்காட்டை சர்வதேச தரத்துக்கு உயர்த்த முற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. படகுதுறை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் காத்திருக்கும் பகுதியில் பிரமாண்டமான மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

    இங்கு பல்வேறு நாடுகளில் இருந்து பல்வேறு வகையான பறவைகள் வருகை தருகின்றன. இங்கு இனப்பெருக்கம் செய்வதை அந்த பறவைகள் வழக்கமாக கொண்டுள்ளன. அதற்கேற்ற சூழல் இங்கு நிலவுவதாக பறவை ஆர்வலர்கள் கூறுகிறார்கள். தற்போது கடந்த சில வாரங்களாக வெளிநாட்டு பறவைகள் வரத்து அதிகமாக உள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • அலையாத்திகாடு எல்லையில் உள்ள தம்பிக்கோட்டை கீழக்காடு எம்.கே. நகர் அருகே செல்லும் மாமணி ஆற்றில் மர்மநபர்கள் பதுங்கியிருப்பது தெரிய வந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த பின்னத்தூர் ஈ.சி.ஆர். சாலையை சேர்ந்தவர் கண்ணன் (வயது 45). இவரது மனைவி சங்கீதா, மகள் சிந்து. கண்ணன் திருத்துறைப்பூண்டி போலீசில் நுண்ணறிவு பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில், கண்ணன் வழக்கம்போல் நேற்று பணிக்கு சென்றுவிட்டார். அவரது மனைவி மற்றும் மகள் இருவரும் வீட்டின் மாடியில் உள்ள அறையில்அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் வீட்டின் கதவை திறந்து உள்ளே புகுந்து கத்தியை காட்டி மிரட்டி சங்கீதா கழுத்தில் இருந்த தாலி செயின் உள்பட சுமார் 8 பவுன் நகைகளை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து சங்கீதா, கண்ணனிடம் செல்போனில் தகவல் தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மர்மநபர்கள் அலையாத்தி காட்டுக்குள் இருப்பதாக தெரிந்தது.

    தொடர்ந்து, முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் முத்துப்பேட்டை, எடையூர், பெருகவாழ்ந்தான் ஆகிய காவல் நிலையங்களில் இருந்து வந்த ஏராளமான போலீசார் அலையாத்திகாடுக்குள் படகு மூலம் சென்று தேடினர்.

    பின்னர், நள்ளிரவில் அலையாத்திகாடு எல்லையில் உள்ள தம்பிக்கோட்டை கீழக்காடு எம்.கே. நகர் அருகே செல்லும் மாமணி ஆற்றில் மர்மநபர்கள் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அங்கு சென்று அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அடுத்த மேல சொக்கநாதபுரம் வினோபா காலனி பகுதியை சேர்ந்த தர்மதுரை (வயது 20), போடிநாயக்கனூர் அடுத்த அணைக்கரை காந்தி சாலை பகுதியை நல்ல தம்பி (27) என்பது தெரியவந்தது.

    இது குறித்து எடையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×